தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கௌதம் மேனன் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்திருந்தார் சிம்பு.
இந்த படம் தாமதம் ஆனதற்கு இயக்குனர்தான் காரணம் என சிம்பு தரப்பில் அப்போதே தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்பின்னர் தனுஷ் நடிப்பில் என்னை நோக்கி பாயும் தோட்டா, விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் ஆகிய இரண்டு படங்களை இயக்கினார் கவுதம் மேனன்.
இந்த கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம் காணப்பட்டது.
ஆனால் அந்த இரண்டு படங்களும் என்ன ஆனதோ? என்பது குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
எவரும் எதிர்பாராத நிலையில் கார்த்திக் நரேன் தன் ட்விட்டரில்.. கவுதம் மேனனை நம்பி மோசம் போனேன் என பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அவர் இயக்கிய நரகாசுரன் படத்தை கௌதம் மேனன்தான் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து அந்த படத்திற்கு வந்த நிலைமைதான் நெஞ்சம் மறப்பதில்லை பட நிலைமையும் என க்ளோ ஸ்டூடியோசின் இணைத் தயாரிப்பாளர் சித்தார்த் ராவ் ட்விட்டர் தெரிவித்துள்ளார்.
எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை படத்தை செல்வராகவன் இயக்க, கௌதம் மேனன் தயாரித்துள்ளார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
கௌதம் மேனன் தயாரித்த படங்களும் இயக்கும் படங்களும் அடிக்கடி பிரச்சினைக்குள்ளாகி வருவதால் இந்த சம்பவங்கள் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.