உங்களை பெருமைப்படுத்தும் வகையில் நான் நடந்து கொள்வேன்..; எமோஷலான கௌதம் கார்த்திக்

உங்களை பெருமைப்படுத்தும் வகையில் நான் நடந்து கொள்வேன்..; எமோஷலான கௌதம் கார்த்திக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gautham karthikபிரபல நடிகர் முத்துராமனின் மகன் கார்த்திக். கார்த்திக்கின் மகன் நடிகர் கௌதம்.

மூன்று தலைமுறைகளாக கலைச்சேவை செய்து வருகின்றனர்.

தற்போதும் கார்த்திக் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் முத்து ராமனின் பேரன் கௌதம் கார்த்திக் தனது தாத்தா முத்துராமின் பிறந்தநாளை முன்னிட்டு (ஜூலை 4) தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், “நாங்கள் உங்களை பார்த்ததில்லை. ஆனால், உங்களுடன் வாழ்ந்தவர்கள் உங்களைப் பற்றி சொல்லும் போது கேட்க ரொம்ப சந்தோஷமாக உள்ளது.

அன்பான, கடின உழைப்பு, அதீத திறமையுடைய, அர்ப்பணிப்பு உணர்வுடைய உங்களின் பேரன் என சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

ஒருநாள் உங்களை பெருமைப்படுத்தும் வகையில் நான் நடந்து கொள்வேன் என நம்புகிறேன். ஹேப்பி பர்த் டே தாத்தா” என பதிவிட்டுள்ளார் கௌதம்.

Gautham Karthik’s emotional post on Instagram

மீண்டும் ‘த்ரிஷ்யம்’ கூட்டணி.; மோகன்லால் படத்திற்கு வித்தியாசமாக தலைப்பிட்ட ஜீத்து ஜோசப்

மீண்டும் ‘த்ரிஷ்யம்’ கூட்டணி.; மோகன்லால் படத்திற்கு வித்தியாசமாக தலைப்பிட்ட ஜீத்து ஜோசப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் – மீனா நடித்திருந்த படம் ‘த்ரிஷ்யம்’ மற்றும் ‘த்ரிஷ்யம் 2’.

இவை இரண்டுமே சூப்பர் ஹிட்டானது. கொரோனா ஊரடங்கால் த்ரிஷ்யம் 2 படம் ஓடிடியில் ரிலீசானது. இதிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

‘லூசிபர்’ வெற்றியைத் தொடர்ந்து விரைவில் பிருத்விராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘ப்ரோ டாடி’ படத்தில் நடிப்பார் மோகன்லால் என கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் மீண்டும் த்ரிஷ்யம் கூட்டணி இணையவுள்ளது.

இவர்களின் புதிய படத்துக்கு ’12த் மேன்’ எனத் தலைப்பிட்டுள்ளனர்.

முழு த்ரில்லராக உருவாகவுள்ள இப்படத்தை ஆண்டனி பெரம்பாவூர் தயாரிக்கவுள்ளார்.

அனுஸ்ரீ, அதிதி ரவி, பிரியங்கா நாயர், ஷிவதா, வீணா நந்தகுமார், சைன் டாம் சாக்கோ, சைஜு குரூப், சந்துநாத், சாந்தி உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்.

விரைவில் ’12த் மேன்’ படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

Mohan Lal and Jeethu Joseph joins for 12th man

சிம்பு கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் இயக்குனர்கள் ராம் & மிஷ்கின்..?

சிம்பு கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் இயக்குனர்கள் ராம் & மிஷ்கின்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு மற்றும் சிம்பு கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘மாநாடு’.

இந்த படத்தின் டப்பிங் உள்ளிட்ட பணிகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் தியேட்டர்கள் திறக்கப்பட்டவுடன் ‘மாநாடு’ ரிலீசாகவுள்ளது.

இதனையடுத்து ‘பத்து தல’ படத்தில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடிக்கிறார் சிம்பு.

இந்த படங்களை தொடர்ந்து இயக்குனர் ராம் இயக்கத்தில் படம், மிஷ்கினுடன் ஒரு படத்தில் நடிக்கிறார் என தகவல்கள் வருகின்றன.

மேலும் சிம்புக்காக கே வி ஆனந்த் கதை ஒன்று எழுதி வைத்திருந்தாராம்.

ஆனந்த் மரணம் அடைந்துவிட்டதால் வேறு ஒரு இயக்குனரை வைத்து ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறதாம்.

Directors Ram and Mysskin to work with STR

விக்ரம் கீர்த்தி ஐஸ்வர்யா நடித்த ‘சாமி 2’ ஹிந்தியில் சாதனை

விக்ரம் கீர்த்தி ஐஸ்வர்யா நடித்த ‘சாமி 2’ ஹிந்தியில் சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹரி இயக்கிய போலீஸ் ஸ்டோரி படங்கள் எப்போதுமே பெரும் ஹிட்டடித்து வருகின்றன.

சாமி, சிங்கம் 1 2 3 ஆகிய படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

ஆனால் சாமி 2 படம் சரியாக போகவில்லை.

விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் 2018ல் ரிலீசானது.

தமிழில் இப்படம் படு தோல்வி் அடைந்தாலும் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு யூடியூபில் வெளியானது.

இந்த நிலையில் தற்போது 110 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறதாம்.

Saamy Square hindi version creates records

நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாஜக மாநில இளைஞரணி தீர்மானம்

நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாஜக மாநில இளைஞரணி தீர்மானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாரதீய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி செயற்குழு கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று நடைபெற்றது.

இந்த செயற்குழு கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நீட் தேர்வு குறித்து தமிழக மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அதில் நடிகர் சூர்யாவுக்கு எதிராகவும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீட் தேர்வு குறித்து தொடர்ந்து உண்மைக்கு புறம்பாக நடிகர் சூர்யா பேசி வருவதாகவும் மோடி அரசின் மக்கள் நல திட்டம் சட்டங்களை உள்நோக்கத்துடன் சுய விளம்பரத்திற்காக தொடர்ந்து எதிர்த்து வருகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

படைப்பாளிகளின் உரிமையை பாதுகாக்கும் ‘ ஒளிப்பதிவு திருத்தச் சட்ட வரைவு 2021 ‘க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சூர்யாவிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு அவர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால் பாஜக இளைஞரணி மூலம் சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

BJP Youth wing condemns Actor Suriya

‘கைதி’ கதை திருடப்பட்டதா.? 2வது பாகத்திற்கு கேரள அரசு தடை.? தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு விளக்கம்

‘கைதி’ கதை திருடப்பட்டதா.? 2வது பாகத்திற்கு கேரள அரசு தடை.? தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2019ல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன் நடித்து வெளியான படம் ‘கைதி’.

இப்படம் அந்தாண்டு தீபாவளிக்கு வந்த விஜய் படத்துடன் மோதியது. வசூலில் சக்கை போடு போட்டது.

ட்ரீம் வாரியர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார்.

இந்த படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வதற்கும், அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கும் கேரளா நீதிமன்றம் தடை விதிக்கப்பட்டதாக சில மலையாள ஊடகங்கள் & தமிழ் ஊடகங்களில் செய்தி வெளியானது.

(கேரளாவைச் சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் என்பவர், 2007ல் புழல் சிறையில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடத்தில் சொன்னதாகவும்
அவர் அப்போதே ரூ.10 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு கதை கை மாறியதாக கூறப்படுகிறது. )

நம் தளத்தில் இப்படியொரு செய்தி வெளியாகவில்லை.

இது குறித்து டிரீம் வாரியர்ஸ் தயாரிப்பாளர் தன் ட்விட்டரில்….

“எங்களின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் கதை, திரைக்கதை, இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த ‘கைதி’ திரைப்படத்தின் ரீமேக் மற்றும் இரண்டாம் பாகம் தயாரிக்க, கேரள நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாகச் செய்தி ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம்.

இது சம்பந்தமாக ஊடக நண்பர்கள் எங்களைத் தொடர்பு கொண்டு கருத்துக் கேட்டும் வருகின்றனர். எங்களுக்கு அவ்வழக்கின் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் தெரியாத காரணத்தால் அதைப்பற்றிய விபரங்கள் எதுவும் தற்போது வெளியிட இயலாது.

அதே சமயம் ‘கைதி’ சம்மந்தப்பட்ட ஊடக செய்திகளில் எங்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நாங்கள் உறுதியாக மறுக்கவோ, சட்டப்படி இதை நிரூபிக்கவோ முடியும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் சில செய்தி நிறுவனங்கள் வழக்கின் விசாரணை முடிவு தெரியாமல், இத்திரைப்படம் சார்ந்த எவரையும் களங்கப்படுத்தி செய்தி வெளியிடாமல் ஊடக தர்மம் காக்கவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!” என்று சமூக வலைதளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Kaithi movie Controversy Clarification Statement from Producer SR Prabhu

More Articles
Follows