தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு 3 வேடங்களில் நடித்த படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.
இப்படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பன் சிம்புவால் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஏற்கனவே புகார் அளித்திருந்தார்.
இதுவரை சிம்பு அந்த பணத்தை திருப்பித் தரவில்லை.
அண்மையில் சிம்புவின் சொதப்பல் கால்ஷீட்டால் மாநாடு படத்திலிருந்து அவரை நீக்கியதாக அறிவித்தார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.
இதுபோல் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜாவும் சிம்பு மீது புகார் அளித்துள்ளார். அவர் சிம்புவை வைத்து தயாரித்து வந்த படம் பாதியில் நிற்கிறது.
இவர்களைப் போல் தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்ட்ஸ் மதனும் சிம்புவை ஒப்பந்தம் செய்து முன்பணம் கொடுத்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.
இவர்களைத் தொடர்ந்து கொரில்லா படத்தை தயாரித்த சுரேசும் சிம்புவை வைத்து படம் எடுக்க முன்பணம் கொடுத்துள்ளாராம்.
இப்படி தொடர்ச்சியா சிம்பு மீது 5 தயாரிப்பாளர்கள் புகார் அளித்துள்ளனர்.
எனவே விரைல் சிம்பு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தயாரிப்பாளர் சங்க வட்டாரத்தில் பேசப்படுகிறது.
Five producers complaint against Actor Simbu