சிம்பு மீது தயாரிப்பாளர்கள் புகார்; மீண்டு வந்தா ராஜாவா வருவாரா..?

சிம்பு மீது தயாரிப்பாளர்கள் புகார்; மீண்டு வந்தா ராஜாவா வருவாரா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Five producers complaint against Actor Simbu ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு 3 வேடங்களில் நடித்த படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.

இப்படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பன் சிம்புவால் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஏற்கனவே புகார் அளித்திருந்தார்.

இதுவரை சிம்பு அந்த பணத்தை திருப்பித் தரவில்லை.

அண்மையில் சிம்புவின் சொதப்பல் கால்ஷீட்டால் மாநாடு படத்திலிருந்து அவரை நீக்கியதாக அறிவித்தார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

இதுபோல் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜாவும் சிம்பு மீது புகார் அளித்துள்ளார். அவர் சிம்புவை வைத்து தயாரித்து வந்த படம் பாதியில் நிற்கிறது.

இவர்களைப் போல் தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்ட்ஸ் மதனும் சிம்புவை ஒப்பந்தம் செய்து முன்பணம் கொடுத்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து கொரில்லா படத்தை தயாரித்த சுரேசும் சிம்புவை வைத்து படம் எடுக்க முன்பணம் கொடுத்துள்ளாராம்.

இப்படி தொடர்ச்சியா சிம்பு மீது 5 தயாரிப்பாளர்கள் புகார் அளித்துள்ளனர்.

எனவே விரைல் சிம்பு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தயாரிப்பாளர் சங்க வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Five producers complaint against Actor Simbu

ரஜினிக்கு காமெடி ஆக்‌ஷன்; விஷாலுக்கு ஒன்லி ஆக்‌ஷன்.. : சுந்தர் .சி

ரஜினிக்கு காமெடி ஆக்‌ஷன்; விஷாலுக்கு ஒன்லி ஆக்‌ஷன்.. : சுந்தர் .சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sundar C talks about Vishals new movie Action “வந்தா ராஜாவாதான் வருவேன்” படத்தைத்தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.C அவர்கள் இயக்கிக் கொண்டிருக்கும் படம் “ஆக்‌ஷன்”.

இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க, தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். மத கஜ ராஜா மற்றும் ஆம்பள படங்களைத் தொடந்து இயக்குனர் சுந்தர்.C மற்றும் நடிகர் விஷால் இணையும் மூன்றாவது படம் இந்த “ஆக்‌ஷன்” திரைப்படம்.

இப்படம் பற்றி இயக்குநர் சுந்தர்.C கூறியது…

விஷாலுடன் நான் முன்பே இணைந்து படம் செய்வதாக இருந்தது. இருவரும் வேறு வேறு படங்களில் பிஸியாக இருந்தோம். விஷால்- நான் இருவரும் “ஆக்‌ஷன்”படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளோம்.

நான் M.G.R ரின் தீவிர ரசிகர் “உலகம் சுற்றும் வாலிபன்” படத்தைப்போல ஒரு படம் எடுக்க வேண்டும் என்று பல வருடங்களாக ஆசைப்பட்டேன்.தற்போது நடிகர் விஷால் மூலம் அந்த கனவு நிறைவேறியுள்ளது.

எழுபது சதவிகிதம் வெளிநாடுகளிலும் , ஜெய்ப்பூர், டெல்லி, ஐதராபாத் மற்றும் சென்னையில் ஆக்‌ஷன் படமாக்கப்பட்டது. அதேபோல் இதுவரை நான் இயக்கிய படங்களிலேயே “ஆக்‌ஷன்” காட்சிகள் அதிகமான திரைப்படம் இது தான். இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திராத சண்டைக் காட்சிகள் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளன.

தொடர்ச்சியாக பேய் படங்கள், காமெடி படங்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிரித்து ரசிக்கும் படியான படங்கள் தந்ததால் என்னை காமெடி இயக்குநர் ஆக்கிவிட்டார்கள்.

ஆனால் எனக்கு ஆக்சன் படம் செய்யதான் ஆசை. நான் எப்போதும் வேலை செய்து கொண்டே இருப்பதில் தீவிரமாக இருப்பேன். ஒரு படத்தை இயக்கி ரிலீஸ் ஆவதற்குள் தனது அடுத்த படத்தின் வேலைகளை துவங்கிவிடுவது எனது வழக்கம்.

எனக்கு , அனைத்து ஜானரிலும் படம் இயக்க ஆசை. “முறைமாமன்” படத்தின் இயக்குனாராக அறிமுகமானபோது அது ஒரு ரிமேக் படம் ஆனால் அப்டத்தை வேறுவிதமாக கூறியிருந்தேன்.

“உள்ளத்தை அள்ளித்தா”, “மேட்டுக்குடி” என்று காதல் கலந்த காமெடி படத்தை இயக்கியதால் என்னை காமெடிபடம் செய்யும் இயக்குநராக்கி விட்டார்கள்.

ஆனால் நான் எல்லா பாணியிலும் படம் செய்துள்ளேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து “அருணாச்சலம்” என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தை இயக்கினேன். அப்படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த ஆக்‌ஷன் படமாக இருந்தது.

இப்படம் முழுக்க முழுக்க சண்டை காட்சி நிரம்பிய திரைப்படம் என்பதால் விஷால் நடித்து வரும் இப்படத்திற்கு “ஆக்‌ஷன்” என்றே பெயர் வைத்துவிட்டோம். ஒரு படத்திற்கு வெகு முக்கியமானது டைட்டில் தான்.

படத்தின் மையத்தை அதில் சொல்லிவிட்டால் எதிர்பார்த்து வரும் ரசிகன் ஏமாற மாட்டான். அதுமட்டுமல்லாமல், தற்போது தமிழ் படங்களை இந்தி ரசிகர்களும் தெலுங்கு ரசிகர்களும் ஆதரித்து வருவதனால் இந்த தலைப்பு அணைத்து மொழிகளிலும் இந்தப் பெயர் பொருத்தமாக இருக்கும் என்று திட்டமிட்டு வைத்துள்ளோம்.

இந்தக் கதைக்கு நல்ல உடல்வாகுடன் டூப் போடாம சண்டைக் காட்சிகளில் நடிக்க ஒரு கதாநாயகன் தேவைப்பட்டதால் நடிகர் விஷால் சரியாக இருப்பார் என்று படக்குழுவினருக்குத் தோன்றியது.

மேலும் இப்படத்தில் சுபாஷ் என்கின்ற கதாப்பாத்திரத்தில் மிலிட்டரி ஆபீஸராக விஷால் நடிச்சிருக்கார். இவருக்கு ஜோடியாக தமன்னா, மிலிட்டரி கமாண்டோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர்களுடன் இணைந்து குடும்பப் பாங்கான பெண்ணாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மற்றும் அகான்ஸா பூரி என்பவர் பக்கா ரெளடித்தனம் செய்யும் கதாப்பாதிரத்தில் நடித்துள்ளார்.

இவர்களைத் தவிர, அரசியல்வாதியாக பழ.கருப்பையா, பாலிவுட் நடிகர் கபீர் சிங் வில்லனா டூயல் ரோல், ராம்கி, யோகி பாபு மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். முழுப்படப்பிடிப்பும் முடிந்த நிலையில் விரைவில் திரைக்கு வரும் முயற்சிகளில் இருக்கிறது ஆக்‌ஷன் திரைப்படம்.

இதன் படப்பிடிப்பு முடிவடைந்தது. போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது.

கதை , இயக்கம்: சுந்தர்.சி .
திரைக்கதை: சுபா, வெங்கட் ராகவன் & சுந்தர்.சி.
இசை: ஹிப் ஹாப் தமிழா.
ஒளிப்பதிவு: டியூட்லீ DUDLEE
எடிட்டிங்: ஸ்ரீகாந்த்.
வசனம்: பத்ரி.
கலை: துரைராஜ்.
ஸ்டண்ட்: அன்பறிவ்.
நடனம் ; பிருந்தா, தினேஷ்.
பாடல்கள்: பா. விஜய் , ஹிப் ஹாப் தமிழா.
தயாரிப்பு மேற்பார்வை: P. பால கோபி ஆகியோர் பணிபுரிந்துள்ளார்கள்.தயாரிப்பு: ட்ரைடென்ட் ரவீந்திரன்

Sundar C talks about Vishals new movie Action

மஹிமா ஒரு க்யூட் நடிகை… ‘மகாமுனி’ நடிகை இந்துஜா பாராட்டு

மஹிமா ஒரு க்யூட் நடிகை… ‘மகாமுனி’ நடிகை இந்துஜா பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mahima Nambiyar is very Cute says Indhujaஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் இயக்குநர் சாந்தகுமாரின் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மகாமுனி.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நாயகன் ஆர்யா, நாயகிகள் மஹிமா நம்பியார், இந்துஜா, தயாரிப்பாளர் KE ஞானவேல்ராஜா, இயக்குநர் சாந்தகுமார், இசையமைப்பாளர் S.தமன், மற்றும்தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசும்போது,

“2010ல் மெளனகுரு என்ற படம் வெளியானது. நான் அந்தப் படத்தை மூன்றாவது வாரத்தில்தான் பார்த்தேன். அதில் ஒரு விபத்து காட்சி இடம் பெறும். அதைக் கண்டு நான்பெரிதும் வியந்தேன்.

அதன் பின்பு நான் இயக்குநர் சாந்தகுமாரை சந்தித்தேன். இந்த மாதிரி ஒரு படத்தை எடுப்பதற்கான எண்ணம் எப்படி வந்தது என்று கேட்டேன். அவருடன் வேலை செய்யவிருப்பட்டு இருவரும் இணைந்தோம்.

இந்தக் கதையை எழுதுவதற்கு அவருக்கு எட்டு வருடங்களானது. ஆனால், அது மிகவும் அற்புதமாக வெளிவந்திருக்கிறது.

நாங்கள் முதலில் வேலை செய்யத் துவங்கியபோது அவருடைய மகன் நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார். இப்போது பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறார்.

இந்தப் படத்தின் மொத்தக் குழுவினரும் கடின உழைப்பைவெளிப்படுத்தியுள்ளனர்..” என்றார்.

கவிஞர் முத்துலிங்கம் பேசும்போது,

“நான் இந்தப் படத்தில் இரண்டு பாடல்களை எழுதியுள்ளேன். இயக்குநர் சாந்தகுமாரும், இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தியும் இந்த வாய்ப்பை எனக்களித்தனர். நான்இதுவரையிலும் 1500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளேன்.

44 பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன். நான் எழுதிய பாடலான ‘காஞ்சிப் பட்டுடுத்தி’ என்ற பாடலைசாவித்திரி என்பவர் பாடியிருந்தார்.

நான் பாடல் எழுத வந்தபோது இசையமைப்பாளர் தமன் ‘எங்கம்மாவும் நல்லா பாடுவாங்க ஸார்.. நல்ல தமிழ்ப் பாட்டு பாடியிருக்காங்க. இந்தப் பாட்டைக்கேட்டிருக்கீங்களா?’ என்று சொல்லி ‘காஞ்சிப் பட்டுடுத்தி’ என்ற பாடலைப் பற்றிச் சொன்னார்.

அப்போது இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி ‘அந்தப் பாடலை எழுதியவரேஇவர்தான்’ என்று சொன்னார். இந்தப் படம் மத்திய, மாநில அரசு விருதுகளை வெல்லும் என்று நம்புகிறேன்..” என்றார்.

நடிகை இந்துஜா பேசும்போது,

“சாந்தகுமார் ஸாருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அவர் ஒரு தூய்மையான படைப்பாளி. இது ஒரு வாழ்நாளில் எப்போதும் மறக்க முடியாத ஒரு அனுபவம். எனது அடுத்தநன்றி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு.
மூன்றாவது நன்றி ஆர்யாவுக்கு. அவருடன் நடிப்பது எனக்கு மிகவும் எளிதாக இருந்தது. மஹிமா ஒரு அழகான க்யூட்டான நடிகை. இந்தப் படத்தில் ஒரு தைரியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்…” என்றார்.

இசையமைப்பாளர் தமன் பேசும்போது,

“நான் இதுவரையிலும் 11 வருடங்களில் 110 படங்களுக்கு இசையமைத்துள்ளேன். ஆர்யா எனக்களித்த ஊக்கத்தைவிடவும் வேறு யாரும் எனக்கு அளித்ததில்லை. அவருடன்வேலை செய்வதில் எனக்கு மிகவும் விருப்பம்.

அவருடன் பல படங்களில் பணியாற்றியிருக்கிறேன். அவருக்கு எனது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இயக்குநர் சாந்தகுமார் தமிழ்ச் சினிமாவில் ஒரு மிகப் பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்தவர். அது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு அதுவும் வெற்றி பெற்றது.

வெற்றியின்பின்னால் அனைவரும் ஓடிக் கொண்டிருக்கும்போது, இவர் அதைப் பற்றிக் கண்டு கொள்ளவில்லை. அதைவிட்டு விலகி வந்துவிட்டார். அது எனக்கு மிகவும்கவலையளித்தது.

அச்சமயத்தில் ஞானவேல்ராஜா ஸார் இவருடன் இணைந்து ஒரு படம் செய்ய இருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன்.

அதிலும் ஆர்யா இதில் நாயகனாகநடிக்கப் போகிறார் என்பதைக் கேட்டு மேலும் சந்தோஷப்பட்டேன்.
ஆர்யா இந்தப் படத்தில் நடிக்கவில்லை. வாழ்ந்திருக்கிறார்.

இந்துஜா, மகிமா மற்றும் படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்களும் படத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்…” என்றார்.

படத் தொகுப்பாளர் சாபு ஜோஸப் பேசும்போது,

“பத்து வருடங்களுக்கு முன்னால் நான் ஆண்டனியிடம் வேலை செய்து கொண்டிருக்கும்போது ‘சில்லுன்னு ஒரு காதல்’ படத்தின் சுவரொட்டியை கொண்டு வந்தார்கள்.

அதைக் கண்டவுடன் இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீனுடன் ஒரு படத்திலாவது வேலை செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் என்னுள் உதித்தது.அது இந்தப் படத்தின் மூலமாக நிறைவேறியுள்ளது.

இங்கே மேடையில் உள்ள அனைவருமே இங்கே இருப்பதற்கு தகுதியானவர்கள். ஒத்துழைப்பு வழங்கிய எனதுஉதவியாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்…” என்றார்.

Mahima Nambiyar is very Cute says Indhuja

ரஜினியின் ‘காலா’ பாணியில் உருவான ‘கானல் நீர்’ செப்-13ல் ரிலீஸ்

ரஜினியின் ‘காலா’ பாணியில் உருவான ‘கானல் நீர்’ செப்-13ல் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sohan Roys CSR movie KAANAL NEERரஜினி நடிப்பில் உருவான காலா படம் நில உரிமை போராட்டத்தை பற்றி பேசியது. அதே பாணியில் அதிகாரவர்கத்தால் அலட்சியம் செய்யப்படும், நில உரிமை போராட்டத்தை பற்றி கானல் நீர் என்ற படம் உருவாகியுள்ளது.

ஒரு பரபரப்பான நகரின் மத்தியில் வாழும், வீடில்லாத பெண் மற்றும் அவரது குழந்தையின் போராட்டமான வாழ்க்கையை சித்தரிக்கும் இந்த திரைப்படம் ஏற்கனவே சமூகத்தின் அனைத்து தரப்பைச்சேர்ந்த முன்னணி மனிதர்களை கவர்ந்திருக்கிறது.

திரைப்படத்தின் நாயகியாக பிரியங்கா நாயர் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் காலை ஹரீஷ் பெரேடி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

டி.எஸ்.சுரேஷ் பாபு திரைக்கதை எழுதியிருக்கிறார். சோகன் ராய், தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படம் சி.எஸ்.ஆர் ( நிறுவன சமூக பொறுப்புணர்வு) பிரிவில் தயாரிக்கப்பட்டுள்ள உலகின் முதல் நன்கொடை திரைப்படமாகும்.

இந்த திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான சிறந்த திரைப்படம் பிரிவில் நாமினேஷனுக்கு போட்டியிடுகிறது.

இந்த திரைப்படத்தின் மூலம் கிடைகும் லாபம் அனைத்தும் நிலமில்லாதவகள் மறுவாழ்வுக்கு மற்றும் பெண்கள் அதிகாரமளிக்கும் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். இந்த இரண்டு கருப்பொருள்களும் திரைப்படத்தில் பிரதானமாக கையாளப்பட்டுள்லது.

கேரள மாநிலம் கொச்சியில் பாலம் ஒன்றின் கீழ் வசிக்க நேர்ந்த குடும்பம் பற்றி பிரபல நாளிதழில் வெளியான செய்திக்கட்டுரையை அடிப்படையாக கொண்டு கானல்நீர் படம் அமைந்துள்ளது.

பெரும்பாலான நிலமில்லாதவர்கள், தங்கள் குடும்ப பெண்களை பாலியல் தாக்குதலில் இருந்து காப்பதற்கான பாதுகாப்பான இடத்தை தேடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

பெரும்பாலும் அதிகாரவர்கத்தால் அலட்சியம் செய்யப்படும், நில உரிமை போராட்டம் பற்றியும் திரைப்படம் பேசுகிறது.

இந்தியா அதிகாரவர்கத்தின் மந்தமான தன்மை மற்றும் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவாமல் இருக்கும் அதிகாரவர்த்தின் தன்மை பற்றியும் கானல் நீர் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

முக்கியமாக கானல் நீர், ஒரு குறிக்கோள் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படம் பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பரவலான பாராட்டுகளை பெற்றுள்ளது. கலை, நேர்த்தி மற்றும் சிறந்த நடிப்பு ஆகிய அம்சங்களை கொண்டுள்ள படமாக விளங்குகிறது.

பிரபல இயக்குனர் எம்.பிரேம்குமாரின் சி.எஸ்.ஆர் திரைப்படமான கானல் நீர் தமிழகத்தில் செப்டம்பர் 13 ம் தேதி வெளியாகிறது.

Sohan Roys CSR movie KAANAL NEER

‘அக்னி நட்சத்திரம்’ படத்திற்காக உதயா & விதார்த் கூட்டணி

‘அக்னி நட்சத்திரம்’ படத்திற்காக உதயா & விதார்த் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Udaya and Vidharth team up for Agni Nakshatramமணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக், பிரபு, அமலா, நிரோஷா உள்ளிட்டோர் நடித்த படம் ‘அக்னி நட்சத்திரம்’.

1988ல் வெளியான இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல்கள் பெரியளவில் ஹிட்டானது.

தற்போது அதே பெயரில் ஒரு புதிய படம் உருவாகிறது. ஆனால் படத்தலைப்பை தவிர இரண்டுக்கும் எந்தவொரு ஒற்றுமையும் இல்லை என கூறப்படுகிறது.

க்ரைம் திரில்லராக உருவாகும் இப்படத்தில் உதயா – விதார்த் நடிக்கின்றனர்.

இப்படத்தை நாராயணமூர்த்தி, விஷ்ணுவர்தன், மோகன் ராஜா ஆகிய முன்னணி இயக்குனர்களுடன் பல வெற்றிப் படங்களில் இணை- துணை இயக்குனராக பணியாற்றிய சரண் இப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார்.

எல் கே விஜய் ஒளிப்பதிவில், சில்வா மாஸ்டர் சண்டை காட்சி அமைப்பில், ஒய் ஆர் பிரசாத் இசைக்கு, பா விஜய் பாடல்கள் எழுத, சான் லோகேஷ் படத்தொகுப்பை கவனித்து கொள்கிறார்.

Udaya and Vidharth team up for Agni Nakshatram

முதல் பார்வையில் முந்திய “ரங்கா” டீஸர்!

முதல் பார்வையில் முந்திய “ரங்கா” டீஸர்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)முதல் அபிப்ராயமே சிறந்த அபிப்ராயம் எனும் பழமொழி எளிமையானதென்றாலும், பல துறைகளுக்கும் பொருந்தும் ஒரு சிறந்த பழமொழியாகும்.

ஒரு சினிமாவை பொறுத்தவரை இந்த பழமொழி இன்னும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. ஒரு திரைப்படத்திற்கு முதல் அபிப்ராயமாக விளங்குவது அதன் டீசர் தான். ஒரு ரசிகன் படத்திலிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பதை மிகச்சரியாக எடுத்துக் கூறுவதாக, ரசிகனை திரைக்கு இழுக்கும் உத்தியாக, படத்தின் அடிப்படையை விளக்குவதாக அமைவது படத்தின் டீசர் தான். அந்த வகையில் மிகச் சிறந்த ஒரு டீசராக அமைந்திருக்கிறது சமீபத்தில் வெளியான நடிகர் சிபிராஜின் “ரங்கா” படத்தின் டீஸர்.

60 நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய “ரங்கா” படத்தின் டீஸர் ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் விமர்சகர்களையும், பிரபலங்களையும் ஒரு சேரக் கவர்ந்து பாராட்டுகளை பெற்றுள்ளது.

“பாஸ் மூவிஸ்”தயாரிப்பாளர் விஜய் கே செல்லைய்யா டீஸர் பற்றி கூறியது…
“இதனை நாங்கள் ஒரு மிகச் சிறப்பான தொடக்கமாக கருதுகிறோம். டீஸர் பார்த்துவிட்டு சினிமா நண்பர்கள் தந்த பாராட்டு இன்னும் உத்வேகத்தை அளிக்கக் கூடியதாக உள்ளது. அனைத்து பாராட்டும் இயக்குநர் DL வினோத் அவர்களுக்குரியது. இப்படத்தில் அவரது உழைப்பானது, திரைக்கதையிலிருந்து படத்தை உருவாக்கியது வரையிலும், மிகச் சிறப்பானது மேலும் இப்போது டீஸரை அவர் அளித்த விதம் அபாரமானது.
மேலும் இப்படத்தில் ரூபன் அவர்களின் எடிட்டிங்கும், ராம்ஜீவனின் பின்னணி இசையும் அர்வியின் அபாராமான காட்சியமைப்பும் மிகச் சிறப்பாக அழுத்தமாக கதையையும், கதாப்பாதிரங்களையும் எடுத்துக்காட்டியுள்ளது. இத்தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு என்னை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. இனி வெளியாகப்போகும் டிரெய்லரில் இவர்கள் செய்யப்போகும் அதிசயங்களுக்காக காத்திருக்கிறேன்” என்றார்.

இப்படத்தை எழுதி இயக்குகியுள்ளார் DL வினோத், நாயகனாக சிபிராஜும் நாயகியாக நிகிலா விமலும் நடித்துள்ளார்கள். சதீஷ் , மோஹ்னீஸ் ரஹீஹா முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களாக

இசை – ராம்ஜீவன்

எடிட்டிங் – ரூபன்

ஒளிப்பதிவு – அர்வி

கலை – அருண் சங்கர் துரை

பாடலகள் – தாமரை, விவேக், முன்னா சௌஹத் அலி

சண்டைப்பயிற்சி – திலீப் சுப்பராயன், தினேஷ் சுப்பராயன்.

உடைகள் – சத்யா NJ, பாரதி BS

மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா

விளம்பர டிசைன்ஸ் – 24 AM

ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.

More Articles
Follows