தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
திரைப்பட இணை தயாரிப்பாளராகவும், நடிகர் சசிகுமாரின் கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக நிர்வாகியாகவும் பணிபுரிந்து வந்த அசோக் குமார் நேற்று (செவ்வாய்க்கிழமை) தற்கொலை செய்து கொண்டார்.
கடன் கொடுத்த பிரபல பைனான்சியர் ஒருவர் மிரட்டியதன் காரணமாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார். அசோக்குமார் தற்கொலை திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
அசோக்குமார் தற்கொலை குறித்து இயக்குநர் சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
அசோக் அண்ணனின் மரணம் என்னை பெரிதும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதற்கு காரணமான ‘மதுரை அன்பு’ தண்டிக்கப்பட வேண்டும். மதுரை அன்பு வால் நடந்து கொண்டிருக்கும் தற்கொலைகள் தடுக்கப்பட வேண்டும். சசிகுமார் அண்ணனுக்கு கதிர் சாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.