தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒட்டுமொத்த மனித சமுதாயத்தை நிலைக்குலைய வைத்துள்ளது கொரோனா வைரஸ்.
உலகெங்கிலும் பல மனிதர்கள் இதன் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவிலும் நாளுக்கு நாள் இதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்தியா முழுவதும் (கடந்த 10 நாட்களாக) ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளபோதும் நிறைய பேர் அதனை அலட்சியப்படுத்தி வெளியே சுற்றி வருகின்றனர்.
கொரோனாவை கட்டுப்படுத்த கோடிக்கணக்கான தொகையை மத்திய மற்றும் மாநில அரசுகள் செலவழித்து வருகின்றன.
நிவாரண நிதிக்கு தாராளமாக பணத்தை வழங்க மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
தெலுங்கு மற்றும் வட இந்திய நடிகர்கள் கோடிகளை கொட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் நடிகர்கள் தங்கள் துறை சார்ந்த பெப்சிக்கு வழங்கி வருகின்றனர்.
முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை சிவகார்த்திகேயன் மட்டுமே 25 லட்சம் கொடுத்துள்ளார்.
ரஜினி, கமல், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். இதுவரை இவர்கள் தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் வழங்கவில்லை.
ஆனால் தமிழத்தின் தல தளபதி என்றழைக்கப்படும் அஜித் மற்றும் விஜய் இதுவரை 1 ரூபாய் கூட நிதி அளிக்கவில்லை. சரி அவர்களின் விருப்பமாக கூட இருக்கலாம்.
ஆனால் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என ஒரு அறிக்கை கூடவா வெளியிட கூடாது? என சம்பந்தபட்ட நடிகர்களின் ரசிகர்களே நொந்து போய் உள்ளனர்.
ம்…ம்.. பொறுத்திருந்து பார்ப்போம்..
Fans disappointment with Vijay and Ajith in Corona issue