தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
திராவிட முன்னேற்ற கழக கட்சியில் பொதுச்செயலாளர் பதவி நீண்ட நாட்களாக காலியாக இருந்தது.
அந்த பதவியில் இருந்த பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்கு பிறகு அந்த பதவியில் யாரையும் கட்சி நியமிக்கவில்லை.
அந்த பதவிக்கு ஒருவரை தேர்வு செய்வதற்காக கட்சியின் பொதுக்குழு வரும் 9-ம் தேதி கூடுகிறது.
மேலும் பொருளாளர் பதவிக்கு யார்? தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற கேள்வியும் எழுந்தன.
இதையொட்டி தி.மு.க.வில் பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு பெறலாம் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன் பெயரிலும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு பெயரிலும் விண்ணப்பங்கள் வாங்கி சென்றனர்.
இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் வேட்புமனுக்கள் பெறப்பட்டன. பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு எம்.பி. வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதேபோல் பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் பிற்பகல் 3 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்த வேட்பு மனு தாக்கல் மாலை 4 மணியுடன் முடிந்தது .
இந்த பதவிகளுக்கு வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.
இந்நிலையில், தி.மு.க. பொது செயலாளராக துரை முருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில்…
தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு துரைமுருகன் அவர்களுக்கும், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு டி.ஆர். பாலு அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.