தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
யூடியுப்பில் பிரபலமானவர் சாட்டை துரைமுருகன். இவர் கலைஞர், ஸ்டாலின் போல விதவிதமாக கெட் அப்புகளில் வந்து நாம் தமிழருக்கு ஆதரவாக கொஞ்சம் ஓவராக பேசி பரபரப்பை ஏற்படுத்துவார்.
மேலும் திமுகவினரை தரைகுறைவாகவும், அவதூறாகவும் பேசுவார்.
இந்த நிலையில் திருச்சியில் வினோத் என்ற கார் நிறுவன ஊழியரை மிரட்டியதாக சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் மீது புகார் அளிக்கப்பட்டது.
எனவே சாட்டை துரைமுருகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கைதை கண்டித்து நாம் தமிழர் சீமான் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இத்துடன் ‘சாட்டை’ துரைமுருகன் மீது மிரட்டல் புகார் தவிர சில வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.
இவரை தொடர்ந்து கிஷோர் கே சாமி என்ற யூடியூபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபரும் திமுக உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரை தவறாக பேசி வந்தார்.
மேலும் பெண் பத்திரிகையாளர்களையும் தரக்குறைவாக பேசி வந்த நிலையில் இவருக்கு எதிராக பத்திரிகையாளர்கள் புகார் அளித்தனர்.
இவர்களைத் தொடர்ந்து தற்போது ஆபாச சர்ச்சையாக்குள்ளாகியுள்ளவர் கேமர் மதன்.
சிறுமிகளிடமும் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பாலியல் ரீதியாக பேசுவது இவன் வாடிக்கையாகும்.
இளைஞர்களை சீரழிக்கும் “பப்ஜி” எனும் ஆன்லைன் விளையாட்டு நாடு முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதில் விபிஎன் என்னும் பிரைவேட் நெட்வொர்க்கைப் பயன்படுத்தி, பப்ஜி விளையாட்டை சட்டவிரோதமாக விளையாடி இருக்கிறார் மதன்.
சிறுமிகளின் பாலியல் ரீதியான புகைப்படங்கள், வீடியோக்களையும் இவர் டெலிகிராமில் விற்றதாகவும் புகார் வந்துள்ளன.
தன்னோடு விளையாட்டில் இணையும் சிறுவர், சிறுமியரிடம் ஆபாசமாகப் பேசுவதாக கூறப்படுகிறது.
எனவே சென்னை புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.
இதனையடுத்து மதன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என காவல் துறை உத்தரவிட்டிருந்தது்
இந்த நிலையில் மதன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
Case filed against pubg fame Madan