தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அனுப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து தயாரித்துள்ள ‘வரனே அவஷ்யமுண்டு’ என்ற மலையாள படம் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீசானது.
தற்போது ஆன்லைனில் இந்த படத்தில் வெளியிட்டுள்ளனர்.
இப்படத்தில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்து அழைப்பது போல காட்சிகள் இருக்கும்.
இது தமிழர்களிடையே சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இந்த நிலையில் சுந்தர பாண்டியன் பட இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரபாகரன் கூறியுள்ளதாவது…
அன்பிற்குரிய துல்கர் சல்மான் & அனுப் சத்யன் உங்களின் சமீபத்திய வெளியீடான #VaraneAvashyamund ” எனும் மலையாள திரைப்படத்தில், நாய்க்கு “பிரபாகரன்” என்று பெயர் சூட்டி இருப்பதாக வரும் வசனம் பற்றியும் அதன் மூலம் எழுந்த சர்ச்சை பற்றியும், அதற்கு, மன்னிப்பா? அல்லது விளக்கமா என்று புரியாத வகையில் நீ அளித்த பதிவையும் சற்று முன்பே பார்க்கவும் படிக்கவும் நேர்ந்தது., நிற்க.,
அதென்ன கேரள தேசத்திலும் மலையாள திரைப்படங்களிலும் தமிழர்களையும் தமிழினத்தின் தேசியத் தலைவரையும் தொடர்ந்து கொச்சை படுத்தி வருகிறீர்கள்.? யார் சொல்லி கொடுத்தது உங்களுக்கு, மலையாளிகளை விட தமிழர்கள் தாழ்ந்தவர்கள் என்று.
உங்களின் தாய்மொழி மலையாளத்திற்கும் தாய்மொழி எங்களின் தமிழ்மொழி என்பதை மறந்து விடாதீர்கள்..!
“பிரபாகரன்” என்பது உங்களுக்கு ஒரு சாதாரண பெயர்., எங்களுக்கு அதுவே உயிர்., இதை சொன்னால் உங்களுக்கு நிச்சயம் புரியாது., இனியும் நீங்கள் தமிழர்களையும் தமிழின தலைவரையும் தொடர்ந்து தரம் தாழ்த்தி பேசுவதாக இருந்தால்- நாங்களும் “கேரளத்து காந்தி” என்றழைக்கப்பட்ட கே.கேளப்பன் பெயரையும் சுதந்திர போராட்ட காலத்திலிருந்து பெருந்தலைவராக அங்கு அறியப்பட்ட “மொகம்மத் அப்துல் ரஹிமான் சாகிப்” பின் பெயரையும் “வக்கம் மௌலாவி” யின் பெயரையும் எங்களின் படைப்புகளில் நாய்களுக்கும் பன்றிகளுக்கும் பெயராக சூட்ட வேண்டிய சூழல் ஏற்படும்.
யார் இதை செய்கிறார்களோ இல்லையோ., நான் நிச்சயம் என் படைப்பில் இதை செய்வேன் என்பதை பணிவோடு கூறிக்கொள்கிறேன்.,
இத்துடன் நடிகர் பிரசன்னாவுக்கும் பிரபாகரன் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில் பிரசன்னா சக நடிகர் என்கிற முறையில் துல்கர்க்கு ஆதரவாக பேசுவதை விட்டு விட்டு., “தலைவர்” பிரபாகரன் யார் என்பதை எடுத்து கூறினால் நன்றாக இருக்கும்.., என தெரிவித்துள்ளார்.
Director SR Prabhakaran slams Dulquer and advice to Prasanna