தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த சில வருடங்களாகவே ஒரு ஹிட் படத்தின் 2ஆம் பாகத்தை எடுப்பதை தமிழ் திரையுலகினர் வாடிக்கையாக்கி விட்டனர்.
இதுநாள் வரை இயக்குனரும் நடிகருமான சசிகுமார் இந்த பயணத்தில் சேராமல் இருந்து வந்தார்.
அவரின் சமீபத்திய படங்களான பலே வெள்ளையத்தேவா, கிடாரி உள்ளிட்ட படங்கள் சரியாக போகவில்லை.
எனவே அவரும் தன் பழைய ஹிட் படங்களின் 2ஆம் பாகத்தை எடுக்க தயாராகிவிட்டார்.
தற்போது நாடோடிகள் 2 என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இதில் இவருடன் சமுத்திரக்கனி, அஞ்சலி, அதுல்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இதன் சூட்டிங் தற்போது நடைபெற்று வரும் வேளையில் சுந்தர பாண்டியன் படத்தின் 2ஆம் பாகத்தையும் எடுக்க தயாராகிவிட்டார்.
இப்படத்தை முதல் பாக இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கவிருக்கிறார்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
After Nadodigal 2 Sasikumar going to act in Sundarapandian 2