“இந்தியத்தாயின் பிள்ளையாகவே இருக்க ஆசைப்படுகிறேன்” – இயக்குனர் அமீர்.!

“இந்தியத்தாயின் பிள்ளையாகவே இருக்க ஆசைப்படுகிறேன்” – இயக்குனர் அமீர்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)பிரித்தானிய இந்தியாவின் முஸ்லிம் கவிஞரும், இஸ்லாமிய மெய்யியலாளரும், தேச ஒற்றுமைக்குப் பாடுபட்டவருமான சர் முகமது இக்பால் என்பவர் எழுதிய ‘சாரே ஜஹான் சே அச்சா’ எனும் பாடலை, தமிழ்க் கவி வேந்தர் மு.மேத்தா அவர்கள் மொழிபெயர்த்து, இசையமைப்பாளர் தாஜ்நூர் இசையமைத்து, நித்யஸ்ரீ மகாதேவன் பாடிய “தாயே, இந்தியத் தாயே …” எனும் பாடலை கவிக்கோ மன்ற நிறுவனரும் சிங்கைத் தமிழருமான எம்.ஏ.முஸ்தபா அவர்கள் தயாரித்திருக்கிறார்.

இவ்வளவு நாட்கள் ஒரு இசையமைப்பாளராக நாம் பார்த்துவந்த தாஜ்நூர் இந்த பாடல் மூலமாக ஒரு சிறந்த இயக்குனராகவும் தன்னை வெளிப்படுத்தியுள்ளார்.. ஆம்.. இன்றைய சூழலில், ஒரு பாடல் இசையால் மட்டும் பெரிய அளவில் மக்களிடம் சென்று சேர்ந்துவிடாது.. அந்த பாடலுக்கு ஏற்றாற்போல் காட்சியமைப்பும் சிறப்பாக இருக்க வேண்டும் அப்போதுதான் அந்த பாடல் முழு வெற்றி அடையும் என்பதில் தாஜ்நூர் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்.. அந்தவிதத்தில் இந்தப்பாடலுக்கு இசையமைத்ததது மட்டுமில்லாமல், 6 மாதங்களுக்கும் மேலாக பாடலுக்கான காட்சி வடிவத்தையும் இயக்கி, ஒரு இயக்குனராகவும் தனது பங்களிப்பை செய்துள்ளார். இதன் மூலம் திரையுலகில் தன்னுடைய அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளார் என்றே சொல்லவேண்டும்.

தேச ஒற்றுமையை வலியுறுத்தும் இந்த இசைப்பாடலை ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் வெளியிட இயக்குனர் அமீர் பெற்றுக்கொண்டார் பாடல் கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மு.மேத்தா, தாஜ்நூர், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன், இயக்குனர் மீரா கதிரவன், எம்.ஏ.முஸ்தபா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினார்கள்..

இதில் இயக்குனர் அமீர் பேசும்போது,

“இந்த விழாவுக்கு கிளம்பும்போது இந்தியத்தாயை வாழ்த்த கிளம்பி விட்டீர்களா..? அப்படியென்றால் தமிழ் தேசியம் என்னாயிற்று என்று சிலர் கேட்டார்கள்.. நானும் இந்தியத்தாயின் பிள்ளையாகத்தான் இருக்க ஆசைப்படுகிறேன்.. பாரத மாதாவின் காலடியில் இருக்கிறோம் என்றாலும் தாயின் காலடியில் தான் சொர்க்கம் என்பது போல எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை.. ஆனால் முகத்திற்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை காலுக்கு கொடுப்பதில்லை.. பாரத மாதாவின் காலாக இருக்கும் தமிழகத்தை அப்படித்தான் பார்க்கிறார்கள். ஆனால் கால் இல்லாமல் வாழவே முடியாது என்பதை மறந்து விடுகின்றனர்.

இன்று செய்வதற்கே அஞ்சுகின்ற பஞ்சமா பாதகச்செயலை செய்பவர்கள் கூட ‘பாரத் மாதா கி ஜே’ என்று கோஷமிட்டுக் கொண்டு செல்கிறார்கள்.. தேசத்தை நேசிக்காமல் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் செல்லும் அவர்களை விட, இந்த தேசத்தை யார் உண்மையாக நேசிக்கிறோம் என்பது மற்றவர்களுக்கு நன்றாகவே தெரியும். இந்த பாடல் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தில் எண்ணமாகவும் தமிழ் சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என” கூறினார் அமீர்.

ராஜமௌலி இயக்கும் RRR படத்தின் விரிவாக்கம் இதுதானா..?

ராஜமௌலி இயக்கும் RRR படத்தின் விரிவாக்கம் இதுதானா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)பாகுபலி 2 படத்திற்கு பிறகு ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் படங்களை இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்திருக்கிறது.

இவர் தற்போது ஜுனியர் என்டிஆர், ராம் சரண் நடிக்கும் ‘ஆர்ஆர்ஆர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

ஆனால் படத்தின் ஒரு ஹீரோயின் யார் என்பதை படக்குழுவினர் முடிவு செய்யவில்லை.

மேலும் ‘ஆர்ஆர்ஆர்’ என்பதற்கான விளக்கத்தை அவர்கள் தெரிவிக்கவில்லை.

‘ஆர்ஆர்ஆர்’ என்பதன் விரிவாக்கத்தை ரசிகர்கள் அனுப்பலாம் என தெரிவித்தனர்.

எனவே அனைத்து மொழி ரசிகர்களும் பதிலளிக்க தொடங்கினர்.

தற்போது அந்த தலைப்புகளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதில் ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ என்ற தலைப்பை ஹைலைட்டாக காட்டியுள்ளனர்.

படத்தின் கதைக்களமும் சுதந்திர காலத்துக்கு முன்பு உள்ளதால் இதுவே தலைப்பாக இருக்கும் என கருதப்படுகிறது.

ஜியோ நிறுவனம் தயாரிப்பில் இணையும் ஷங்கர்-விஜய்-விக்ரம்..?

ஜியோ நிறுவனம் தயாரிப்பில் இணையும் ஷங்கர்-விஜய்-விக்ரம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectநடிகர் கமல்ஹாசன் அரசியலில் பிஸியாகி விட்டதால் இந்தியன் 2 படம் அப்படியே நிற்பதால் கடும் அப்செட்டில் இருக்கிறாராம் ஷங்கர்.

இதனால் பொறுமையிழந்த ஷங்கர் வேறு ஒரு படத்தை இயக்க தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது-

நடிகர்கள் விஜய் மற்றும் விக்ரம் ஆகிய இருவரிடமும் 2 ஹீரோ கதையை சொன்னதாகவும அவர்கள் ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்திற்கு பைனான்ஸ் உதவி செய்ய முன்வந்திருக்கிறதாம் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம்.

விரைவில் இப்பட அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கலாம்.

ஒரு நாளைக்கு ரூ. 5 லட்சம் சம்பளம் வாங்கும் யோக(கி) பாபு

ஒரு நாளைக்கு ரூ. 5 லட்சம் சம்பளம் வாங்கும் யோக(கி) பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Comedy Actor Yogi Babu Salary Will Makes You Shockதமிழ் சினிமாவில் காமெடிக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் காமெடி நடிகர் யோகி பாபு காட்டில் மழை பெய்து வருகிறது.

இவர் இல்லாமல் படங்கள் இல்லை என்னுமளவுக்கு ஒவ்வொரு படத்திலும் ஒரு காட்சியிலாவது தலை காட்டி விடுகிறார்.

விஜய்யுடன் சர்கார், அஜித்துடன் விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர் தற்போது ரஜினியுடன் தர்பார் படத்திலும் இணைந்துள்ளார்.

தர்பார் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் 120 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ள நிலயில் யோகிபாபு 40 நாட்கள் கொடுத்துள்ளாராம்.

யோகிபாபு தற்போது எல்லாம் ஒரு படத்திற்கு இவ்வளவு சம்பளம் என கமிட் ஆகாமல் ஒரு நாளைக்கு ரூ. 5 லட்சம் என கமிட்டாகி நடித்து வருகிறாராம்.

மேலும் நயன்தாராவும் யோகிபாபுக்கு சிபாரிசு செய்வதாக சொல்லப்படுகிறது-

அப்போ இனி யோகி பாபுவை யோக பாபு என்றே அழைக்கலாம் தானே.. வாழ்த்துக்கள் ப்ரோ…

Comedy Actor Yogi Babu Salary Will Makes You Shock

தங்க மங்கை கோமதிக்கு நடிகர் விஜய்சேதுபதி ரூ.5 லட்சம் உதவி

தங்க மங்கை கோமதிக்கு நடிகர் விஜய்சேதுபதி ரூ.5 லட்சம் உதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathis kind gesture to TN athlete Gomathi Marimuthuஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்து வருகின்றன.

கடும் வறுமையை மீறி தங்கத்தை வென்றவர் என்பதால் பலரும் அவரின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி கோமதிக்கு 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியிருக்கிறார்.

திருச்சியில் கோமதி வசிக்கும் வீட்டிற்கு நேரில் சென்றவர்கள் ரூ. 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை கோமதியிடம் வழங்கியுள்ளனர்.

விஜய்சேதுபதியும் தன் பாராட்டுக்களை மொபைல் போனில் தெரிவித்துள்ளார்.

Vijay Sethupathis kind gesture to TN athlete Gomathi Marimuthu

இண்டர்நேஷனல் பாலிடிக்ஸில் ‘குண்டு’ போடும் ரஞ்சித்-தினேஷ்

இண்டர்நேஷனல் பாலிடிக்ஸில் ‘குண்டு’ போடும் ரஞ்சித்-தினேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Irandam Ulagaporin Kadaisi Gundu deals with International Politicsதனது இயல்பான நடிப்பின் மூலமாக பெரும் அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்று வருபவர் நடிகர் தினேஷ்.

இவரது நடிப்பில் “குக்கூ”, “விசாரணை” ஆகிய படங்கள் முக்கியமானவை.

கதையின் தன்மைக்கேற்ப உடலை வருத்தியும் ஈடுபாட்டுடன் நடித்தும் இயக்குநர்களின் நடிகராக வலம் வரும் நடிகர் தினேஷ், அவசரப்படாமல் நிதானமாகவே படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தற்பொழுது இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கத்தில் “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” படம் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது.

“குண்டு படத்தை உலகின் எந்த நிலப்பரப்போடும் தொடர்புபடுத்தினாலும் அது அந்த நிலப்பரப்போடு பொருந்திப்போகும். ஒரு இண்டர்நேஷனல் பாலிடிக்ஸ் இந்த படத்தில் இருக்கிறது.

அதேசமயம் ஜனரஞ்சகமான அனைவரும் ரசிக்கும்படியும், குடும்பங்கள், இளைஞர்கள், எல்லோருக்குமான ஒரு படமாக வந்திருக்கிறது. என் சினிமா கேரியரில் ரொம்ப முக்கியமான படம். ஒரு லாரி ஓட்டுனரின் மன நிலையில் லாரி ஓட்டுனராக வடதமிழகத்து இளைஞனாக நடித்தது புதிய அனுபவம்.

அடுத்தடுத்து தமிழகம் மற்றும் மலையாளம், தெலுங்கு படங்களிலும் பிற மாநிலங்களில் இருந்து வாய்ப்புகள் வருகின்றன. எனக்கு உகந்த கதைகளை கேட்டுக் கொண்டிருக்கிறேன்” என்கிறார் தினேஷ்.

Irandam Ulagaporin Kadaisi Gundu deals with International Politics

More Articles
Follows