தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவின் பிரபலமான காமெடியன் சந்தானம்.
இவர் தற்போது ஹீரோவாக மட்டும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சென்னை வளசரவாக்கம் சவுத்ரி நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம்,40. இவர் அதே பகுதியில் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு போரூரை அடுத்துள்ள பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தை வாங்கி திருமண மண்டபம் மற்றும் வணிக வளாகம் கட்ட முடிவு செய்துள்ளார் சந்தானம்.
இதன்படி சண்முகசுந்தரத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளார்.
ஆனால் சண்முகசுந்தரம் கட்டிட பணியைத் தொடங்காமல் இழுத்தடித்து வந்துள்ளார்.
இது தொடர்பாக சந்தானம் அவரிடம் கேட்க, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
சினிமாவில் காமெடி செய்து வந்தாலும் நிஜத்தில் கராத்தே கற்றவர் சந்தானம்.
எனவே சண்முகசுந்தரத்தை மற்றும் அவரது வக்கீல் பிரேம் ஆனந்ததை கராத்தே பாணியில் தாக்கியுள்ளார்.
எனவே சந்தானம் தன்னை தாக்கியதாக வளசரவாக்கம் போலீசில் சண்முக சுந்தரம் புகார் அளித்துள்ளார்.
அதுபோல் சந்தானமும் காவல் நிலையத்தில் புகார் செய்து, தனக்கும் காயம் ஏற்பட்டதாக கூறி வடபழனியில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வளசரவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
சண்முகசுந்தரம் பாஜ கட்சியை சேர்ந்தவர் என்பதால், சந்தானம் சிசிக்சை பெற்று வந்த மருத்துவமனையை பாஜக பிரமுகர்கள் முற்றுகையிட்டனர்.
மேலும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
இந்நிலையில் சந்தானம் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.