#BetheREALMAN… சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சவால் விட்ட சிரஞ்சீவி

#BetheREALMAN… சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சவால் விட்ட சிரஞ்சீவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Be the REAL MAN Chiranjeevi challenges Rajinikanthகொரோனா வைரஸ் தொற்றை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதனால் மற்ற தொழில்களைப் போல சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

எனவே திரை நட்சத்திரங்கள் வீட்டிலேயே முடங்கியுள்ள நிலையில் சமைப்பது, வீட்டு வேலை, வீட்டை சுத்தம் செய்வது என பலவற்றி வீடியோவாக எடுத்து அதை இணையத்தில் பதிவேற்றம் செய்கின்றனர்.

தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி எனும் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா டுவிட்டரில் புதிய சவால் ஒன்றை தொடங்கினார்.

#BetheREALMAN எனும் ஹேஷ்டேக்கில் பதிவிடுமாறு அவர் கூறியிருந்தார்.

அவரின் சவாலை ஏற்று பாகுபலி டைரக்டர் ராஜமவுலி இந்த சவாலை செய்தார்.

இதனையடுத்து ராஜமவுலியின் சவாலை ஏற்று வீட்டுவேலை செய்தார் ஜூனியர் என்.டி.ஆர். இவர் சிரஞ்சீவிக்கு சவால்விட்டார்.

இதனை ஏற்று வீட்டை சுத்தம் செய்து தனது தாயாருக்கு தோசை சுட்டு கொடுத்து ஊட்டிவிட்டார் சிரஞ்சீவி.

இந்த சவாலை அவர் ரஜினிக்கு விட்டுள்ளார்.

சிரஞ்சீவியின் சவாலை ரஜினி ஏற்பாரா? வீட்டு வேலை செய்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Be the REAL MAN Chiranjeevi challenges Rajinikanth

1500 நலிந்த கலைஞர்கள் குடும்பத்தினருக்கு ரஜினியின் கொரோனா நிவாரணம்

1500 நலிந்த கலைஞர்கள் குடும்பத்தினருக்கு ரஜினியின் கொரோனா நிவாரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini to provide grocery to 1500 actors and Asst Directors கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகமே ஸ்தம்பித்துள்ளது.

மக்களின் நெருக்கத்தை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதனால் இந்திய மக்கள் கடந்த ஒரு மாதமாக வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

இதனால் தின வருமானத்தை நம்பியுய்ய ஏழைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை போல சினிமாவை நம்பி வாழும் பல தொழிலாளிகளும் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.

இவர்களுக்கு பல முன்னணி நடிகர்கள் தாங்களாகவே முன்வந்து நிறைய உதவிகளை செய்து வருகின்றனர்.

நடிகர் லாரன்ஸ் தினம் தினம் ஒரு அறிவிப்பாக பல லட்சங்களை நிவாரண நிதியாக கொடுத்து வருகிறார்.

சினிமா தொழிலாளர்கள் சங்கமான FEFSIகக்கு சில வாரங்களுக்கு முன்பே நடிகர் ரஜினிகாந்த் ரூ. 50 லட்சம் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களில் உள்ள உதவி இயக்குனர்கள், நலிந்த கலைஞர்கள் என 1500 பேரின் குடும்பத்தினருக்கு (24 டன் அத்தியாவசிய) அரிசி மற்றும் மளிகை பொருட்களை நிவாரணமாக கொடுத்துள்ளார்.

ரஜினியின் ரசிகர்களும் தமிழ்நாடு முழுவதும் தங்களால் இயன்ற வகையில் காய்கறிகள், மளிகை பொருட்கள், அரிசி, பருப்பு உள்ளிட்டவைகளை ஏழைகளுக்கு கொடுத்து உதவி வருகின்றனர்.

Rajini to provide grocery to 1500 actors and Asst Directors

ஜோதிகா கோயில் பேச்சு; மன்னிப்பு கேட்க இந்து அமைப்புகள் எச்சரிக்கை

ஜோதிகா கோயில் பேச்சு; மன்னிப்பு கேட்க இந்து அமைப்புகள் எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jyothikas Speech Controversy She should apologise for hurting Hindu beliefsஓரிரு தினங்களுக்கு முன் விருது விழா நிகழ்ச்சி தனியார் டிவியில் ஒளிப்பரப்பானது. அதில் நடிகை ஜோதிகா பேசினார்.

ஜோதிகா பேசியதாவது,… தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் புகழ்பெற்றது, கண்டிப்பாக பார்க்கனும் என்றார்கள். ஏற்கெனவே பார்த்துள்ளேன்.

உதய்பூரில் உள்ள அரண்மனைகள் மாதிரி நன்கு பராமரித்து வருகிறார்கள்.

அடுத்த நாள் என் பட சூட்டிங் மருத்துவமனையில் இருந்தது. அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. நான் கண்டதை என் வாயால் சொல்ல முடியாது.

எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள். ‘ராட்சசி’ படத்தில் இதை இயக்குநர் கௌதம் ராஜ் சொல்லியிருக்கிறார்.

கோயிலுக்காக அதிகம் காசு கொடுக்கிறீர்கள். வண்ணம் பூசி பராமரிக்கிறீர்கள்.

தயவு செய்து அதே தொகையை பள்ளிகளுக்கு கொடுங்கள். மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள். அந்த அளவுக்கு முக்கியம். எனவே அவற்றுக்கும் நிதியுதவி செய்வோம்” என பேசினார் ஜோதிகா.

ஜோதிகாவின் இந்த பேச்சு இந்துக்களிடையே பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

மயிலாடுதுறை ஆன்மீக பேரவை கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மேலும் பல இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகிறது.

அகில உலக ஆன்மிக இந்து மத கட்சி தலைவர் ஜெயம் ஜேஎஸ்கே கோபியும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மருத்துவமனை கட்ட வேண்டுமென்றால் மருத்துவமனை கட்டுங்கள் என ஜோதிகா சொல்லியிருக்கலாம். அதை விடுத்து கோயிலுக்கு பதிலாக மருத்துவமனை கட்டுங்கள் என ஏன் சொன்னார்?

ஏற்கெனவே இந்துக்களை மதம் மாற்ற ஒரு கூட்டம் அலைந்துக் கொண்டிருக்கிறது. எனவே ஜோதிகா வருத்தம் தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இந்து தமிழர் கட்சித் தலைவர் இராம. ரவிக்குமார் என்பவர் கூறியுள்ளதாவது…

அடிப்படையில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் ஜோதிகா. இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆலயங்களை கட்ட வேண்டாம் என அவர் சொல்லவில்லை.

ஆனால் இந்து கோயிலை மட்டுமே சொன்னது தவறு. கலை கூத்தாடி ஜோதிகா தமிழர் கட்டிடக் கலையை கொச்சைப்படுத்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Jyothikas Speech Controversy She should apologise for hurting Hindu beliefs

அஜித்-ஷாலினி ஜோடிதான் முன்னுதாரணமா..? ஹலோ ஆப் அலப்பறைகள்

அஜித்-ஷாலினி ஜோடிதான் முன்னுதாரணமா..? ஹலோ ஆப் அலப்பறைகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Helo App trends and Supports for Vijay and Ajithஅமர்க்களம் படத்தில் ஜோடியாக நடித்தபோது தன் காதலை வெளிப்படுத்தி நாயகி ஷாலினியை திருமணம் செய்துக் கொண்டார் நடிகர் அஜித்.

இவர்களின் திருமணம் கடந்த 2000 ஆண்டில் 24 ஏப்ரலில் நடைபெற்றது.

தற்போது அஜித் ஷாலினி தம்பதிக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் ஹலோ ஆப் என்ற சமூக வலைத்தளத்தில் அஜித் திருமண நாள் (ஏப்ரல் 24) மற்றும் அஜித் பிறந்த நாள் மே 1 ஆகிய இரண்டையும் சேர்த்து நிறைய ஹேஷ்டேக்குகளை அறிவித்துள்ளனர்.

அதன்படி நிறைய டிரெண்ட்டாகியும் வருகிறது.

ஆனால் இது போல டிரெண்டுக்காக சில அறிவிப்புகளையும் ஹலோ ஆப் வெளியிட்டுள்ளது.

அதில் திரையுலகில் காதல் திருமணம் செய்த பல ஜோடிகளுக்கு அஜித் & ஷாலினி தான் முன்னுதாரணம் என தெரிவித்துள்ளனர்.

இவர்களுக்கு முன் பல காதல் திருமணங்களை திரையுலகம் பார்த்திருக்கிறது.

அப்படியிருக்கையில் இவர்களை முன்னுதாரணம் என சொல்வது ஏனோ..?

மேலும் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களை கவர்வதற்காகவே ஹலோ ஆப்பில் நிறைய ட்ரெண்டுக்களை அறிவிக்கின்றனர்.

அங்கு பணிபுரிவர்களில் பலர் தல தளபதி ரசிகர்களாக  இருப்பதாலேயே இப்படியொரு செய்கை எனவும் கூறப்படுகிறது.

ரஜினி, கமல், சூர்யா, கார்த்தி, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி உள்ளிட்ட மற்ற ஹீரோக்களை இவர்கள் பெரிதாக கண்டு கொள்வதில்லை எனவும் அடிக்கடி நிறைய புகார்கள் வருவது குறிப்பிடத்தக்கது.

Helo App trends and Supports for Vijay and Ajith

ஊரடங்கில் உணவில்லாத இந்தியர்கள்; உறங்காமல் உருகும் AR ரஹ்மான்

ஊரடங்கில் உணவில்லாத இந்தியர்கள்; உறங்காமல் உருகும் AR ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AR Rahman feel about Peoples suffer in Lock down என்னதான் இசைப்புயல் என ஏ.ஆர். ரஹ்மான் வர்ணித்தாலும் அவரது இசை மட்டுமே புயல். ஆனால் அவரது இதயம் மிக மென்மையானது என்பதை பலரும் அறிவர்.

தான் உண்டு. தன் வேலையுண்டு என அமைதியாக எதையும் எடுத்துக் கொள்பவர் அவர்.

ஆனால் தற்போது ஊரடங்கு சமயத்தில் அவர் ஒரு விஷயம் வருத்தமடைய செய்துள்ளதாம். இதனால் அவரால் நிம்மதியாக உறங்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்த விவரம் வருமாறு…

புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த ‘ஹேண்ட்ஸ் அரவுண்ட் த வேர்ல்ட்’ என்ற பாடலுக்கு இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த பாடலை ஸ்டீபன் ஸ்வார்ட்ஸ் என்பவர் எழுதி உள்ளார்.

மனிதநேய ஆர்வலர் கென் கிராகனின் முன்முயற்சிக்கு இணங்க இந்தப் பாடலை உருவாக்கியிருக்கிறாராம் ஏஆர்ஆர்.

இதன்மூலம் வரும் தொகையை காலநிலை மாற்ற திட்டங்களுக்கு செலவு செய்யப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு பூமி தினத்தில் இன்ஸ்டாகிராம் நேரலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்த நேரலையில் நீல் மோர்கன் இணைந்து உரையாற்றினர்.

அப்போது பேசிய மோர்கன், “ஊரடங்கு குறித்து பூமியின் மாசு குறைந்திருக்கிறது. சுத்தமான காற்று கிடைக்கிறது. பூமி தன்னையை புதுப்பித்து கொள்கிறது எனப் பேசினார்.

அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பேசியதாவது…

“ஊரடங்கில் பசியோடு தவிக்கும் மக்களை நினைக்கிறேன். அன்றாட உணவு தேவைக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நிலையிலே நிறைய இந்தியர்கள் உள்ளனர்.

அவர்களை நினைக்கும் போது உறங்க முடியவிலை. இந்த பூமியில் அவர்களும் ஒரு பகுதியினர்,” என உருக்கமாக தெரிவித்துள்ளார் ஏஆர்ஆர்.

AR Rahman feel about Peoples suffer in Lock down

ஜோதிகாவின் கோயில் பேச்சுக்கு SV சேகர் & திரௌபதி இயக்குனர் எதிர்ப்பு

ஜோதிகாவின் கோயில் பேச்சுக்கு SV சேகர் & திரௌபதி இயக்குனர் எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SV Sekar and Mohan condemn Jyothikas Controversy Speech about Templeஓரிரு தினங்களுக்கு முன் விருது விழா நிகழ்ச்சி தனியார் டிவியில் ஒளிப்பரப்பானது. அதில் நடிகை ஜோதிகா பேசினார்.

ஜோதிகா பேசியதாவது,… தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் புகழ்பெற்றது, கண்டிப்பாக பார்க்கனும் என்றார்கள். ஏற்கெனவே பார்த்துள்ளேன்.

உதய்பூரில் உள்ள அரண்மனைகள் மாதிரி நன்கு பராமரித்து வருகிறார்கள்.

அடுத்த நாள் என் பட சூட்டிங் மருத்துவமனையில் இருந்தது. அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. நான் கண்டதை என் வாயால் சொல்ல முடியாது.

எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள். ‘ராட்சசி’ படத்தில் இதை இயக்குநர் கௌதம் ராஜ் சொல்லியிருக்கிறார்.

கோயிலுக்காக அதிகம் காசு கொடுக்கிறீர்கள். வண்ணம் பூசி பராமரிக்கிறீர்கள்.

தயவு செய்து அதே தொகையை பள்ளிகளுக்கு கொடுங்கள். மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள். அந்த அளவுக்கு முக்கியம். எனவே அவற்றுக்கும் நிதியுதவி செய்வோம்” என பேசினார் ஜோதிகா.

ஜோதிகாவின் இந்த பேச்சுக்கு நடிகர் எஸ்.வி.சேகர் தன் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

ஜோதிகா 100 % மெச்சூரிட்டி இல்லாத பேச்சு .கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா. ஆலயம் தொழுவது (உங்களுக்கு பிடிக்குமே) சாலவும் நன்று.

இதெல்லாம் கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க. சுத்தமான ஹாஸ்பிடல் நல்ல பள்ளிகள் அவசியம். கோயிலுக்கு பதில் இதச்செய்யுனு சொல்லுவது அயோக்கியத்தனம். உங்கள் மாமனாரிடம் கேளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Jothika 100% immatured speech.கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா. ஆலயம் தொழுவது (உங்களுக்கு பிடிக்குமே) சாலவும் நன்று. இதெல்லாம் கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க. சுத்தமான ஹாஸ்பிடல் நல்ல பள்ளிகள் அவசியம்.

கோயிலுக்கு பதில் இதச்செய்யுனு சொல்லுவது அயோக்கியத்தனம். Ask Ur FATHER IN LAW
இவரை தொடர்ந்து சமீபத்தில் வெளியான திரௌபதி பட இயக்குனர் மோகனும் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

அவரின் பதிவில்… அருள்மொழி வர்மன் ஒரு அதிசய பிறவி.. மாமன்னன்.. ராஜராஜ சோழன்.. அவர் தகுதிக்கு ஏற்றாற்போல் கருத்துகளை பேசுங்கள்.. யார் நினைத்தாலும் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு இவரின் புகழை, இவர் வழிபட்ட ஈசனை, இவர் உருவாக்கிய இந்த அதிசயத்தை அசைத்து கூட பார்க்க முடியாது.. இவரை தொட்டால் கெடுவார்கள்.. என பதிவிட்டுள்ளார்.

SV Sekar and Mohan condemn Jyothikas Controversy Speech about Temple

More Articles
Follows