தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
என்னதான் இசைப்புயல் என ஏ.ஆர். ரஹ்மான் வர்ணித்தாலும் அவரது இசை மட்டுமே புயல். ஆனால் அவரது இதயம் மிக மென்மையானது என்பதை பலரும் அறிவர்.
தான் உண்டு. தன் வேலையுண்டு என அமைதியாக எதையும் எடுத்துக் கொள்பவர் அவர்.
ஆனால் தற்போது ஊரடங்கு சமயத்தில் அவர் ஒரு விஷயம் வருத்தமடைய செய்துள்ளதாம். இதனால் அவரால் நிம்மதியாக உறங்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்த விவரம் வருமாறு…
புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த ‘ஹேண்ட்ஸ் அரவுண்ட் த வேர்ல்ட்’ என்ற பாடலுக்கு இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த பாடலை ஸ்டீபன் ஸ்வார்ட்ஸ் என்பவர் எழுதி உள்ளார்.
மனிதநேய ஆர்வலர் கென் கிராகனின் முன்முயற்சிக்கு இணங்க இந்தப் பாடலை உருவாக்கியிருக்கிறாராம் ஏஆர்ஆர்.
இதன்மூலம் வரும் தொகையை காலநிலை மாற்ற திட்டங்களுக்கு செலவு செய்யப்படவுள்ளது.
இதனை முன்னிட்டு பூமி தினத்தில் இன்ஸ்டாகிராம் நேரலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அந்த நேரலையில் நீல் மோர்கன் இணைந்து உரையாற்றினர்.
அப்போது பேசிய மோர்கன், “ஊரடங்கு குறித்து பூமியின் மாசு குறைந்திருக்கிறது. சுத்தமான காற்று கிடைக்கிறது. பூமி தன்னையை புதுப்பித்து கொள்கிறது எனப் பேசினார்.
அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பேசியதாவது…
“ஊரடங்கில் பசியோடு தவிக்கும் மக்களை நினைக்கிறேன். அன்றாட உணவு தேவைக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நிலையிலே நிறைய இந்தியர்கள் உள்ளனர்.
அவர்களை நினைக்கும் போது உறங்க முடியவிலை. இந்த பூமியில் அவர்களும் ஒரு பகுதியினர்,” என உருக்கமாக தெரிவித்துள்ளார் ஏஆர்ஆர்.
AR Rahman feel about Peoples suffer in Lock down