தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் அமலாபால்.
இவர் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து செய்தார்.
இயக்குனர் விஜய்க்கு மறுமணம் நடந்து விட்டாலும் அமலாபால் மறு திருமணம் செய்து கொள்ளவில்லை.
இந்நிலையில் அமலா பாலுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக அவரது முன்னாள் காதலன் (பாய் பிரண்ட்) பவ்நீந்தர் சிங் இன்று கைது செய்யப்பட்டார். இவர் ராஜஸ்தானை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல பாடகரும் தனது நண்பருமான பவிந்தர் சிங்கை அமலா பால் காதலிப்பதாக கூறப்பட்டது.
ஒரு கட்டத்தில் இருவரும் மணக்கோலத்தில் இருந்த படங்களை பவிந்தர்சிங்
தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு அது பரபரப்பாகவே பின்னர் நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமலா பால் அளித்த புகாரின்பேரில் காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
தனது காதலனை கருத்து வேறுபாட்டால் பிரிந்த நிலையில் தன்னை துன்புறுத்தியதாக புகார் அளித்து இருந்தார்.
தன்னை ஏமாற்றி, அச்சுறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசிடம் புகார் அளித்திருந்தார்.
பவ்நீந்தர் சிங்குடன் இணைந்து திரைப்பட நிறுவனம் தொடங்கி நடத்தி வந்ததாகவும் அமலாபால் தகவல் அளித்துள்ளார்.
புதுச்சேரி பகுதியில் பாவந்தர் சிங் தத்தை கைது செய்து விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை அமலா பாலுக்கு ராஜஸ்தானில் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், அந்த புகைப்படங்களை வெளியிடுவேன் என ரூ.6 கோடி கேட்டு பவிந்தர்சிங் மிரட்டியதாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
Amala Paul’s ex-lover held for trying to extort money