நாகார்ஜுனா மகன் அகில் ஜோடியாக பிரியதர்ஷன்-லிஸி மகள் கல்யாணி

நாகார்ஜுனா மகன் அகில் ஜோடியாக பிரியதர்ஷன்-லிஸி மகள் கல்யாணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Akhil Akkineni romance with Kalyani Priyadarshan for Hello movie‘யாவரும் நலம்’, 24 உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விக்ரம் குமார்.

இவர் அடுத்து இயக்கியுள்ள படம் ‘ஹலோ’.

இப்படத்தில் நாகார்ஜுனாவின் மகன் அகில் அக்கினேனி ஹீரோவாக நடிக்கிறார்.

அகிலுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இவர் இயக்குநர் பிரியதர்ஷன் – லிஸியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘மெரிஸ் மெரிஸ்..’ என்ற பாடலின் மேக்கிங் வீடியோ அண்மையில் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பிருந்தா மாஸ்டரின் நடன அமைப்பில் உருவாகியுள்ள இந்தப் பாடலில் கல்யாணி பிரியதர்ஷன், ரம்யா கிருஷ்ணன், ஜகபதி பாபு ஆகியோர் நடனம் ஆடியிருக்கிறார்கள்.

கலை இயக்குனர் ராஜீவன் நம்பியார் கைவண்ணத்தில் 2 கோடி செலவில் மிக ஆடம்பரமான அரங்கத்தை உருவாக்கியுள்ளனர்.

இந்த மெகா பட்ஜெட் படத்தின் ட்ரைலரை ஒரே வாரத்தில் 10 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் சார்பில் நாகார்ஜூனா தயாரித்துள்ள இந்த படத்துக்கு இளைஞர்களின் ஃபேவரைட் ‘அனூப் ரூபன்’ இசையமைத்துள்ளார்.

படத்தில் வரும் அனல் பறக்கும் சண்டைக்காட்சிகளுக்காக ஹாலிவுட்டில் இருந்து ‘பாப் பிரவுன்’ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.

Akhil Akkineni romance with Kalyani Priyadarshan for Hello movie

‘மெரிஸ்… மெரிஸ்’ பாடலை யூடியூபில் காண பின்வரும் லிங்க்கைச் க்ளிக் செய்யுங்கள்..!

https://youtu.be/dNppXNV7s3A

25 வருட கேள்விக்கு 2018 புத்தாண்டில் பதில் சொல்லும் ரஜினி?

25 வருட கேள்விக்கு 2018 புத்தாண்டில் பதில் சொல்லும் ரஜினி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini walkரஜினியையும் அரசியலையும் இணைத்து வரும் செய்திகள் இன்றல்ல நேற்றல்ல.. கிட்டதட்ட 25 வருடங்களுக்கு மேலாக வந்துக் கொண்டிருக்கிறது.

அப்படியென்றால் இதற்கான ஆரம்ப புள்ளி எங்கு தொடங்கியது தெரியுமா?

ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை, மன்னன் ஆகிய படங்களிலேயே அரசியல் வசனங்கள் பேசத் தொடங்கிவிட்டார்.

அண்ணாமலை படத்தில்… பிழைக்க எவ்வளவோ நல்ல வழி இருக்கு. ஏன்யா அரசியலை கெடுக்கிறீங்க என்பார்.

இதனையடுத்து பாட்ஷா படத்தின் வெற்றி விழாவில் தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் பெருகிவிட்டது என ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.

அதன்பின் வந்த பொதுத் தேர்தலில் திமுக கட்சியை ஆதரித்தார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மூப்பனார் உருவாக்க உறுதுணையாக இருந்தார்.

இனிமேல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது என பகிரங்கமாக பேசினார்.

அந்த தேர்தலில் அதிமுக படுதோல்வியை அடைந்தது.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் ரஜினியின் ஆதரவு யாருக்கு? என்பதே பெரும் எதிர்பார்ப்பாக மாறியது.

ரஜினி வாய்ஸ் யாருக்கு? என்பது மாறி, அவர் அரசியலுக்கு வரவேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

அவரும் ஒவ்வொரு படத்தின் போது, அரசியல் பேச ஆரம்பித்தார். இதனால் அரசியல் ஆசைத் தீ ரசிகர்கள் மனதில் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது.

இந்த அரசியல் ஆசை தற்போது 25 வருடங்களை கடந்துவிட்டது.

ஜெயலலிதா காலமாகிவிட்டார். அரசியல் மூத்த தலைவர் கருணாநிதி ஓய்வில் இருக்கிறார்.

எனவே இதுவே சரியான தருணம். எங்களை காக்க, தமிழகத்தை மீட்க தலைவர் வரவேண்டும் என ரசிகர்கள் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்துவிட்டனர்.

அண்மையில் 5 மாதத்திற்கு முன்பு ரசிகர்கள் சந்திப்பின்போதும் போர் வரும்போது சந்திப்போம் என்றார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் வருகிற டிசம்பர் 26 முதல் 31 வரை ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுக்கவிருக்கிறார் ரஜினி.

அப்போது ரசிகர்களின் 25 வருட கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக ரஜினியின் அரசியல் பிரவேச அறிப்பு இருக்கும் என கூறப்படுகிறது.

அன்றைய தினத்தில் ரஜினி தன் கட்சி, அரசியல் பற்றி பேசுவார் என சொல்லப்படுகிறது.

இது 2018 புத்தாண்டு பரிசாக இருக்கும் என நம்பலாம்.

கடந்த இரண்டு நாட்களாக RajinikanthPoliticalEntry என்ற வாக்கியங்கள் இணையங்களில் டிரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Rajini may announce his political entry on 2018 New year day

rajini thadai udai

ஆணழகன் போட்டியில் வென்ற ஒன்பது திருடர்கள் பட இயக்குனர்

ஆணழகன் போட்டியில் வென்ற ஒன்பது திருடர்கள் பட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay paramasivamஇயக்குநர் ஒருவர் ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்று இருக்கிறார். அவர் பெயர் விஜய் பரமசிவம்.

இவரது அப்பா ஓர் ஒளிப்பதிவாளர் மட்டுமல்ல ‘கொலுசு ‘ என்ற படத்தை தயாரித்த தயாரிப்பாளரும் கூட.

இரண்டு முதுகலைப் பட்டம் பெற்ற விஜய் பரமசிவம். யாரிடமும் உதவியாளராகப் பணியாற்றவில்லை.

20 குறும்படங்களை இயக்கியிருக்கிறார். இவரது ‘ரூம் நம்பர் 76’ திரைப்பட விழாவில் சிறந்த குறும்படமாகத் தேர்வானதுடன் சிறந்த இயக்குநர் விருதையும் பெற்றுத் தந்தது.

பாலிமர் டிவிக்காக பல நிகழ்ச்சிகளையும் இயக்கியுள்ளார்.

ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி நடிப்பில் ‘ஒன்பது திருடர்கள்’ என்கிற
ஒரு திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.

இவரது இலக்கு திரைப்பட இயக்கம் தான் என்றாலும் அதற்கான தேடல் ஒரு பக்கம் இருந்தாலும் திறமை காட்டும் வகையில் வரும் பிற வாய்ப்புகளையும் பயன்படுத்தத் தவறவில்லை .

அவ்வகையில் இவர் பல நாடுகளுக்காக சுற்றுலா வளர்ச்சிக்காகப் படமெடுத்துள்ளார். இவர் சிங்கப்பூர், மலேஷியா, சீனா, இந்தோனேஷியா , தாய்லாந்து, ஹாங்காங்க், வியட்னாம், பிலிப்பைன்ஸ் , கம்போடியா என பல நாடுகளுக்கு இயக்கியுள்ளார்.

அதில் உலகளவில் பெரிய தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர்.

இப்படி உலகம் சுற்றி வந்த விஜய் பரமசிவம் உள்நாடு வந்திருக்கிறார். எதில் ஈடுபட்டாலும் அதன் அடியாழம் வரை சென்று ஈடுபாடு காட்டுவது இவரது இயல்பு.

ஆவணப்படங்கள் , விளம்பரப் படங்கள் எடுத்துக் கொடுத்து பல நாடுகளிலிருந்து பாராட்டுகளைப் பெற்றவர் , அடுத்து ஒரு முழு நீளத் திரைப்படத்துக்கான தேடுதலைத் தொடங்கியிருக்கிறார் .

எப்போதும் மனதை உற்சாகமாக வைத்துள்ள இவர் உடற்கட்டிலும் கவனம் செலுத்துபவர். அதற்காக உடற்பயிற்சிக் கூடம் சென்றிருக்கிறார்.

இவரது ஆர்வத்தை அறிந்த கமல் என்பவர் நீங்கள் ஏன் மிஸ்டர் தென்னிந்தியா போட்டிக்குத் தயாராகக் கூடாது? என்று தூண்டியிருக்கிறார்.

ஊக்கமும் தந்திருக்கிறார். ஒரு கணம் யோசித்தவர் அதிலும் இறங்கிப் பார்ப்பது என்று முடிவெடுத்திருக்கிறார்

இவருக்கு பிரபாகர், நெளஷத் என இரு பயிற்றுநர்கள் பயிற்சி அளித்துள்ளனர். மளமளவென பயிற்சிகள் , பரபரவென உணவுத் திட்டங்கள் எனத் தொடர்ந்திருக்கின்றன.

நான்கே மாதத்தில் சுமார் 25 கிலோ எடை குறைந்து தயாராகியுள்ளார். போட்டியில் பங்கேற்பது குறித்த நடைமுறைகளை ஏற்கெனவே மிஸ் சவுத் இந்தியா பட்டம் பெற்ற பிரதிக்ஷா அளித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற தென்னிந்திய ஆணழகன் போட்டியில் ரன்னர் பரிசு பெற்றுள்ளார்.

அது மட்டுமல்ல ஆண் மாடல்களுக்கான போட்டியிலும் மூன்றாம் இடம் பெற்று பதக்கம் பெற்றுள்ளார். இவ்விழாவில் இயக்குநர் அமீர் கலந்து கொண்டார்.

இவர் ஓர் இயக்குநர் என்பதை அறிந்த அமீர் மகிழ்வுடன் இவரைத் தட்டிக் கொடுத்துப் பாராட்டியதை எண்ணிப் பெருமைப் படுகிறார்.

எதிலும் தீவிர ஈடுபாடு காட்டினால் புதிய துறையானாலும் அதில் முத்திரை பதிக்க முடியும் என்பதற்கு இந்தப் போட்டி முடிவுகள் உதாரணம் எனலாம்.

முழு ஈடுபாடு காட்டி அதில் தன் அடையாளத்தைப் பதிப்பது விஜய் பரமசிவத்தின் இயல்பு. அடுத்து திரைப்படத்தில் இறங்கி விட்டார்.

கதாநாயகர்களிடம் கதை சொல்லி சம்மதம் பெற்றுள்ளவர் விரைவில் அதற்கான அறிவிப்பை வெளியிடவுள்ளார்.

ஏற்கெனவே ஒரு படம் இயக்கியிருந்தாலும் அது மற்றவர் ஒருவரின் கதை, சின்ன பட்ஜெட் என இருந்ததால் அது ஒரு முன்னோட்டம் மட்டுமே முழுமையான படம் தன் கதையில் உருவாகவிருக்கும் அடுத்த படம் தான் என்று கூறுகிறார் நம்பிக்கையுடன்.

தொட்டது எதிலும் முத்திரைத் தடம் பதிக்கும் விஜய் பரமசிவம் பட இயக்கத்திலும் முத்திரை பதிப்பார் என நம்புவோம்.

Vijay Paramasivam won Runner in Mr South India 2017

mr south india 2017

காப்பியடித்து பொய் சொல்லும் அட்லி; மறைமுகமாக தாக்கிய பலூன் டைரக்டர்

காப்பியடித்து பொய் சொல்லும் அட்லி; மறைமுகமாக தாக்கிய பலூன் டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

If i copied i will accept I wont lie like Atlee says Balloon Director Sinishசினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர், யோகிபாபு நடித்துள்ள படம் பலூன்.

யுவன் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது. அப்போது நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சினிஷ் பேசியதாவது…

என்னை எல்லாரும் கோபக்காரன் என்றார்கள். ஒருவர் என்னை ஒரு இடத்திற்கு 6 மணி வரச்சொன்னால் நான் மிகச்சரியாக 6 மணிக்கெல்லாம் அங்கு இருப்பேன்.

ஆனால் சொன்னவர் வந்திருக்க மாட்டார். இதனால் எனக்கு கோபம் வரும். என் கேரக்டர் அப்படி.

என் தயாரிப்பாளர் ஒரு ஹாரர் பட வேண்டும் என்றார். எனவே 15, 20 படங்களை ஹாலிவுட் படங்களை போட்டு போட்டு பார்த்தேன்.

அதன்பிறகு தான் இந்த படத்தை உருவாக்கினேன். இதை நான் ஓபனாகவே சொல்கிறேன்.

மௌனராகம் போல் ஒரு படத்தை எடுத்துவிட்டு நான் மௌன ராகமே பார்க்கவில்லை என்பது போல் எல்லாம் என்னால் சொல்ல முடியாது’ என்று பேசினார்.

அட்லி இயக்கிய ராஜா ராணி படத்தை பார்த்த பலரும் இது மௌனராகம் படத்தின் ரீமேக் என்று கூறிவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

If i copied i will accept I wont lie like Atlee says Balloon Director Sinish

ஜெய் ஹீரோயில்லை; ஸ்டோரிதான் ஹீரோ… பலூன் டைரக்டர் சினிஷ் சீற்றம்

ஜெய் ஹீரோயில்லை; ஸ்டோரிதான் ஹீரோ… பலூன் டைரக்டர் சினிஷ் சீற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jai is not hero in my movie says Balloon director Sinishயுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் சினிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பலூன்.

ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அப்போது படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.

ஆனால் வழக்கம்போல ஹீரோ ஜெய் வரவில்லை.

விழாவில் பேசிய பலரும் படத்தை குறித்து மட்டுமே பேசினர். ஜெய் குறித்து எவரும் வாய் திறக்கவில்லை.

இதுகுறித்து கேட்டபோது…

ஜெய் படத்தில் நடிப்பார். ஆனால் புரோமோசனுக்கு வரமாட்டார்.

என் படத்தில் என் கதைதான் ஹீரோ. அவர் இல்லை.” என்று பதிலளித்தார் சினிஷ்.

இப்படம் வருகிற டிசம்பர் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

Jai is not hero in my movie says Balloon director Sinish

balloon sinish

ஒடியன் படத்திற்காக மோகன்லால் எடுத்த ரிஸ்க்; ரஜினி பாராட்டு

ஒடியன் படத்திற்காக மோகன்லால் எடுத்த ரிஸ்க்; ரஜினி பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth lauds Mohanlals new look in Odiyanமலையாள சினிமாவில் மிகப்பிரம்மாண்டாக தயாராகி வரும் படம் ‘ஒடியன்’.

ஸ்ரீகுமார் மேனன் இயக்கும் இப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் மோகன்லால்.

இப்படத்திற்கு தன் எடையை 15 கிலோ வரை குறைத்து இருக்கிறாராம் லால் சேட்டன்.

இப்படத்தின் டீசரை பார்த்துள்ள ரஜினி, மோகன்லாலின் கடின உழைப்பை பார்த்து மிகவும் பாராட்டியிருக்கிறார்.

இப்படத்தில் நாயகியாக மஞ்சுவாரியர் நடிக்க, இவருடன் பிரகாஷ்ராஜ், சித்திக், இன்னோசன்ட், நரேன், கைலாஷ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தை 2018 மார்ச் மாதத்தில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

Rajinikanth lauds Mohanlals new look in Odiyan

More Articles
Follows