தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடெங்கிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதே சமயத்தில் சில தளர்வுகளுடன் தொழில் நிறுவனங்கள் திறக்க அரசு அனுமதியளித்து வருகிறது.
நமது பக்கத்து மாநிலமான தெலங்கானாவில் சினிமா சூட்டிங் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நடிகர் சிரஞ்சீவி தலைமையில் தெலுங்கு திரைப்படநடிகர் நாகார்ஜுனா, இயக்குநர் ராஜமவுலி, தயாரிப்பாளர்கள் சி.கல்யாண், தில்ராஜு உள்ளிட்டோர் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்துள்ளனர்.
அதன் பின்னர் சிரஞ்சீவி நிருபர்களிடம் கூறியதாவது:
தெலங்கானாவில் படப்பிடிப்பு நடத்த அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் வரும் 15ம் தேதிக்கு பிறகு ஆந்திராவில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கியுள்ளார்.
சினிமாவை காப்பாற்ற சில சலுகைகளை முதல்வரிடம் கேட்டிருக்கிறோம்.
பெரிய பட்ஜெட் படங்கள் வெளிவரும்போது நாங்களே டிக்கெட் கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்வது, தியேட்டர்களுக்கு மின் கட்டண சலுகை, வரி குறைப்பு, சிறந்த கலைஞர்களுக்கு நந்தி விருது உள்ளிட்ட பல கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.