தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் எது நடந்ததோ? இல்லையோ? அதில் பங்கேற்றவர்களுக்கு புகழும் ஒரு சிலருக்கு நல்ல நண்பர்களும் கிடைத்துள்ளனர்.
இதில் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் மூலம் யாஷிகா ஆனந்தும் ஐஸ்வர்யா தத்தாவும் நெருங்கிய தோழிகள் ஆனார்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்கலாம்.
தற்போதும் இவர்கள் ஒன்றாக இணைந்து ஊர் சுற்றி அந்த படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் யாஷிகாவுடன் இணைந்து நடிப்பார்களா? என்று ஐஸ்வர்யா தத்தாவிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-
’யாஷிகா சூப்பரான படங்கள்ல நடிச்சுட்டு இருக்காங்க. ரொம்ப கஷ்டப்பட்டு இந்த அளவுக்கு வந்திருக்கா.
நாங்க ரெண்டு பேரும் நெருக்கமான தோழிகள். ஒரே படத்துல நடிச்சா போட்டி போடனும். அது நட்பை பாதிக்க வாய்ப்பிருக்கு.
எப்போதும் நல்ல தோழிகளாக இருக்க ஆசைப்படுறோம். எனவே சேர்ந்து நடிக்கிற எண்ணம் இல்லை”. இவ்வாறு கூறினார்.