தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அதிமுக செயற்குழுக் கூட்டம் இன்று செப்டம்பர் 28 நடைபெற்றது.
இதில் 2021 சட்டமனற தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது.
கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்ட அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கேள்விக்கு விடை கிடைக்குமா.? எனத் தெரியவில்லை.
அதிமுக கட்சிக்கு ஒற்றைத் தலைமையா? 11 பேர் கொண்ட சிறப்பு வழிகாட்டுக் குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல பிரச்னைகள் நிலவி வரும் சூழ்நிலையில் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது. அவை…
*கொரோனா காலத்தில் அயராது உழைத்த முதலமைச்சர், துணை முதலமைச்சரை பாராட்டி தீர்மானம்
*கொரோனா தடுப்பு பணிகளுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வலியுறுத்தி அதிமுக செயற்குழுவில் தீர்மானம்
*மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை தமிழக அரசு தடுத்து நிறுத்தியதாக கூறி அதிமுக செயற்குழுவில் பாராட்டு
*நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அதிமுக செயற்குழுவில் தீர்மானம்.
*காவிரி டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களை அறிவித்த தமிழக அரசுக்கு அதிமுக செயற்குழுவில் பாராட்டு
*அதிமுக அரசு தொடர அதிமுக தொண்டர்கள் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்று தீர்மானம்
*ரூ.14ஆயிரம் கோடி செலவில் காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தும் தமிழக அரசுக்கு நன்றி
*ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடங்களை அழகுற அமைக்கும் தமிழக அரசுக்கு நன்றி – அதிமுக செயற்குழு
* இருமொழிக் கொள்கையே அதிமுக அரசின் கொள்கை… மொழி திணிப்பை அதிமுக ஒருபோதும் ஏற்காது
* கொரோனா முன்கள பணியாளர்களுக்கு பாராட்டு.
*மீண்டும் ஜெயலலிதா ஆட்சி மலர்ந்திட உழைப்போம்.
AIADMK passes 15 resolutions in party’s executive committee