தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எட்டுவயது சிறுமி ஆசிபா கடந்த ஜனவரி 10 ஆம் தேதி காணாமல் போனாள்.
அதன்பின்னர் சில நாட்களுக்கு பின்னர் அவளின் உடல் ஒரு காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
இதுதொடர்பான விசாரணையில், ஒரு சிறுவன் உட்பட 8 பேர் சேர்ந்து அவளை ஒரு கோயிலில் மறைத்து வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
அவளுக்கு உணவு தராமல் மயக்கத்திலேயே வைத்திருந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதற்காக அவர்கள் பயன்படுத்திய மருந்தால், அவளது இதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்ததும் என்பதுதான் மிகவும் வேதனையான விஷயம்.
இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான 18 வயது நிரம்பாத ஒருவன்தான் இந்த சிறுமியை அடித்து கொலை செய்துள்ளான் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த 8 பேரில் 4 பேர் காவல்துறையை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் வேளையில் நடிகர் விவேக்கும் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.
அவரின் பதிவு இதோ…
Vivekh actorVerified account @Actor_Vivek 7m7 minutes ago
வன்முறை,பயங்கரவாதம்,இவற்றை விட கொடியதும் கேவலமானதும் பாலியல் பலாத்காரம்.
அதிலும் பெண் குழந்தையை சிதைக்கும் இந்த மிருகங்கள் மக்கள் முன் அல்லது மக்களால் தண்டிக்கப்பட வேண்டும். அதுவும் உடனே!
அந்த சின்ன தேவதை ஆசிபாவின் மலர் உடலுக்கு என் கண்ணீர் பூக்கள்
Actor Vivek condemn for 8 years old girl Asifa murder