தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி ஆகிவிட்டது. இதன் முன்னோட்டமாக தான் தன்னுடைய விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வேட்பாளர்களை உள்ளாட்சித் தேர்தலில் நிறுத்தினார்.
ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டவர்கள் வெற்றிபெற்றார்கள்.
வெற்றிக்கு பின்னர் வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து போட்டோ எடுத்துக் கொண்டார் விஜய்.
கடந்த ஆண்டு நவம்பர் டிசம்பர் மாதங்களில் விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட நிர்வாகிகளை தன்னுடைய பனையூர் இல்லத்தில் சந்தித்தார் நடிகர் விஜய்.
இதுவரை விஜய் மக்கள் இயக்கத்தில் அவரது ரசிகர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருக்கின்றனர். எனவே பொது மக்களையும் இந்த அமைப்பில் சேர்க்க விஜய் ஆலோசனை கூறியுள்ளார்.
அதன் முதற்கட்டமாக மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், பட்டதாரிகள், ஐடி ஊழியர்கள் என பன்முகம் கொண்டவர்களையும், உறுப்பினர்களாக இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான பணிகளை விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கவனித்து வருகிறார்.
அடுத்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை குறி வைத்து தற்போது அரசியல் நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கிறார் விஜய் என்ற தகவலை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.
இந்த நிலையில் இன்று ஏப்ரல் 28ஆம் தேதி மாலையில் தன்னுடைய பனையூர் இல்லத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் சந்தித்து வருகிறார்.
விரைவில் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து விஜய் ஆலோசித்தாகவும் தகவல்கள் வந்துள்ளன.
ஒவ்வொரு நிர்வாகிகளையும் தன்னுடைய அலுவலகத்திற்கு உள்ளே அழைத்து அவர்களுடன் ஆலோசித்து போட்டோ எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
LIVE 🟣Vijay’s Politics விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் அரசியல் கட்சி தொடங்குவது பற்றி தளபதி ஆலோசனை filmistreet 🔥
https://youtube.com/shorts/DtDYxM7n5Uo?feature=share
Actor Vijay met district administrators in Panayur