தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நேற்று முன்தினம் சனிக்கிழமை 19ம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
வயது முதியவர்கள் வரை பொதுமக்கள் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். நடிகர்களில் கமல், விஜய், சூர்யா, கார்த்தி, அருண்விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டவர்கள் அவரவர் பகுதிகளில் வாக்களித்தனர்.
சென்னையில் வழக்கம்போல் மந்தமான வாக்குபதிவு இருந்தது. பிரபல நடிகர்களான ரஜினிகாந்த், விஜயகாந்த், அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன், சிம்பு, தனுஷ் உள்ளிட்டவர்கள் வாக்களிக்க வரவில்லை.
சென்னை நீலாங்கரை உள்ள வாக்குச்சாவடியில், தனது வாக்கை பதிவு செய்திருந்தார் நடிகர் விஜய்.
அவர் சிவப்பு நிற ஆல்டோ காரில் வந்திருந்தார். பிராண்ட் சொகுசு கார்களை வைத்துள்ள விஜய் ச்சாதாரண ஆல்டோ காரில் வருகை தந்தது பேசும் பொருளானது.
இத்துடன் அந்த காருக்கு இன்சூரன்ஸ் செலுத்தப்படவில்லை என்ற சர்ச்சையும் கூடவே எழுந்தது. இன்சூரன்ஸ் (எக்ஸ்பியரி) காலாவதியானதாகவும் கூறப்பட்டது.
எனவே சோஷியல் மீடியாவில் விஜய்யை அவரின் எதிர்ப்பாளர்கள் கண்டித்து வறுத்தெடுத்தனர்.
இந்த நிலையில் இன்சூரன்ஸ் தொடர்பான சர்ச்சைக்கு விஜய் தரப்பில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
விஜய் வந்த Maruti /Celerio ZXI மாடல் காருக்கு Own Damage இன்சூரன்ஸ், ஜூன் 16 2021 முதல் ஜூன் 15 2022 வரை உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் Third party insurance 2019ம் ஆண்டு மே மாதம் 29 முதல் 2022 மே 28 வரை வரை உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விஜய் வந்த குறிப்பிட்ட கார் ஜோசப் விஜய் என்ற பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
Actor Vijay is not a car insurance defaulter team issues statement