தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமாவில் பல படங்களில் நடித்து வந்த பாலாஜி, தற்போது விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளில் நடுவராக இருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு இவரின் மனைவி நித்யா இவர் மீது போலீசில் புகார் கொடுத்திருந்தார்.
“அப்போது குடித்து விட்டு அடிக்கிறார். சாதி பெயரை சொல்லி திட்டுகிறார்”. என்றார்
எனவே சாதிய வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் தனது கணவர் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து இருந்தார்.
இதனையடுத்து கணவன், மனைவி இருவரிடையே போலீசார் சமாதான முயற்சியை மேற்கொண்டனர்.
இந்நிலையில் மீண்டும் இன்று கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த நித்யா தனது கணவர் பாலாஜி மீது புகார் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்…
ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து என்னை திருமணம் செய்து கொண்டார்.
இப்போது பலபேருடன் தொடர்புபடுத்திப் பேசி என்னை சித்ரவதை செய்து அடிக்கிறார்.
முன்பே புகார் அளித்தும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவேதான் இன்று கமிஷனரிடம் புகார் அளிக்க வந்தேன்.” என்று தெரிவித்தார்.
Actor Thadi Balaji Wife Nithya Filed Complaint Against her husband