தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சில மாதங்களுக்கு முன்பு, மனைவியை அடித்த சர்ச்சையில் சிக்கினார் காமெடி நடிகர் பாலாஜி.
இந்நிலையில் மற்றொரு வழக்கு ஒன்றில் இன்று திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அதன் விவரம் வருமாறு…
கடந்த 2014ஆம் ஆண்டு திருப்பூரில் உள்ள ஏ.டி.எம்-மில் பணம் நிரப்பும் ஊழியர்கள் மோசடியில் ஈடுபட்டதாக, தனியார் செக்யூரிட்டி நிறுவன மேலாளர் பரதன் புகார் அளித்திருந்தார்.
அந்த புகார் தொடர்பாக விஷ்ணுவர்தன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அந்த விசாரணையின் போது, திருடிய பணத்தில், கலைநிகழ்ச்சி நடத்த பாலாஜிக்கு 5 லட்சம் முன்பணம் கொடுக்கப்பட்டதாக தெரிவித்து இருந்தார்.
மேலும் சொன்னப்படி குறிப்பிட்ட தேதிக்குள் நடத்தாததோடு அந்த பணத்தையும் பாலாஜி திருப்பி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
அதன்படி இது தொடர்பான வழக்கில் இன்று திருப்பூர் நீதிமன்றத்தில் ’தாடி’ பாலாஜி ஆஜரானார்.
Actor Thadi Balaji in Thirupur Court for Cash Cheating issue