தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் சந்தானத்திற்கும் பில்ட்டிங் கான்ட்ராக்டர் சண்முக சுந்தரத்துக்கும் பண பிரச்சினை இருந்து வந்தது.
தான் கொடுத்த பணத்தை சண்முகசுந்தரம் திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்தால் அவரையும் அவருடன் இருந்த அவரது நண்பர் வக்கீல் பிரேம் ஆனந்த்தையும் சந்தானம் தாக்கினார்.
எனவே அவர்கள் புகார் அளிக்க, வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தானத்தை தேடிவந்தனர்.
எனவே தலைமறைவான சந்தானம், வழக்கில் தனக்கு முன் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
நேற்று விசாரணைக்கு வந்தபோது, இன்று விசாரணைக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி.
அதன்படி இன்று விசாரணைக்கு வந்த போது சந்தானத்திற்கு முன்ஜாமீன் வழங்கியது கோர்ட்.
மேலும் 2 வாரங்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சந்தானம் வந்து கையெழுத்து போட உத்தரவிட்டுள்ளது.