கமல் இன்ஸ்பிரேசன்.. சிவகார்த்திகேயனுடன் நடிக்கனும்.. – நானி ஆசை

கமல் இன்ஸ்பிரேசன்.. சிவகார்த்திகேயனுடன் நடிக்கனும்.. – நானி ஆசை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கில் முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கும் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் “ஷியாம் சிங்கா ராய்”.

Niharika Entertainment சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி தயாரித்துள்ள இப்படத்தை, இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் இயக்கியுள்ளார்.

மறுபிறவியை மையமாக கொண்டு, இப்படத்தில், நானி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். சாய்பல்லவி, க்ரித்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளனர்.

தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள “ஷியாம் சிங்கா ராய்” படம் டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா, நானி, சமுத்திரகனி, சாய் பல்லவி, தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி உட்பட படக்குழுவினர் கலந்து கொள்ள பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

இவ்விழாவில்….

நடிகர் சமுத்திரகனி பேசியதாவது…

நானி என் தம்பி, ஒரு தமிழ் படத்தோடு அவர் வருவதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு உதவி இயக்குனராக இருந்து படிப்படியாக உயர்ந்து, ஒரு சாம்ராஜ்யத்தை கட்டமைத்திருக்கிறார். அவர் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். நிமிர்ந்து நில் தெலுங்கு பதிப்பு நானி தான் செய்தார், 90 நாள் அவருடைய கடும் உழைப்பை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்.

ஒரு நல்ல விஷயம் கிடைத்தால் கடுமையாக உழைப்பவர் அவர். இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தரும். சாய் பல்லவியின் தங்கையுடன் சமீபத்தில் தந்தையாக ஒரு படத்தி நடித்தேன் அவரும் எனக்கு மகள் போல தான். மிகச்சிறப்பான நடிகையாக வளர்ந்து வருகிறார் அவருக்கு வாழ்த்துக்கள். படம் தமிழிலும் மிகப்பெரிய வெற்றியை பெற வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி பேசியதாவது….

டிசம்பர் 24 தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் ஷியாம் சிங்கா ராய் வெளியாகிறது. எங்கள் குழு சிறந்த படத்தை தந்துள்ளது. அனைவரும் தியேட்டரில் சென்று பாருங்கள், உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் நன்றி.

நடிகை சாய்பல்லவி பேசியதாவது…

எப்போதுமே நான் ஒரு கதையை படிக்கும்போது, மனதில் விஷுவல் தமிழில் தான் தெரியும், தமிழகத்தில் பிறந்து வளர்ந்ததால் அப்படி இருக்கலாம்.

பலதடவை இந்த கதைகள் தமிழில் வந்தால் நன்றாக இருக்கும் என்று தோணும், இந்த படக்கதை படிக்கும்போது, நம் மொழியில் எடுக்கலாமே என தோன்றியது. அப்போது தயாரிப்பாளர் 4 மொழியில் எடுப்பதாக சொன்னார் ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

தமிழ் படம் பார்க்கும் உணர்வை இந்த படம் தரும். இப்படத்தில் தேவதாசி பற்றி தெரிந்து கொள்வதற்காக, சில விஷயங்கள் கேட்டு தெரிந்து கொண்டேன், இயக்குநர் குழுவும் ஆராய்ச்சி செய்துள்ளார்கள், படத்திற்கு தேவையானதை செய்துள்ளோம். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.

நடிகர் நானி பேசியதாவது….

நான் ஆரம்பத்தில் சென்னையில் ஷீட் செய்யும் போது சமுத்திரகனி சாரை பார்க்காமல் போக மாட்டேன். அவர் இப்போது தெலுங்கில் பிஸியான நடிகராகிவிட்டார். எல்லா பேட்டிகளிலும் நான் ஏன் நடிகரானேன் எனக் கேட்கும் போது, கமல் சார் படங்கள் மணி சார் படங்கள் தான் காரணம் என்று சொல்லியிருக்கிறேன்.

தமிழ் படங்களுடன் எனக்கு உணர்வுப்பூர்வமான பந்தம் இருக்கிறது. அவற்றை பார்த்து தான் வளர்ந்திருக்கிறேன். நான் ஈ படத்திற்கு பிறகு இங்கு வரும்போது ரசிகர்கள் மிகப்பெரிய அன்பை தந்திருக்கிறார்கள். ஆனால் அடுத்த சில படங்கள் இங்கே சரியாக போகவில்லை.

எனவே தெலுங்கில் கவனம் செலுத்தி விட்டு, தமிழில் சரியான படத்தை செய்ய காத்திருந்தேன். ஷியாம் சிங்கா ராய் படத்தின் கதை கேட்டபோது தமிழிலும் செய்யலாம் என சொன்னேன். உங்களுக்கு சரியான படத்தை கொண்டு வந்ததாக நினைக்கிறேன்.

ஷியாம் சிங்கா ராய் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் உங்கள் அனைவரையும் வந்து சந்திக்கிறேன். நான் கேரக்டருக்காக உடல் எடை எதுவும் மாற்றவில்லை ஏனெனில் இரண்டு பாத்திரங்களையும் ஒரே நேரத்தில் படமாக்கினோம், படமாக்கும் போது சிறந்த அனுபவமாக இருந்தது.

கதை பெங்காலில் நடக்கும், படம் பார்க்கும் போது உங்களுக்கு கனெக்ட் ஆகும். உங்களுக்கு முழுதாக புரியும். நான் கமல் சார், ரஜினி சாரின் தீவிர ரசிகன். இப்போது ஆந்திராவிலும் இங்கும் பல படங்கள் ஹிட்டாகி வருகிறது. தமிழ் நடிகர் ஒருவரும் தெலுங்கு நடிகர் ஒருவரும் இணைந்து படங்கள் உருவாகும் காலம் வரும் என்று நினைக்கிறேன்.

உலகத்திலேயே ஒரு இயக்குநரின் படத்தில் நான் நடிக்க ஆசைப்படுகிறேன் எனக்கேட்டால் மணி சாரை தான் சொல்வேன். அவரின் தீவிர ரசிகன் நான். நான் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கலாம், நல்ல கதை கிடைக்கும் போது இங்கு எல்லோருடனும் நடிக்கலாம்.

கமல் சார் படங்கள் பார்த்து தான் வளர்ந்திருக்கிறோம் அதனால் அவர்களின் இன்ஸ்பிரேஷன் தானாக வந்துவிடும். அதை யாரும் மாற்ற முடியாது. இந்தப் படம் தமிழ் ஆடியன்ஸுக்கு ஸ்பெஷலான படமாக இருக்கும் நன்றி.

தொழில்நுட்ப குழு

எழுத்து இயக்கம் – ராகுல் சன்கிரித்யன்

இசை – மைக்கே J மேயர்

ஒளிப்பதிவு – சானு ஜான் வர்கீஸ்

படத்தொகுப்பு – நவீன் நூலி

தயாரிப்பு நிறுவனம் – Niharika Entertainment

தயாரிப்பாளர் – வெங்கட் S போயனபள்ளி

Actor Nani speech at Shyam Singha Roy Tamil Trailer Launch Event

பெண்களுக்கு துணை நிற்க காக்கி சட்டைக்கு மாறிய கஸ்தூரி

பெண்களுக்கு துணை நிற்க காக்கி சட்டைக்கு மாறிய கஸ்தூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செளத் இந்தியா புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் தயாரித்துள்ள படம் “இ.பி.கோ 302“.

இந்த படத்தில் கஸ்தூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் மூலமாக நாகசக்தி, வர்ஷிதா ஆகியோர் அறிமுகமாகிறார்கள்,

கொலை வழக்கை துப்பறியும் கஸ்தூரிக்கு துணைபுரியும் போலீசாக வின்ஸ்குமார், வையாபுரி மற்றும் ராபின் பிரபு,போண்டாமணி ஆகியோர் நடித்துள்ளனர்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் சலங்கைதுரை.

இவர் கரண் நாயகனாக நடித்து வெற்றி பெற்ற ‘காத்தவராயன்’ படத்தை இயக்கியவர்.

ஒளிப்பதிவு – தண்டபாணி, இசை – அலெக்ஸ்பால், எடிட்டிங் – காளிதாஸ்,
கலை – மணிமொழியன், ஸ்டண்ட் – தீப்பொறி நித்யா, பாடல்கள் – முத்துவிஜயன், ராஜ குணசேகரன்,தயாரிப்பு மேற்பார்வை – ராஜசேகர், இணை தயாரிப்பு – ஆர்.பிரபு, தயாரிப்பு – செங்கோடன் துரைசாமி.

“இந்த படத்தில் இப்படியொரு கேரக்டரை கொடுத்த டைரக்டர் சலங்கைத்துரை அவர்களுக்கு முதல் நன்றி. தமிழில் நான் போலீஸாக நடிக்கும் முதல் படம் இது. இந்தப்படம் வழக்கமான போலீஸ் கதையாக இருக்காது. நிச்சயம் இது ஒரு மாறுபட்ட அனுபவத்தைக் கொடுக்கும். பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை எதிர்த்து காத்திரமான குரலை எழுப்பும் படமாக இது இருக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம்.

என் கேரக்டரை முதலில் சின்னதாகத் தான் எழுதியிருந்தார்கள். பின் நான் இந்தப் படத்தில் ஒப்பந்தமான பிறகு இந்தக் கேரக்டரை மிக அழகாக டெவலப் செய்துள்ளார் டைரக்டர். மேலும் படத்தின் கதை திரைக்கதையை இன்னும் வலிமை வாய்ந்ததாக இந்த கேரக்டர் மாற்றியுள்ளதாகவும் இயக்குநர் கூறினார்.

இயக்குநர் சலங்கைத் துரையைப் பொறுத்தவரை மிகவும் நேர்த்தியான உழைப்பாளி. நேரத்தை துளிகூட வேஸ்ட் பண்ண மாட்டார்.

முக்கியமாக அவரிடம் எந்தக் குழப்பமும் இல்லாமல் வேலை செய்ய முடியும். அவரின் கடும் உழைப்பால் உருவாகியுள்ள இப்படத்தை மக்கள் அனைவரும் தியேட்டரில் வந்து பார்க்க வேண்டும். ஏன் என்றால் இது இன்றைய சமூகத்திற்கு தேவையான அறம் சார்ந்த படம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை. குறிப்பாக காதலர்கள் அனைவரும் இப்படத்தைப் பார்க்கவேண்டும். எது காதல் என்பதை இப்படம் பேசியுள்ளது”

இவ்வாறு இ.பி.கோ 302 படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகை கஸ்தூரி.

சில மாதங்களுக்கு முன்பே வெளியீட்டுக்கு தயாராக இருந்த இந்த படத்தை 2021 டிசம்பர் 31ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Actress Kasthuri turns as cop in EPCO 302

‘ஷிகாரு’ என்ற காமெடி படத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டாரின் ரீல் மகள்

‘ஷிகாரு’ என்ற காமெடி படத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டாரின் ரீல் மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியின் ‘கபாலி’ படத்தில் அவரது மகளாக நடித்திருந்தார் தன்ஷிகா.

பாலா இயக்கிய ‘பரதேசி’, ஜனநாதன் இயக்கிய ‘பேராண்மை’ உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னோடிகளுடன் பயணித்தவர் நடிகை சாய் தன்ஷிகா.

தற்போது ‘ஷிகாரு’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை ஹரி குல்கனி இயக்குகிறார். பாப்ஜி காரு தயாரிக்கிறார். ஸ்ரீ சாய் லக்ஷ்மி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் இது.

முழுநீள நகைச்சுவை படமான இதில் 4 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அதில் ஒரு பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.

படத்தில் பணியாற்றி உள்ள அனைத்துகலைஞர்களின் மிகச்சிறந்த ஒத்துழைப்பால் படத்துக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.

ஜனவரி மாதம் 26 ம் தேதி குடியரசு தினத்தில் படத்தை வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளது.

Super Star’s reel daughter to act in telugu comedy film Shihaaru

மீண்டும் இணைந்த ‘காலா’ கூட்டணி.; போலீஸ் என்றாலே ‘ரைட்’ என சொல்லவரும் ‘ரைட்டர்’.!

மீண்டும் இணைந்த ‘காலா’ கூட்டணி.; போலீஸ் என்றாலே ‘ரைட்’ என சொல்லவரும் ‘ரைட்டர்’.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய இயக்குனர் பா இரஞ்சித் தொடர்ந்து பல தரமான படங்களை மக்களுக்கு படைத்து வருகிறார்.

தற்போது அறிமுக இயக்குனர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி, திலீபன், இனியா மற்றும் ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியிருக்கும் “ரைட்டர்” படத்தினை தயாரித்திருக்கிறது நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம்

இப்படத்திற்கு “96” பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று முன் தினம் வெளியானது.

சினிமா ரசிகர்களை மட்டுமல்லாது பலரையும் இந்த ட்ரெய்லர் வெகுவாக கவர்ந்துள்ளது. காவல்துறையில் எழுத்தர் (ரைட்டர்) பணிபுரியும் கதாபாத்திரமாக தோன்றுகிறார் சமுத்திரக்கனி.

காவல்நிலையத்தில் ரைட்டர்களின் வலியை அழுத்தமாக இயக்குனர் பதிவு செய்திருப்பதை படத்தின் ட்ரெய்லர் மூலம் காண முடிந்தது.

‘போலீஸ் பத்தி அவதூறு பரப்பவே ஒரு கூட்டம் இருக்கு’… ‘காக்கிகளின் சாம்ராஜ்யத்தில் தமிழகம்; மலிந்துக் கிடக்கும் மனித உரிமை’ உள்ளிட்ட பல வசனங்கள் தற்கால வாழ்வியலில் நடக்கும் ஒரு வலியை வெளிக் கொண்டுவரும் படமாக “ரைட்டர்” இருக்கும் என்று தோன்றுகிறது.

பலரின் எதிர்பார்ப்பையும் நாளுக்கு நாள் எகிற வைத்துக் கொண்டிருக்கிறது “ரைட்டர்”. டிசம்பர் 24ல் ரிலீசாகிறது.

எனவே ரைட்டரின் தாக்கம் தமிழ் சினிமாவில் பெரும் வலியை தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஏற்கனவே ரஞ்சித் இயக்கிய ‘காலா’ படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார் சமுத்திரக்கனி.

தற்போது ரஞ்சித் தயாரிப்பில் ரைட்டராக நடித்துள்ளார் சமுத்திரக்கனி என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Kaala team joins again for Writter

‘கண்மணி பாப்பா’ இயக்குனருடன் இணையும் ‘பிக்பாஸ்’ ஆரி

‘கண்மணி பாப்பா’ இயக்குனருடன் இணையும் ‘பிக்பாஸ்’ ஆரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

S.A.S.புரொடக்ஷன் S.A.S.யோகராஜ் வழங்க “கண்மணி பாப்பா” திரைப்படத்தை இயக்கிய ஸ்ரீமணி என்கிற பி.அஸ்வின் இயக்கத்தில் புதிய படம் உருவாக இருக்கிறது.

இப்படத்தில் பல கோடி மக்களை கவர்ந்த மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் பிக்பாஸ் புகழ் ஆரி அர்ஜுனன் வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று நாயகனாக நடிக்க இருக்கிறார்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு – K.G.ரத்தீஷ், இசை -ஸ்ரீ சாய்தேவ், கலை – S.J.ராம், சண்டை – S.R.ஹரி முருகன் ஆகியோர் பணியாற்றுகிறார்கள். இப்படத்திற்கான பூஜை நடைபெற்றது.

விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் இப்படத்தில் ஆரி அர்ஜுனனுடன் முன்னணி நடிகர், நடிகைகள் இணைய இருக்கிறார்கள்.

அவர்களை பற்றிய விவரங்களை விரைவில் படக்குழுவினர் வெளியிட இருக்கிறார்கள்.

Biggboss fame actor Aari Arujunan new movie launched

PAN INDIA படத்திற்காக இணையும் விஷால் & ஆதிக் ரவிச்சந்திரன்

PAN INDIA படத்திற்காக இணையும் விஷால் & ஆதிக் ரவிச்சந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா, அமைரா, ஜனனி ஐயர், ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘பஹீரா’.

இப்பட பணிகள் முடிந்து, வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரனின் அடுத்த படத்தில் விஷால் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

‘எனிமி’ படத்தைத் தயாரித்த மினி ஸ்டூடியோ வினோத், இந்தப் புதிய படத்தையும் தயாரிக்கிறார்.

விஷாலுடன் நடிக்கவுள்ள & தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

PAN INDIA படமாக உருவாகவுள்ள இந்த படத்தை பிப்ரவரி 2022ல் தொடங்கவுள்ளனர்.

Vishal and Adhik Ravichandran joins for a pan india film

More Articles
Follows