3 பின்னணி பாடகர்கள் அடுத்தடுத்து மரணம்.; சோகத்தில் மூழ்கிய இசை பிரியர்கள்

3 பின்னணி பாடகர்கள் அடுத்தடுத்து மரணம்.; சோகத்தில் மூழ்கிய இசை பிரியர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 5 நாட்களில் பிரபலமான 3 பாடகர்கள் அடுத்தடுத்து மரணம். இந்த அதிர்ச்சி செய்திகளால் இசை ப்ரியர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஒருவர் கொல்லப்பட்டார். மற்ற இருவர் மேடையில் பாடிக் கொண்டிருந்த போது மாரடைப்பால் இறந்தனர்.

அதன் விவரம் வருமாறு..

மே 28 ஆம் தேதி..:

கேரளா ஆலப்புழாவில் நடந்த நிகழ்ச்சியில் , பின்னணி பாடகர் எடவா பஷீர் (77) பாடிக் கொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறி விழுந்து மரணமடைந்தார்.

மே 29 ஆம் தேதி..:

பஞ்சாபி பாடகர் சித்து மூசேவாலா. தன் வசீகரமான குரலால் பல இளைஞர்களை கவர்ந்தவர்.

இவரது பாடல்கள் பெரும்பாலும் சர்ச்சையாகும். இவருக்கு கொடுக்கப்பட்டு இருந்த அரசு பாதுகாப்பை சில தினங்களுக்கு முன் தான் ஆளும்கட்சி ஆம் ஆத்மி வாபஸ் வாங்கியது.

கடந்த மே 29ம் தேதி மானசா மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது, மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார் சித்து மூசேவாலா.

நேற்று மே 31 தேதி்: பின்னணி பாடகர் கே.கே., என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னாத் (53) மாரடைப்பால் மரணம்.

ஏஆர்ஆர் யுவன் ஹாரீஸ் இசையில் பாடிய கே.கே. திடீர் மரணம்.; மோடி ராகுல் இரங்கல்

பிறப்பால் மலையாளி ஆனாலும் டெல்லியில் வசித்து வந்தார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி கன்னடம், என பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார். தமிழில் ஏஆர்ஆர் இவரை அறிமுகப்படுத்தினார்.

இவரது பாடல்கள் தமிழக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. நேற்று கொல்கத்தாவில் நிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

3 playback singers consecutive deaths .; Music lovers immersed in sadness

சூர்யா படத்திற்கு 2 மாஸ் டைட்டில்களை ரெடியாக வைத்திருக்கும் பாலா

சூர்யா படத்திற்கு 2 மாஸ் டைட்டில்களை ரெடியாக வைத்திருக்கும் பாலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் .

கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு பின் பாலா சூர்யா இணைவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தெலுங்கு நடிகை க்ரீத்தி ஷெட்டி நாயகியாக நடிக்க மமிதா பைஜூ முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் .

இந்த படத்தை சூரியாவின் 2டி நிறுவனமே தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்றது.

அடுத்தக் கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் சூர்யா 41 படத்தின் தலைப்பு குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன.

பாலா இயக்கும் ‘சூர்யா 41’ பட சூட்டிங்.; சூடான அப்டேட் கொடுத்த சூர்யா

இந்த படத்திற்கு ‘கடலாடி’ அல்லது ‘வணங்கான்’ என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இது மீனவர் நலன் மற்றும் பிரச்சினை குறித்த படம் என்பதால் ‘கடலாடி’ (நாடோடி பணி) என்ற தலைப்பும் அநீதிக்கு பயந்து எவரையும் வணங்கான் (வணங்காதவன்) என்ற தலைப்பும் வைக்கப்படலாம் எனத் தெரிகிறது.

எனவே படத்தின் தலைப்பு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் ரசிகர்கள் எதிர்ப்பார்க்கலாம்.

Director Bala has 2 mass titles for Surya 41

3 கேரக்டர்கள்… சிங்கிள் ஷாட்… 10 நிமிஷம்..; அசத்துகிறார் ஆதேஷ் பாலா

3 கேரக்டர்கள்… சிங்கிள் ஷாட்… 10 நிமிஷம்..; அசத்துகிறார் ஆதேஷ் பாலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல நகைச்சுவை நடிகர் சிவராமனின் மகன் நடிகர் ஆதேஷ் பாலா.

நடிகர் சிவராமன் – சுப்புலெட்சுமி நட்சத்திர தம்பதிகளின் மகனாவார். தாயார் சுப்புலெட்சுமி விசு அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த சகலகலா சம்பந்தி, வேடிக்கை என் வாடிக்கை, பெண்மணி அவள் கண்மணி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இயக்குனர் பாக்யராஜ் அவர்கள் இயக்கத்தில் தொலைக்காட்சித் தொடர் மூலம் நடிகராக அறிமுகமானார் ஆதேஷ்

சென்னை பிரசிடென்சி கல்லூரியில் B.A., செக்ரட்டரிஷிப் படித்தவர்.

விக்ரம் நடித்த சாமி படம் மூலம் தனது நடிப்பு பயணத்தை தொடர்ந்தார்.

முண்டாசுப்பட்டி, கோவில், மண்ணின் மைந்தன், மலைக் கோட்டை, முண்டாசுப் பட்டி, இங்கிலீஷ் காரன், விந்தை, குருவி, வஜ்ரம், இந்திரலோகத்தில் நா. அழகப்பன், ஜன்னலோரம், பேட்ட போன்ற படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்த ‘மலையூர் மம்பட்டியான்’ படத்திலும் சமீபத்தில் திரைக்கு வந்த ‘சாயம்’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

பொண்டாட்டி மற்றும் நிக்குமா நிக்காதா போன்ற குறும்படங்களில் நாயகனாக நடித்திருந்தார். Take 1 shot 1 என்ற குறும்படத்தில் ஒரே ஷாட்டில் நடித்துள்ளார்.

‘நிக்குமா நிக்காதா?’… எதை சொல்றீங்க ஆதேஷ் பாலா ப்ரோ.??

சந்தோஷ் நவீன் இயக்கியுள்ள ‘இராஜமாபுரம்’ என்ற படத்தில் கதை நாயகனாக நடித்துள்ளார். ஷாம் ஒளிப்பதிவு செய்ய ரகு சரவணகுமார் இசையமைக்கிறார். Article 21 நிறுவனம் சார்பாக சந்தோஷ்குமார் தயாரித்துள்ளார்.

பேட்ட, ஆறு, மலைக்கோட்டை, குருவி, மம்பட்டியான், சவரக்கத்தி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் ஆதேஷ் பாலா.

இப்போது பிரசாந்தின் ‘அந்தகன்’ & மணிரத்னத்தின் ‘பொன்னியின்செல்வன்’ உட்பட பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த 2 படங்களும் விரைவில் ரிலீசாகவுள்ளது.

அதே நேரம் குறும்படங்களிலும் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது அவர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் குறும்படம், ‘மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ’.

காயத்ரி செந்தில்குமார் இயக்கிய இந்த படத்தில் நாயகியாக ஹேமா நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் முதன்முறையாக 10 நிமிடங்களில், 3 கதாபாத்திரங்களை வைத்து ஒரே ஷாட்டில் உருவான குறும்படத்தில் ஆதேஷ் பாலா நடித்துள்ளார்.

இதன் தலைப்பு பார்வை (Title look) ஜூன் 5ஆம் தேதி வெளியாகிறது.

நளதமயந்தி, அழகிய தீயே போன்ற பல படங்களின் இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்

சுபாஷ் அலெக்சாண்டர் ஒளிப்பதிவில், அன்பு எடிட்டர், முருகவேல் மாணிக்கம் இணை இயக்கம்..

3 characters … single shot … 10 min ..; Adesh Bala is awesome

சிம்பு பட இசை விழா தள்ளிப்போக இதான் காரணம்.; இதை படிச்சா நீங்களே சைலண்ட் ஆகிடுவீங்க!

சிம்பு பட இசை விழா தள்ளிப்போக இதான் காரணம்.; இதை படிச்சா நீங்களே சைலண்ட் ஆகிடுவீங்க!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடித்த ‘மாநாடு’ படம் 117 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

‘மாநாடு’ மகா வசூல்..; ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்தார் சிம்பு

எனவே சிம்புவின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தற்போது சிம்பு நடிப்பில் ‘மஹா’ மற்றும் ‘வெந்து தணிந்தது காடு’ ஆகிய படங்கள் ரீலுசுக்கு தயாராகவுள்ளன.

அண்மையில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இடம்பெற்ற ‘காலத்துக்கும் நீ வேணும்…’ என்ற பாடல் வெளியானது.

இப்படத்தை கௌதம் மேனன் இயக்க ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

‘வெந்து தணிந்தது காடு’ பட இசை விழாவை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடத்த படத்தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் திட்டமிட்டு இருந்தாராம்.

‘வெந்து தணிந்தது காடு’ சூட்டிங் ஒவர்.; சிலம்பரசன் கேரக்டர் சூப்பர்ல

சமீபத்தில் கமலின் ‘விக்ரம்’ இசை நிகழ்ச்சி இதே இடத்தில் நடைபெற்றது. அதில் சிம்புவும் கலந்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிம்புவின் தந்தை டிஆர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் இந்த விழா தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

டிஆர் உடல்நலம் தேறிய பின்பு இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெறும் என எதிர்ப்பார்க்கலாம்.

This is the reason why the Simbu Film audio release was postponed

‘தளபதி 66’ படத்தில் விஜய்யின் குழந்தைகள் இவர்களா.?

‘தளபதி 66’ படத்தில் விஜய்யின் குழந்தைகள் இவர்களா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடித்து வருகிறார் தமிழ் நடிகர் விஜய்.

தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். “தனது கெரியரிலேயே பெஸ்ட்டான ஆல்பத்தை கொடுக்கப் போவதாகவும் உறுதியளித்துள்ளார் தமன்.

இப்படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 66’ என பெயரிட்டுள்ளனர்.

ஹைதராபாத்தில் இருந்து சென்னை பறந்து வந்த விஜய்..; வைரலாகும் படம்!

இதில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இப்படத்தில் ஷ்யாம் மற்றும் யோகிபாபு முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

மேலும் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் என்ற செய்தியை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

காதலுக்கும் குடும்ப உறவுகளுக்கும் முக்கியத்துவம் தரும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது.

தற்போது இதன் 2ஆம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இப்படம் அடுத்தாண்டு 2023-ஆம் ஆண்டு பொங்கலன்று வெளியாகவுள்ளது.

இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஜூன் 22ல் விஜய்யின் பிறந்தநாளில் வெளியாகவுள்ளது.

விஜய் பிறந்தநாளில் தளபதி 66 – 67 ட்ரீட்க்கு ரெடியா இருங்க

இந்த நிலையில் ‘தளபதி 66’ படத்தில் 2 குழந்தைகளுக்கு அப்பாவாக விஜய் நடிக்கப்போகிறாராம்.

இதில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்த ஹர்ஷிதா கார்த்திக் மற்றும் பெண்குயின் படத்தில் நடித்த அத்வைத் வினோத் ஆகியவர்கள் தான் அவரின் குழந்தைகளாக நடிக்கின்றனர்.

தங்கள் இன்ஸ்டாக்ராமில் விஜய் படத்தில் நடிப்பது பற்றி மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளனர்.

Are these the children of Vijay in ‘Thalapathy 66’?

ஏஆர்ஆர் யுவன் ஹாரீஸ் இசையில் பாடிய கே.கே. திடீர் மரணம்.; மோடி ராகுல் இரங்கல்

ஏஆர்ஆர் யுவன் ஹாரீஸ் இசையில் பாடிய கே.கே. திடீர் மரணம்.; மோடி ராகுல் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1990-களில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானால் அறிமுகப்படுத்தப்பட்டவர் பாடகர் கே.கே.

‘காதல் தேசம்’ படத்தில் இடம்பெற்ற கல்லூரி சாலை… பாடலை பாடி தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

பிறப்பால் மலையாளியான கே.கே. பிறந்தது வளர்ந்தது எல்லாம் டெல்லியில்.

1968 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பிறந்தார்.

இவர் ஹிப் ஹாப், ராக் பாடல்களை பாடியும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Singer KK (Krishnakumar Kunnath) biodata

ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலும் ஹாரீஸ் ஜெயராஜ் இசையிலும் யுவன் சங்கர் ராஜா இசையிலும் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

சிவகாசி, கில்லி, குருவி, தூள், சாமி, ஐயா, ரெட், மின்சார கனவு, ஜி, வசூல் ராஜா எம்பிபிஎஸ் ஆகிய படங்களில் இவரது பாடல்கள் உள்ளன.

காக்க காக்க படத்தில் உயிரின் உயிரே… 7ஜி ரெயின்போ காலனி படத்தில் நினைத்து நினைத்து பார்த்தேன்… மன்மதன் படத்தில் காதல் வளர்த்தேன், காதல் வளர்த்தேன்… உள்ளிட்ட பாடல்களை இவர்தான் பாடினார்.

தமிழ் உள்பட 10 மொழிகளில் பாடியுள்ளார்.

விரைவில் வெளிவரவுள்ள ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தில் 2 பாடல்கள் பாடியுள்ளார். இப்படத்திற்கு ஹாரீஸ் இசை.

இந்த நிலையில் கொல்கத்தாவில் ஒரு மேடை கச்சேரியில் இந்தி பெங்காலி பாடல்களை பாடிக் கொண்டிருந்தார் கே.கே.

இவருக்கு தீடிரென மாரடைப்பு ஏற்பட்டது.

எனவே சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் கே.கே. உயிரிழந்தார்.

கே.கே. மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சி எம்.பி., ராகுல் மற்றும் சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Singer KK dies at 53 while performing in Kolkata

More Articles
Follows