தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 5 நாட்களில் பிரபலமான 3 பாடகர்கள் அடுத்தடுத்து மரணம். இந்த அதிர்ச்சி செய்திகளால் இசை ப்ரியர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஒருவர் கொல்லப்பட்டார். மற்ற இருவர் மேடையில் பாடிக் கொண்டிருந்த போது மாரடைப்பால் இறந்தனர்.
அதன் விவரம் வருமாறு..
மே 28 ஆம் தேதி..:
கேரளா ஆலப்புழாவில் நடந்த நிகழ்ச்சியில் , பின்னணி பாடகர் எடவா பஷீர் (77) பாடிக் கொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறி விழுந்து மரணமடைந்தார்.
மே 29 ஆம் தேதி..:
பஞ்சாபி பாடகர் சித்து மூசேவாலா. தன் வசீகரமான குரலால் பல இளைஞர்களை கவர்ந்தவர்.
இவரது பாடல்கள் பெரும்பாலும் சர்ச்சையாகும். இவருக்கு கொடுக்கப்பட்டு இருந்த அரசு பாதுகாப்பை சில தினங்களுக்கு முன் தான் ஆளும்கட்சி ஆம் ஆத்மி வாபஸ் வாங்கியது.
கடந்த மே 29ம் தேதி மானசா மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது, மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார் சித்து மூசேவாலா.
நேற்று மே 31 தேதி்: பின்னணி பாடகர் கே.கே., என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னாத் (53) மாரடைப்பால் மரணம்.
ஏஆர்ஆர் யுவன் ஹாரீஸ் இசையில் பாடிய கே.கே. திடீர் மரணம்.; மோடி ராகுல் இரங்கல்
பிறப்பால் மலையாளி ஆனாலும் டெல்லியில் வசித்து வந்தார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி கன்னடம், என பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார். தமிழில் ஏஆர்ஆர் இவரை அறிமுகப்படுத்தினார்.
இவரது பாடல்கள் தமிழக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. நேற்று கொல்கத்தாவில் நிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
3 playback singers consecutive deaths .; Music lovers immersed in sadness