கீர்த்தி சுரேஷுடன் இணைந்தது பற்றி செல்வராகவன் என்ன சொல்கிறார்.?

கீர்த்தி சுரேஷுடன் இணைந்தது பற்றி செல்வராகவன் என்ன சொல்கிறார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பேனரின் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வரும் இச்சித்திரத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  பிரைம் உறுப்பினர்கள் மே 6 முதல் பிரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் இத்திரைப்படத்தை ஸ்ட்ரீம் செய்யலாம்.

அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் வெளிவரவுள்ள தமிழ் அதிரடி சித்திரமான சாணி காயிதம் படத்தின் டிரெய்லரை பிரைம் வீடியோ இன்று (26 April, 2022) வெளியிட்டது. கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் முக்கிய வேடங்களில் நடித்துள்ள மற்றும் பழிக்குப் பழி வாங்கும் கதைக்களம் கொண்ட இப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது.

சாணி காயிதம் திரைப்படம் பிரைம் வீடியோவில் 6 May 2022 முதல் பிரத்யேகமாக 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் திரையிடப்படும். இப்படம் தெலுங்கில் சின்னி என்றும் மலையாளத்தில் சாணி காயிதம் என்றும் வெளிவருகிறது.

கான்ஸ்டபிளாகப் பணிபுரியும் பொன்னி (கீர்த்தி சுரேஷ்) தனது ஐந்து வயது மகள் தனா மற்றும் அரிசி ஆலையில் கூலியாளாகப் பணிபுரியும் அவரது கணவர் மாரி ஆகியோருடன் சேர்ந்து வாழும் மனதை நெகிழ வைக்கும் வாழ்க்கைப் பயணத்தை சாணி காயிதம் சித்தரிக்கிறது. ஒரு துரதிர்ஷ்டவசமான இரவில், அவள் அனைத்தையும் இழக்க நேரிடுகிறது, தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பழிவாங்க, சங்கையாவின் (செல்வராகவன்) ஆதரவைப் பெறுகிறாள், அவருடன் தனது கசப்பான கடந்த காலத்தைப் பகிர்ந்து கொள்கிறாள்.

ராக்கி பட இயக்குனரின் அடுத்த சம்பவம் . வெளியானது மிரட்டலான சாணி காயிதம் பட டிரைலர்

தனது கதாபாத்திரம் குறித்து கீர்த்தி சுரேஷ் பேசுகையில், “இதுவரை நான் நடித்த கதைகளில் இருந்து முற்றிலும் விலகிய கதை பாணியை சாணி காயிதம் கொண்டுள்ளது. அனுபவமில்லாத அதே சமயம் உணர்ச்சிகரமான கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். என்னுடைய பாத்திரமும், இயக்குநர் அருணின் தனித்துவமான கதை சொல்லும் பாணியும் தொலைநோக்குப் பார்வையும்தான் இந்த கடினமான படத்தின் ஒரு பகுதியாகப் பங்கேற்க என் ஆர்வத்தைத் தூண்டியது.

அதற்கு மேலாக, இயக்குனர் செல்வராகவன் உடன் நடிக்கக் கிடைத்த வாய்ப்பு மேலும் சிறப்பைச் சேர்த்தது! இந்த பாத்திரத்தில் நான் ஆத்மப் பூர்வமாக பங்கேற்றுள்ளேன் பிரைம் வீடியோவில் சாணி காயிதத்தை. 6 May முதல், உலகெங்கிலும் உள்ள எனது ரசிகர்கள் கண்டு ரசிப்பார்கள் என அறிவது புதிய உற்சாகத்தைத் தருகிறது. அவர்களது விமர்சனத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.” என்றார்..

தற்போது நடிகராகவும் உருவெடுத்துள்ள பிரபல இயக்குனர் செல்வராகவன் கூறுகையில்….

“இந்தப் படத்துக்காக நான் முதல்முறையாக கேமராவின் முன்னால் நின்று நடித்ததால் சாணி காயிதம் எனக்கு ஸ்பெஷலான படமாகும். ஒரு சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க மற்றும் திறமையான கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடிக்கக் கிடைத்த வாய்ப்பு மகிழ்ச்சியைத் தந்தது.

இயக்குனர், அருண் மாதேஸ்வரன், தனது துறையில் மிகவும் தேர்ச்சி பெற்றவர் மற்றும் கதையிலும் கலைஞர்களிடமிருந்தும் முழுமையான திறனை வெளிப்படுத்தியுள்ளார். பிரைம் வீடியோவில் சாணி காயிதம் வெளிவருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.” என்றார்.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஒளிப்பதிவாளராக யாமினி யக்ஞமூர்த்தி, இசையமைப்பாளராக சாம் சிஎஸ், கலை இயக்குநராக ராமு தங்கராஜ், எடிட்டராக நாகூரான் ராமச்சந்திரன், ஸ்டண்ட் இயக்குநராக திலீப் சுப்பராயன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். கிரியேட்டிவ் தயாரிப்பாளர் சித்தார்த் ரவிப்பட்டி .

Prime Video launches the Trailer of the upcoming Tamil Revenge Action-Drama – Saani Kaayidham

சிவகார்த்திகேயன் வழக்கு.; ஞானவேல்ராஜா படங்களுக்கு தடை..? கோர்ட் தீர்ப்பு என்ன.?

சிவகார்த்திகேயன் வழக்கு.; ஞானவேல்ராஜா படங்களுக்கு தடை..? கோர்ட் தீர்ப்பு என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2019-ம் ஆண்டில் சிவகார்த்திகேயன் நயன்தாரா நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவான ‘மிஸ்டர் லோக்கல்’ படம் வெளியானது.

இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து இருந்தார்.

இந்த படம் சுமாராகவே ஓடியது.

இந்த நிலையில் இந்த மிஸ்டர் லோக்கல் படத்திற்கு பேசப்பட்ட 15 கோடி ரூபாய் சம்பளத்தில் 11 கோடியை மட்டுமே தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தந்ததாகவும், அதற்கான டிடிஎஸ் தொகையை வருமான வரித்துறையில் செலுத்தவும் உத்தரவிடக்கோரியும் நடிகர் சிவகார்த்திகேயன் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஞானவேல்ராஜா சம்பளப் பாக்கியை செலுத்தும் வரை அவர் தயாரிக்கும் படங்களில் முதலீடு செய்யத் தடை தேவை.

மேலும் ஞானவேல்ராஜாவின் படங்களுக்கான தியேட்டர், ஓடிடி வெளியீடுகளை தடை செய்ய வேண்டும் எனவும் சிவகார்த்திகேயன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தனக்கு சம்பள பாக்கி ரூ.4 கோடி தர வேண்டும் என நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

மிஸ்டர் லோக்கல் படத்திற்கு பேசப்பட்ட பதினைந்து கோடி ரூபாய் சம்பளத்தில் 11 கோடியை மட்டுமே தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தந்ததாகவும், அதற்கான டிடிஎஸ் தொகையை வருமான வரித்துறையில் செலுத்தவும் உத்தரவிடக்கோரி நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது நீதிபதி மூன்று ஆண்டுகளாக சம்பளப் பாக்கியை கேட்டு ஏன் வழக்கு தொடரவில்லை. தற்பொழுது டிடிஎஸ் தொகையை வசூலிக்கும் வருமான வரித்துறையின் நடவடிக்கை எதிர்த்து வழக்கு தொடுத்திருக்கும் நிலையில் மற்றொரு வழக்காக ஏன் இதை தொடர்ந்திருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

பின்னர் சிவகார்த்திகேயன் தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் சம்பள பாக்கி விவகாரம் தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கு.

பிரச்சினைக்கு தீர்வு காண சமரச தீர்வாளரை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் 3 படங்களை வெளியிட தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு.

Here’s Court verdict on Sivakarthikeyan and Gnanavel Raja movie issue

ஹிந்தியில் ரீமேக்காகும் ‘சூரரைப் போற்று’.; சூர்யா – அக்‌ஷய்குமார் கூட்டணி

ஹிந்தியில் ரீமேக்காகும் ‘சூரரைப் போற்று’.; சூர்யா – அக்‌ஷய்குமார் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ‘சூரரைப்போற்று’.

இந்த திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிற்கான பணிகள் இன்று பூஜையுடன் மும்பையில் தொடங்கியது.

இதில் நடிகர் சூர்யா கலந்துகொண்டார்.

நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் முதன் முதலாக தயாரிக்கும் இந்தி திரைப்படத்தின் தொடக்க விழா மும்பையில் பூஜையுடன் தொடங்கியது.

இந்த நிகழ்வில் ‘சூரரை போற்று’ படத்தின் இந்தி பதிப்பின் நாயகனாக அக்ஷய்குமார், நாயகி ராதிகா மதன், இயக்குநர் சுதா கொங்கரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

‘சூரரை போற்று’ இந்தி ரீமேக் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் அபுடான்டியா என்டர்டைன்மென்ட் மற்றும் கேப் ஆஃப் குட் ஃபிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது.

ஜோதிகா, சூர்யா ஆகியோருடன் இணைந்து தயாரிப்பாளர் விக்ரம் மல்ஹோத்ரா அவர்களும் இப்படத்தை தயாரிக்கிறார். இதில் ராஜசேகர் பாண்டியன் மற்றும் சிக்கா ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக இனணகிறார்கள்.

Soorarai Pottru
‘சூரரைப் போற்று’ ஹிந்தி ரீமேக் விவகாரம்: சூர்யாவுக்கு சாதகமான தீர்ப்பு

‘சூரரைப் போற்று’ இந்தி ரீமேக்கை தமிழில் இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இயக்குகிறார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சதீஷ் படத்தொகுப்பு செய்யும் இந்த படத்திற்கு தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை பிந்தியா மற்றும் அரவிந்த் மேற்கொள்கிறார்கள்.

அக்ஷய் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ராதிகா மதன் நடிக்கிறார்.

படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர் நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் மும்பையில் தொடங்கியது.

‘சூரரைப்போற்று’ இந்தி ரீமேக்கின் தொடக்கவிழாவில் கலந்துக் கொள்வதற்காக, கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் படபிடிப்பிலிருந்து சூர்யா மும்பைக்குச் சென்றார். அவரது வருகை படக்குழுவினரை உற்சாகப்படுத்தியது.

Hindi remake of Suriyas Soorarai Pottru begins

விமல் மீது போலீஸில் புகார் அளித்தார் ‘மன்னர் வகையறா’ பட தயாரிப்பாளர் மகள்

விமல் மீது போலீஸில் புகார் அளித்தார் ‘மன்னர் வகையறா’ பட தயாரிப்பாளர் மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விமல் மீது ஏற்கெனவே தயாரிப்பாளர்கள் கோபி, சிங்காரவேலன் மற்றும் திரைப்பட விநியோகிஸ்தர் கங்காதரன் ஆகியோர் பணமோசடி புகார் தெரிவித்திருந்த நிலையில், தற்போது விமல் நடிப்பில் ’மன்னர் வகையறா’ என்ற படத்தின் ஆரம்ப தயாரிப்பாளர் மறைந்த திருப்பூர் கணேசன் அவர்களின் மகள் ஹேமா இன்று (25-04-2022) காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விமல் மீது மோசடி புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகார் மனுவில் கூறியதாவது,

பொருள் : ரூபாய் 1,73,78,000/- திருப்பி தராமல் ஏமாற்றி வரும் நடிகர் விமல் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,

திருப்பூரில் எளிய குடும்பத்தில் பிறந்து, இறைச்சி கடைகள் நடத்தி, அதன் பின்னர் சிறிய சிறிய தொழில்கள் செய்து தன்னை ஒரு தொழில் அதிபராக நிலை நிறுத்தி கொண்டவர் மறைந்த என் தந்தை கணேசன். சினிமா மீது தீராத ஆவல் கொண்டிருந்த அவரை மூளைச்சலவை செய்து ” மன்னர் வகையறா ” என்ற திரைப்படத்தை துவக்க வைத்தவர் நடிகர் விமல்.

படத்தின் பட்ஜெட்டை ரூ. 5 கோடி என்றும், ரூ. 1.5 கோடி மட்டும் முதலீடு செய்தால் மீதி தொகையை சினிமா உலகத்திற்குள் கடனாக பெற்று கொள்ளலாம் என்றும் நடிகர் விமல் அளித்த உத்தரவாதத்தை நம்பிய எனது தந்தை சென்னைக்கு வந்து ஒரு அலுவலகத்தை வாடகைக்கு எடுத்து வைத்து கொண்டு பட தயாரிப்பு பணிகளை ஆரம்பித்தார். அப்போதே எங்கள் குடும்பத்திற்குள் கலகம் ஆரம்பமாகிவிட்டது. நானும் எனது தாயாரும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் எங்கள் பேச்சை கேட்காமல் விமல் போன்ற மண் குதிரைகளை நம்பி முதலீடு செய்ய ஆரம்பித்துவிட்டார்.

இனி அவர் விஷயத்தில் நானும் என் விஷயத்தில் அவரும் தலையிட மாட்டோம்.. – விமல்

2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பட்டுக்கோட்டையில் படப்பிடிப்பு துவங்கியது. 60 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டு, ஆறு மாத காலத்திற்குள் படத்தை வெளியிட்டு விட்டு, பின்னர் சினிமாவிற்குள் கால் வைக்க மாட்டேன் என எனது தந்தையும் எங்களுக்கு உறுதி அளித்ததால் அவர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அங்கேயே தங்கியிருந்து பணிகளை பார்வையிட எனது அம்மாவும் சம்மதித்தார்.

17 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்திருந்த வேளையில், விமலுக்கும் கதாநாயகிக்கும் தனிப்பட்ட காரணங்களுக்காக சண்டை வர, இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்ததால் மனம் வெறுத்து போன என் தந்தை அதற்கு மேல் படப்பிடிப்பை தொடர மனமில்லாமல் படப்பிடிப்பை ரத்து செய்ய சொல்லிவிட்டு திருப்பூருக்கு வந்துவிட்டார்.

அதன் பிறகு சில நாட்கள் கழித்து என் தந்தையை சந்தித்த விமலிடம் ” உன்னை நம்பி தான் இந்த துறைக்கு வந்து முதலீடு செய்தேன். தனி மனித ஒழுக்கம் இல்லாத உன்ன நம்பி மேற்கொண்டு ரிஸ்க் எடுக்க நான் விரும்பவில்லை. இந்த படம் அப்படியே கிடக்கட்டும். என் நஷ்டத்தை ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுகட்டி விடுவேன் ” என்று கூறி மேற்கொண்டு படத்தை தயாரிக்க விருப்பமில்லை என்று ஆணித்தரமாக சொல்லிவிட்டார்.

சில நாட்கள் கழித்து அப்பாவை சென்னைக்கு அழைத்த விமல், இந்த படத்தை நம்பி தான் எனது எதிர்காலம் உள்ளது. எனவே படத்தை நானே மேற்கொண்டு தயாரித்து, படத்தை வெளியிட்டு விட்டு, நான் செலவு செய்த தொகை போக மீதமிருக்கும் தொகையில் தங்கள் தொகையை தங்களிடம் கொடுத்து விடுகிறேன் என கூறியதாலும், விமலின் எதிர்காலம் இந்த படத்தில் இருக்கிறது என்பதாலும் விமலின் யோசனைக்கு என் தந்தை ஒப்புகொண்டு 10.03.2016 அன்று ஒப்பந்தம் செய்து கொடுத்தார்.

மார்ச் மாதம் 10 ஆம் தேதி ஒப்பந்தத்தை பெற்று கொண்ட பின்பு ஜூன் மாதம் 10 ஆம் தேதி வரை விமல் படத்தை ஆரம்பிக்காமல், படத்தின் மீது கடன் வாங்கி ஊதாரித்தனமாக செலவு செய்து வந்ததால், ஜூன் மாதம் 15 ஆம் தேதி விமலை சந்தித்து ஒப்பந்தத்தை ரத்து செய்து தரும்படி கேட்டார் அப்பா. அதற்கு மறுத்து விட்டார் நடிகர் விமல்.

இதனால் ஜூன் மாதம் 17 ஆம் தேதி முறைப்படி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்தார் எனது தந்தை. திரையுலகுக்கு எனது தந்தை புதியவர் என்பதாலும், விமல் ஒரு முக்கிய பிரமுகர் என்பதாலும் எனது தந்தைக்கு சாதகமான பதில் சங்கத்திலிருந்து வரவில்லை. இதனால் மனம் உடைந்து போன என் தந்தை அமைதியாகிவிட்டார்.

அதன் பிறகு படத்தை தயாரித்து, வெளியீட்டிற்கு விமல் தயாரான போது, விமலை சந்தித்து தான் முதலீடு செய்த தொகையை திருப்பி கேட்டார் அப்பா. விமலிடமிருந்து சாதகமான பதில் வராததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் எனது தந்தை (வழக்கு எண் : C.S.No.58/2018)

இந்த வழக்கின் காரணமாக படத்தின் தொலைக்காட்சி உரிமைக்கு நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் 10.04.2018 ஆம் ஆண்டு எனது தந்தையுடன் சமரசம் செய்து கொண்ட நடிகர் விமல் பணத்தை திருப்பி தந்துவிடுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் Memorandum of Settlement (ஆவண எண் : 7782/2018) தாக்கல் செய்தார். ஆனால் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி எந்த தொகையையும் இதுவரை விமல் திருப்பித்தரவில்லை. பணத்திற்கு ஈடாக தருவதாக சொன்ன கால்ஷீட்டையும் தரவில்லை.

இந்நிலையில் 10.04.2018 ஆம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தப்படி படத்தின் மற்ற மொழி டப்பிங் உரிமைகள் என் தந்தை வசம் வந்துவிட்டது. ஆனால் என் தந்தைக்கு தெரியாமல் 21.06.2019 அன்று படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை வேறொருவருக்கு விற்று எங்களை மோசடி செய்துவிட்டார் நடிகர் விமல்.

எனவே ஐயா அவர்கள் மோசடி செய்த நடிகர் விமல் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு எங்களுக்கு சேர வேண்டிய ரூபாய்.1,73,78,000/- தொகையை பெற்றுத் தரும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

Mannar Vagaiyara producer’s daughter complaint againt actor Vimal

மறைந்த எழுத்தாளர் பாலகுமாரனின் மகனிடம் மன்னிப்பு கேட்டது ‘பயணிகள் கவனிக்கவும்’ படக்குழு

மறைந்த எழுத்தாளர் பாலகுமாரனின் மகனிடம் மன்னிப்பு கேட்டது ‘பயணிகள் கவனிக்கவும்’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷக்திவேல் இயக்கத்தில் விதார்த், லட்சுமி ப்ரியா சந்திரமவுலி, கருணாகரன், மசூம் சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘பயணிகள் கவனிக்கவும்’.

இப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் அடுத்த வாரம் ஏப்ரல் 29ம் தேதி வெளியாகிறது.

இதனிடையே, ‘பயணிகள் கவனிக்கவும்’ என்ற தலைப்பு குறித்து மறைந்த எழுத்தாளர் பாலகுமாரனின் மகன் சூர்யா பாலகுமாரன் குற்றம் சாட்டியிருந்தார்.

தன்னுடைய அப்பாவின் புகழ் பெற்ற நாவலின் தலைப்பு தான் , ‘பயணிகள் கவனிக்கவும்’.

அதை படத்திற்காக வைக்க தங்களிடம் எந்தவித அனுமதியையும் பெறவில்லை என குற்றம் சாட்டியிருந்தார்.

நெட்டிசன்களின் பொறுப்புணர்வு.; மலையாளத்தில் ‘விக்ருதி’ தமிழில் ‘பயணிகள் கவனிக்கவும்’ என்றானது

இதைத் தொடர்ந்து ஆஹா ஓ.டி.டி க்கும், ஆல் இன் பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்திற்கும் விளக்கம் கேட்டு பாலகுமாரன் குடும்பத்தின் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதையடுத்து இன்று(ஏப்., 25) காலை இயக்குனர் எஸ்பி சக்திவேல் மற்றும் தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா இருவரும் பாலகுமாரனின் வீடு தேடி சென்று அவர்களது விளக்கத்தை கொடுத்து, மன்னிப்பும் கேட்டுள்ளனர்.

இதையடுத்து இந்த பிரச்னையை சுமூகமாக பேசி முடித்துக் கொண்டதாக பாலகுமாரனின் மகன் சூர்யா பாலகுமாரன் தெரிவித்துள்ளார்.

Payanigal Gavanikkavum title issue is over

ஆண்கள் என்னை மன்னிச்சிடுங்க.; ஆண்கள் ஜாக்கிரதையாக இருக்கனும்.. – நடிகர் நாசர்

ஆண்கள் என்னை மன்னிச்சிடுங்க.; ஆண்கள் ஜாக்கிரதையாக இருக்கனும்.. – நடிகர் நாசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லயோலா கல்லூரி கலை நிகழ்ச்சி விழாவில் நடிகர் சங்க தலைவர் நடிகர் நாசர் பேச்சு

இந்த விழாவிற்கு காரணமாக இருக்கின்ற அனைவருக்கும் நன்றி. ஏனென்றால், 2 வருடங்களாக வீட்டிற்குள்ளேயே இருந்தோம்.

இன்று இவ்வளவு பெரிய விழா குதூகலத்துடனும், உற்சாகத்துடனும் நடக்கிறது.

லயோலா கல்லூரிக்கும் எனக்கும் ஆழமான தொடர்பு இருக்கிறது. பள்ளி படிப்பு முடிஞ்சதும் எல்லோருக்கும் லயோலா கல்லூரியில் சேர வேண்டும் என்று தான் தோன்றும்.

ஆனால், அதற்கு அதிக மதிப்பெண் எடுக்க வேண்டுமே. ஆகையால், அந்த கொடுப்பினை எனக்கில்லை.

மேலும், விஸ்காம் என்கிற பட்டபடிப்பு தமிழ் நாட்டில் மூளை முடுக்கிலும் இன்று இருக்கிறது.
ஆனால், அது முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது லயோலா கல்லூரியில் தான்.

நடிகர் சங்கத்தின் பொதுக்குழு இங்கு தான் நடைபெற்றது. எனக்கு பேச வராது. ஆனால், பேச ஆரம்பித்தால் பேசிக்கொண்டே இருப்பேன். ஆகையால், ஒரு பத்து கேள்விகள் கேளுங்கள். அதற்கு பதில் சொல்லிவிட்டு போய் விடுகிறேன்.

நான் பேசுவதைக் கேட்பது உங்களுக்கு பிடிக்கும். ஆனால், கடந்த இரண்டு நாட்களாக இந்த விழாவிற்காக ஆடி பாடி களைத்திருப்பீர்கள். ஆகையால், கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லி விட்டு செல்கிறேன்.

கேள்வி : 37 வருடமாக திரைத்துறையில் உள்ளீர்கள் அது எப்படி சாத்தியமாக உள்ளது?

எந்தத் துறையாக இருந்தாலும் சரி நாம் நினைத்தால் தான் ஓய்வு என்பது. இங்கிருக்கும் ஆசிரியர்களும் கிட்டதட்ட 40 ஆண்டுகள் கழித்து தான் ஓய்வு பெறுவார்கள்.

நான் இந்த துறையை ஒரு வேலையாக நினைத்து தான் வந்தேன். இன்றும் நடிப்பை ஒரு வேலையாக செய்து கொண்டிருக்கிறேன். மற்ற வேலைகளை விட எனக்கு சம்பளம் அதிகம் என்பதால் எனது முழு முயற்சியையும் வெளிப்படுத்துகிறேன்.

நிறைய குழந்தைகள் இந்த சினிமாத் துறைக்கு வருவதற்கு ஆசைப்படுகிறார்கள். இன்றைய காலத்தில் சினிமாத் துறை என்பது மற்ற துறைகளை விட மிகவும் ஈர்ப்பு மிக்க ஒரு துறையாக உள்ளது.

நான் சினிமாவிற்கு வரும் பொழுது 1984ல் சினிமாவில் ஆவணப்படம், குறும்படம் எடுக்க வேண்டும் என்ற நோக்கு கிடையவே கிடையாது.

ஏனென்றால், அது ஒரு பெரிய செயல் முறை. பொருட்செலவு மிகவும் கடினம். ஒரு புகைப்படம் எடுத்தால் கூட அதை நெகடிவில் இருந்து ப்ரிண்ட் எடுத்து மாற்ற வேண்டும் என்பது போல் பல சவால்கள் இருந்தது.

ஆனால், இப்போது அப்படி இல்லை. எந்த ஒரு குறைந்த விலை கேமராவில் கூட ஒரு படத்தை எடுக்க முடியும்.

இதில் இரண்டு விஷயங்கள் உள்ளது, ஒன்று நீங்கள் இதை வேலையாக நினைத்து சினிமாத் துறையில் பயணிக்கலாம். அல்லது, இதை ஆசையாக நினைத்தால் நீங்கள் இப்போது படிக்கும் படிப்பிற்கு ஏற்றவாறு ஒரு பணியில் அமர்ந்துவிட்டு நீங்கள் உங்கள் ஆசையை நிறைவேற்றி கொள்ளலாம். குறும்படம் எடுக்கலாம், ஆவணப்படம் எடுக்கலாம், அப்போதும் சாதிக்கலாம்.

இல்லையெனில், நீங்கள் எல்லாத்தையும் விட்டு விட்டு சினிமாவிற்கு வந்தீர்களேயானால் நான் பரந்த கைகளுடனும் பெரிய இதயத்துடனும் வரவேற்கிறேன். ஏனென்றால், இந்த துறைக்கு நிறைய திறமையாளர்கள் தேவை, புதிய யோசனைகள் தேவை.

சினிமாத் துறைக்கு வர ஆசைப்பட்டால் அதற்குண்டான படிப்பை படித்து விட்டு வாருங்கள். படித்தவர்கள் சினிமாவிற்கு வருவது வேறு.

எனக்கு தலைவலி வந்துவிட்டது என்றால் நான் ஒரு வக்கீலிடம் சென்று மாத்திரை கொடுங்கள் என்று கேட்க முடியாது. மருத்துவரிடம் தான் சென்று பார்க்க வேண்டும். அதனால், நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறைக்கு ஏற்றவாறு படியுங்கள்.

கேள்வி : இதுவரை நீங்கள் எங்கும் குறிப்பிடாத கேள்வி!
தங்களின் பின்புலமாக உங்கள் மனைவி இருப்பதை பற்றி !!?

என் மனைவி தான் என் அலுவலகத்தை பார்த்துக் கொள்கிறார். அவர் சைக்காலஜி படித்தவர். இருப்பினும், எல்லாத்தையும் எனக்காக விட்டுவிட்டு என் அலுவலகத்தை பார்த்துக் கொள்கிறார்.

என் குழந்தைகளையும் பார்த்துக் கொள்கிறார். நான் சம்பாதித்ததை கொண்டு வருவதை விட, சம்பாதித்தாலும் அந்த பணத்தை தயாரிப்பதில் போட்டுவிட்டு பிரச்சனையைத் தான் கொண்டு வருவேன். அது அனைத்தையும் என் மனைவி கமிலா தான் தீர்த்து வைப்பார்.

ஆண்கள் அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். ஏனென்றால், ஒரு பொறுப்பை ஒரு பெண்ணிடம் கொடுத்தால் ஆணை விட மிக சிறப்பாக செய்வார்கள் என்று நான் கண்கூடாக பார்த்த அனுபவம்.

இங்கு இவ்வளவு பெண் குழந்தைகளை பார்க்கும் போது நம் நாடு முன்னேறிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. பெண்களுக்கு எவ்வித கவனச்சிதறலும் இருக்காது. அவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை முடிப்பதற்காக தங்களின் உயிரையும் கொடுப்பார்கள்.

நான் ஏன் பெண்களை பற்றி பேசுகிறேன் என்றால், நான் சென்ற வாரம் தான் சண்டிகர் மாநிலத்திலிருந்து சென்னை வந்தேன். நான் வந்த விமானத்தை ஓட்டியது ஒரு பெண். அதே போல், வடபழனியை தாண்டும் வேளையில் ஆட்டோ ஓட்டும் ஒரு பெண்மணி ” என்னா சார் நல்லாருக்கீங்களா?” என்று கேட்டார்..

மிகவும் சந்தோஷமாக இருந்தது. இது பெண்களின் காலமாக மாறி விட்டது. ஆண்கள் சிறிது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

அனைத்து நிகழ்ச்சிகளும் மிகவும் நன்றாக இருந்தது. அதிலும் கடைசி மூன்று நிகழ்ச்சியும் ஆகச்சிறப்பாக இருந்தது. அதற்கு பின்னால் எவ்வளவு உழைப்பை இருந்தது. எவ்வளவு நேரம் செலவழிக்கப்பட்டது என்பதை என்னால் கணிக்க முடிந்தது.

முதல், இரண்டு , மூன்று என பரிசு பெறுவது முக்கியம் இல்லை. இதில் பங்களிப்பது தான் வழ்க்கையில் சிறந்த தருணம். நீங்கள் பயிற்சிக்காக செலவழித்த நேரம் தான் முக்கியம். போட்டி என்பது வேறு. நாம் செயல்முறையை ரசிப்போம்.

உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. மீண்டும் மீண்டும் நாம் இது போன்ற நிகழ்ச்சிகளில் சந்திப்போம். பொது இடங்களில் முகக் கவசம் அணியவில்லை என்றால் ரூ.500/- அபராதம் என்றார்கள். இங்கு இருக்கும் கூட்டத்திடம் ரூ.500/- வசூல் செய்தால் அது பெரிய தொகையாக இருக்கும். நம் அனைவரும் எப்போதும் பாதுகாப்பாக இருப்போம். அரசு சொல்லும் அறிவுறுத்தலை நாம் அனைவரும் கடைப்பிடிப்போம்.

நடிகர் ஜீவாவுடன் இந்த மேடையை பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி. ஒரு அப்பாவும் மகனும் ஒரு மேடையில் அமர்ந்திருப்பது போன்று தான் இது. ஜீவாவின் முதல் படத்தின் படப்பிடிப்பின் போது என்னை பார்க்க வந்தார். அவரை நான் வாழ்த்துவேன் என்று எதிர்பார்த்தார். ஆனால், நான் “தயாரிப்பாளரின் மகன் என்றால் நடிக்க வந்துவிடுவீர்களா?” என்று கேட்டேன் அவர் அதிர்ச்சி அடைந்து என்னைப் பார்த்தார்.

அதன் பின் நான் அவருக்கு சில அறிவுறுத்தலை சொன்னேன். சில புத்தகங்களை படிக்க சொன்னேன் அவர் அது எதையும் மதிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், அவர் அது அனைத்தையும் செய்தார். லயோலா கல்லூரி மாணவர்கள் படிப்பதை போல் அவர் படித்தார். இன்று அவர் ஒரு பெரிய நடிகனாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். அவருக்கு என் வாழ்த்துக்கள்.

Actor Nassar speech at loyola college event

More Articles
Follows