தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அண்மையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை’ அரசியல் கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார்.
இந்த தகவல் வெளியான சில மணி நேரத்திலேயே கட்சிக்கும் தனக்கும் சம்மந்தமில்லை என அறிக்கை விட்டார் நடிகர் விஜய்.
தன் ரசிகர்கள் யாரும் இந்த கட்சியில் சேர வேண்டாம். என் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது என அறிக்கை வெளியிட்டார்.
பின்னர் கட்சியிலிருந்து (பொருளாளர் பதவியில்) விலகுவதாக விஜய் அம்மா ஷோபாவும் அறிவித்தார்.
எனக்கு பிடித்த நடிகர் பெயரில் மக்களுக்கு நல்லது செய்ய கட்சித் தொடங்கி இருக்கிறேன்.
தற்போது விஜய் ஆபத்தான வலையில் சிக்கியுள்ளார் என பரபரப்பாக பேட்டியளித்தார் எஸ்ஏசி.
இதன் பின்னர் கட்சியின் தலைவர் பத்மநாபனுக்கு மிரட்டல்கள் வருவதாக தெரிவித்த அவர், எஸ்.ஏ.சிக்கு ராஜினாமா கடிதம் அனுப்பினார்.
யார் விலகினாலும் கட்சி நடக்கும்… தன்னுடைய பயணம் தொடரும் என்றார் எஸ்ஏசி.
இந்த நிலையில்… தற்போது கட்சியை பதிவு செய்ய வேண்டாம் என அவர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறாராம் எஸ்ஏ சந்திரசேகர்.
SAC withdraw new political party ?