தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா ஊரடங்கால் கிட்டதட்ட 8 மாதங்களாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது. நவம்பரில் தியேட்டர்கள் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டாலும் இன்னும் தமிழக அரசு இதுபற்றி வாய் திறக்கவில்லை.
இதுகுறித்து தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்க பொதுச் செயலாளர் ரோகினி பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளதாவது…
தியேட்டர்களை திறக்க மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு அனுமதி அளித்துள்ளது.
ஆனால் மாநில அரசு இதுவரை அனுமதியளிக்கவில்லை. விரைவில் அனுமதி அளிக்கும் என்று நம்பிக்கையோடு இருக்கிறோம்.
ரசிகர்களால் தான் நாங்கள். அவர்களின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம்.
கொரோனா பிரச்சினையால் தியேட்டர்கள் திறக்கப்படும்போது மக்கள் தியேட்டருக்கு வர அச்சம் கொள்வார்கள்.
அப்போது நடிகர், நடிகைகள் தியேட்டருக்கு வந்தால், அவர்களுடன் அமர்ந்து படம் பார்த்தால் அவர்களே வருகிறார்களே என்று தைரியமாக ரசிகர்களும், பொதுமக்களும் தியேட்டருக்கு வருவார்கள்.
ஓடிடி தளங்கள் பற்றி முதலில் எங்களுக்கு பயம் இருந்தது.
கொரோனா காலத்தில் 15 தமிழ் படங்கள் ஒடிடியில் வெளிவந்துள்ளது. ஆனால் அவைகள் வந்ததும் போனதும் தெரியவில்லை.
மக்கள் தியேட்டரைத் தான் விரும்புகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.
தியேட்டர்கள் தான் ஒரு படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும்.
இவ்வாறு ரோகினி பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
Rohini Panneer Selvam about movies releasing in OTT