தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி பாக். புல்வாமா தீவிரவாத தாக்குதலில் இந்திய ராணுவ 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
அதற்கு பதிலடியாகப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருக்கும் பாலகோட்டில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.
பாக். எல்லைப்பகுதிக்குள் சென்ற இந்திய மிக் ரக விமானங்களை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
இதில் இரு இந்திய விமானிகளைக் கைது செய்துள்ளதாகப் பாகிஸ்தான் ராணுவம் தெரிவிக்கிறது.
இதில் ஒருவர் விமானி காமாண்டர் அபிநந்தன். இவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அபிநந்தனை பத்திரமாக இந்திய அரசு மீட்டுக் கொண்டு வர வேண்டும் என பலரும் தங்கள் கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
அதன் விவரம் வருமாறு…
நடிகர் சூர்யா..
“விங்க் கமாண்டர், எனது சகோதரர் அபினந்தன் வர்தமானுக்கு என் வணக்கங்கள். மிகவும் பெருமையாக உள்ளது. உறுதியுடன் இருங்கள்.
மொத்த தேசமும் உங்களுடன் உள்ளது. நீங்கள் பத்திரமாக திரும்ப எங்கள் பிரார்த்தனைகள்”
நடிகர் கார்த்தி…
“இந்திய விமானப் படையைச் சேர்ந்த சில விமான படை ஃபைட்டர் பைலட்டுகளை என் வாழ்வில் சந்தித்தது எனது அதிர்ஷ்டம். அவர்களைத் தெரிந்து கொண்டது உண்மையில் ஒரு பெருமை.
அவர்கள் முற்றிலும் வித்தியாசமான களத்தில் இயங்கும் மனிதர்கள். நமது வீரர்கள் பாதுகாப்பாக திரும்ப பிரார்த்திக்கிறேன்.
நமது ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக நமது ஒட்டு மொத்த தேசமும் நிற்கிறது. அவர்களின் துணிந்த இதயமும், தியாகமும் தான் நம்மை பாதுகாப்பாக வைத்திருக்கிறது.
நடிகர் & இயக்குனர் பார்த்திபன்..
“கணவனின் கடமையும் தந்தையின் வீரமும், மனைவியின் மனதையும் மகனின் கண்களையும், ஈரப்படுத்தாமல் சேதப்படுத்தாமல் எத்தனை நிமிடங்கள் காக்கும்? அதற்குள் காக்குமா இந்தியா அந்த வீரத்திருமகனை?”
நடிகர் சித்தார்த்…
“தீவிரவாதிகள் நமது வீரர்களைக் கொன்றார்கள். நாம் அவர்களின் முகாம்களை அழித்தோம் (யாரும் பலியாகவில்லை என அவர்கள் மறுத்தாலும் தீவிரவாத முகாம்கள் இருப்பதை அவர்கள் மறுக்கவில்லை).
நமது பைலைட்டை சிறைபிடித்திருக்கிறார்கள். இது ஒரே அடிப்படையில் நடைபெற்ற சம்பவமே அல்ல. பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஆதரிக்கிறது.
இந்தியா ஆதரிக்கவில்லை. போர் இதை மாற்றாது, மாற்றவும் முடியாது. பேச்சுவார்த்தையும் தான்”