தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் விஜய்க்கு தமிழகம், பாண்டிச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.
விஜய் படங்கள் வந்தாலே இவர்கள் திருவிழா போல கொண்டாடுவார்கள்.
ஒருவேளை விஜய்யே நேரிடையாக வந்தால் சும்ம்மா இருப்பார்களா..? விஜய்யை கண்டதும் அந்த இடத்தையே ஒரு வழி செய்திருக்க மாட்டார்களா?
அப்படிதான் ஒரு சம்பவம் அண்மையில் புதுச்சேரியில் நடைபெற்றது.
தனது ரசிகர் மன்ற நிர்வாகி ஆனந்த் இல்ல திருமணத்திற்கு மனைவி சங்கீதாவுடன் சென்றிருந்தார் விஜய்.
அப்போது, அங்கு ஏராளமான ரசிகர்கள் கூடியதால் விஜய்யும், சங்கீதாவும் கூட்ட நெரிசலில் சிக்கினர். பவுன்சர்கள் இருந்தும் ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
அந்த திருமண மண்டபத்தில் உள்ள ஏராளமான சேர்களும் சேதமடைந்தன. இந்த வீடியோக்கள் இணையங்களில் வைரலானது.
இதுபோன்ற தொடர் சம்பவங்களால் இனிமேல் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்று விஜய் முடிவு செய்துள்ளாராம்.
ரசிகர் மன்ற நிர்வாகிகளின் முக்கியமான நிகழ்வுகள் இருந்தால், சம்பந்தப்பட்டவர்களை தனது இல்லத்துக்கே வரவழைத்து வாழ்த்தி பாராட்டுவது என முடிவு செய்துள்ளார் தளபதி.
Vijay took new decision because of Pondicherry marriage crowd issue