தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தார் நடிகர் வடிவேலு.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் பேசியதாவது…
இன்றைக்கு ஒவ்வொரு பிள்ளைகளின் கையிலும் செல்போன் இருக்கிறது.
யாருக்கும் எதுவும் சொல்ல வேண்டியது இல்லை. பிள்ளைகளே யாருக்கு ஓட்டு போட வேண்டும் என பெரியவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறாங்க.
இந்த தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு நல்ல விடிவுகாலம் வரும். யார் ஆட்சிக்கு வந்தாலும் கண்ணீர் சிந்த விடாமல் மக்களை காப்பாற்ற வேண்டும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்” என பேசினார் வடிவேலு.
Vadivelu talks about Govt ruling party after election