தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக நடந்து முடிந்தது.
மேற்கு வங்க கருத்துக் கணிப்புகளில் பாஜக-வே வெல்லும். ஆட்சி அமைக்கும் என்றனர்.
இதனையடுத்து பிரபலமானஅரசியல் சாணக்கியர் பிரசாந்த் கிஷோர் பாஜக 100 இடங்களை கூட தாண்டாது,.
மேற்குவங்கத்தில் மீண்டும் மம்தா ஆட்சி தான். இது நடக்காது என்றால் இந்த தேர்தல் பணியில் இருந்தே ஒதுங்கிவிடுகிறேன் என்று சவால் விடுத்தார் பிகே.
(திமுகட்சிக்கு இவர் தான் 350 கோடி ரூபாய்க்கு தேர்தல் வியூகங்கள் வகுத்துக் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.)
தன் மீது ஒருவர் தாக்குதல் நடத்திய போதிலும், சக்கர நாற்காலில் அமர்ந்தவாறு, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார் மம்தா பானர்ஜி.
இந்த நிலையில் கருத்து கணிப்புகளை தவிடு பொடியாக்கி வெற்றி பெற்றுள்ளார் மம்தா பானர்ஜி.
(மேற்கு வங்கத்தின் பெண் புலி என வர்ணிக்கப்படுபவர் மம்தா பானர்ஜி என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.)
இவரது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
210க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றதை அடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.
எனவே தொடர்ந்து 3வது முறையாக மேற்கு வங்கத்தின் முதல்வராக ஆக இருக்கிறார் மம்தா.
ஆனாலும் Operation Success Patient Died என்பது போல தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோல்வியை தழுவினார் மம்தா பானர்ஜி.
ஒரு முதல்வருக்கே இந்த நிலைமையா ? என நீங்கள் எண்ணலாம்.
இதற்கு முக்கிய காரணம்… மம்தாவுக்கு வலதுகரமாக இருந்த முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரி என்பவர் சமீபத்தில் பாஜகவுக்கு பக்கபலமாக மாறினார்.
எனவே நந்திகிராம் தொகுதியில் இவர்கள் இருவரும் போட்டியிட்டனர்.
அதன்படி சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றுள்ளார். சுமார் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியை வீழ்த்தியிருக்கிறார்.
இதனிடையில் “நந்திகிராமில் தோல்வியை ஒப்பு கொள்கிறேன். இந்திய தேர்தல் ஆணையம் என்னை வெற்றியாளராக அறிவித்து, பின்னர் பின்வாங்கியது. இந்த விஷயத்தை நான் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வேன்” என்றார் மம்தா.
மறு வாக்கு எண்ணிக்கை கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டதால் மம்தா நீதிமன்றம் செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.
ஆனாலும் தற்சமயம் முதல்வராகிவிட்டு பின்னர் 6 மாதங்களுக்குள் தன் கட்சி எம்எல்ஏ ஒருவரை ராஜினாமா செய்ய வைத்து விட்டு அந்த தொகுதியில் அவர் போட்டியிடலாம். அந்த இடைத்தேர்தலில் எம்எல்ஏ ஆகியே தீர வேண்டும்.
இந்நிலையில் இன்று மே 3 மாலை 7 மணிக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கரை சந்தித்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளார்.
Mamta Banerjee Has Lost In Nandigram But Can Still Become Chief Minister