தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினம் அதிகரித்து செல்கிறது.
தற்போது கொரோனா 2வது அலையிலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்தாலும் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் மாநில அரசு திணறி வருகிறது.
இந்த நிலையில், பொது இடங்களில் மக்கள் இரட்டை முகக்கவசங்களை அணியுமாறு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அந்த மாநில கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் ட்விட்டர் பக்கத்தில்…
கொரோனா பரவலைத் தடுக்க மக்கள் அனைவரும் இரட்டை முகக் கவசங்களை அணிய வேண்டும்.
பொது இடங்கள் மட்டுமல்லாமல் கடைகள், அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் இரட்டை முகக் கவசங்களை அணிய வேண்டும்.
சமூக ஆர்வலர்கள், மத போதகர்கள், திரையுலக பிரபலங்கள் இது குறித்த விழிப்புணர்வில் பங்கேற்க வேண்டும்.”
இவ்வாறு முதல்வர் பதிவிட்டுள்ளார்.
Kerala CM Vijayan requests people to use double masks to protect from Corona