தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழகத்தை போலவே புதுச்சேரி மாநிலத்திலும் நாளை மறுநாள் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.
இதில் காரைக்கால் மாவட்டத்தில் 5 தொகுதிகள் உள்ளது. அதாவது காரைக்கால் வடக்கு.. காரைக்கால் தெற்கு… நிரவி திரு பட்டினம்… திருநள்ளாறு… நெடுங்காடு (தனி) என 5 உள்ளது.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதியில் பாஜக வேட்பாளராக ஜி.என்.எஸ். ராஜசேகரன் போட்டியிடுகிறார்.
என்.ஆர்.காங்கிரஸ் (ஜக்கு சின்னம்) கூட்டணியில் சீட்டு கிடைக்காத விரக்தியில் முன்னாள் அமைச்சரான சிவா சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
இவர்களை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் போட்டியிடுகிறார்.
இவர்களுடன் அமமுக வேட்பாளராக போட்டியிட்ட தருபாரனியம் என்பவர் கடைசி நேரத்தில் பாஜகவில் இணைந்துவிட்டார் என்பது வேறுகதை.
இந்த நிலையில் பாஜக வேட்பாளர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் மோடி படம் போட்ட கவரில் தங்க காயின், இரண்டாயிரம் பணம் என 32000 வாக்காளர்களுக்கு கொடுத்துள்ளார்.
இது தேர்தல் பறக்கும்படைக்கு தெரிய வந்துள்ள நிலையில் வாக்காளர்களுக்கு கொடுக்கவிருந்த 95 ஆயிரம் பணத்தையும், 150 தங்க காயினையும் பறிமுதல் செய்துள்ளனர்.
ஜி.என்.எஸ்.ராஜசேகரன் திருநள்ளாறு தொகுதியைச் சேர்ந்தவர் கிடையாது. அவர் நெடுங்காடு தொகுதி.
அமித்ஷா காரைக்கால் வந்தபோது இவரை பிஜேபி சார்பில் போட்டியிட ஆணையிட்டதாக கூறப்படுகிறது.
ராஜசேகரன் சாதாரண ஆளில்லை. அவர் இங்குள்ள பல ஒயின்ஷாப்புகளை நடத்துகிறார்.
அவரிடம் இல்லாத பணமே இல்லை. புதுவை அரசுக்கு பல ஆண்டுகளுக்கு பட்ஜெட் போடும் (5000 ரூ கோடி சொத்து) அளவுக்கு அவரிடம் சொத்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Election flying squad seized 150 gold coins and cash at Karaikal
Karaikal District Thirunallar Constituency election news updates