புதுச்சேரி பள்ளிகள் திறப்பு.: இரண்டு மாணவிகளுக்கு கொரோனா தொற்று.. வகுப்பறைகள் மூடல்

புதுச்சேரி பள்ளிகள் திறப்பு.: இரண்டு மாணவிகளுக்கு கொரோனா தொற்று.. வகுப்பறைகள் மூடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pondicherry school studentsபுதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் கடந்த 8-ம் தேதி 10, 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

அதன் பின்னர் 14-ந்தேதி முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறந்தன.

மாணவர்களுக்கு பாடங்களில் சந்தேகம் இருந்தால் பெற்றோர் அனுமதியுடன் பள்ளிக்கு வரலாம் என புதுவை கல்வித்துறை அறிவித்திருந்த்து.

இந்த நிலையில் பள்ளிக்கு சென்ற காலாப்பட்டு அரசு பள்ளியில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவி மற்றும் வாதானூர் அரசு பள்ளியில் 10-ம்வகுப்பு படிக்கும் மாணவிக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டது.

இதையடுத்து அவர்களுக்கு பரிசோதனை செய்த போது கொரோனா தொற்று இருப்பது உறுதி ஆனது.

இதனையடுத்து மாணவிகள் இருவரும் தனிமைப்படுத்தபட்டனர்.

மேலும் அவர்கள் படித்த வகுப்புகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது.

அந்த வகுப்பில் இருந்த சக மாணவிகள், ஆசிரியர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

புதுச்சேரியில் பள்ளிக்கு சென்று வந்த 3 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல் பள்ளி வகுப்பறையில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத, கலிதீர்த்தாள்குப்பம் பகுதியில் இயங்கும் தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Class 12 boy tests positive for covid 19 in pondycherry

விஷாலுக்கு 30.. ஆர்யாவுக்கு 32..; நோட்டா டைரக்டருடன் கூட்டணி

விஷாலுக்கு 30.. ஆர்யாவுக்கு 32..; நோட்டா டைரக்டருடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal aryaஅரிமா நம்பி, இருமுகன், நோட்டா ஆகிய படங்களை இயக்கியவர் ஆனந்த் ஷங்கர்.

இவரின் அடுத்த பட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இவரின் புதிய படத்தில் ‘அவன் இவன்’ படத்திற்கு பிறகு ஆர்யா & விஷால் இணைந்து நடிக்கின்றனர்.

இது விஷாலுக்கு 30வது படம். ஆர்யாவுக்கு 32வது படமாகும்.

மினி ஸ்டுடியோ சார்பாக வினோத் இப்படத்தை தயாரிக்கிறார்.

இப்பட சூட்டிங் ஹைதராபாத் பகுதியில் இன்றுமுதல் தொடங்கியுள்ளது.

மற்ற கலைஞர்களின் விவரங்களை விரைவில் வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Vishal and Arya joins for Director Anand Shankar’s next film

தவறை ஒப்புக் கொள்ளும் சிறந்த ஆளுமை ரஜினிகாந்த்..; தனஞ்செயன் பாராட்டு

தவறை ஒப்புக் கொள்ளும் சிறந்த ஆளுமை ரஜினிகாந்த்..; தனஞ்செயன் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth dhananjayanஇராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு ரூ. 6.50 லட்சம் சொத்து வரி செலுத்த வேண்டும் என மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதை எதிர்த்து ரஜினிகாந்த் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், பொதுமுடக்கம் காரணமாக திருமண மஹால் மூடியே கிடந்தது எனவும் அதனால் சொத்து வரியை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

மேலும் மாநகராட்சிக்கு இதுகுறித்த விளக்கம் அளித்து நோட்டீஸ் அனுப்பியும் இதுவரை மாநகராட்சி தரப்பில் பதில் இல்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நோட்டீஸ் அனுப்பிய 10 நாட்களில் வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

மேலும் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்தார்.

அபராதம் விதிக்க நேரிடும் என்கிற ஐகோர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து வழக்கை வாபஸ் பெறுவதாக ரஜினிகாந்த் தரப்பு பதிலளித்தனர்.

அதன்பின்னர் ரஜினி தரப்பில் ரூ. 6.50 லட்சம் சொத்து வரியை சென்னை மாநகராட்சியில் செலுத்தினர்.

இதனையடுத்து ரஜினி் இந்த விவகாரம் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

ராகவேந்திரா மண்டப சொத்து வரி…

நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும்.

தவறைத் தவிர்த்திருக்கலாம்.

#அனுபவமே_பாடம்

ஆனாலும் ரஜினியின் இந்த ட்வீட்டும் சர்ச்சையானது.

70 வயதான ஒரு சூப்பர் ஸ்டாருக்கு இது கூட தெரியவில்லையா.? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்..

இந்த நிலையில் தவறை ஒப்புக் கொண்ட ரஜினியை தயாரிப்பாளர் தனஞ்செயன் பாராட்டியுள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவில்…

ஒரு தவறை வெளிப்படியாக ஒப்புக் கொள்வதில் தான் சிறந்த மனிதத்தன்மை/ஆளுமை வெளிப்படுகிறது. அப்படி செய்து உயர்ந்து நிற்கிறார் @rajinikanth சார். #அனுபவமே_பாடம்

என பதிவிட்டுள்ளார்.

Producer Dhananjayan about Rajinikanth’s property tax issue

மேட்டர் படத்தை எடுப்பது ஈசி… ஒரு மெசேஜ் படத்தை எடுத்து கஷ்டப்படுறோம்.. ‘நுங்கம்பாக்கம்’ பட இயக்குனர் வேதனை

மேட்டர் படத்தை எடுப்பது ஈசி… ஒரு மெசேஜ் படத்தை எடுத்து கஷ்டப்படுறோம்.. ‘நுங்கம்பாக்கம்’ பட இயக்குனர் வேதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nungambakkam director ramesh selvanதிதிர் பிலிம் ஹவுஸ், ஐகான் ஸ்டுடியோஸ், ட்ரீம்வேர்ல்ட் சினிமாஸ் வழங்க அஜ்மல் நடித்துள்ள படம் ” நுங்கம்பாக்கம் ”

தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கிய கொலை வழக்கு சம்பந்தப்பட்ட இந்தப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் ரமேஷ் செல்வன்.

இப்படத்தின் போஸ்டர் வெளியீட்டில் இருந்து டீசர் மற்றும் டிரைலர் வெளியீட்டு வரை கடும் பிரச்சனைகளைச் சந்தித்தது. ரிலீஸ் தேதியை பலமுறை அறிவித்தும் வெளிவர முடியாத சூழலில் இருந்த இப்படம் வரும் 24-ஆம் தேதி வெளியாகிறது. அதை முன்னிட்டு இன்று படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு,

தயாரிப்பாளர் ரவிதேவன் பேசியதாவது…

“முதலில் இந்தப் படத்தை ஏன் ஆதரிக்கணும் என்ற கேள்வி எல்லாருக்குள்ளும் இருக்கும். ஆனால் நாம் இந்தப்படத்திற்கு நல்லாதரவு தரணும். நீங்கள் வீட்டில் இருந்தே பார்க்கும் படியாக வசதி ஏற்படுத்தி இருக்கிறோம். இந்தப்படத்தில் உங்களின் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இருக்கும். இந்தப்படத்தைப் பெரிதாக வெற்றிபெற வைக்க வேண்டும்” என்றார்.

நடிகர் ஆர்.என் ஆர் மனோகர் பேசியதாவது..

“சமுதாயத்தின் முகமூடியை கிழிக்கும் பட விழாவிற்கு நாம் அனைவரும் முகமூடி அணிந்து வந்துள்ளோம். பல தடைகளைக் கடந்து வந்துள்ள இப்படைப்பு ஒரு மாபெரும் படைப்பாக இருக்கும்” என்றார்.

நடிகர் அஜ்மல் பேசியதாவது..

“நுங்கம்பாக்கம் ஒரு உண்மைச் சம்பவத்தை அடித்தளமாக கொண்ட படம். பல தடைகளைத் தாண்டி கொண்டு வந்துள்ளோம். இவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டு வந்ததிற்கு காரணம் இருக்கிறது. இந்தப்படம் மூலமாக பல விசயங்கள் வெளிவரும். பல உண்மைகள் தெரியும். இப்படத்தை நீங்கள் ஆதரிக்க வேண்டும்” என்றார்

பாடலாசிரியர் சினேகன் பேசியதாவது..

“ஏழுமாதம் கழித்து உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்தப்படத்தின் பிரச்சனைகள் எப்ப முடியும். இந்தப்படம் எப்போது வரும் என்று கேட்டுக்கொண்டே இருந்தேன். ஒரு உண்மைச் சம்பவத்தைச் சொல்ல இங்கு இவ்வளவு போராட்டங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. இந்தப்படம் வராவிட்டால் அந்த கொலை வழக்கே நமக்கு மறந்து போய்விடும். எதற்காக இந்த இயக்குநர் மீது ஏழு கேஸ் போட்டார்கள் என்றே தெரியவில்லை. இந்தப்படம் பற்றிய செய்தி வெளிவந்தாலே பலருக்குப் பயம் வந்துவிடும். தான் எடுத்த காரியத்தை கடைசி வரை முடித்த இயக்குநரைப்.பாராட்ட வேண்டும். இந்த நீதிமன்றத்தில் கொஞ்சம் ஈரம் இருந்ததால் தான் இந்தப்படம் வெளிவர இருக்கிறது. இவ்வளவு போராட்டத்தை சந்தித்த இயக்குனருக்கு இந்த சினிமாக்காறர்கள் யாரும் இவருக்கு ஆதரவாக குரல்கொடுக்க முன் வராதது மிகவும் தவறான விஷயம், எதையெதையோ பார்த்தோமே..₹49 ரூபாய் கொடுத்து இந்தப்படத்தை பார்ப்போம். போராடுபவன் இறைவனின் பிள்ளை. போராட்டம் தோற்பதே இல்லை. இந்தப்படம் பெரு வெற்றியடைய வாழ்த்துகள்” என்றார்

இயக்குநர் ரமேஷ் செல்வன் பேசியதாவது…

“இந்த மேடையில் நிற்க வைத்த ஜெயச்சந்திரன் ஜே அவர்களுக்கு நன்றி. கிருஷ்ணகிரி கோவிந்தராஜ் அவர்களுக்கும் நன்றி. அடுத்ததாக ரமேஷ் குமார் அவர்களுக்கும் நன்றி . நகரி பரத்குமார் அவர்களுக்கும் நன்றி.

இரண்டறை வருட போராட்டம். கஜினி முகமதுவை விட அதிகப்போராட்டத்தைச் சந்தித்தேன். நான் 80% உண்மையாக இருப்பவன். சினிமாவில் சில விசயங்களை செய்யவே முடியாது. ஒரு மேட்டர் படத்தை எடுத்தால் ஈசியா ஜெயிச்சிருக்கலாம். ஒரு மெசேஜ் படத்தை எடுத்ததால் தான் இவ்வளவு கஷ்டம். இந்தப்படத்தின் டீசர் வெளிவந்த பின் பெரிய ரீச் ஆனது. அப்பவே வியாபாரத்திற்கு வழி கிடைத்தது. ஆனால் இந்தப்படத்தை வெளியிடக்கூடாது என பெண்ணின் தந்தை கேஸ் போட்டுவிட்டார்.

அந்தப்பெண் செத்து மூன்று மணி நேரம் யாருமே அருகில் செல்லவில்லை. இந்தப்படத்தின் கதையை ரைட்டர் சூளைமேட்டில் ஒவ்வொரு தெருத்தெருவாகப் போய் எழுதினார். இந்தப்படத்தில் சைபர் க்ரைம், போலீஸ் டிப்பார்ட்மெண்ட் முதற்கொண்டு பல விசயங்கள் இருக்கு.

இந்தப்படத்தின் இயக்குநரை கைது செய்யணும் என்று போலீஸ், சென்சார் அதிகாரி பக்கிரிசாமியிடம் போய் கேட்டார்கள். நான் பெங்களூரில் போய் ஒளிந்துகொண்டு பின் பெயில் வாங்கியதும் வந்தேன். நான் ஏழு படம் செய்தவன். ஆனால் என்னைப் போலீஸ் 10 கொலைகளைச் செய்தவன் போல நடத்தினார்கள். என் ஆபிஸ் பாய்ல இருந்து 24 பேரிடம் விசாரித்தார்கள். போலீஸ் என்னை படத்தில் அதைத் தூக்கு இதைத்தூக்கு என்று நச்சரித்தார்கள். கமிஷனர் முதல் பலரையும் சந்தித்து கதை சொல்லி அவர்களிடம் 6 மாதம் கழித்து தான் லெட்டர் கிடைத்தது.

அதன்பின் சென்சார் போனேன். அங்கு பெயர் டைட்டில் ஆகியவற்றை மாற்றச் சொன்னார்கள். பின் க்ளைமாக்ஸை மாற்றச் சொன்னார்கள். நான் சம்மதிக்கவில்லை. பின் ஆறுமாத போராட்டம். அது முடிந்ததும் அந்தணர்கள் கேஸ் போட்டார்கள். அதன்பின் ஒரு வழக்கு வந்தது. அதையும் சமாளித்து படத்தை வெளியிட நினைத்தால் கொரோனா வந்துவிட்டது. தற்போது Cineflix என்ற ஓடிடியில் படம் வரும் 24-ஆம் தேதி வெளிவருகிறது. இந்தப்படத்தை அனைத்து கேபிள் இணைப்புகளில் 77-ஆம் நம்பரை ரிமோட்டில் அழுத்திப் பார்க்கலாம். தயவுசெய்து ₹49 ரூபாய் கட்டிப் பார்க்கும் படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன். தமிழ்ராக்கர்ஸ் இப்படத்தை பைரஸி எடுக்காதீர்கள். அப்படி எடுத்தால் நான் சூசைட் தான் பண்ணணும். ராம்குமார் குடும்பம் சார்பாகவும், சுவாதி குடும்பம் சார்பாகப் படத்தைப் பார்த்து என்னைப் பாராட்டினார்கள்” என்றார்.

Director Ramesh Selvan about his upcoming film Nungambakkam

பிக்பாஸ் வீட்டிலிருந்து எஸ்கேப் ஆகும் சனம் ஷிவானி ரம்யா கேப்ரில்லா..; அர்ச்சனா அதிரடி எண்ட்ரீ

பிக்பாஸ் வீட்டிலிருந்து எஸ்கேப் ஆகும் சனம் ஷிவானி ரம்யா கேப்ரில்லா..; அர்ச்சனா அதிரடி எண்ட்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vj archana in bigg boss 4அக்டோபர் 4-ஆம் தேதி முதல் பிக்பாஸ் 4-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிகழ்ச்சியில் ரேகா, சுரேஷ், ரியோ, ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், சனம் ஷெட்டி உள்ளிட்ட 16 பேர் போட்டியாளர்களாக உள்ளனர்.

தற்போது 17-வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்திருக்கிறார் விஜே அர்ச்சனா.

அவரை அந்த வீட்டிலுள்ள போட்டியாளர்கள் ஆரவாரத்துடன் வரவேற்கும் புரமோ வீடியோவும் வெளியானது.

சனம், ஷிவானி, சம்யுக்தா, ரேகா, ரம்யா பாண்டியன், கேப்ரில்லா, ஆஜித் ஆகியோர் இந்த வாரம் வெளியேற்றப்படுவோர் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்களாம்.

VJ Archana enters Bigg Boss 4 house

அனிருத் பிறந்தநாளில் தளபதி விஜய் தரும் ‘மாஸ்’டர் ட்ரீட்

அனிருத் பிறந்தநாளில் தளபதி விஜய் தரும் ‘மாஸ்’டர் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

quit pannudaவிஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’.

இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்ட நிலையில், கடந்த ஏப்ரல் 9-ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் மார்ச் மாத இறுதி வாரம் முதல் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அந்த படத்தின் வெளியீடு இன்று வரை (7 மாதங்களாக) தள்ளிப் போய் கொண்டே உள்ளது.

இதனிடையில் மாஸ்டர் படத்தை பார்த்த விஜய் சிலாகித்து போனாராம்.

அடுத்தாண்டு 2021 பொங்கலுக்கு திரைப்படம் தியேட்டரில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை பயன்படுத்தி மாஸ்டர் படத்தில் சில திருத்தங்களை செய்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

இதனிடையில் மாஸ்டர் படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ பெயரில் உள்ள ட்விட்டர் கணக்கில், “‘மாஸ்டர்’ திரைப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும்” என்று அறிவிப்பு வெளியானது.

ஆனால் அது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்பது தெரிய வந்தது.

இந்நிலையில் நாளை அக்டோபர் 16 மாஸ்டர் பட இசையமைப்பாளர் அனிருத் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படத்திலிருந்து QUIT PANNUDA என்ற பாடலின் லிரிக் வீடியோ மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது என அறிவித்துள்ளது படக்குழு.

Quit Pannuda lyric video will be out tomorrow

More Articles
Follows