தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வல்லவன் வகுத்ததடா 3.25/5 விமர்சனம்..
கீதாச்சாரத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை முன்வைத்து ஒரு ஐந்து அதிகாரங்களாக இந்த படத்தை கொடுத்துள்ளனர் படக் குழுவினர்.
1) எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
2) எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.. எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
3) உன்னுடையதை எதை இழந்தாய்,
எதற்காக நீ அழுகிறாய்?
4) எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
5) எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது.
இந்த கருத்துக்களை முன்வைத்து பணம் மட்டுமே மனித வாழ்க்கைக்கு அடிப்படை என்பதையும் பணத்தால் ஒருவரின் வாழ்வில் வளர்ச்சியும் அடுத்தவர் வாழ்வில் வீழ்ச்சியும் எப்படி எல்லாம் நடைபெறுகிறது என்பதையும் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.
ஐந்து கதைகளை இணைத்து ஹைபர் லிங்க் படமாக தந்திருக்கிறார்
ஸ்டோரி…
1) தேஜ் சரண்ராஜ் ரஜின் ரோஸ் இருவரும் நண்பர்கள்.. கொள்ளை அடிப்பது கார் திருடுவது இவர்ளின் தொழில்..
2) வட்டி ஆசாமி பைனான்சியர் விக்ரம் ஆதித்யா.. வட்டி சரியான நேரத்தில் வரவில்லை என்றால் போலீஸ் என்றாலும் பொளந்து கட்டுவார்.
3) காதல் என்ற பெயரில் வசதியான ஆண்களை வீழ்த்தி அவர்களிடம் பணம் பறித்து தன் தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் நாயகி அனன்யா.
4) இன்ஸ்பெக்டர் நீதிமணி.. நிதி மணி என்று கூட வைத்திருக்கலாம்.. அந்த அளவிற்கு பணத்தாசை பிடித்த காவல்துறை அதிகாரி. போலீஸ் ஸ்டேஷனிலே காணிக்கை என்ற பெயரில் வசூலிக்கும் வசூல்ராஜா இவர்..
5) கால் டாக்ஸி ஓட்டும் அடுத்த நாயகி சுவாதி மீனாட்சி. முறையான வேலை கிடைக்காத இவரின் தந்தை ஒரு விபத்தில் காயம் அடைய சிகிச்சைக்காக 10 லட்சம் பணம் தேவைப்படுகிறது.
இவர்கள் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை ஹைப்பர்லிங்க் கதையாக தொகுத்து கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
இறுதியில் என்ன நடந்தது.?
கேரக்டர்ஸ்…
Tej Charanraj (as) Chiranjeevi
Rajesh Balachandiran (as) Neethimani
Aananya Mani (as) Agalya
Swathi Meenakshi (as) Subhatra Vikram Adhitya (as) Kuberan
Regin Rose (as) Chakkaravarthi
ஓரிரு முகங்களை தவிர மற்ற அனைவருமே புது முகங்கள் தான்.. ஆனால் நடிப்புக்கு ஏற்றவாறு தங்கள் கேரக்டரில் பளிச்சிடுகின்றனர்.. எங்கும் மிகை இல்லாத நடிப்பை கொடுத்து நம்மை படத்துடன் ஒன்றை வைக்கின்றனர்.
இது எங்க நிலம் எங்கள் அப்பாவின் தவறான சகவாசத்தால் இந்த இடத்தை இழந்து விட்டோம்.. இதை வாங்கின பிறகு தான் நம்ம கல்யாணம் என்று ஒவ்வொரு ஆண்களையும் அனன்யா ஆட்டையை போடுவது வேற லெவல் ரகம்.. ஆனால் இவரையும் காதலிக்கும் நேர்மையான நபரும் உண்டு..
இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பாலச்சந்திரன்.. வழக்கமான ‘மாமூல்’ போலீஸ்.. பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் பணம் கொடுப்பவர் பக்கம்தான் நான் நிற்பேன் என கம்பீரம் காட்டியிருக்கிறார். இவரது சிரிப்பும் இவரது ஹேர் ஸ்டைலும் கவனிக்க வைக்கிறது.
தேஜ் சரண்ராஜ், ரெஜின் ரோஸ்.. இருவரும் கார் திருடுவது என சுற்றினாலும் ஒரு கட்டத்தில் பணத்திற்காக நண்பனை போட்டுத் தள்ளுவது பேராசையின் உச்சம்.
பெரும்பாலும் பணத்திற்காக ஓடும் நெகட்டிவ் மனிதர்களை காட்டி பாசிட்டிவான நேர்மையான கேரக்டராக டிரைவர் சுவாதியின் கேரக்டர்.. இவரது நேர்மைக்கு கிடைத்த வெகுமதியாக கோடிக்கணக்கில் பணம் இவர் கையில் வருவது பாராட்டுக்குரியது.. ஆனால் நேர்மைக்கு இந்த காலம் தகுமா என்பது இயக்குனரே?
ஸ்மார்ட் பைனான்சியர் விக்ரம் ஆதித்யா.. பெரும்பாலும் பைனான்சியர்களை கொடூரமாகவே காட்டுவார்கள்.. இதில் இவர் ஸ்மார்ட்.. அவசரத்திற்காக பணம் பெறுபவர்கள் பணத்தை கொடுக்காமல் இழுத்தடிபவர்களுக்கு இவரைப் போன்ற பைனான்சியர்கள் தேவை தான்..
இப்படியாக ஒவ்வொரு கேரக்டரும் பாராட்டப்படும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.
டெக்னீசியன்ஸ்…
கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவு செய்ய சகிஷ்னா சேவியர் இசையமைத்துள்ளார். அஜய் படத்தொகுப்பு செய்ய, மகேஷ் மேத்யூ சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
சகிஷ்னா பின்னணி இசை திரில்லர் படத்திற்கான உணர்வை கொடுத்திருக்கிறது..
கீதாச்சாரக் கதை நல்ல கேரக்டர்கள் என இருந்தும் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
போக்கஸ் ஸ்டுடியோஸ் சார்பில் விநாயக் துரை தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘வல்லவன் வகுத்ததடா’.
ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒவ்வொரு முடிவு கொடுக்கப்பட்டு உள்ளது.. அதே சமயத்தில் நேர்மையாக வாழ்ந்த சுவாதிக்கு கடவுள் துணை இருப்பது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இது ஆன்மீகவாதிகளுக்கு சந்தோஷத்தை கொடுக்கும் என நம்பலாம்
Vallavan Vaguthadhada movie review