எமன் விமர்சனம்

எமன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : விஜய் ஆண்டனி, மியா ஜார்ஜ், தியாகராஜன், சங்கிலி முருகன், சார்லி, சுவாமிநாதன் மாரிமுத்து மற்றும் பலர்.
இயக்கம் : ஜீவா சங்கர்
இசை : விஜய் ஆண்டனி
ஒளிப்பதிவாளர் : ஜீவா சங்கர்
எடிட்டிங் : வீர செந்தில்ராஜ்
பி.ஆர்.ஓ.: சுரேஷ் சந்திரா
தயாரிப்பாளர் : லைகா புரொடக்சன்ஸ் & விஜய்ஆண்டனி பிலிம் கார்ப்பரேசன்

yaman dance

கதைக்களம்…

தான் பிறந்த ஒரு வாரத்திலேயே பெற்றோரை இழக்கிறார் விஜய் ஆண்டனி. இதனால் இவருக்கு எமன் என்ற பட்டபெயர் வந்துவிடுகிறது.

30 வருடங்களுக்கு பின், தன்னை வளர்க்கும் தாத்தாவின் ஆப்ரேசனுக்காக பணம் தேவைப்படுகிறது.

எனவே செய்யாத ஒரு குற்றத்திற்காக (குற்றவாளிக்கு பதிலாக) ஜெயிலுக்கு போனால் பணம் கிடைக்கும் என்கிறார் சுவாமிநாதன்.

அதன்படி ஜெயிலுக்குபோக, சில அரசியல்வாதிகள் சந்திக்கிறார். அதன்படி வெளியில் வந்தபின் ஒவ்வொருவராக இவர் சந்திக்க, இவரின் வாழ்க்கையில் ஏற்படும் அதிரடி திருப்பங்களே எமன்.

yaman jodi

கதாபாத்திரங்கள்…

அப்பா மகன் என இரண்டு கேரக்டரில் விஜய் ஆண்டனி. இரண்டிலும் ரசிக்க வைக்கிறார்.

சிறந்த அரசியல்வாதி தன் ஒவ்வொரு அடியையும் எவ்வளவு நிதானமாக எடுத்து வைப்பாரோ? அப்படி அளந்து நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி.

எம்மேல கை வச்ச காலி பாடலில் டான்ஸ் ஆட முயற்சிப்பது காமெடி. பாடல் ரசிக்க வைத்தாலும் மூவ்மெண்ட்ஸ் வரல.

எப்போதும் மிகையில்லாத நடிப்பை தருபவர் மியா ஜார்ஜ். இதிலும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.

டமீலோ டூமிலோ என்ற பாடல் வெஸ்டர்ன் பாணி என்றாலும் அதிலும் மேனியை முழுவதுமாக மூடி இருப்பது கொஞ்சம் ஓவர்தான். ஆனால் கிளாமரில் முதல் அடியை எடுத்து வைத்திருப்பதால் பாராட்டலாம்.

நீண்ட நாட்களுக்கு பிறகு சைலண்ட் வில்லன் ரோல். தியாகராஜன் தன் நடிப்பில் உள்ளங்களை திருடுவது நிச்சயம்.

தான் வரும் காட்சிகளில் சபாஷ் போட வைக்கிறார் சார்லி. சங்கிலிமுருகன், சுவாமிநாதன் ஆகியோர் சிறப்பான தேர்வு.

இவர்களுடன் ஏகப்பட்ட வில்லன்கள். அரசியல் களம் என்பதால் அப்படியோ? ஆனாலும் எல்லா கேரக்டர்களும் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

yaman 1

தொழில்நுட்ப கலைஞர்கள்…

டைரக்டரே ஒளிப்பதிவாளர் என்பதால் இரண்டிலும் ஜெயிக்கிறார்.

சீரியசான படத்திற்கு பாடல்கள் தேவையில்லாத பீலிங்ஸ் இருக்கு.

ஆனாலும் எம்மேல கை வச்சா, கடவுள் எனும் கவிதை ஆகிய பாடல்கள் ரசிக்க வைக்கிறது.

முக்கியமாக பின்னணி இசை பெரிதாக பேசப்படும். படத்தின் தீம் மியூசிக் தியேட்டரில் விட்டு வந்தாலும் ஒலிக்கும்.

Yaman director team

இயக்குனர் பற்றிய அலசல்…

விஜய் ஆண்டனிக்காக பின்னப்பட்ட கதையை பிட்டாக கொடுத்திருக்கிறார் ஜீவா சங்கர்.

விறுவிறுப்பான கதைக்களம், அதிரடியான வசனங்கள் என நல்ல ப்ளாட்பார்ம் இருந்தாலும் கொஞ்சம் வேகம் கூட்டியிருக்கலாம்.

அரசியல்வாதிகள் எல்லாருமே சாமானிய மனிதர்கள்தான். ஆனால் சராசரி மனிதன் திடீரென இன்றைய அரசியலில் இப்படி உருவெடுக்க முடியுமா?  என்பது டவுட்தான்.

சினிமா நடிகை, திடீரென விஜய் ஆண்டனியை நம்புவது எப்படி? என்று தெரியவில்லை.

பதவிக்காக ஒரு அரசியல்வாதி எதையும் செய்வான். அவன் மனித முகம் கொண்ட மிருகம் என்பதை அதிரடியாக சொல்லியிருக்கிறார் ஜீவாசங்கர்.

எதிரியை கூட நம்பிடலாம். எப்பவும் கூடவே விசுவாசமா இருக்கிறவன அரசியலில் நம்பமுடியாது  என்ற வசனங்கள் இன்றைய தமிழ்நாட்டு அரசியலை நிச்சயம் ஞாபகப்படுத்தும்.

எமன்… அரசியல்வாதியின் அசல் முகம்

பகடி ஆட்டம் விமர்சனம்

பகடி ஆட்டம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ரகுமான், கௌரி நந்தா, அகில், நிழல்கள் ரவி, சுரேந்தர், மோனிகா, கருத்தம்மா ராஜஸ்ரீ, சுதா, கோவை செந்தில், சாட்டை ரவி, பாய்ஸ் ராஜன் மற்றும் பலர்.
இயக்கம் : ராம் கே. சந்திரன்
இசை : கார்த்திக் ராஜா
ஒளிப்பதிவாளர் : கிருஷ்ணசாமி,
எடிட்டிங் : கே. ஸ்ரீனிவாஸ்
பி.ஆர்.ஓ.: குமரேசன்
தயாரிப்பாளர் : குமார் டி.எஸ், டி. சுபாஷ் சந்திரபோஸ், குணசேகர்

கதைக்களம்…

இந்த பகடி ஆட்டத்தை இரண்டே வரிகளில் சொல்லிவிடலாம்.

1) பணக்கார பையன்கள் நிறைய பெண்களை காதலித்து அவர்களின் வாழ்க்கையில் விளையாடும் ஆட்டம்.

2) அதுபோல் பணத்திற்காக ஒருவனை காதலிப்பதும் பின்னர் வேறொரு பையனை மணப்பதும் என்று திரியும் பெண்களின் ஆட்டம்.

இந்த மையக்கருத்தை வைத்து ராம் கே. சந்திரன் சொல்லியிருக்கும் அதிரடி ஆட்டம்தான் இக்கதை.

கதாபாத்திரங்கள்…

ரகுமான், அகில், கருத்தம்மா ராஜஸ்ரீ என சிலரே நமக்கு பரிச்சயமானவர்கள். ஆனாலும் மற்ற கேரக்டர்களும் படத்தின் கேரக்டர் அறிந்து தங்கள் பணிகளை மிகச் சிறப்பாக செய்துள்ளனர்.

இடைவேளை வரை காதலர்களின் காதலையும் காமத்தையும் சொன்ன இயக்குனர் அதன்பின்னர் காவலர்களின் அதிரடியை காட்டியிருப்பது படத்தை ஜெட் வேகத்தில் கொண்டு செல்கிறது.

அதில் ரகுமான் இறங்கிய பின்னர் ஒவ்வொன்றாக கண்டுபிடிப்பது கூடுதல் சுவை.

கௌரி நந்தா மற்றும் மோனிகா படத்திற்கு அழகு சேர்கின்றனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

கார்த்திக் ராஜா இசையில் பாடல்கள் இருந்தாலும் இரண்டு பழைய பாடல்களே படத்திற்கு பெரிய பலம்.

இளமை எனும் பூங்காற்று…. மற்றும் என்ன என்ன கனவு கண்டாயோ சாமி? என்ற இரு பாடல்களும் முழுமையாக பயன்படுத்தப்பட்டு படத்திற்கு பலம் சேர்க்கின்றன.

கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவில் காட்சிகள் அருமை.

இயக்குனர் பற்றிய அலசல்…

தான் பட்ட கஷ்டங்களை தங்கள் பிள்ளைகள் படக்கூடாது என்று நினைக்கும் பெற்றோர்கள் ஓவராக செல்லம் கொடுத்து பிரைவசி என்ற பெயரில் தங்கள் பிள்ளைகளை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர்.

வாட்ஸ் அப், ட்விட்டர், பேஸ்புக் என்று அவர்களும் இணையங்களில் முகம் தெரியாத நபருடன் அறிமுகமாகி திசை மாறிவிடுகின்றனர்.

இதை ஆணித்தரமாக சொல்லி அதற்கு எவரும் எதிர்பாராத ஒரு க்ளைமாக்ஸ் சொல்லி ரசிகர்களை கவர்கிறார் இயக்குனர் ராம் கே சந்திரன்.

பெற்றோரையும் தன்னை காதலிப்பரையும் ஏமாற்ற செல்போன்களில் பெயரை மாற்றி வைக்கும் காட்சிகளும் அதனால் விசாரணையில் போலீஸ் சற்று தடுமாறுவதும் ரசிக்க வைக்கிறது.

பகடி ஆட்டம்… பெற்றோரை ஏமாற்றும் காதலர்களின் ஆட்டம்

என்னோடு விளையாடு விமர்சனம்

என்னோடு விளையாடு விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : பரத், கதிர், சாந்தினி, சஞ்சிதா ஷெட்டி, ராதாரவி, யோக் ஜேபி, கமலா கணேஷ் மற்றும் பலர்.
இயக்கம் : அருண் கிருஷ்ணசாமி
இசை : மோசஸ் மற்றும் சுதர்சன் குமார்
ஒளிப்பதிவாளர் : யுவா
எடிட்டிங் : கோபி கிருஷ்ணா
பி.ஆர்.ஓ.: கோபிநாதன்
தயாரிப்பாளர் : டோரண்டோ ரீல்ஸ், ரேயான் ஸ்டூடியோஸ்

கதைக்களம்…

பரத் மற்றும் சாந்தினி ஒரு ஜோடி. இதில் பரத் குதிரை ரேஸ் பிரியர். அதில் நிறைய நஷ்டத்தை சந்திக்கும் அவர் லாபம் சம்பாதிக்க குறுக்கு வழிக்கு செல்ல நினைக்கிறார்.

கதிர் மற்றும் சஞ்சிதா மற்றொரு ஜோடி. இதில் சஞ்சிதாவுக்கு உதவ கதிர் குறுக்கு வழிக்கு செல்லும் சூழ்நிலை உருவாகிறது.

ராதாரவி, யோக் ஜேபி, கமலா கணேஷ் ஆகிய மூவரும் குதிரை ரேஸின் ஜாம்பவான்கள்.

குதிரை பந்தயமும் இவர்களுக்குள் விளையாடும் சூதாட்டமே இந்த என்னோடு விளையாடு.

கதாபாத்திரங்கள்…

முன்பை விட இதில் படு ஸ்மாட்டாக் இருக்கிறார் பரத். கூடவே பாடி பில்டப் மெயின்ட்டெயின் செய்து இளைஞர்களை கவருகிறார்.

இவருக்கும் சாந்தினிக்கும் நல்ல கெமிஸ்ட்ரி. சாந்தினி அழகான கிறிஸ்த பெண்ணாக வருகிறார்.

அப்பாவியாக இளைஞராகவும் இறுதியில் அதிடியிலும் கதிர் கலக்கல். சஞ்சிதா கிளாமராகவும் ஹோம்லியாகவும் ரசிகர்களை கவருகிறார்.

ராதாரவி மற்றும் யோக் ஜேபி இருவரும் மூளைக்காரர்கள். குதிரை ஜெயிப்பது மட்டும் வெற்றியல்ல. அதில் தங்களது கௌரவமும் அடங்கியுள்ளது என்பதற்காக ஆடும் ஆட்டம் ரசிக்கலாம்.

ஒரு சில காட்சிகளில் வந்தாலும் ஜெயச்சந்திரன் மனதில் நிற்கிறார். நிறைய காட்சிகள் கொடுத்திருக்கலாம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இசையமைப்பாளர்கள் இரண்டு பேர் என்பதால் 5 பாடல்களை தாண்டிவிடுகிறது.

பாடல்கள் நன்றாக இருந்தாலும் அடுத்தடுத்து வருவதை தவிர்த்து இருக்கலாம்.

யுவா ஒளிப்பதிவில் குதிரை ரேஸ் காட்சிகள் அதிரடி.

இயக்குனர் பற்றிய அலசல்…

குதிரை ரேஸ் சென்னையில் தடைப்பட்டு இருப்பதால் இதில் நடைபெறும் சூதாட்டங்கள் தமிழக ரசிகர்களுக்கு புது அனுபவம்தான்.

இடைவேளை வரை என்னாகுமோ? என்று செல்லும் திரைக்கதை அதன்பின்னர் குதிரை வேகம் எடுக்கிறது.

ஆனால் சூதாட்டத்தினால் சில குடும்பங்கள் அழிந்து வருவதையும் அதனால் ஏற்படும் பிரச்சினைகளையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கலாம்.

என்னோடு விளையாடு… சுவையான சூதாட்டம்

காதல் கண் கட்டுதே விமர்சனம்

காதல் கண் கட்டுதே விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : கேஜி, அதுல்யா, சிவ்ராஜ், அனிருத் மற்றும் பலர்.
இயக்கம் : சிவராஜ்
இசை : பவன்
ஒளிப்பதிவாளர் : ராஜ்மோகன்
பி.ஆர்.ஓ.: கே.என். குமார்
தயாரிப்பாளர் : மாண்டேஜ் மீடியா (சிவராஜ்)

கதைக்களம்…

ஹீரோ கேஜி மற்றும் நாயகி அதுல்யா இருவரும் காலேஜ்மேட்ஸ். இருவரும் கோவையை சேர்ந்தவர்கள்.

நண்பர்களாக இருக்கும் இவர்கள் படிப்புக்கு பிறகு அடிக்கடி சந்திக்கும் சூழ்நிலை உருவாகிறது.

எனவே காதலும் உருவாகிறது. இதில் அதுல்யா ஒரு பத்திரிகையில் பணிபுரிகிறார்.

அங்குள்ள அனிருத் என்பவரிடம் (படத்தில் கார்த்திக்) இவர் பணி காரணமாக பழக, அது நாயகனுக்கு கோபத்தை உண்டாக்குகிறது.

அதனால் இவர்களின் காதல் இடையே மோதலும் உருவாகிறது. இதனையடுத்து அவர்கள் இணைந்தார்களா? காதல் என்னவானது என்பதுதான் படத்தின் கதை.

kadhal 2

கதாபாத்திரங்கள்..

நாம் மேலே கூறிய கேரக்டர்கள்தான் படத்தின் மொத்த கேரக்டர்களும் என்றே சொல்லாம்.

இடையில் நண்பர்கள் வந்து செல்கிறார்கள்.

ஒரு சராசரி கோவை பையனாக வந்து செல்கிறார் கே.ஜி. (படத்தில் சிவா) பெண்களின் மனதை புரிந்துக் கொள்ளாமல் தவிக்கும் காட்சிகளில் ரசிக்கலாம்.

அதுல்யாவுக்கு இது முதல் படம் என்றாலும் கண்களால் நிறையவே ஸ்கோர் செய்கிறார். கண்களும் அவரது புருவங்களும் நிறைய பேசுகின்றன.

ஹீரோவின் நண்பர்கள் மற்றும் ஆபிஸ் ப்ரெண்ட்ஸ் ஆகியோருக்கு இன்னும் வேலை கொடுத்திருக்கலாம்.

1S4A9266 copy

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்தின் மிகப்பெரிய பலமே பவனின் பாடல்கள் மற்றும் சிவராஜின் ஒளிப்பதிவுதான்.

காதலே உனக்கு என்ன பாவம் செய்தேனோ என்று தொடங்கி எத்தனை நாட்கள் என்ற பாடல் நிச்சயம் எத்தனை நாட்கள் ஆனாலும் மனதை விட்டு போகாது.

என்னை கொஞ்சமாய் கொன்றாயே பாடலும் ரசிக்க வைக்கிறது.

ஒளிப்பதிவாளரின் காதல் காட்சிகள் கண்களுக்கு விருந்து.

இன்றைய காதலர்களின் சின்ன சின்ன சண்டைகளை கொஞ்சம் நீளமாக சொல்லிவிட்டார்.

ஒரு குறும்படத்திற்கான கதையை நீண்ட நேரம் சொல்லியிருப்பதுதான் பலவீனம்.

படத்தில் எந்தவிதமான ட்விஸ்ட் இல்லாமல் போனது மகா வருத்தம்.

காதல் கண் கட்டுதே… காதலர்களை கவரும்

காஸி விமர்சனம்

காஸி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ராணா டக்குபதி, கே.கே. மேனன், அதுல் குல்கர்னி, நாசர், ஓம் புரி, டாப்ஸி மற்றும் பலர்.
இயக்கம் : சங்கல்ப் ரெட்டி
இசை : கே
ஒளிப்பதிவாளர் : மதி
எடிட்டிங்: ஸ்ரீகர் பிரசாத்
பி.ஆர்.ஓ.: ரியாஸ் கே அஹ்மத்
தயாரிப்பாளர் : பிவிபி சினிமாஸ் மற்றும் மேட்னி மூவீஸ்

கதைக்களம்…

இந்த உலகம் பெரிதாக அறிந்திராத இந்தியா-பாகிஸ்தான் போர் பற்றிய கதை.

இது கடலுக்கு அடியில் நடைபெற்ற போர் என்பதால் மூடி மறைக்கப்பட்டு விட்டதோ?

இந்தியாவின் விமானம் தாங்கிப் போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தின் செயல்திறனை நினைத்து பயப்படுகிறது பாகிஸ்தான் கடற்படை.

ஒரு சூழ்நிலையில் இந்தியாவை தாக்க முற்படுகிறது. இதனையறிந்த உளவுத்துறை இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்திய தலைமையகத்தில் உள்ள ஓம் பூரி மற்றும் நாசருக்கு தகவல் தெரிவிக்கின்றனர்.

எனவே, கேப்டன் கே கே மேனன் தலைமையில் இந்த தாக்குதலை முறியடிக்க முனைகின்றனர்.

இதில் ராணா மற்றும் அதுல் குல்கர்னி ஆகியோர் உள்ளனர்.

பாகிஸ்தானின் கடற்கடையான காஸியை நம் இந்தியாவின் எஸ் 21 என்ற நீர் மூழ்கி கப்பல் எப்படி முறியடிக்கிறது என்பதை சொல்லியிருக்கிறார்கள்.

கதாபாத்திரங்கள்..

கோபக்கார கேப்டனாக ஜொலிக்கிறார் கே.கே. மேனன். இவரை பார்க்கும்போது நம் எதிரிகளை அழிக்க இப்படியொரு கேப்டன் நிச்சயம் வேண்டும் என்று நினைக்க தோன்றும்.

இவருக்கு நேர் எதிரானவர். நிதானமானவர் ராணா. தான் ஒரு மாஸ் நாயகன் என்பதை எல்லாம் மறந்து, இந்தியாவின் நிஜ வீரராக பிரதிபலிக்கிறார்.

ஒரு கடற்படையில் நிறைய பேருக்கு, விதவிதமான எண்ணங்கள் இருக்கும். ஆனால் அவற்றை எப்படி கேப்டன் ஒருங்கிணைக்கிறார்? என்பதை தெளிவாக தன் காட்சியில் மூலம் விவரிக்கிறார் டைரக்டர் சங்கல்ப்.

கிட்டதட்ட நீர் மூழ்கி கப்பல் மற்றும் கப்பற்படை பற்றி பாடமே நடத்தியிருக்கிறார்கள்.

ஹாலிவுட்டுக்கு சவால் மட்டுமல்ல. அதில் வென்றும் இருக்கிறார்கள்.

நேர்த்தியான ஒளிப்பதிவை கடலுக்கு அடியில் நிகழ்த்தி நம்மை ஒவ்வொரு காட்சியிலும் ஒட்ட வைக்கிறார்கள்.

பாகிஸ்தான் காட்சிகளுக்கு ஒருவித பச்சை நிறத்திலும் இந்திய காட்சிகளுக்கு நீல நிறத்திலும் காட்சிகளை அமைத்திருப்பது மிகச்சிறப்பு.

கே யின் பின்னணி இசை கூடுதல் பலம். கன்னி வெடி வெடிக்குமோ? இந்திய கப்பல் அழிந்துவிடுமோ என்று ஒவ்வொரு நிமிடமும இதயம் படபட வைக்கிறார்.

காட்சிகளில் கிராபிக்ஸ் என்றாலும் அவை கிராபிக்ஸ் என்றே சொல்லமுடியாத படி காட்சிகளில் அவ்வளவு தெளிவு.

(படத்தை நிச்சயம் தியேட்டரில் பார்த்து இந்தியாவின் போருக்கு பெருமை சேர்ப்பது நலம்)

காஸி… ஹாலிவுட்டுக்கு இந்தியன் சவால்

சிங்கம் 3 சி3 விமர்சனம்

சிங்கம் 3 சி3 விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், நாகர், ராதாரவி, சூரி, க்ரிஷ், ரோபாசங்கர், தகூர்அனுப் சிங், சாம்ஸ், ராதிகா சரத்குமார், நீதுசந்திரா மற்றும் பலர்.
இயக்கம் : ஹரி
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
ஒளிப்பதிவாளர் : பிரியன்
எடிட்டிங்: விடிவிஜயன்
பி.ஆர்.ஓ.: ஜான்சன்
தயாரிப்பாளர் : ஸ்டூடீயோ கிரீன் ஞானவேல்ராஜா

கதைக்களம்….

சிங்கம் படத்தை போல இதிலும் சூர்யா ஒரு கமிஷ்னர்.

அவருக்கான புரொஜக்ட் என்னவென்றால், ஆந்திராவில் ஒரு கமிஷனர் கொல்லப்படுகிறார்.

அந்த கொலையாளியை கண்டுபிடிக்க துரை சிங்கம் புறப்படுகிறார்.

அங்குபோன பிறகுதான் ஒரு வெளிநாட்டு கும்பல் இந்தியளவில் செய்யும் நாசவேலைகள் இவருக்கு தெரிய வருகிறது.

அதனைதொடர்ந்து வழக்கம்போல் சிங்கத்தின் பாய்ச்சல் தொடர்கிறது.

C4M2MtPWYAAKj_E

கதாபாத்திரங்கள்…

படம் ஆரம்பித்து 30 நிமிடங்கள் பதுங்கும் சூர்யா அதன்பின்னர் அதிரடியாக க்ளைமாக்ஸ் வரை பாய்ந்து பாய்ந்து அடிக்கிறார்.

இவருக்கு வில்லனும் சளைத்தவர் இல்லை. இருவரும் மோதும் காட்டுப் பகுதியில் உள்ள சண்டைக் காட்சிகள் அனல் பறக்கிறது.

அதுபோல் சூர்யாவின் பன்ச் டயலாக்குகளும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.

அனுஷ்கா அவரது உயரத்திற்கு ஏற்ப, அம்சமாக வருகிறார்.

ஸ்ருதிஹாசனின் கேரக்டர் வெறுமனே இல்லாமல் ஒரு பத்திரிகையாளராக வருகிறார். ஒரு பாடலும் இவருக்கு உண்டு.

மற்ற கேரக்டர்கள் சூர்யாவின் போலீஸ் படைக்கு அதிகம் உதவுகிறது.

சிரிப்பு போலீஸ் போல சூரி, ரோபா சங்கர், சாம்ஸ் காணப்பட்டாலும் அவர்களை நிறைவாக பயன்படுத்தியுள்ளார் ஹரி.

ஒரு காட்சியில் ராதாரவியும் நாசரும் ஒன்றாக வருகிறார்கள். (நடிகர் சங்க மோதலுக்கு பிறகு வருவது ஆச்சரியம்தான்)

C3b_kDFUEAAAXlC

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.

பின்னணி இசையில் கிட்டதட்ட எல்லா கருவிகளையும் பயன்படுத்தியிருப்பார் போல. சில நேரம் காதுகள் கிழிந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது.

பிரியன் ஒளிப்பதிவில் காட்சிகள் அருமை. விடி விஜயனின் எடிட்டிங் எத்தனை கிலோ மீட்டர் வேகம் என்றே தெரியவில்லை. ஸ்பீட் பிரேக் இல்லாமல் பாய்கிறது.

C3b_kDAUoAAJNNC

இயக்குனர் பற்றிய அலசல்

படம் ஆரம்பித்து கிட்டதட்ட 30 நிமிடங்கள் சிங்கம் பதுங்கி செல்கிறது திரைக்கதை.

ஆனாலும் படத்தில் விறுவிறுப்புக்கு குறைச்சல் இல்லை.

காமெடி டயலாக்குகள் கூட பாஸ்ட்டாகவே பாய்கிறது. வழக்கம்போல இது சூர்யா-ஹரி கூட்டணியின் கமர்ஷியல் மசாலா.

உலகில் உள்ள பல நாடுகளில் மருத்துவ கழிவுகளை இந்தியாவில் கொட்டுகின்றனர். அது ஒழிக்கப்படும் வேண்டும் என்பதை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார்.

சிங்கம் 3 கர்ஜனை தொடரும்…

More Articles
Follows