தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
‘யாத்திசை’ (தென் திசையிலுள்ள நிலப்பகுதி)…பாண்டியர்களின் வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.
7ஆம் நூற்றாண்டின் பாண்டிய அரசன் அரிகேசரி. இவரது மகன் ரணதீரன் (ஷக்தி மித்ரன்).
சோழர்களுக்கு ஆதரவாக போரிட்ட எயினர்களும் தங்களது நிலத்தை இழந்து பாலை நிலத்தில் வேட்டையாடி பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
எயினர் கூட்டத்தின் தலைவனான கொதி பாண்டியர்களுடன் போரிட்டு தாங்கள் இழந்த வாழ்க்கையை மீட்க போராடுகிறான். பாண்டியனை வீழ்த்த சோழர்களின் துணையையும் நாடுகிறார்.
அரண்மனையில் தனது மகன் இளவரசனாக பிறக்க வேண்டுமென சபதமெடுக்கிறான்.
சோழர்கள் மற்றும் எயினர்கள் இணைந்து உதவி புரிய, போரை வழிநடத்தும் ரணதீரன் தலைமையிலான பாண்டிய படை வெற்றிபெறுகிறது.
சிறந்த வீரனான இரணதீர பாண்டியனை எதிர்க்கத் துணியும் கொதியின் முயற்சி வெற்றி பெற்றதா என்பதுதான் மீதிக்கதை.
கேரக்டர்கள்…
கொதியாக நடித்துள்ள சேயோன், ரணதீரனாக நடித்துள்ள சக்தி மித்ரன்.
ஷக்தி மித்ரன், சேயோன் இருவரும் படத்தின் நாயகர்கள்.. இருவரின் முறுக்கேறிய உடலும் ஆக்ரோஷமான நடிப்பும் வேற லெவல்.. நாங்கள் அறிமுக நடிகர்கள் என்று அவர்களே சொன்னாலும் நம்ப மாட்டீர்கள்..
இவர்களுடன் ராஜலட்சுமி, குரு சோமசுந்தரம், சுபத்ரா, சமர், வைதேகி அமர்நாத் உள்ளிட்டோர் படத்திற்கும் கதைக்கு பக்கபலமாக பொருந்தியுள்ளனர்.
டெக்னீஷியன்கள்…
சக்கரவர்த்தியின் பின்னணி இசை பார்க்கும் ரசிகர்களுக்கு சரித்திரகால உணர்வை ஊட்டுகிறது.
அகிலேஷ் காத்தமுத்துவின் பிரமாண்ட ஒளிப்பதிவு அட்டகாசம்.. நம்மை அப்படியே ஏழாம் நூற்றாண்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
இயக்குநர் தரணி ராசேந்திரன் சரியாக திட்டமிட்டு திரைக்கதை வடிவமைத்துள்ளார்.
7ஆம் நூற்றாண்டு வாழ்க்கை.. அப்போது பேசப்பட்ட மொழி… சடங்கு முறைகள் ஆகியவற்றை கொஞ்சம் கற்பனை கலந்து குறைந்த பட்ஜெட்டில் ரசிக்கும்படி தரமானதாக உருவாக்கி தந்துள்ளார்.
ஏழாம் நூற்றாண்டு மொழி என்பதால் கீழே ஆங்கிலமும் தமிழும் சப்டைட்டிலாக வருகிறது.. சில நேரங்களில் அந்த வரிகளை கவனிப்பதால் காட்சிகளை ரசிக்க முடியவில்லை.
இறுதியாக காட்டப்படும் போர்க்கள காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கிறது. பொதுவாக இரு பிரிவினருக்கு இடையே போர் என்றால் இரு தரப்பும் போரிடுவார்கள்.
ஆனால் இதில் எல்லா உயிர்களும் அழிவதை காட்டிலும் இரண்டு தலைவர்கள் மட்டும் போரிடலாம் என்ற வித்தியாசமான சிந்தனையை இயக்குனர் கையில் எடுத்திருப்பது புத்திசாலித்தனம்.
ஒருவேளை 1300 ஆண்டுகளுக்கு முன்பு இந்த முறை இருந்ததா என்பது அவருக்குத்தான் வெளிச்சம்.
அரசர்களின் அதிகார வேட்கை, வன்முறையும் அரசியல் வாழ்வியல் பெண்களுக்கான கோயில் இடம், தேவரடியார்களின் மனநிலை என பலவற்றை ஆராய்ந்திருக்கிறார்.
மகேந்திரன் கணேசனின் படத்தொகுப்பு.. ரஞ்சித் குமாரின் கலை.. ஓம் சிவப்ரகாஷின் சண்டைக் காட்சிகள் அத்தனையும் சிறப்பு. படத்தையும் 2 மணி நேரத்தில் முடித்துள்ளார் இநக்குநர்.
போர்க்களக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த இயக்குனர் கொஞ்சம் காதல் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.
இறுதியாக எயினர் குடி பேரரசை எதிர்த்து ‘அதிகாரம்’ பெற்றதா என்ற ஒன்லைனை பிரமாண்ட காட்சிகளுடன் படமாக்கி சரித்திர விருந்து படைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் தரணி ராசேந்திரன். உதவி இயக்குனர்கள் மட்டும் 28 பேர் என இயக்குனர் தெரிவித்து இருந்தார்.
இப்படத்தை கே.ஜே. கணேஷ் என்பவர் புதியவர்களின் திறமையை நம்பி தயாரித்துள்ளார்.
ஆக.. யாத்திசை.. சரித்திர திசை
Yaathisai movie review and rating in Tamil