வெப்பன் விமர்சனம்.. சூப்பர் ஹியூமன் சூப்பரா..?

வெப்பன் விமர்சனம்.. சூப்பர் ஹியூமன் சூப்பரா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெப்பன் விமர்சனம்.. சூப்பர் ஹியூமன் சூப்பரா..?

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படம். சத்யராஜ் சூப்பர் ஹ்யூமன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர் படம் ’வெப்பன்’..

ஸ்டோரி…

Youtuber வசந்த் ரவி தனது வித்தியாசமான படைப்புக்காக ஓர் இடத்திற்கு செல்கிறார். அங்கு ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நடக்கிறது.. இதனை அடுத்து அந்த இடத்தில் இருக்கும் இவர் மீது சந்தேகம் எழவே போலீசார் இவரை விசாரிக்கின்றனர்.

இவர் மேல் தீராத சந்தேகத்தில் இருக்கும் போலீசார் இவரை துருவித் துருவி விசாரிக்க இவர் எந்த பதிலும் சொல்லாமல் அனுப்புகிறார். இதனை எடுத்து மாஸ்க் அணிந்த ஒருவர் விசாரிக்கிறார்.

ஒரு கட்டத்தில் இவர் சூப்பர் ஹியூமன் ஒருவர் இருக்கிறார். அவரை உங்களால் அழிக்க முடியாது என்கிறார்.

மேலும் விசாரணையில் பல சம்பவங்கள் தெரிய வருகிறது.. வசந்த ரவி உண்மையில் யார்.? அவருக்கும் சூப்பர் ஹியூமனுக்கும் என்ன தொடர்பு என்பதே மீதிக்கதை.

கேரக்டர்ஸ் …

சத்யராஜ், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தன்யா ஹோப், ராஜீவ் பிள்ளை மற்றும் பலர்.

சத்யராஜ் எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் இதுவரை ஏற்காத சூப்பர் ஹியூமனை சிறப்பாக செய்து இருக்கிறார்.. இவரும் வசந்த ரவியும் மோதும் அந்த கிளைமாக்ஸ் ஃபைட் அதிர வைக்கிறது..

ஜெயிலரில் சாந்தமாக வந்து கடைசியாக மிரட்டிய வசந்த் ரவி இந்த படத்தில் ஆரம்பம் முதலே மிரட்டி இருக்கிறார்.. அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் வசந்த் ரவியின் இரட்டை வேடம் செம.. சில நேரங்களில் கத்தி ஓவர் ஆக்டிங் செய்தாலும் அந்த கேரக்டருக்கு இது தேவை தான் என்பதை உணர வைத்திருக்கிறார்.

வழக்கமாக வந்து செல்லும் நாயகியாக தான்யா ஹோப்.. அவரது தடித்த உதடுகளும் உருளைக் கண்களும் கவிதை பேசுகிறது..

மாஸ்க் போட்டு பேசும் விசாரணை அதிகாரி கொஞ்சமாவது வாயை திறந்து பேசி இருக்கலாம்.. டப்பிங் பிரச்சினை வரும் என்று நினைத்து விட்டார் என்னவோ அவர் பேசும் குரல் சுத்தமாக புரியவில்லை..

யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிஹா, கஜராஜ், சையத் சுபன், பரத்வாஜ் ரங்கன்,
வேலுபிரபாகரன், மாயா கிருஷ்ணன், ஷியாஸ் கரீம், பெனிட்டோ பிராங்க்ளின், ரகு எசக்கி, வினோதினி வைத்தியநாதன், மேக்னா சுமேஷ் இப்படியாக பல நட்சத்திரங்கள் வந்து சென்றாலும் இவர்கள் கதைக்கு ஒத்துழைத்திருக்கின்றனர்..

டெக்னீசியன்ஸ்…

ஜிப்ரான் இசையமைக்க, பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கு கோபி கிருஷ்ணா எடிட்டிங் செய்ய கலை சுபேந்தர்.. ஆக்‌ஷன் – சுதீஷ்.

மில்லியன் ஸ்டுடியோ புரொடக்‌ஷன்ஸ், எம்.எஸ். மன்சூர் வழங்கும் குகன் சென்னியப்பன் இயக்கியிருக்கிறார்..

கலை இயக்குனரும் VFX கலைஞர்களும் முழு உழைப்பை கொடுத்திருக்கின்றனர். இவர்கள் இல்லாவிட்டால் இந்த படத்தை ரசிக்க முடியாது கிளைமாக்ஸ் காட்சியில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் ரசிக்க வைக்கிறது..

பாடல்களுக்கு நிறைய இசையமைப்பாளர்கள் இருந்தாலும் பின்னணி இசைக்கு இளையராஜா யுவன் ஜிப்ரன் உள்ளிட்ட ஒரு சிலரையே சொல்லலாம்.. இதில் ஜிப்ரனின் இசை மிகப்பெரிய பலத்தை சேர்த்துள்ளது. தெறிக்கும் இசையை கொடுத்து படத்தில் திரில்லருக்கு ஏற்ப நம்மை படபடக்க வைத்திருக்கிறார்.

ஒளிப்பதிவும் பாராட்டுக்குரியது.. முக்கியமாக படத்தின் பெரும்பாலான காட்சிகள் பிளாக் அண்ட் ஒயிட்டில் படமாக்கப்பட்டு இருக்கிறது.. இது ஆங்கில படத்திற்கு நிகராக இருக்கிறது.

வித்தியாசமான இந்த சயின்ஸ் பிக்சன் படத்தை குகன் சென்னியப்பன் இயக்கியிருக்கிறார்.. இடைவேளைக்கு முன்பு வரை கதை எதை நோக்கி நகர்கிறது என்ற குழப்பத்தில் நாம் இருந்தாலும் இடைவேளைக்குப் பிறகு முக்கியமாக சத்யராஜ் வந்த பிறகு கதையின் வேகம் சூடு பிடிக்கிறது கிளைமாக்ஸ் வரை அது நீடிக்கிறது.

சத்யராஜுக்கும் வசந்த ரவிக்கும் என்ன தொடர்பு என்பதும் மாஸ்க் மனிதனின் உண்மையான முகம் என்ன என்ற காட்சிகள் அதிர வைக்கிறது.

அதிலும் சூப்பர் ஹியூமன் கதையை சுதந்திரப் போராட்ட காலத்தில் தொடங்கி ஹிட்லர் நேதாஜி வரை கொண்டு சென்று கதையாக விவரித்து இருப்பது குகன் சென்னியப்பனின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது..

ஆனால் ஒரு திரைக்கதையை வடிவமைக்கு போது பாமர மக்களுக்கும் புரியும் வகையில் கொடுத்திருந்தால் இந்த படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். டெக்னிக்கிலாக படம் வலுவாக இருந்த போதிலும் திரைக்கதையில் கொஞ்சம் வலு சேர்த்து இருக்கலாம்.

அதற்கு அழகான படங்களுடன் விளக்கமும் கொடுத்து படமாக்கி இருப்பது இந்த ‘வெப்பன்’ படத்திற்கு புகழ் சேர்க்கிறது..

Weapon Tamil movie review

காழ் விமர்சனம்..; வீட்டை கட்டிப்பார்.!?

காழ் விமர்சனம்..; வீட்டை கட்டிப்பார்.!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காழ் விமர்சனம்.. வீட்டை கட்டிப்பார்.!?

ஸ்டோரி…

ஆஸ்திரேலியாவில் தன் மனைவி மிமி லியோனார்டுடன் வசிக்கிறார் யுகேந்திரன் வாசுதேவன்.. இந்த தம்பதிகளுக்கு எப்படியாவது சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதுதான் பெருக்கனவு. இதனால் இவர்கள் லோன் எடுக்க மிகுந்த சிரமப்படுகின்றனர்.. ஒருவனை நம்பி இவர்கள் இந்த விஷயத்தில் ஏமாற்றம் அடைகின்றனர்..

இப்படியாக இவர்கள் வாழ்க்கை ஒரு பக்கம் சென்று கொண்டு இருக்கையில் அடுத்த பக்கம்…

நித்யா பாலசுப்பிரமணியனைக் காதலிக்கும் சித்தார்த் அன்பரசுவுக்கு குடியுரிமை (பிஆர்) பெற வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்படுகிறது.. பெறாவிட்டால் இந்த நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்ற சூழ்நிலையில் தன் சொந்த நாட்டில் இருக்கும் வீட்டை விற்க முயற்சிகள் எடுக்கிறார்.. அது என்னவானது.?

இவர்களின் வாழ்க்கை என்னவானது? கனவு நிறைவேறியதா? என்பதுதான் மீதிக்கதை.

கேரக்டர்ஸ் & டெக்னீசியன்ஸ்…

நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் யுகேந்திரனை பார்க்க முடிகிறது.. அவரது நிதான நடிப்பும் உடல் மொழியும் ரசிக்க வைக்கிறது… நாயகி மிமி கருப்பழகி அவரது இலங்கை தமிழ் ரசிக்க வைக்கிறது.

சித்தார்த் அன்பரசு – வித்யா பாலசுப்ரமணியம் ஜோடி நடிப்பிலும் அழகிலும் கவனிக்க வைக்கிறது..

அஸ்வின் விஸ்வநாதனும் தன் நடிப்பில் ஈர்க்கிறார். ஆனால் படம் முழுவதும் நிறைய பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.. கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.

முழுக்க முழுக்க ஆஸ்திரேலிய நாட்டில் தமிழர்களை வைத்து தமிழ் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் மோகன்ராஜ் விஜே.. மேலும் இலங்கைத் தமிழர்களையும் அவர்கள் மொழியிலே பேசவிட்டு அழகு பார்த்திருக்கிறார்.

எலி வலையாக இருந்தாலும் சொந்த வலையாக இருக்க வேண்டும் என்பது பழமொழி.. அதுபோல குடிசை வீட்டில் வசித்தாலும் சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்பதுதான் ஒவ்வொருவரின் கனவாகும்..

ஹெல்வின் கே எஸ் மற்றும் சஞ்சய் அரக்கலின் இசை வசந்த் கங்காதரனின் ஒளிப்பதிவும் ஓகே ரகம் மட்டுமே..

வீட்டை கட்டிப்பார் கல்யாணத்தை பண்ணிப்பார் அப்பொழுதுதான் கஷ்டம் புரியும் என்ன முன்னோர்கள் சொல்லியிருப்பார்கள்.. அதுபோல ஒரு வீடு கட்டுவதற்கு உலகில் எந்த மூளை பகுதியாக இருந்தாலும் வீடு கட்டுவது எளிதானது அல்ல.. அதிலும் கடன் பெற்று வீட்டை கட்டுவது எளிதான காரியம் அல்ல.

நிறைய காட்சிகளில் லைவ் ரெக்கார்டிங் செய்திருப்பது தெரிகிறது.. சில காட்சிகளில் மட்டும் டப்பிங்..? மொத்தம் 5 – 10 நபருக்குள் படத்தின் முழு படத்தையும் முடித்து இருக்கிறார்.. ஒரு சில காட்சிகளில் மட்டும் கூட்டம் கூட்டமாக நண்பர்கள் உறவினர்களை காட்டி இருக்கிறார்கள்..

லோன் ஏஜெண்டுகள் புரோக்கர்கள் இவர்களை நம்பி வாழ்க்கையை தொலைத்தவர்களுக்கு விழிப்புணர்வு படமாக இந்த படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் மோகன்ராஜ் விஜே.

Kaazh movie review

தண்டுபாளையம் விமர்சனம்..- உதவி கேட்டால் உஷார்.!

தண்டுபாளையம் விமர்சனம்..- உதவி கேட்டால் உஷார்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தண்டுபாளையம் விமர்சனம்..- உதவி கேட்டால் உஷார்.!

டைகர் வெங்கட், சுமா ரங்கநாத், பூஜா காந்தி, சோனியா அகர்வால், வனிதா விஜயகுமார், முமைத்கான், பிர்லா போஸ், சூப்பர் குட் சுப்ரமணி நடிப்பில் உருவான ‘தண்டுபாளையம்’..

டைகர் வெங்கட் கதை திரைக்கதை வசனம் பாடல் எழுதி தயாரித்து இருப்பதோடு, கே டி நாயக் என்பவருடன் இணைந்து இயக்கி இருக்கிறார்..

ஒன்லைன்…

தெருவில் போகும்போது வீடுகளை நோட்டமிட்டு வீட்டிற்கு வந்து தண்ணி கேட்பது போல கேட்டு திடீரென வீட்டுக்குள் நுழைந்து பெண்களை பலாத்காரம் செய்து நகை பணத்தை கொள்ளை அடிப்பது தான் கதை..

கன்னட மொழியில் 3 கோடி பட்ஜெட்டில் உருவாகி 2012 ஆண்டு வெளியான ‘தண்டுபால்யா’ படம் 42+ கோடி வசூல் செய்தது.. இரண்டு பாகங்களாக வெளியாகி வெற்றி பெற்றன. கன்னடத்தில் பூஜா காந்தி ஹீரோயினாக நடித்திருந்தார்.

ஸ்டோரி…

100+ கொலைகளுக்கு மேல் செய்த ‘தண்டுபாளையம்’ கும்பல் சம்பவத்தை வைத்து இந்த படம் உருவாகியுள்ளது..

வாழ வழி இல்லை என்று வேலை கேட்பது.. கையில் இருக்கும் கைக்குழந்தையை அழ வைத்து பால் கேட்பது… உதவி கேட்பது.. உணவு தண்ணீர் கேட்பது.. என வீட்டுக்குள் நுழைந்து பெண்களை பலாத்காரம் செய்து கொலை கொள்ளை அடித்து கொடூரமாக பதற வைக்கும் பின்னணி கொண்ட கும்பலை பிடிக்க போலீஸ் டைகர் வெங்கட் வருகிறார்.

அவர் இந்த கொடூர கொலை கும்பலை பிடித்தாரா? இறுதியில் என்ன ஆனது.? என்பதுதான் படத்தின் கதை.

கேரக்டர்ஸ்….

கொடூரப் பெண்களாக சுமா ரங்கநாத், பூஜா காந்தி ஆகியோர் நடிப்பில் மிரள வைத்திருக்கின்றனர்.. இவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் கழுத்தை அறுத்து கொலை செய்யும் கொடூர காரிகளாக சோனியாவும் வனிதாவும் மாறி இருப்பது ஆச்சரியம்தான்.. இருவரும் குடிப்பது , சுருட்டு பிடிப்பது என வித்தியாசமான வேடத்தில்.. நடிப்பில் குறையில்லை.

இவர்களுடன் டைகர் வெங்கட்டும் மிரட்டி இருக்கிறார்.. சில இடங்களில் ஓவர் ஆக்டிங் கொடுத்திருக்கிறார்..

டெக்னீசியன்ஸ்…

பலாத்காரம் மற்றும் கொடூரக் கொலைகளை செய்யும் கொள்ளைக்கார கும்பலை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது..

கன்னடத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதை தமிழில் இன்னும் கொஞ்சம் பிரம்மாண்டம் கொடுத்திருக்கலாம்.

சோனியா அகர்வால் மற்றும் வனிதா விஜயகுமார் இரண்டு மிகப்பெரிய நட்சத்திரங்கள் இருந்தும் படத்தின் தரம் குறைவாகவே தெரிகிறது.

ஜித்தின் கே ரோஷனின் இசையில் ஒரு பாடல் ஆட்டம் போட வைக்கும்.. இந்த கொடூர படத்திற்கு பின்னணி இசை பக்க பலமாக அமைந்திருக்கிறது..

ஆக நம் வீட்டிற்கு உதவி கேட்க வரும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மிகப்பெரிய எச்சரிக்கையை பதிவு செய்திருக்கிறது இந்த தண்டுபாளையம்.

Thandupalaiyam movie review

ஹரா விமர்சனம்.. மோகன் மைக்கை பிடுங்கி துப்பாக்கி கொடுத்த விஜய் ஸ்ரீ

ஹரா விமர்சனம்.. மோகன் மைக்கை பிடுங்கி துப்பாக்கி கொடுத்த விஜய் ஸ்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹரா விமர்சனம்.. மோகன் மைக்கை பிடுங்கி துப்பாக்கி கொடுத்த விஜய் ஸ்ரீ

ஸ்டோரி..

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற இருக்கிறது.. இதற்காக போலீஸ் தரப்பில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் அமைக்கப்பட்டுள்ளது..

இந்த சூழ்நிலையில் ராம் (மோகன்) தொழுகை செய்துவிட்டு தாவூத் இப்ராஹிம் என தன் பெயரை மாற்றிக் கொண்டு வெளியே புறப்படுகிறார்.

தன் மகள் இறப்புக்கு என்ன காரணம்? அவர் தற்கொலை செய்து கொண்டாளா.? கொலை செய்யப்பட்டாரா என்ற கேள்விகளோடு புறப்பட்டு மொட்ட ராஜேந்திரனிடம் ஒரு கள்ளத்துப்பாக்கி வாங்கி கொண்டு வேட்டையாட புறப்படுகிறார் மோகன்.

மோகனால் வேலை பாதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரி ஜெயக்குமார் தனது சகாக்களுடன் இவரை துரத்துகிறார்.

இதனிடையில் மோகன் தேடுதல் வேட்டையில் மகளின் பாய் ஃப்ரெண்ட் சந்தோஷ் பிரபாகர் மற்றும் நர்ஸ் அனித்ரா மற்றும் அவரது பாய் பிரண்ட் கௌஷிக் உள்ளிட்டோர் இணைகின்றனர்.

தன் மகள் சுவாதியின் மரணத்திற்கு விடை கண்டுபிடித்தாரா மோகன்.? மகள் நிலை என்ன.? ராம் என்ற பெயரில் இருக்கும் இவர் தாவூத் இப்ராஹிம் என பெயரை மாற்றிக் கொண்டது ஏன்? அவருக்கும் இவருக்கும் என்ன தொடர்பு.? தீவிரவாத அமைப்புடன் இவருக்கு தொடர்பு இருக்கிறதா?என்பதெல்லாம் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

Mohan – Ram/Dhawood Ibrahim
Anumol – Nila
Yogibabu – Advocate
Kaushik Ram – Vamsi
Anitha Nair – Anithra
Charuhasan – Velu Nayakkar
Mottai Rajendran – Bullet Ravi
Suresh Menon – Nirav
Vanitha VijayKumar – Vijaya Bhaskar
Mime Gopi – Dhawood Ibrahim
Aadhavan – Aadhavan
Singam Puli – Puli
Deepa – Judge
Mano Bala – Professor
Santhosh Prabakaran – Dharshan
Swathi – Nimisha

14 வருடங்களுக்குப் பிறகு நடிக்க வந்தாலும் அதே எனர்ஜியுடன் கம்பைக் கொடுத்திருக்கிறார் மோகன்.. ஆக்ஷன் எமோஷன் என இரண்டிலும் பட்டையை கிளப்பி இருக்கிறார்.

தன் மகளுக்கு என்ன ஆனதோ என ஏங்கும் காட்சிகளில் தந்தை உணர்வைக் காட்டி இருக்கிறார்.. போலி மாத்திரைகளை மக்களுக்கு அடையாளம் காட்டும் போது ஒன் மேன் ஆர்மியாக உயர்ந்து நிற்கிறார்.

மோகன் ஜோடியாக அனுமோல்.. கணவன் மீது நேசம்.. மகள் மீது பாசம் கொண்ட நிலவாக நிறைந்து இருக்கிறார்..

இளம் காதலர்களாக கௌஷிக் ராம் மற்றும் அனித்ரா.. இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி.. அழகிலும் அக்ஷனிலும் செம..

மற்றொரு ஜோடியாக சந்தோஷ் மற்றும் சுவாதி.. மிகையில்லாத யதார்த்த நடிப்பில் ஜொலிக்கின்றனர்..

போலீசாக வரும் ஜெயக்குமார், இளையா சாய் தீனா, மூவரும் கம்பீரத் தோற்றத்தில் கலக்கி இருக்கின்றனர்..

பழ கருப்பையாவும் வனிதாவும் பேசிக்கொள்ளும் அரசியல் திமுக அதிமுக கட்சிகளை தாக்கும் பளிச் வசனங்கள்..

இவர்களுடன் மொட்ட ராஜேந்திரன், பழ கருப்பையா, வனிதா விஜயகுமார், சுரேஷ்மேனன், யோகி பாபு, ரயில் ரவி, ஜெயக்குமார், ராஜன், மனோ பாலா, சாம்ஸ், ஆதவன், சிங்கம் புலி, தீபா, தர்மராஜ், அர்ஜுன், அலெக்ஸ், தர்மா, அன்பு கபில், பிரபா, விக்கி மற்றும் கல்லூரி பெண்கள் என பல நட்சத்திரங்களை நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் விஜய் ஸ்ரீ.. மோகனுக்கு உதவும் முக்கிய கேரக்டரில் இவரும் வந்து செல்கிறார்..

டெக்னீசியன்ஸ்…

Director – Vijay Sri G
Music- Rashaanth Arwin
DOP Team – Prakath Munusamy Manodinakaran, Mohan Kumar, Vijay Sri G
Edit – Guna
Lyrics – Vijay Sri
Produced by – Kovai SP Mohanraj
Stunt – Vijay Sri G
PRO – Nikil Murukan

சின்ன பட்ஜெட்டில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் பிரம்மாண்டத்தை கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் எஸ் பி மோகன்ராஜ்.

14 வருடங்களுக்குப் பிறகு மோகன் என்ட்ரி என்பதால் மோகன் ரசிகர்கள் இனிமையான பாடல்களை எதிர்பார்த்து இருப்பார்கள்.. அதை இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்ப கொடுத்து இருக்கிறார் ரஷாந்த் அர்வின்..

இயக்குனர் விஜய் ஸ்ரீ எழுதிய வாடா மல்லி மற்றும் மகளே இரண்டு பாடல்களும் தியேட்டர் விட்டு வந்த பின்னும் முணுமுணுக்க வைக்கிறது..

மோகன் கையில் துப்பாக்கி இருக்கும்போது பாட்டு எதற்கு பைட்டு தானே வேண்டும் என எண்ணி அதிரடி பின்னணி இசையை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ரஷாந்த் அர்வின்.

பிரகத் முனியசாமி மனோதினகரன் ஒளிப்பதிவில் காட்சிகளில் பிரம்மாண்டம் தெரிகிறது.. முக்கியமாக பாலக்காடு ரோட்டில் படமாக்கப்பட்ட கன்டெய்னர் சண்டைக்காட்சி வேற லெவல்.. கிளைமாக்ஸ் காட்சியில் அதிரடியாக துப்பாக்கி சத்தம் காதை பிளக்கிறது ஆனால் அது கொஞ்சம் நம்பும்படியாக இல்லை..

இடைவேளை வரை விறுவிறுப்பாக பயணிக்கிறது.. அடுத்தது என்ன நடக்கும் என நம்மை சீட் நுனியில் உட்கார வைத்து விட்டார் எடிட்டர் குணா.

ஆனால் இடைவேளைக்குப் பிறகு விறுவிறுப்பு ?? முக்கியமாக தீபா, யோகி பாபு, மைம் கோபி, ஆதவன், சாருஹாசன், நீச்சல் சரளா உள்ளிட்டோரின் காட்சிகளை எடிட்டர் குணா வெட்டி இருக்கலாம்.

ஒரு 14 வயது பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வது என்றால் பெண் போலீஸ் வேண்டும் என அந்த மாணவியே கேள்வி கேட்கும் காட்சி அதிர வைக்கிறது.. அடிப்படை சட்டங்களை அனைவரும் தெரிந்து கேள்வி கேட்டால் கெட்ட போலீசுக்கு வேலை இருக்காது என்பதற்கு அந்த காட்சி ஒரு உதாரணம்.

அப்பா மகள் பாசம்.. கோவை குண்டுவெடிப்பு.. தாவூத் இப்ராஹிம் தீவிரவாத தொடர்பு.. கள்ளத் துப்பாக்கி கலாச்சாரம்.. போலி மாத்திரை வியாபாரம்.. சாமானியனின் தைரியம்… மாதவிடாய் நாட்களில் மாணவிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட அனைத்து கருத்துக்களையும் கலந்து ஒரு கமர்சியல் விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் விஜய் ஸ்ரீஜி.

ஆக ஹரா.. மோகன் கையில் இருந்த மைக்கை பிடுங்கி துப்பாக்கியை கொடுத்திருக்கிறார் விஜய் ஸ்ரீ ஜி.

Mohans Haraa movie review

அஞ்சாமை விமர்சனம் 4.25/5.. ஓர் அதிர்வை நிகழ்த்தும்.

அஞ்சாமை விமர்சனம் 4.25/5.. ஓர் அதிர்வை நிகழ்த்தும்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஞ்சாமை விமர்சனம் 4.25/5.. ஓர் அதிர்வை நிகழ்த்தும்.

2016 ஆம் ஆண்டில் நடந்த ஒரு உண்மை நிகழ்வை எடுத்து இந்த அஞ்சாமை படத்தை இயக்கியிருக்கிறார் சுப்புராமன்..

நீங்கள் நீட் தேர்வை எதிர்த்தாலும் ஆதரவு கொடுத்தாலும் நிச்சயம் இந்த படம் உங்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்..

ஸ்டோரி…

தந்தை விதார்த்தை இழந்த மகன் காவல் நிலையத்திற்கு சென்று அரசாங்கம் மீது புகார் கொடுக்க வேண்டும் என்கிறார். இதனால் போலீஸ் ரகுமான் உள்ளிட்ட அதிகாரிகள் அதிர்ச்சியாகின்றனர்.

மாவட்டத்திலேயே முதல் மாணவனாக மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வு எழுத ஜெய்ப்பூர் மாநிலத்திற்கு சென்ற போது என் தந்தை மன உளைச்சலால் இறந்து விட்டார்.

என் தந்தை மரணத்திற்கு காரணமான அரசு அதிகாரிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்.. அவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்கிறார்.

அப்படி என்னதான் நடந்தது? நீட் தேர்வினால் இந்த மாணவன் பாதிக்கப்பட்டது எப்படி? தந்தையை இழந்தது எப்படி?

மாணவனுக்கு நீதி கிடைத்ததா.? நீட்டால் பாதிக்கப்பட்ட மாணவன் என்ன செய்தான்? அரசாங்கம் & ஊழியர்கள் என்ன செய்தனர்.? என்பதெல்லாம் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

* Vidaarth – Sarkar
* Vani Bhojan – Sarasu
* Rahman – Manickam
* Krithik Mohan – Arunthavam
* Vijay Tv Ramar – Adhisayam
* Dhanya – Adhira

ஒரு நடிகன் என்பவன் ஒரே மாதிரியான வேடங்களை ஏற்காமல் படத்திற்கு படம் தன்னை வித்தியாசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நிரூபித்து வருகிறார் விதார்த். தான் கதையின் நாயகன் எனக்கு எத்தனை காட்சிகள் இருப்பது முக்கியம் அல்ல அந்த காட்சிகளில் ல் தன்னால் எப்படி ஸ்கோர் செய்ய முடியும் என நினைத்து அவர் ஒப்புக்கொண்டதற்காகவே பாராட்டலாம்.

ஒரு கலைக்கூத்தடியாக ஒரு பாசமிக்க கணவனாக பொறுப்புள்ள தந்தையாக ஒவ்வொன்றையும் உணர்ந்து நடித்திருக்கிறார்.. முக்கியமாக ரயிலில் பயணம் செய்யும் அந்த ஒரு காட்சி விதார்த் நடிப்புக்கு சான்று..

இளம் வயதிலேயே 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு அம்மாவாக நடிக்க ஒப்புக் கொண்ட நாயகி வாணி போஜனை வரவேற்கலாம்.. கணவனை இழந்த கட்டத்தில் அவர் கதறி அழும் காட்சி நம் கண்களை குளமாக்கும்..

சாமானியனுக்கு ஏதாவது பாதிப்பு வந்தால் அவன் முதலில் செல்லும் இடம் காவல் நிலையம் அதன் பின்னர் நீதிமன்றம்.. இந்த இரண்டு இடங்களிலும் ஒரு நேர்மையான அதிகாரி இருக்க மாட்டாரா என ஏங்கியவர்கள் பலருண்டு.. அப்படிப்பட்ட நேர்மையான அதிகாரியாக ரகுமான் வாழ்ந்திருக்கிறார்..

வக்கீல் ஆதரவு இருந்தாலும் இல்லை என்றாலும் தன்னால் தனக்கு நீதி பெற்றுத் தர முடியும் என்ற தன்னம்பிக்கையில் போராடும் மாணவனாக கிருத்திக் மோகன்.. முதல் படத்திலேயே முத்திரை பதித்து விட்டார் இந்த இளவயது நடிகர்.

விஜய் டிவி ராமர் மற்றும் ரேகா, தன்யா உள்ளிட்டோரும் நீதிபதியாக நடித்த நிஜ ஐஏஎஸ் அதிகாரியும் சிறப்பு.

டெக்னீசியன்ஸ்…

Written and Directed by: SP Subburaman
Cinematography: Karthick
Music: Raghav Prasad
Trailer & Background Music Score: KalaCharan
Lyrics: Arivumathi, Karthik Netha, SP Subburaman
Editor : Ramsudharsan
Art: GC Anandhan
Presented by: Dream Warrior Pictures
Production: Thiruchithram
Created & Produced: Dr. M. Thirunavukarasu MD
Costume Designer: Siva Balan
PRO : Johnson

இந்தியாவில் நீட் தகுதி தேர்வு வந்த பின் பல மாநிலங்களில் ஆதரவு இருந்தாலும் முக்கியமாக தமிழகத்தில் எதிர்ப்பு நிலைதான் இருந்து வருகிறது.

மெடிக்கல் காலேஜ் வைத்திருக்கும் ஒரு தொழிலதிபரால் அவரது வாரிசுகளையும் உறவினர்களையும் எளிதாக டாக்டர் ஆக்கிவிட முடியும்.. ஆனால் பணம் கொடுத்து படிக்க வசதி இல்லாத ஒரு ஏழை மாணவனால் நீட் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால் அவரால் மருத்துவம் ஆகிவிட முடியும்..

இந்த சூழ்நிலையில் சில நபர்கள் எதிர்த்தாலும் நீட் தேர்வில் ஏற்படும் பல பிரச்சனைகளை இந்த படம் வலியுடன் எதார்த்தமாகவும் சொல்லி இருக்கிறது..

நாம் பயணம் செய்யும் ரயிலில் கூட முதல் வகுப்பு ஏசி ரிசர்வேஷன் இத்தனை இருக்கும் போது கல்விக்கு மட்டும் ஏன் ஒரே தகுதி தேர்வு இருக்க வேண்டும் என்ற கேள்விகளை இயக்குனர் கேட்டு இருக்கிறார்.. ஐபிஎல் மேட்சுக்கு மெட்ரோ ரயில் பஸ் இலவசமாக விடும்போது நீட் தேர்வு எழுத வெளி மாநிலத்திற்கு செல்லும் மாணவர்களுக்கு ஏன் ஒரு இலவச ரயிலை விடக்கூடாது எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

முக்கியமாக ஒரு கருத்தை அவர் சொல்லி இருக்கலாம்.. மாணவர்களுக்கு தகுதி தேர்வு இருக்கும்போது அரசியல்வாதிகளுக்கும் தகுதி தேர்வு வைத்திருக்கலாம் என்ற கேள்வியை கூட அவர் எழுப்பி இருக்கலாம் இயக்குனர் சுப்புராமன்.

ராகவ் பிரசாத் இசையில் பாடல்கள் தனியாக இல்லாமல் படத்துடன் பயணிப்பது சிறப்பு.. பின்னணி இசையில் நீட் எழுதும் மாணவர்களின் வலியை கூட சொல்லி இருக்கிறார் இசையமைப்பாளர்..

கார்த்திக் ஒளிப்பதிவில் கிராமத்து அழகு.. பால் குடிக்கும் கன்று.. வடநாட்டு ரயில்கள் ஜெய்ப்பூர் மக்கள்.. கோர்ட் காட்சிகள் என அனைத்தும் அழகு..

கலை இயக்குனர் ஆனந்தன் கை வண்ணத்தில் உருவான கோர்ட் படத்திற்கு கூடுதல் பலம்.. ஒரு காட்சியில் மாணவர்கள் திரண்டு வரும்போது இது மைதானம் அல்ல கோர்ட்டை வெளியில் வைத்துக் கொள்ளலாம் என சொல்லும் வசனம் ரசிக்க வைக்கிறது.

அரசு வக்கீலும் ரகுமானும் கோர்ட்டில் வாதாடும் காட்சியில் நீங்கள் மெய்மறந்து கைதட்டி ரசிப்பீர்கள்.. நீண்ட நாட்களுக்குப் பிறகு கோர்ட் காட்சியை அதிரவிட்டிருக்கிறார் இயக்குனர் சுப்பு ராமன்..

கிளைமாக்ஸ் கட்சியில் மட்டும் ரசிகன் கொஞ்சம் ஏமாற்றம் அடைவான்.. சென்சாரில் ஓகே சொன்ன பிறகும் இயக்குனர் அதை மாற்ற என்ன காரணமோ தெரியவில்லை.?

படத்தின் முதல் காட்சியில் அரசாங்கத்திற்கு எதிராக புகார் அளிக்க வேண்டும் என மாணவன் சொல்லும்போது நாம் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போகிறோம்.. அதற்கு அடுத்தடுத்து நகரும் காட்சிகள் அடடா நிச்சயம் அரசு அதிகாரிகளையும் கேள்வி கேட்க வேண்டும் என ஒவ்வொரு சாமானியன் மனதிலும் இந்த அஞ்சாமை ஒரு அதிர்வை நிகழ்த்தும்.

Anjaamai movie review

தி அக்காலி விமர்சனம்.; என்னதான் சொல்றீங்க.??

தி அக்காலி விமர்சனம்.; என்னதான் சொல்றீங்க.??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தி அக்காலி விமர்சனம்.; என்னதான் சொல்றீங்க.??

ஸ்டோரி…

சில ஆண்டுகளுக்கு முன் போதைப்பொருள் கடத்தல் கும்பலை பற்றி விசாரணை நடத்துகிறார் போலீஸ் ஜெயக்குமார். அதை தற்போது நடப்பு ஆண்டில் ஜெயக்குமாரிடம் பழைய கதையை கேட்டு அறிகிறார் மற்றொரு போலீஸ் அதிகாரி.

பாழடைந்த கல்லறையில் போதைப் பொருள்கள் கடத்தி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை அறிகிறார்.. அது பற்றிய விசாரணையில் ஜெயக்குமார் இறங்கிய போது தான் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் அவருக்கு தெரிய வருகிறது.

அதாவது சாத்தான்களை வழிபடும் சில நபர்கள் அங்கு நரபலி கொடுத்து பல பூஜைகளை செய்திருப்பதை அறிகிறார்.

சாத்தான்களுக்காக நரபலி கொடுத்து அந்த கும்பல் யார்? நோக்கம் என்ன.? அவர்களை கண்டுபிடித்தாரா? என்பதுதான் மீதிக்கதை.

(இப்படி ஈசியாக இந்த கதையை நாம் சொல்லி இருந்தாலும் படத்தில் எதுவுமே புரியாத மனநிலையிலே வந்தோம். பிறகு இயக்குனரிடம் கதை கேட்டு தெரிந்து கொண்டோம் என்பது குறிப்பிடத்தக்கது)

கேரக்டர்ஸ்…

காவல்துறை அதிகாரியாக ஜெய்குமார், கிறிஸ்துவ மத போதகராக நாசர், காவல்துறை உயர் அதிகாரியாக தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் தங்கள் அனுபவ நடிப்பில் ஜொலிக்கின்றனர்.

அதிலும் ஜெயக்குமார் கதைநாயகனாக படம் முழுவதும் ஆளுமை இருக்கிறது. அவரது குரலில் தான் படத்தின் கதை ஓட்டம் நகர்கிறது. ஜெயிச்சிட்ட ஜெயக்குமாரா..

ஸ்வயம் சித்தா, வினோத் கிஷன், வினோதினி, அர்ஜய், சேகர், யாமினி, தாரணி, பரத் உள்ளிட்ட நடிகர்களும் கதை ஓட்டத்துடன் பயணிக்கின்றனர்.

பேய் பிடித்த தாரணி, பிளாக் மேஜிக் யாமினி, சாத்தான் பாதிக்கப்பட்ட அர்ஜய், பிளாக் வேர்ல்ட் வினோத் கிஷன் ஆகியோரின் நடிப்பும் படத்திற்கு பலம்.

டெக்னீசியன்ஸ்…

ஒளிப்பதிவாளர் கிரி முர்பி.. நாம் மற்ற படங்களில் பார்த்து சலிக்காத லொகேஷனை தேர்ந்தெடுப்பது பாராட்டுக்குரியது.

ஆனால் அதே சமயம் ஒரு கதை என்பது ஒரு ரசிகனோடு கனெக்ட் ஆக வேண்டும்.. இந்த படம் எந்த விதத்திலும் கனெக்ட் ஆகவில்லை என்பது வருத்தமே.. முக்கியமாக படத்தின் ஆரம்ப முதல் இறுதி வரை இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்று குழப்ப நிலையே நீடிக்கிறது.

காஸ்ட்யூம் டிசைனர் பூர்ணிமா பணிகளில் பெரிய மெனக்கடல் தெரிகிறது.. சாத்தான்களுக்கு அவர் கொடுத்த வடிவமும் காஸ்டீமும் வித்தியாசமான கற்பனை.

கலை இயக்குனர் தோட்டா தரணியின் கலை வண்ணம் படம் முழுவதும் பிரம்மாண்டம்.. சாத்தான்கள் வாழும் இடம் அது பற்றிய குகை கல்லறை உள்ளிட்டு அனைத்தும் பிரம்மாண்டம்..

படத்தொகுப்பாளர் இனியவன் பாண்டியன்.. இவருக்கு மட்டும் கதை புரிந்தால் போதும் என நினைத்து விட்டாரோ? நமக்கு புரியாத படியே எடிட்டிங் செய்து விட்டார்..

தி அக்காலி இந்த படத்தின் தலைப்பே யாருக்கும் புரியவில்லை.. அப்படி இருக்கையில் இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் முகமது ஆசிப் ஹமீத். நரபலி என்ற கதைக்களத்தை எடுத்து அத்துடன் சாத்தான் மனிதர்கள் வாழும் இடம் என தனக்குத் தெரிந்த அனைத்தையும் இதில் திணித்து காட்சிகளை சொல்ல முற்பட்டு இருக்கிறார்..

The Akkaali movie review

More Articles
Follows