விஷமக்காரன் விமர்சனம்.; ரெண்டு லட்டு தின்ன ஆசையா.?

விஷமக்காரன் விமர்சனம்.; ரெண்டு லட்டு தின்ன ஆசையா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷமக்காரன் விமர்சனம் : வி, அனிகா விக்ரமன் , சைத்ரா ரெட்டி நடிப்பில் வெளியான விஷமக்காரன் விமர்சனம் இதோ

ஹனி பிரேம் ஒர்க்ஸ் தயாரிப்பில் விஷமக்காரன் படத்தை இயக்கி நடித்திருக்கிறார் அறிமுக நடிகர் வி (விஜய் குப்புசாமி).

அனிகா விக்ரமன் மற்றும் சைத்ரா ரெட்டி ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்துள்ளனர். இவர்கள் மூவர்தான் படம்.

ஒன்லைன்…

திருமணம் ஆன நாயகன் தன் காதல் மனைவியுடன் வாழும்போது தன் முன்னாள் காதலியை சந்திக்கிறார்.. அதன்பின் ஹீரோ என்ன செய்தார்.?

கதைக்களம்…

நாயகன் வி, Manipulation என்ற கவுன்சிலிங்க் கொடுப்பவராக பணிபுரிகிறார்.

படம் தயாரிக்க ‘ஹனிபிலிக்ஸ்’ சாப்ட்வேர்..; வி இயக்கத்தில் ரெடியான ‘விஷமக்காரன்’

கவுன்சிலிங்கிற்கு வரும் நாயகி அனிகா மீது காதல் கொள்ள இருவரும் ஒரு கட்டத்தில் காதலிக்கின்றனர்.

தனது தனைவி அனிகாவிடம் , தான் சைத்ரா என்ற பெண்ணை சில வருடத்திற்கு முன் காதலித்ததாகவும், அப்போதே பிரேக் அப் ஆகிவிட்டதாகவும் தெரிவிக்கிறார்.

ஆனால் அந்த காதல் தன்னை பெரிதாக பாதித்ததாகவும் தற்போது அவள் இடத்தில் நீ மாற்றாக வந்துவிட்டாய் என்கிறார் வி.

அனிகாவிற்கும் வி’க்கும் திருமணம் ஆகிறது. 2 வருடங்களுக்கு பிறகு மனைவி அருகில் இருக்கும் போதே தன் முன்னாள் காதலியை (இதுவரை திருமணம் ஆகாத) காதலியை சந்திக்கிறார் வி.

அதன்பின் இவர்கள் மூவருக்குள் நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்களே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

தொடக்கம் முதல் இறுதி வரை வி, அனிகா மற்றும் சைத்ரா மூவரும் பயணிக்கும் காட்சிகள் மட்டுமே இடம் பெறுகிறது.

பேசுங்க… பேசுங்க… பேசிக்கிட்டே இருங்க… சாரி.. சாரி… டாக்கிங்… டாக்கி்ங்.. ஓவர் டாக்கிங் என்ற ரேஞ்சுக்கு இங்கீலீஷ் படம் பார்ப்பது போல உள்ளது..

மூவர் மட்டுமே பேசி … பேசி… பேசி… காட்சிகளை நகர்த்தி விட்டனர்.

கதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது..; ‘விஷமக்காரன்’ விஜய்யின் வில்லத்தன பேச்சு

அதில் காமெடி… காம நெடி… ஆகியவற்றை சேர்த்திருக்கலாம். ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்க்கு அவளோ பஞ்சமா தெரியல.

க்ளைமாக்ஸ் காட்சியில் வி வைத்த ட்விஸ்ட் வேற லெவல்… அட இப்படி கூட யோசிக்க முடியுமா வீ.? கடைசி 15 நிமிடங்களை கூடுதலாகவே ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் வி.

ஸ்மார்ட் ஹீரோ… 2 ப்யூட்டிபுல் ஹீரோயின்ஸ் என ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாகவே இருக்கு. இதில் அனிகா அழகு செம அள்ளு.

பாடல் & பின்னனி இசை ஓகே ரகம் தான்.

ரசிகனுக்கு ஏற்றவாறு இன்னமும் கொடுத்திருந்தால் விஷமக்காரன் வில்லங்கமானவானாக தெரிந்திருப்பான். வி என்பவர்தான் படத்தையும் இயக்கியிருக்கிறார்.

ஆக இந்த விஷமக்காரனுக்கு.. கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா.?

Vishamakaran Movie Review

விஷமக்காரன் போல் சமீபத்தில் வெளியான படங்களின் விமர்சனங்களை நம் தளத்தில் கீழே பாருங்கள்

சேத்துமான் விமர்சனம்.; ருசி தேடிய மிருதனின் உணவு அரசியல்

சேத்துமான் விமர்சனம்.; ருசி தேடிய மிருதனின் உணவு அரசியல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சேத்துமான் விமர்சனம் : மாணிக்கம்,அஸ்வின், பிரசன்னா பாலசந்திரன் நடிப்பில் வெளியான சேத்துமான் விமர்சனம் இதோ

எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘வறுகறி’ சிறுகதைதான் ‘சேத்துமான்’ என்ற சினிமாவாக மாறியுள்ளது.

பா.ரஞ்சித் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவான படம் ‘சேத்துமான்’.

வரும் மே 27-ம் தேதி முதல் சோனி லைவ் ஓடிடி தளத்தில் ரிலீசாகிறது.

ஒன்லைன்..

சேத்துமான் என்றால் சேத்தில் விளையாடி திரியும் பன்னி(மான்).. அதை ருசிக்காக கூறு போட வந்த மனிதர்களால் வந்த வினை.

கதைக்களம்…

நாமக்கல் அருகே உள்ள கிராமம். அதில் கூடைப் பின்னி சந்தையில் விற்று பணம் சம்பாதிக்கும் பூச்சியப்பன் என்ற ஒரு தாத்தா. (நிஜத்தில் மாணிக்கம்)

தனது பேரன் குமரேசன் (அஸ்வின்) உடன் வாழ்ந்து வருகிறார். மாட்டுக்கறியை சாப்பிட்டதால் ஆதிக்க சாதிவெறியர்களால் கொல்லப்பட்ட தாய், தந்தையை இழந்த சிறுவன் இவன்..

பேரனை நன்றாக படிக்க வைத்து உயர்ந்த அதிகாரியாக உருவாக்கும் லட்சியம் கொண்டவர்.

அந்த ஊர் பெரிய பண்ணையாரான வெள்ளையனுக்கு (பிரசன்னா பாலசந்திரன்) உதவியாகவும் இருக்கிறார். அவர் சொல்வதை எல்லாம் செய்கிறார்.

ஒரு நாள் பண்ணையாரும் அவரது குழுவும் இணைந்து சேத்துமான் கறி (பன்றிக்கறி) சாப்பிட ஆசைப்பட்டு ரங்கனிடம் வாங்குகின்றனர்.

அதை சுவையாக சமைத்து கொடுக்கிறார் பூச்சியப்பன். அப்போது உருவாகும் பிரச்சினையால் அசம்பாவிதம் நடக்கிறது.

அது என்ன.? ஏன்.? எப்படி.? என்பதே கதை.

கேரக்டர்கள்..

தாத்தா கதாபாத்திரத்தில் மாணிக்கம். இவரை தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மாணிக்கம் என்றும் கூட சொல்லலாம்.

கேமரா ரோலிங்.. கட்.. ஆக்‌ஷன் ஆகியவை மறந்து யதார்த்தமாக நடித்திருக்கிறார்.

பேரனாக அஸ்வின். தாத்தா மீது பாசத்திலும் ஆட்டுக்குட்டி உடன் குறும்புத்தனத்திலும் சூப்பர் டா தம்பி.

கோவக்கார பண்ணையாராக நடித்திருக்கும் ‘நக்கலைட்ஸ்’ யூடியூப் சேனல் புகழ் பிரசன்னா பாலசந்திரன் கச்சிதம். மனைவியுடனும் மக்களிடையும் காட்டும் கிராமத்து கெத்தில் அசத்தியிருக்கிறார்.

பூச்சியப்பா, ரங்கன் ஆகிய இருவரும் ஒரே சமூகம் என்றாலும் அவரின் பணிவு இவரின் அடங்காத திமிர் என இரண்டும் பேசப்படும்.

வெள்ளையன் மனைவியாக சாவித்ரி அசத்தல். அவர் புருஷனை வஞ்சிக் கொண்டே பேசும் பேச்சை ரசிச்சிட்டே இருக்கலாம்.. சபாஷ் சாவித்ரி்.

சுப்ரமணியாக சுருளி, ரங்கனாக குமார், ஆசிரியர் ஆகியோரின் நடிப்பை பாராட்டலாம்.

டெக்னீஷியன்கள்…

சமகாலத்திலும் சாதி பாகுபாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் நம்மில் கடத்தியிருக்கிறார் இயக்குநர் தமிழ்.

அதுபோல இந்திய நாட்டின் 14வது குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆனாலும் நாட்டில் எந்த வித முன்னேற்றமும் இல்லை..

அரசுப் பள்ளியில் மாணவர்கள் குறைவாக இருப்பதால் பள்ளிகள் மூடும் நிலை… கூடை செய்யும் நேர்மையாளன் பூச்சியப்பனிடம் பண்ணையாரின் அதிகார திமிர்… பன்றி கறிக்கு ஆசைப்பட்டாலும் பன்னி மேய்பவனிடம் பாய்ச்சல் என கூறு மேல் கூறு போட்டுள்ளார் இயக்குனர்.

பிரதீப் காளிராஜாவின் ஒளிப்பதிவு கூடுதல் பலம்.. ஆனால் பன்றி கறி வாங்குவதற்கு முன் கூறு போட ஆள் சேர்க்கும் இரவு காட்சி செம சொதப்பல். 10 நிமிடம் ஒரே ஆங்கிளில் தூரமாக வைத்து ஆர்ட்டிஸ்ட் முகம் ; பாவனைகள் கூட தெரியல.. கேமராவை ஆட்டி ஆட்டி எடுத்துள்ளனர்.

மற்றபடி க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி யதார்த்தமானது.

பிந்து மாலனியின் பின்னணி இசையும், பாடல்களும் ரசிக்க வைக்கின்றன.

ஆக.. இந்த ‘சேத்துமான்’ விருந்தை தமிழன் ருசிப்பான்

Seththumaan movie review

சேத்துமான் போல் சமீபத்தில் வெளியான படங்களின் விமர்சனங்களை நம் தளத்தில் கீழே பாருங்கள்

போத்தனூர் தபால் நிலையம் விமர்சனம் 4/5.; சார்.. நல்ல படம் பார்க்க சொல்லி போஸ்ட் வந்திருக்கு.!

போத்தனூர் தபால் நிலையம் விமர்சனம் 4/5.; சார்.. நல்ல படம் பார்க்க சொல்லி போஸ்ட் வந்திருக்கு.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

போத்தனூர் தபால் நிலையம் விமர்சனம் : பிரவீன் , அஞ்சலி ராவ், வெங்கட் சுந்தர், ஜெகன் கிரிஷ் (ஜே.கே), சீதாராமன், தீனா அங்கமுத்து மற்றும் சம்பத் குமார் நடிப்பில் வெளியான போத்தனூர் தபால் நிலையம் விமர்சனம் இதோ

இயக்குனர்-நடிகர் பிரவீன் இந்தியாவின் முதல் மோஷன் கேப்சர் தொழில்நுட்பம் சார்ந்த திரைப்படமான ரஜினியின் ‘கோச்சடையான்’ படத்தில் தொழில்நுட்ப இயக்குநராக பணிபுரிந்தவர்.

ஒன்லைன்..

போத்தனூர் தபால் நிலையம் – இந்தியாவின் முதல் தபால் அலுவலகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். ‘தபால் நிலைய கொள்ளை’ என்பது தான் படத்தின் கதைக்கரு.

ஏற்கனவே மூன்று பாகங்களாக உருவாகும் என அறிவிக்கப்பட்ட இப்படத்தின் முதல் பாகம் மட்டும் தற்போது ரிலீசாகிறது.

படத்தின் நாயகன் பிரவீன் படத்தை இயக்கியிருக்கிறார். இவரின் தந்தை அஞ்சலகத்தில் காசாளராக இருந்தவர். அப்பாவின் அனுபவத்தை வைத்து போத்தனூர் தபால் நிலையம் உருவானது.

Passion Studios தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் G ஜெயராம் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இந்தியாவின் பர்ஸ்ட் போஸ்ட் ஆபிஸை வைத்து உருவான ‘போத்தனூர் தபால் நிலையம்’

பிரவீன் மற்றும் அஞ்சலி ராவ் முக்கிய கேரக்டர்களில் நடிக்க, வெங்கட் சுந்தர், ஜெகன் கிரிஷ் (ஜே.கே), சீதாராமன், தீனா அங்கமுத்து மற்றும் சம்பத் குமார் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

மே 27, 2022 முதல் ஆஹா தமிழ் செயலியில் திரையிடப்படுகிறது போத்தனூர் தபால் நிலையம்.

கதைக்களம்…

1970-1980-1990 களில் நடக்கிறது கதை.

பிரவீன் & அஞ்சலி ராவ் & வெங்கட் சுந்தர் ஆகிய மூவரும் சிறுவயது முதலே ஸ்கூல் ப்ரெண்ட்ஸ். அங்கு படிக்கும் ஒரு பணக்கார மாணவனை பார்த்து நாமும் வளர்ந்து பெரியவனாகி பெரிய பணக்காரன் ஆக ஆசைப்படுகின்றனர்.

எனவே இளைஞனாகி கம்ப்யூட்டர் பிசினஸ் செய்ய ஆசைப்படுகிறார் பிரவீன். ஆனால் பேங்க் லோன் கிடைக்காமல் செய்கிறார் கை சூப்பும் மேனேஜர்.

பிரவீன் அப்பா போத்தனூர் தபால் நிலையத்தில் ஒரு நேர்மையான போஸ்ட் மாஸ்டர். ஒரு நாள் சனிக்கிழமையன்று… போஸ்ட் ஆபீசில் மக்களின் சேமிப்பு பணத்தை (ரூ. 7 லட்சத்து 40 ஆயிரம்) பேங்கில் டெபாசிட் செய்ய தாமதம் ஆகிவிட்டதால் வீட்டுற்கு கொண்டு வருகிறார்.

வரும் வழியில் அந்த பணத்தை ஒருவன் திட்டமிட்டு கொள்ளையடிக்கிறான். இது வெளி உலகுக்கு தெரிந்தால் அப்பா ஜெயிலுக்கு போக நேரிடும்.

எனவே ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை-க்குள் கொள்ளையனை தேடி அலைகின்றனர் பிரவின் டீம். இறுதியில் என்னாச்சு? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

படத்தின் இயக்குனர் பிரவீனே நாயகன் என்பதாலும் இவரே கலை இயக்குனர் என்பதாலும் படத்தை செதுக்கியிருக்கிறார். யதார்த்த நடிகராய் பளிச்சிடுகிறார்.

அஞ்சலி குண்டு கண்களாலே பேசி அசத்திவிட்டார்.

நாயகி அஞ்சலி ராவ் தவிர அனைவரும் புதுமுகங்களே. படத்தின் அனைத்து கேரக்டர்களும் மனதில் நிற்கும். அப்படி வேலை வாங்கியிருக்கிறார். இவர்கள் கோவையை சேர்ந்த தியேட்டர் ஆர்டிஸ்ட்ஸ்.

டெக்னீஷியன்ஸ்…

படத்தின் சவுண்ட் இன்ஜினியர் பற்றி சொல்லியாக வேண்டும். 1980-90 களுக்கு ஏற்ப அழகாக காட்சிகளை உணர்ந்து ரசித்து சவுண்ட் கொடுத்துள்ளார் அருண்காந்த்.

தென்மா இசையமைக்க சுகுமாரன் சுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இருவரும் (இரண்டுமே) படத்திற்கு உயிரூட்டி உள்ளன. காட்சிகளை அழகாக்கி ரசிக்க வைக்கின்றன.

அந்த காலத்தில் ரேடியோ வைத்துக் கொள்ள கூட லைசென்ஸ் தேவை என்பதையும் சொல்லி உள்ளனர். அதேபோல் Post office saving scheme பற்றி விளக்கியுள்ளனர்.

படத்தின் முதல் பாதி மெதுவாக நார்மல் போஸ்ட் போல நகர்ந்தாலும் இடைவேளைக்கு பிறகு TELEGRAM SPEEDல் படம் செல்கிறது. பின்னிட்டீங்க பிரவீன்.

படத்தில் ஏகப்பட்ட ட்விஸ்ட் இருப்பதால் ரசிகர்கள் படத்தை பார்த்து ரசித்துக் கொள்ளவும்.

ஆக போத்தனூர் தபால் நிலையம்…. சார்.. நல்ல படம் பார்க்க சொல்லி போஸ்ட் வந்திருக்கு.!

Pothanur Thabal Nilayam movie review

போத்தனூர் தபால் நிலையம் போல் சமீபத்தில் வெளியான படங்களின் விமர்சனங்களை நம் தளத்தில் கீழே பாருங்கள்

நெஞ்சுக்கு நீதி விமர்சனம் 3.5/5.. உஷாரான உதயநிதி

நெஞ்சுக்கு நீதி விமர்சனம் 3.5/5.. உஷாரான உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெஞ்சுக்கு நீதி விமர்சனம் : உதயநிதி , தன்யா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஆரி அர்ஜுனன் நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி விமர்சனம் இதோ

ஒன்லைன்…

ஒரு குழந்தை பிறந்த இடம், பிறந்த இனம், பிறந்த பாலினம் ஆகியவற்றை வைத்து அந்த குழந்தையை சமூகத்தில் வேறுபடுத்த கூடாது. நாம் எல்லாரும் ஒன்றே என சொல்கிறது இந்திய சட்டம் ஆர்ட்டிகிள் 15.

இந்த சட்டத்தை உதயநிதி நடிப்பில் திரைப்படமாக்கியுள்ளார் இயக்குனர் அருண்ராஜா காமராஜ். இது ஹிந்தியில் சூப்பர் ஹிட்டடித்த படத்தின் தமிழ் ரீமேக். தயாரித்தவர் பாலிவுட் பிரபலம் போனி கபூர்.

கதைக்களம்..

வெளிநாட்டில் படித்து வளர்ந்து இந்தியாவில் காவல்துறை அதிகாரியாக வருகிறார் உதயநிதி.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியில் ASP ஏ.எஸ்.பியாகப் பொறுப்பேற்கிறார் விஜயராகவன் (உதயநிதி).

இவருக்கு இந்தியாவில் இன்னமும் சாதிய வேறுபாடுகள் அதிர்ச்சியை அளிக்கிறது.

தந்தை தந்த தலைப்பு.. மகன் நடித்த படம்..; ‘நெஞ்சுக்கு நீதி’-க்கு ஸ்டாலின் பாராட்டு

அந்த ஊரில் 3 தலித் சிறுமிகள் மாயமாகின்றனர். ஒருவர் எங்கே சென்றார்? என்பதே தெரியவில்லை. மற்ற 2 சிறுமிகள் மர்மமான முறையில் மரணம் அடைகின்றனர். அது கௌரவ கொலை என இவரின் உள்ளூர் அதிகாரிகள் சொல்ல சந்தேகம் அடையும் உதயநிதி தானே களமிறங்கி விசாரிக்கிறார்.

இதன் நடுவில் அரசியல்வாதிகளும் ஜாதி கட்சித் தலைவர்களும் உதயநிதிக்கு எதிராக செயல்படுகின்றனர்.

உதயநிதியின் உயர் அதிகாரிகளும் மற்ற சிறு அதிகாரிகளும் விசாரணையை முடுக்கிவிடாமல் ஏதோ ஒரு தவறை மறைக்கின்றனர்.

உண்மையான குற்றவாளியை ஏ.எஸ்.பி. விஜயராகவன் எப்படி கண்டுபிடித்தார்? என்ன செய்தார்? குற்றவாளி யார்? தண்டனை பெற்றுக் கொடுத்தாரா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

உதயநிதியின் 12வது படம் இது. எங்கும் மிகைப்படுத்தாத நடிப்பை கொடுத்துள்ளார். இப்போது தீவிர அரசியலில் இருப்பதால் மாஸ் காட்சிகளை வைத்திருக்கலாம்.

ஆனால் உஷாராக உண்மையான போலீஸாகவே உணர்ந்து நடித்துள்ளார். ஆனால் ஒரு காட்சியில் கூட புன்னகை இல்லையே உதயநிதி.? என்னாச்சு எம்எல்ஏ.? ஆனால் அரசியல் வசனங்களை தன் கட்சிக்காக அடிக்கடி அள்ளி விட்டுள்ளார் ப்ரோ.

படத்தில் ஒரு காட்சியில்… போலீஸ் ஒரு ஊருக்குள் வருகிறபோது மரியாதை நிமித்தமாக எம்எல்ஏ.வை சந்திக்க வேண்டும் என்கிறது. ஆனால் அதை மறுக்கிறார் உதயநிதி. இதை நிஜவாழ்க்கையில் கடைப்பிடிப்பாரா எம்எல்ஏ?

தாத்தா தந்த தலைப்பு ‘நெஞ்சுக்கு நீதி’-யை அப்பாவிடம் கேட்டபோது….; உண்மையை உடைத்த உதயநிதி

தன்யாவுக்கு பெரிதாக வேலையில்லை. ஆனால் அதே சமயம் உதயநிதியை வழிநடத்தும் நல்ல தோழியாக வழக்கமான நாயகியாக வரவில்லை என்பது சிறப்பு.

பிக்பாஸ் தாத்தா சுரேஷ் சக்கரவர்த்தி இன்ஸ்பெக்டராக ஒரு ஜாதி வெறியராக வெளுத்துகட்டிவிட்டார். அதே போல எஸ்ஐ. இளவரசும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.

தலித் மக்களின் குரலாக ஒலிக்கும் கேரக்டரில் ஆரி அர்ஜுனன். சின்ன வேடம்தான் என்றாலும் அவரின் கம்பீரம் ஆரி அசத்தல் என்கிறது.

ஷிவானி ராஜசேகரின் கேரக்டர் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

ராட்சசன் சரவணன், ரமேஷ் திலக், மயில்சாமி ஆகியோர் கச்சிதம். படத்தின் கதையோட்டத்திற்கு உதவியுள்ளது.

டெக்னீஷியன்கள்..

திபு நைனன் தாமஸ் இசையில் பின்னணி இசை சிறப்பு. கதையுடன் ஒன்றியுள்ளது . அதுபோல யுகபாரதியின் செவக்காட்டு, எங்கே நீதி எனும் இரு பாடல்களும் அருமையான வரிகளில் ஒலிக்கின்றன.

தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவும் ரூபனின் படத்தொகுப்பும் அருமை. ஆனால் ஹிந்தி படத்தை ஒப்பீடுகையில் கொஞ்சம் குறைவுதான்.

தமிழரசன் பச்சமுத்துவின் வசனங்கள் ப்ளஸ்…

கோயில் முதல் சுடுகாடு வரை தலித்தை வேறுப்படுத்தும் சிலர் காமம் என்று வரும்போது மட்டும் தலித் பெண்களை தொடுவது ஏன்? என்பதையும் காட்சிப்படுத்தியுள்ளனர்.

எல்லாருமே சமம்னா யாரு தான் ராஜாவா இருக்குறது…?” “எல்லாரும் சமம்னு நினைக்கிறவன்தான் ராஜாவா இருக்கணும்..

இயக்கம் பற்றிய அலசல்…

எல்லோரும் சமம் என சொன்னீர்கள்.. ஆனால் இந்த காட்சியை கவனித்தீரா?

உதயநிதியை ஷிவானி மற்றும் தலித் ஆண்கள் சந்திக்கின்றனர். அப்போது எல்லாம் ஆண்கள் சேரில் அமர்ந்துள்ளனர். ஆனால் ஷிவானி மட்டும் நிற்கிறார்? தயாரிப்பாளருக்கு சேர் போட வசதியில்லையா? இல்லை இயக்குனருக்கு மனமில்லையா,?

தமிழகத்தில் நாம் அடிக்கடி பார்க்கும் நிறைய உண்மைச் சம்பவங்களை படத்தில் இணைத்துள்ளது இயக்குனரின் புத்திசாலித்தனம்.

ஒரு பட்டியலின பெண் சத்துணவு சமைத்தார் என்பதற்காக அந்த உணவை உதாசீனப்படுத்துவது.. நீட் தேர்வுக்காக தற்கொலை செய்த அனிதாவை டாக்டராக்கியது மற்றும் காவல் துறையில் கரைப்படிந்த சாதிய பாகுபாடு என அனைத்தையும் அலசியுள்ளார் அருண்ராஜா.

மலம் அள்ளும் மனிதர்களின் துயரம், இந்தித் திணிப்பு, இருமொழிக் கொள்கை, அம்பேத்கர் என்ன சாதி சங்கத் தலைவரா? என நிறைய சம்பவங்களை அலசியிருப்பது சிறப்பு.

ஆக.. நெஞ்சுக்கு நீதி.. சாதிக்கு எதிரான சவுக்கடி

Nenjuku Needhi Movie Review

நெஞ்சுக்கு நீதி விமர்சனம் போல் சமீபத்தில் வெளியான படங்களின் விமர்சனங்களை நம் தளத்தில் கீழே பாருங்கள்

டேக் டைவர்ஷன் விமர்சனம்..; திசை மாறிய காதல் பயணம்

டேக் டைவர்ஷன் விமர்சனம்..; திசை மாறிய காதல் பயணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

ஒரு பிரச்சினையில் சிக்கிய நாயகன்.. மற்றொரு பிரச்சினையில் சிக்கிய நாயகி.. இருவரும் வேறொரு பிரச்சினையால் இணைந்து சென்னையில் இருந்து பாண்டிச்சேரி செல்ல அவர்களின் வாழ்க்கை எப்படி டேக் டைவர்ஷன் ஆகிறது என்பதே இந்த படம்.

சிவானி பிலிம்ஸ் சார்பில் சுபா செந்தில் மற்றும் நண்பர்களுடன் இணைந்து தயாரித்திருக்கும் டேக் டைவர்ஷன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சிவானி செந்தில்.

இதில் சிவக்குமார், பாடினி குமார், காயத்ரி, ஜான் விஜய், ராம்ஸ், விஜய்டிவி புகழ் ஜார்ஜ் விஜய், பாலா ஜெ சந்திரன், சீனிவாசன் அருணாச்சலம் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை – ஜோஸ் பிராங்க்ளின், ஒளிப்பதிவு – ஈஸ்வரன் தங்கவேல், படத்தொகுப்பு – விது ஜீவா, நடனம்-சாண்டி,பாடல்கள்-மோகன் ராஜன், பிஆர்ஒ-சக்தி சரவணன்.

கதைக்களம்…

நாயகன் சிவகுமாருக்கு 5 வருடங்களாக பெண் தேடும் படலம் நடக்கிறது. பெண்ணோட கண் பெருசா இருக்கு.. மூக்கு ஷார்ப்பா இருக்கு என பல பெண்களை தவிர்த்து வருகிறார்.

இதனால் நாயகனுக்கு திருமணம் ஆகாமலே வருடங்கள் ஓடுகிறது. ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் முதலில் பார்த்த கண் பெருசா இருக்கிற காயத்ரி திருமணம் செய்ய சம்மதிக்கிறார்.

பாண்டிச்சேரியில் இவரின் திருமண நிச்சயத்தார்த்தம் நடைபெறவுள்ள நிலையில் புறப்பட ரெடியாகிறார் சிவகுமார்.

அப்போது இவரின் ஆபிஸ் மனேஜர் ஜான் விஜய் ஒரு டாஸ்க் கொடுக்கிறார். ஒரு பெண்ணை கூட்டி வந்து தன் ஆசைக்கு இணங்க ஒப்படைக்க சொல்கிறார். அப்படி செய்யவில்லை என்றால் வேலை இருக்காது என மிரட்டுகிறார்.

ஆனால் அந்த பெண்ணோ (பாடினி குமார்) தாதா ராம்ஸிடம் மாட்டிக் கொண்டிருக்கிறார். 8 லட்சம் கொடுத்தால் அந்த பெண்ணை விட்டு விடுகிறேன் என்கிறார் ராம்ஸ்.

ராம்சை ஏமாற்றி பாடினியை காரில் ஏற்றி சிவக்குமார் பாண்டிச்சேரி பயணிக்கிறார்.

அதே வழியில் பாடினியை காதலிக்கும் மற்றொரு இளைஞனும் சிவகுமாரின் வருங்கால மனைவியான காயத்ரியும் காரில் அழைத்துச் செல்லும் சூழல் ஏற்படுகிறது.

பின்னர் என்ன ஆனது? காயத்ரி? பாடினி? யாரை திருமணம் செய்தார் சிவகுமார்? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

கதையின் நாயகனாக சிவகுமார் நடித்துள்ளார். இவரின் காட்சிகள் 3 வருடங்களாக காட்டப்பட்டுள்ளது. அதற்காக கொஞ்சம் ஹேர் ஸ்டைல் தாடியை மாற்றி இருக்கலாம். எப்போது ஒரே போலவே இருக்கிறார். நடிப்பில் பெரிதாக ஸ்கோப் இல்லை. இன்னும் நல்ல முயற்சி வேண்டும்.

காரில் செல்லும்போதே சின்ன சின்ன பாவனைகளில் நம்மை ஈர்க்கிறார் பாடினிகுமார். ஒரே உடையில் வந்தாலும் ரசிக்கலாம். காரின் பயணத்தின் போதே அடிக்கடி மேக்அப் மாறுகிறது. திடீர் திடீரென கண் மை, லிப்ஸ்டிக் பூசிக் கொண்டாரோ என்னவோ…

நாயகி காயத்ரியின் கண்களும் பெரிதாக உள்ளது. இதனால் நாயகியை தேடலில் கொஞ்சம் குழப்பம் ஏற்படுகிறது.

வில்லனாக ஜான் விஜய், 70 கிட்ஸ் காதல் தாதாவாக ராம்ஸ் நடித்துள்ளனர்.

இவர்களுடன் விஜய் டிவி புகழ் ஜார்ஜ் விஜய், பாலா ஜெ சந்திரன், சீனிவாசன் அருணாச்சலம் மற்றவர்களும் படத்தில் உண்டு.

டெக்னிஷியன்கள்…

ஜோஸ் பிராங்க்ளின் இசையில் இரண்டு பாடல்கள் ஓகே. தேவா பாடிய மஸ்தானா மாஸ் மைனரு… சாண்டி நடனம் அமைத்துள்ள யாரும் எனக்கில்லை ஏனடி? என்ற பாடலும் பார்க்கலாம்.

ஈஸ்வரன் தங்கவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். சென்னை டூ பாண்டிச்சேரி பயணம் பெரிதாக ஈர்க்கவில்லை. படத்தொகுப்பு – விது ஜீவா,

வித்தியாசமாக ஒரு நாளில் நடக்கும் கதையாக படத்தை இயக்கியுள்ளார் சிவானி செந்தில். ஆனால் இன்னும் மெனக்கெட்டிருந்தால் இந்த டேக் டைவெர்ஷன் பரபரப்பான படமாக இருந்திருக்கும்.

ஆக.. இந்த டேக் டைவேர்ஷன்.. திசை மாறிய காதல் பயணம் எனலாம்.

Take diversion movie review

முத்துநகர் படுகொலை (PearlCity Massacre) விமர்சனம்..; அராஜக அரசியல்.. நீதி கிடைக்குமா?

முத்துநகர் படுகொலை (PearlCity Massacre) விமர்சனம்..; அராஜக அரசியல்.. நீதி கிடைக்குமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

ஒரு தனி நபருக்காக வளைந்துக் கொடுத்த அரசு.. தங்கள் வாழ்வாதாரத்திற்காக அரசை எதிர்த்த மக்கள்… இந்த உண்மைச் சம்பவத்தை தூத்துக்குடி மக்களின் கண்ணீர் பதிவுடன் படமாக்கியுள்ளார் இயக்குனர் எம்.எஸ்.ராஜ். இவரே தான் மெரினா புரட்சி என்ற படத்தை இயக்கியிருந்தார்.

நாச்சியாள் பிலிம்ஸ் மற்றும் தருவை டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. மே 20ஆம் தேதி TamilsOTT & Vimeo ல் ரிலீசாகிறது.

கதைக்களம்..

உலகத்தை உலுக்கிய ஒரு கொடூர நிகழ்வாக கடந்த 2018 மே-22 ஆம் தேதி தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய அறவழிப் போராட்ட 100வது நாளில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 அப்பாவிகள் குறிவைத்து கொல்லப்பட்டனர்.

இந்த தொழிற்சாலையில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான டன் காப்பர் பிரித்தெடுக்கப்பட்டு வந்தது. அரசு கொடுத்த அளவை மீறி அளவுக்கு அதிகமான அளவில் காப்பர் எடுக்கப்பட்டு வந்தது.

இதன் கழிவுகளால், அத்தொழிற்சாலை அமைந்திருக்கும் இடங்களை சுற்றி தரிசு காடுகளே உருவானது. மண்ணை வறட்சியாக மாற்றியது.

மேலும் பலர் கேன்சர் நோயால் தாக்கப்பட்டு இறந்தனர். இதனையடுத்து மக்கள் கிட்டத்தட்ட 15 வருடங்களாக தங்கள் போராட்டங்களை அவ்வப்போது எடுத்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுப்போம் என அரசுகள் மாறி மாறி இவர்களை ஏமாற்றியுள்ளது.

எனவேதான் 2018 பிப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டத்தை மக்கள் தொடங்கியுள்ளனர்.

அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி தன் கைவசம் இருந்த காவல்துறையை வைத்து மக்களை தடுத்தி நிறுத்தினர்.

ஆனால் 100வது நாளில் தான் இந்த போராட்டம் கலவரமாக மாறியது.

பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை முன்னெடுத்தது காவல்துறை. இதன்விளைவாக 13 பேரை கொன்றது தமிழக அரசு.

படம் பற்றிய அலசல்…

இந்த படத்தை பார்த்தால் நிச்சயம் நீங்கள் கண்ணீர் விடாமல் இருக்க மாட்டீர்கள். பாதிக்கப்பட்ட மனிதர்களின் வலியை அப்படியே தன் கேமராவில் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் ராஜ்.

வேதாந்தா நீ வேணான்டா…… காப்பர் உனக்கு.. கேன்சர் எனக்கா?……. என்ற வாசங்களும் கோஷங்களும் நம் மனதை கரைப்பதாக இருக்கும்.

குஜராத் கோவா மாநிலங்களில் இந்த காப்பர் ஆலைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன்பின்னரே வேதாந்தா குழு தமிழகத்தை குறிவைத்துள்ளது.

முதன்முறையாக 1990களில் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது இந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதியளிக்கப்பட்டது. அதன்பின்னர் கருணாநிதி ஆட்சி வந்தபோதும் இது தொடர்ந்தது.

மேலும் மத்தியில் ஆண்ட காங்கிரஸ் மற்றும் பாஜக அரசுகளுக்கு கோடிக்கணக்கில் இந்த வேதாந்தா குழு நன்கொடை வழங்கியுள்ளது என்பதை ஆணித்தரமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

பணத்தை வாங்கிக் கொண்டு செயல்படும் அரசும் அரசு அதிகாரிகளும் இருக்கும் வரை நிச்சயம் மக்களாட்சி என்பதே இருக்காது.

மக்கள் வரிப்பணத்தை பெற்றுக் கொண்டு மக்களை அடிமையாக ஆட்டிப் படைக்கும் அரசுகள் இருக்கும் வரை நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க முடியாது. நச்சுத்தன்மை கொண்ட இதுபோன்ற தொழிற்சாலைகளின் காற்றையே சுவாசிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

2018 மே 22ல் நடந்த துப்பாக்கி சூட்டுக்கு யார் பொறுப்பு? என்பதை நீதிமன்றம் விசாரித்து அந்த குற்றவாளிகளை மரண வலியோடு தண்டிக்க வேண்டும். இனி இதுபோன்ற சம்பவங்கள் எங்கும் நடைபெற கூடாது. மக்களை கொன்று தங்கள் வெறியை தீர்த்துக் கொண்ட மிருகங்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

துப்பாக்கி சூட்டில் 13 பேர் மட்டுமே இறந்துவிட்டதாக கணக்கு காட்டப்பட்டாலும் 15 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் துப்பாக்கி சூடு நடந்த மறுநாளும் (மே 23) ஒருவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அவரையும் அடித்தே கொன்றுள்ளது போலீஸ்.

துப்பாக்கி சூடுக்கு என்று ஒரு வரைமுறை உள்ளது. முதலில் போராடும் மக்களை எச்சரிக்க வேண்டும். பின்னர் வானத்தை நோக்கி சுட வேண்டும்.. அப்படியும் கூட்டம் கலையவில்லை என்றால் போராளிகளை இடுப்புக்கு கீழே மட்டுமே சுட வேண்டும். மேலும் நவீன ரக துப்பாக்கிகளை பயன்படுத்தக் கூடாது என்கிறது சட்டம்… இவைஎல்லாம் இங்கு மீறப்பட்டுள்ளது.

கணக்கில் காட்டப்பட்ட அந்த 13 பேருமே நெஞ்சு.. தலை.. ஆகிய இடங்களில் மட்டுமே குண்டு துளைக்கப்பட்டு இறந்துள்ளனர் என்பதுதான் வேதனை.

இறந்தவர்களின் குடும்பத்திற்கு லட்சங்களில் பணம் கொடுக்கப்பட்டால் மட்டும் போதுமா? இந்த உண்மைச் சம்பவத்தின் குற்றவாளிகளை யார் தண்டிப்பது.?

மேலும் இந்த உயிர்களை பலிவாங்கிய வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலை இன்னும் முழுமையாக மூடப்படவில்லை. லண்டனில் வசிக்கும் அந்த தனி நபருக்காக நம் மக்களை மத்திய மாநில அரசுகள் வஞ்சிப்பது ஏனோ..?

இந்த வரலாற்று சம்பவத்தை அப்படியே கண்முன் காட்டியுள்ளார் இயக்குனர் ராஜ். அவரால் இந்த படத்தை தியேட்டரில் வெளியிட முடியாமல் தற்போது ஓடிடி தளத்தில் வெளியிடுகிறார்.

மக்கள் இந்த படத்தை பார்த்து உண்மை நிலையை அறிய வேண்டும். மக்கள் நினைத்தால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தற்போது இலங்கையில் நடக்கும் பொருளாதார போர் இதற்கு ஒரு சான்றாகும்.

தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்தால் மட்டுமே அந்த அரசு அதிகாரிகளுக்கு மரணத்தின் வலி தெரியும். அதுவரை அதிகார திமிரிலேயே வலம் வருவார்கள்.

ஆக.. இந்த முத்துநகர் படுகொலை.. அராஜக அரசியல் அறிவோம்.

PearlCity Massacre movie review

More Articles
Follows