மக்கள் பிரதிநிதிகளுக்கு மரண அடி… உறியடி2 விமர்சனம் 4/5

மக்கள் பிரதிநிதிகளுக்கு மரண அடி… உறியடி2 விமர்சனம் 4/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: விஜய்குமார், விஸ்மயா மற்றும் பலர்.
இசை – கோவிந்த் வசந்தா
ஒளிப்பதிவு – பிரவீன் குமார்
எடிட்டர் – லீனா.எம்
இயக்கம் – விஜயகுமார்
தயாரிப்பு – நடிகர் சூர்யா (2டி எண்டர்டெயின்மெண்ட்)
பிஆர்ஓ – யுவராஜ்

கதைக்களம்….

போபால் விஷவாயு கசிவு சம்பவத்தை யாராலும் மறக்க முடியாது. மேலும் தமிழ்நாட்டில் நடக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கும் இந்த கதை பொருந்தும்.

இங்கிலாந்து நாட்டில் அனுமதி மறுக்கப்படும் ரசாயன தொழிற்சாலையை, (பூச்சி கொல்லி மருந்து) தமிழ்நாட்டின் செங்கதிர்மலையில் திறக்கிறார் தொழிலதிபர் ராஜ்பிரகாஷ்.

அந்த தொழிற்சாலையில் வேலைக்கு சேர்கிறார்கள் கெமிக்கல் என்ஜினியரிங் படித்த நாயகன் லெனின் மற்றும் அவரது 2 நண்பர்கள்.

அங்கு ஹீரோ விஜயகுமாருக்கு அந்தத் தொழிற்சாலையில் டாக்டராக இருக்கும் நாயகி விஷ்மாயாவுக்கும் காதல் வளர்கிறது.

ஒரு கட்டத்தில் தொழிற்சாலைக்கு ஆடிட்டிங் வருகிறார்கள். அவர்களுக்கு பணம் கொடுத்து சரி செய்துவிடுகிறார் முதலாளி.

ஒருமுறை தொழிற்சாலையில் இருந்து வெளியாகும் விஷவாயுவினால் அங்குள்ள மக்கள் செத்து மடிகின்றனர்.
எனவே அந்த கம்பெனிக்கு எதிராக களமிறங்குகிறார் நாயகன்
.
ஆனால் இவரை காரணம் காட்டி தொழிற்சாலை முதலாளியும் ஜாதி அரசியல் கட்சித் தலைவரும் போட்டுத்தள்ள பார்க்கின்றனர். அதன் பின்னர் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நடிப்பு இயக்கம் என வெரைட்டி காட்டியிருக்கிறார் விஜய்குமார். ரொமான்ஸ் காட்சியில் இன்னும் மெச்சூர்ட்டி தேவை.

உறியடி முதல் படத்தில் இருந்த உற்சாகம் இதில் சற்று போதவில்லை இவருக்கு.

ஆனால் மக்களுக்காக போராடும் காட்சியில் உற்சாகப்படுத்துகிறார். தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்த பின்னர் காட்சிகள் சூடு பிடிக்கிறது.

டாக்டராக வரும் நாயகி காதல் காட்சியிலும் மக்களுக்காக போராடும் காட்சியிலும் ரசிக்க வைக்கிறார்.

நண்பர்களாக வருபவர்களும் அரசியல்வாதியாக வரும் நபர்களும் மற்ற ஊழியர்களும் நம்மை கவர்கின்றனர்.

uriyadi 2 stills

தொழில்நுட்ப கலைஞர்கள்…

96 பட இசையமைப்பாளர் கோவிந்த வசந்தா தான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மக்கள் மலையாக மரணமடைந்து கிடக்கும் காட்சியில் இவரின் இசை நம் கண்களை கலங்க வைக்கும்.

“அக்னி குஞ்சொன்று ….” , “வா வாபெணணே ….” , “உரிமை காக்க மனமே எழு … ” உள்ளிட்ட பாடல்களும் வரிகளும் கூடுதல் சிறப்பு ! தத்தகிட.. தத்தகிட.. என்ற வரிகள் கொண்ட தீம் மியூசிக் சூப்பர்.

பிரவீன் குமாரின் ஒளிப்பதிவில் கிராமத்து காட்சிகள் அத்தனையும் அழகு. மக்களின் பரிதவிப்பு விஷவாயு பாதிப்பு என அழகாக படமாக்கியிருக்கிறார்.

ஒரு காட்சியில் ஒரு குழந்தையை விஷவாயுவில் இருந்து காப்பாற்ற அதன் தாய் பீரோவில் ஒளித்து வைப்பது நம்மை ஏதோ செய்யும்.

கலை இயக்குனர் ஏழுமலை ஆதிகேசவன் நிறையவே மெனக்கெட்டு இருக்கிறார்.

உறியடி முதல் படத்தை இயக்கி நடித்த விஜயகுமார் தான் இப்படத்தையும் இயக்கி நடித்திருக்கிறார். ஆனால் அந்த படத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.

படத்தின் வசனங்கள் சாட்டையடி. ஆனால் காட்சிகள் மிக மெதுவாக இருப்பதால் கொஞ்சம் போரடிக்கலாம்.

ஆனால் யதார்த்த உண்மைகளை பார்க்கும்போது நாமும் இப்படிதான் அமைதியாக இருக்க வேண்டியுள்ளது என்பதையும் அழகாக சொல்லியிருக்கிறார்.

மக்களை அடகு வைக்கும் அரசியல்வாதிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் பாடத்தை சொல்லும் படம் இது.

க்ளைமாக்ஸ் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு நல்ல அரசு உருவாக வேண்டும் என விரும்பும் நபர்கள் இப்படத்தை பார்க்கலாம்.

உறியடி2… மக்கள் பிரதிநிதிகளுக்கு மரண அடி

திருந்தாத ஜென்மங்கள்… குடிமகன் விமர்சனம்

திருந்தாத ஜென்மங்கள்… குடிமகன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: ஜெய்குமார், ஜெனிபர், பாவா செல்லத்துரை, பாலா சிங், கிருஷ்ண மூர்த்தி, மாஸ்டர் ஆகாஷ் மற்றும் பலர்.
இசை – எஸ். எம். பிரசாந்த்
ஒளிப்பதிவு – அருள்செல்வன்
எடிட்டர் – செல்வராஜ்
இயக்கம் – சத்தீஸ்வரன்
தயாரிப்பு – ஜீவமலர் சத்தீஸ்வரன்
பிஆர்ஓ – குமரேசன்

கதைக்களம்….

எந்த பிரச்சினையும் இல்லாத ஒரு அழகான ஊர். தன் மனைவி, தன் மகன், தன் ஊர் மக்கள் என எல்லாருடன் அன்பாக வாழ்ந்து வருகிறார் நாயகன் ஜெயகுமார்.

தன் அக்கா மகன் மீது அளவற்ற பாசம் வைத்துள்ள இவர் அவனை காலேஜ்ஜில் படிக்க வைக்க கடன் வாங்குகிறார். இதனால் வட்டியும் ஏறிக் கொண்டே போகிறது.

இந்த நிலையில் அரசியல்வாதியின் (கவுன்சிலர்) உதவியோடு ஊர் மக்களின் எதிர்ப்பையும் மீறி ஊருக்கு மத்தியில் டாஸ்மாக் கடை திறக்கப்படுகிறது.

மக்கள் எதிர்ப்பால் ஒரு மாதத்தில் கடையை அகற்றிவிடுகிறோம் என அரசியல்வாதி சுறுகிறார்.

ஆனால் அந்த கிராமத்து ஆண்கள் பலரும் மதுவுக்கு அடிமையாகி விடுகிறார்கள்.

இதனால் ஒவ்வொரு குடும்பத்திலும் பல பிரச்சினைகள் எழுகிறது. நாயகன் குடும்பத்திலும் விரிசல் ஏற்படுகிறது. மகனும் தந்தையும் மதிக்காமல் போகிறான்.

அக்கா மகன் படிப்புக்காக வாங்கின கடனை கட்ட முடியாமல் போய்விடுகிறது. அவர்களும் இவர்களை ஏமாற்றிவிடுகின்றனர்.

அப்போது எவரும் எதிர்பாராத வகையில் நாயகி ஜெனிபர் ஒரு முடிவெடுக்கிறார். அது என்ன? என்பதே படத்தின் க்ளைமாக்ஸ்.

நடித்தவர்கள் & தொழில்நுட்ப கலைஞர்கள் எப்படி..?

கந்தனாக நடித்திருக்கும் ஜெய்குமார் குடிகாரன் கேரக்டருக்கு சரியான தேர்வு என்றாலும் ஒரே முக பாவனையை அடிக்கடி கொடுக்கிறார்.

நாயகி ஜெனிபர் நல்ல தேர்வு. அழகு, அன்பு, பாசம் என என நம்மை கவர்கறிர்.

இவர்களுடன் பாவா செல்லத்துரை, பாலா சிங், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கேரக்டர்களும் கச்சிதம்.
பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை என்ற பேரில் நம்மை கொன்று விட்டார் இசையமைப்பாளர். தேவையில்லாத இடத்திலும் மெட்டு போட்டுள்ளார்.

ஒளிப்பதிவாளர் ஓகே ரகம்.

கடன் வாங்கி கொடுப்பதாலும் நம்மை சிலர் ஏமாற்றுவதாலும் ஏற்படும் பிரச்சினைகளையும் அழகாக காட்டியிருக்கின்றனர்.

ஒரு காட்சியில் ரூ. 10,000 பணத்தை தொலைத்துவிடுவார் நாயகன். அதை ஒரு பெண் கீழே இருந்து எடுப்பதையும் அவர் பார்த்துவிடுவார். ஆனால் இவர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அந்த பெண் ஒத்துக் கொள்ள மறுப்பார்.

அப்போது குடிகாரன் பேச்சை எவரும் நம்ப மாட்டார்கள். இதுதான் குடிகாரனுக்கு கிடைக்கும் மரியாதை என்பதை அழகாக சொல்லிருப்பார்கள்.

இவை அனைத்தும் இருந்தும் படம் முதுவதும் நாடகத்தன்மை இருப்பதால் முழுமையாக ரசிக்க முடியவில்லை.
படத்தின் க்ளைமாக்ஸை பார்த்து ஒரு சிலராவது திருந்தினால் அதுவே படத்தின் வெற்றி.

குடிகாரன்.. திருந்தாத ஜென்மங்கள்…

Kudimagan review

First on Net ஆச்சரியமில்லை… ஐரா விமர்சனம் 2.5/5

First on Net ஆச்சரியமில்லை… ஐரா விமர்சனம் 2.5/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: நயன்தாரா, கலையரசன், யோகி பாபு, ஜெயப்பிரகாஷ், மீரா கிருஷ்ணன் மற்றும் பலர்.
ஒளிப்பதிவு – சுதர்சன்
எடிட்டர் – கார்த்திக் ஜோகேஷ்
இசை – சுந்தர மூர்த்தி
இயக்கம் – சர்ஜுன்
தயாரிப்பு – கோட்டப்பாடி ராஜேஷ்

கதைக்களம்…

முதன்முறையாக யமுனா மற்றும் பவானி என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் நயன்தாரா.

பத்திரிகையாளர் யமுனா (நயன்தாரா) பிரபலமாக நினைத்து யூடிப் சேனல் ஒன்றை ஆரம்பிக்கிறார். இவருக்கு உதவியாக யோகிபாபு இருக்கிறார்.

இவர்கள் மக்களை ஏமாற்ற பேய் இருப்பதாக சொல்லி பல வீடியோக்களை வெளியிடுகின்றனர். ஆனால் உண்மையிலேயே பேய் வந்து நயன்தாராவை கொல்ல துடிக்கிறது.

யார் அந்த பேய்? எதற்காக நயன்தாரா கொல்ல வருகிறது. இது ஒரு புறம்.

மற்றொரு புறம் கலையரசன் நாயகன். ஒரு விபத்தில் தன் காதலியை இழக்கிறார். அதன்பின்னர் சில நபர்கள் அடுத்தடுத்து கொல்லப்படுகின்றனர். இவர்களை ஒரு மர்ம சக்தி கொல்கிறது என்பதை உணர்கிறார். அவர் யார்?

இந்த இரண்டு விஷயங்களை இணைத்து மொக்க ட்விஸ்ட் வைத்து கதையை முடிக்கிறார் பட டைரக்டர் சர்ஜுன்.

கேரக்டர்கள்…

ரொமான்டிக் ஹீரோயின், ஆக்சன் குயின், கிளாமர் டால், கோலமாவு கோகிலா என வெரைட்டி காட்டிய நயன்தாரா இதில் ஒரு படி மேல சென்று டபுள் கேரக்டர் கொடுத்துள்ளார்.

இரண்டு கேரக்டருக்கும் தன் பாடி லாங்குவேஜ்ஜில் நிறைய வித்தியாசங்களை கொடுத்துள்ளார். முக்கியமாக ராசி இல்லாத பவானி கேரக்டரில் அசத்தியிருக்கிறார்.

பிறந்த நிமிடம் முதல் ஒரு ராசியில்லாத பெண் (கதை அப்படி) எப்படியெல்லாம் கஷ்டப்படுவாள் என்பதை தன் உணர்வுகளில் அழகாக காட்டியிருக்கிறார். ஹாட்ஸ் ஆஃப் நயன்தாரா.

யோகிபாபு வழக்கம்போல ரசிக்க வைக்கிறார். காமெடி அவ்வளவாக இல்லையென்றாலும் கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.

அமுதன் கேரக்டரை இன்னும் அழகாக்கியிருக்கிறார் கலையரசன். நடிப்பில் மெர்ச்சூர்ட்டியை கொடுத்திருக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

திகிலான காட்சிகளில் நமக்கு இன்னும் திகில் கொடுத்துள்ளார் சுதர்ஷன் ஸ்ரீனிவாசன். பூனை மற்றும் வண்ணத்து பூச்சியை கூட மிரட்டலாக காட்டியுள்ளது சிறப்பு.

சுந்தரமூர்த்தி என்பவர் இசையமைத்துள்ளார். திகில் படத்திற்கு எப்படி இசை தேவையோ அதை சிறப்பாக கொடுத்துள்ளார். அதுவே மிரட்டலாக உள்ளது. மேகதூதம் பாடல் நம்மை கவர்ந்த ஒன்றாகும்.

கார்த்திக் ஜோகேஷ் எடிட்டிங்கை சிறப்பாக செய்திருக்க வேண்டும். இடைவேளைக்கு பிறகு படம் எப்போடா முடியும்? என்று நினைக்க வைக்கிறது.

வசனங்கள் சில இடங்களில் மட்டுமே நம்மை கவர்கிறது.

இயக்கம் பற்றிய அலசல்…

லட்சுமி, மா ஆகிய குறும்படங்களை இயக்கியவர் சர்ஜுன். இவையில்லாமல் எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் என்ற ஒரு படத்தையும் இயக்கியுள்ளார்.

ஒரு த்ரில்லர் கதையில் சுயநலவாதிகளால் மற்றவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை கலந்துச் சொல்ல முற்பட்டு இருக்கிறார்.

நயன்தாரா போல் ஒரு சிறந்த நடிகையை வைத்து கதை சொன்னவர், நம்பும்படியான ட்விஸ்ட் வைத்து சொல்லியிருக்கலாம். ஆனால் லிப்ட், மாடிப்படி, டைமிங் மிஸ் என எதை எதையோ சொல்லி தடுமாறியிருக்கிறார்.

ஒருவர் எதிர்பாரா விதமாக உயிரிழந்தால் தன் ஆசையை நிறைவேற்றி கொள்ள பேயாக வருவார் என்ற கான்செப்ட் ஓகே தான்.

ஆனால் தன் மரணத்திற்கு காரணமானவர்கள் இவர்கள் தான் என நினைத்து ஒரு லிப்ட் சீன் வைத்து சொன்னாரு பாருங்கள்.. அதுதான் படத்தின் மிகப்பெரிய மைனஸ்.

நயன்தாராவின் பாட்டியை எதற்காக பேய் கொல்ல வேண்டும்? என்பதற்கான காரணங்கள் தெரியவில்லை.

ஆக ஐரா… ஆச்சரியமில்லை.

அன்பும் ஆட்டுக்குட்டியும்… மானசி விமர்சனம்

அன்பும் ஆட்டுக்குட்டியும்… மானசி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்
நடிகர்கள்: நரேஷ் மாதேஸ்வர், ஹரிஷ்ஷா பேகம், தவசி, ஆதித்யா ராம், சல்மான் பரிஸ் மற்றும் பலர்.
ஒளிப்பதிவு – கண்ணன் பட்டேரி
எடிட்டர் – அச்சு விஜயன்
இசை – சிவ்ராம்
இயக்கம் – நவாஸ் சுலைமான்
தயாரிப்பு – மேத்யூ ஜோசப்

கதைக்களம்…

நாயகன் நரேஷ் மாதேஸ்வர் ஆடு மேய்ப்பவர். ஆடுகள் இவரின் உலகம் எல்லாம். தன் குழந்தை போல் அதிகளவில் பாசம் வைத்திருப்பவர். ஆடுகளுக்க ஒவ்வொரு பேர் வைத்து அதனுடன் பேசுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

ஊரை விட்டு ஒதுக்குப்புறமான இடத்தில் ஆடுகளுடன் வசிக்கிறார். இதனால் மக்களுடன் எப்படி பழக வேண்டும் என்பதை கூட தெரியாமல் வளர்கிறார்.

ஒரு நாள் ஒரு கல்லறை பார்க்கும் இவர். அதில் உள்ள எழுத்துக்களை படித்து, மானசி என்ற பெயரை தெரிந்துக் கொண்டு அந்த பெண்ணை காதலியாக நினைத்து உருகுகிறார்.

அவருடன் பேசுவதாக நினைத்து தன் வாழ்க்கையை ஓட்டுகிறார். ஒரு ஆட்டுகுட்டிக்கு கூட மானசி என்று பெயர் வைத்து கொஞ்சி விளையாடுகிறார்.

இவரின் மாமா தவசி. (கருப்பன் குசும்பன் கேரக்டர் பிரபலமானவர்). இவர்கள் ஒரு நாள் ஆடுகளை மேய்த்து வரும்போது ஒரு கார் அந்த வழியாக செல்கிறது.

அப்போது அதில் உள்ளவர்கள் மானசியை திருடி செல்கின்றனர்.

எனவே தன் ஆட்டுக்குட்டியை தேடி கம்பம் சிட்டி பகுதிக்கு செல்கிறார் நாயகன். அதன்பின்னர் என்ன ஆனது? தன் மானசியை எப்படி கண்டுபிடித்தார்? காதலி கனவில் மட்டும்தானா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள்…

நாயகன் நரேஷ் மாதேஷ்வர். ஆட்டுக்குட்டி மீது இப்படி எல்லாம் அன்பு செலுத்த முடியுமா? என ஆச்சரியப்பட வைக்கிறார். கிராமத்து இளைஞராக வெள்ளந்தியாக நடித்திருக்கிறார்.

ஆனால் ஆடு போல கத்தி கொண்டு சண்டை போட்டு முட்டுவது எல்லாம் ஓவர். அதிலும் ஆடும் உடனும் கனவு காதலி உடனும் பேசுவது போரடிக்கிறது.

மாமாவாக வரும் தவசி எப்போதும் போல கிராமத்து மனிதராக ரசிக்க வைக்கிறார்.

நாயகி ஹரிஷ்ஷா பேகத்திற்கு பெரிதாக வேலையில்லை. பாடல் காட்சிகளில் கவர்கிறார். இடையில் போலீசாக வருகிறார். ஆனால் பயந்தபடியே இருப்பது கம்பீரத்திற்கு அளகு இல்லையே.

கிராமத்து பாடல்களும் பாடல் வரிகளும் நன்றாக உள்ளன. ஒரு குத்து பாடல் கூட தாளம் போட வைக்கிறது.
ஒளிப்பதிவில் தெளிவில்லை என்பதால் படத்துடன் மனம் ஒன்றாக மறுக்கிறது.

உண்மையாக அன்பு இருந்தால் அது எந்த உயிராக இருந்தாலும் நிச்சயம் அதை நம் மனம் தேடு என்பதை அழகாக சொல்லியிருக்கிறார்.

ஆடுகளுடன் பேசுவது இல்லாத காதலியை வரவழைத்து அவருடன் பேசுவது நாயகன் ஓகே என்றாலும் ரசிகர்களுக்கு சரி வருமா?

ஆனால் ஆட்டை தேடி சென்ற பின்னும் அதன் பின் நடக்கும் நிகழ்வுகளிலும் சுவராஸ்யம் இல்லை.

ஆட்டை விற்கும் கும்பல் அதன் பின்னணியில் உள்ள வியாபாரத்தை இன்னும் மெருக்கேற்றி சொல்லியிருக்கலாம் இந்த மானசி அனைவருக்கும் பிடித்திருக்கும்.

மானசி.. அன்பும் ஆட்டுக்குட்டியும்

Manasi review rating

உச்சம் தொட்டதா..? உச்சக்கட்டம் விமர்சனம்

உச்சம் தொட்டதா..? உச்சக்கட்டம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்.. தாகூர் அனூப் சிங் – ஆதித்யா, சாய் தன்ஷிகா – ரேஷ்மி, தன்யா ஹோப் – கரிஷ்மா, கபீர் துஹான் சிங் – தர்மேந்திரா, கிஷோர், ஷ்ரத்தா தாஸ் – கிருத்திகா, பிரபாகர், வம்சி கிருஷ்ணா, ஷ்ரவன் ராகவேந்திரா
கதை மற்றும் இயக்கம் – சுனில் குமார் தேசாய்
தயாரிப்பாளர் – தேவராஜ் ஆர்
பின்னணி இசை – சஞ்ஜோய் சவுத்ரி
ஒளிப்பதிவு – ராஜன், விஷ்ணு வர்தன்
படத்தொகுப்பு – பி எஸ் கெம்பராஜூ
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

கதைக்களம்..

சிங்கம் 3 படத்தில் வில்லனாக நடித்த தாகூர் அனூப் சிங் தான் இப்படத்தின் நாயகன்.

படத்தில் 2 நாயகிகள் உள்ளனர். ஒருவர் தன்ஷிகா மற்றொருவர் தடம் பட நாயகி தன்யா ஹோப்.

தன்ஷிகாவை காதலிக்கிறார் ஹீரோ தாகூர் அனூப் சிங். இவர்கள் இருவரும் காதலர்கள். புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஒரு விடுதிக்கு செல்கின்றனர்.

அங்கு, ஒரு நபரை ஒரு கும்பல் கொலை செய்கிறது. இந்த கொலையை தன்ஷிகா வீடியோ எடுத்து விடுகிறார்.
இதனை பார்த்த அந்த கும்பல் தன்ஷிகாவை துரத்துகிறது. அவர்களிடம் இருந்து தப்பிக்க ஒரு கார் டிக்கியில் ஒளிந்து கொள்கிறார் தன்ஷிகா.

கார் டிக்கி மூடிவிடுகிறது. பின்னர் என்ன ஆனது? தன்ஷிகா என்ன ஆனார்? தன் காதலியை அனூப் சிங் காப்பாற்றினாரா? கொலையாளிகள் யார்? கொலைக்கு என்ன காரணம்.? என்பதே படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஹீரோ தாகூர் அனூப் சிங் செம உடற்கட்டோடு வருகிறார். ஆக்சனில் அசத்தல். அதகளம் செய்து மிரட்டியிருக்கிறார். இவரது உடற்கட்டுக்கு ரொமான்ஸ் வராது போல. முகத்தை இறுக்கமாகவே வைத்துள்ளார்.

ரெளடி கும்பலிடம் சிக்கி தவிக்கும் காட்சிகளிலும் ஆக்சனிலும் ஸ்கோர் செய்துள்ளார் தன்ஷிகா.

தடம் படத்தில் தடம் பதித்த இரண்டாவது நாயகி தன்யா ஹோப் இதில் பைட்டில் நம்மை கவர்கிறார்.

‘வேதாளம்’ புகழ் கபீர் துஹான் சிங் வில்லனாக நடித்துள்ளார். தன் கண்களிலேயே மிரட்டியுள்ளார்.

‘ஆடுகளம்’ கிஷோர், ஷ்ரவன், ராகவேந்திரா, வம்சி கிருஷ்ணா, ஷ்ரத்தா தாஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு சஞ்ஜோய் சவுத்ரி இசை அமைத்திருக்கிறார்.

பின்னணி இசை ஓகே. பெரிதாக மிரட்டவில்லை. த்ரில்லர் படத்திற்கு இது போதாது.

பி.ராஜன், விஷ்ணுவர்த்தன் ஒளிப்பதிவில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.

த்ரில்லர் கதையாக இருந்தாலும் நமக்கு அப்படி ஒரு அனுபவம் கிடைக்கவில்லை.

Uchakattam review rating

கவிதை பேசும் கண்ணழகி; எம்பிரான் விமர்சனம் 3/5

கவிதை பேசும் கண்ணழகி; எம்பிரான் விமர்சனம் 3/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்..

நாயகன் ரெஜித் மேனன் ஒரு டாக்டர். இவரின் அம்மா கல்யாணி நடராஜன். தன் உண்டு தன் கடமை உண்டு என இருப்பவர் இவர். இவரது கனவில் இவருக்கு தெரியாத ஒரு பெண் அடிக்கடி வருகிறாள். ஏதோ தனக்கு நடக்க போகிறது? என குழப்பம் அடைகிறார்.

தன் மகனுக்கு ஒரு நல்ல வரன் கிடைக்க அம்மா கோயில் கோயிலாக செல்கிறார்.

நாயகி ராதிகா ப்ரீத்தி தனது தாத்தா சந்திரமெளலியோடு வசிக்கிறார்.

ஹீரோயினுக்கு ஹீரோ மீது லவ்வோ லவ். நீ போகும் இடமெல்லாம் நானே வருவேன் என்பது போல பாலோ செய்கிறார். ஆனால் தன் காதலை சொல்ல தயக்கம் காட்டுகிறார்.

அவர் டாக்டர் தானே. அவரை சந்திக்க வேண்டும் என்றால் தனக்கு ஏதாவது விபத்து அல்லது காய்ச்சல் வரவேண்டும் என்பதால் ஏதாவது செய்துக் கொண்டே இருக்கிறார்.

ஒரு நாள் அதிக காய்ச்சலும் வருகிறது. தன் தாத்தாவுடன் டாக்டரை சந்திக்க செல்கிறார்.

ஆனால் பெரும் விபத்து ஏற்பட தாத்தா சந்திரமெளலி சம்பவ இடத்திலேயே இறக்கிறார். நாயகியோ கோமா நிலைக்கு சென்று விடுகிறார்.

அதன் பின்னர் ராதிகா காதல் கை கூடியதா? ரெஜித் மேனனுக்கு ராதிகாவின் காதல் தெரிந்ததா.? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

ஸ்மார்ட்டான டாக்டர் ரெஜித் மேனன். இவர் ரொமான்ஸ் செய்யவில்லை என்றாலும் இவரை நிச்சயம் பெண்கள் சுற்றுவார்கள் என்பது போல இருக்கிறார். நடிப்பில் கொஞ்சம் ஸ்கோர் செய்துள்ளார்.

இந்த படமே நாயகிதான். என்ன அழகு? எத்தனை அழகு? என்ற பாட்டே பாடலாம். கண்களில் காதல் பேசி நம்மை போதை ஏற்றுகிறார். பேச்சும் மழலை பேச்சுக்கு ஈடாக உள்ளது. ப்ரேம் பை ப்ரேம் அழகு சேர்கிறார்.

தாத்தாவாக நடித்துள்ள சந்திரமௌலி மற்றும் அம்மாவாக நடித்துள்ள கல்யாணி இருவரும் தங்கள் பணிகளில் கச்சிதம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

யாகாவராயினும் நாகாக்க” பட புகழ் பிரசன்னாவின் இசையில் பாடல்கள் சிறப்பு என்றாலும் குறைந்த நேர படத்தில் இத்தனை பாடல்கள் தேவையா? என தோன்றுகிறது.

புகழேந்தி என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாயகி மீது அவ்வளவு பாசமா? எனத் தெரியவில்லை. எவ்வளவு முடியுமோ அவ்வளவு அழகாக காட்டியுள்ளார். எனவே நாயகிக்காகவே படத்தை பார்க்கலாம்.

நம் முன்னோர்கள் மறைந்த நம் நலம் விரும்பிகள் தனக்கு நடக்கப்போகும் நல்லது கெட்டதை முன்னரே கனவில் வந்து சொல்வார்கள் என்பதை சொல்லியிருக்கிறார் டைரக்டர்.

இது சரியா? என்பதை தாண்டி அப்படி இருந்தால் நல்லது தானே என நினைக்க தோன்றுகிறது.

நல்ல கதைக்களம் என்றாலும் மெதுவாக செல்லும் திரைக்கதையால் படம் நம்மை சோதிக்கிறது. ஒருவேளை ஏதாவது காமெடி நடிகர் இருந்திருந்தால் நமக்கு போரடிக்காமல் இருக்காது என்றே சொல்ல வேண்டும்.

எம்பிரான்… கவிதை பேசும் கண்ணழகி

More Articles
Follows