உணர்வு விமர்சனம்

உணர்வு விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுப்பு என்பவர் இயக்கத்தில் அருள் டி ஷங்கர், அன்கிதா நவ்யா நடிப்பில் ரிலீசாகியுள்ள படம் ‘உணர்வு’.

பாமர மனிதர்களின் உணர்வுகளை அரசியல் களத்தில் முதலீடாக்கி சமூகத்தில் உயர நினைப்பவர்கள் அரசியல்வாதிகள்.

அதுபோன்ற மனிதர்கள் பற்றிய கதையே இப்படத்தின் கதைகரு.

வேலை தேடி அலையும் இளைஞன் அருள். நாயகி அன்கிதா ஒரு பத்திரிகையாளர்.

சீக்கிரமாக நிறைய சம்பாதித்து உயர வேண்டும் என நினைக்கும் நாயகன் பயன்படுத்தும் ஆயுதமே உணர்வு.

எனவே நாயகியும், நாயகனும் ஒரு சமூக செயற்பாட்டாளரை தேர்வு செய்கிறார்கள். அதன்பின் பிச்சைகாரர்களை அழைத்து வந்து வேலை கொடுத்து அவர்களை நன்றாக பார்த்துக்கொள்கிறார்கள்.

அந்த சமூக செயற்பாட்டாளருக்கு தடையாக ஒரு எம்.எல்.ஏ இருக்கிறார்.

படத்தின் நாயகர்களுக்கு உதவ நாட்டின் முதல்வர் இருக்கிறார். அவருக்கு எதிராகவும் எம்.எல்.ஏ. இருக்கிறார்.

எம். எல். ஏ என்னவானார்.? முதல்வர் என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர் நடிகைகள் மற்றும் டெக்னீசியன்கள்..

நாயகனும், நாயகியும் புதுமுகங்கள். எனவே அவர்களிடம் பெரிய நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை. ஜஸ்ட் பாஸ் மார்க் பெறுகிறார்கள்.

முதல்வராக வரும் அனுபவ நடிகர் சுமன் முதல்வர் வேடத்துக்கு பொருத்தமாக இருக்கிறார்.

சமூக சேவகராக இயக்குனர் சுபு நடித்துள்ளார்.

படத்தின் திரைக்கதை சரியாக அமையவில்லை.

எந்தவொரு ட்விஸ்ட்டும் இல்லை படத்தில் இல்லை என்பது குறை.

நம் பாட புத்தகத்தில் படித்த பல சம்பவங்கள் உள்ளது. பழைய கதையை போல் உள்ளது.

மொத்தத்தில் படம் பார்க்க பொறுமையாக உள்ளது.

உணர்வு ரீதியாக சில காட்சிகளை வைத்திருந்தால் உணர்வுகளை தொட்டு இருக்கலாம்.

ஹைடெக் சாவி… கீ திரை விமர்சனம் (2.75/5)

ஹைடெக் சாவி… கீ திரை விமர்சனம் (2.75/5)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஜீவா, நிக்கி கல்ராணி, அனைகா சோடி, ஆர்ஜே. பாலாஜி, கோவிந்த பத்மசூர்யா
இயக்கம் : காலீஸ்
ஒளிப்பதிவு : அபிநந்தன் ராமானுஜம்
இசை : விஷால் சந்திரசேகர்
சண்டை : அன்பறிவு
தயாரிப்பு : மைக்கேல் ராயப்பன்
பிஆர்ஓ – ரியாஸ் கே அஹமது

கதைக்களம்…

ஜீவா காலேஜ் ஸ்டூடண்ட். இவருக்கு ஜீனியர் நிக்கி கல்ராணி.

பெண்களின் மொபைல் போன்களை ஹாபியாக ஹேக்கிங் செய்து, அந்த பெண் பற்றிய ரகசியங்களை சொல்லி பெண்களுடன் விளையாடுபவர். இதனால் பெண்களும் இவரது காம வலையில் விழுகிறார்கள். அப்படி விழுந்த ஒருவர்தான் அனைகா சோடி.

அவர் கண்டுபிடித்திருக்கும் அந்த ஹேக்கிங் வைரஸ்க்கு பாட்ஷா என பெயர் வைத்திருக்கிறார். அவ்வப்போது நண்பர்களுக்கும் படிப்புக்கும் அதை பயன்படுத்துகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு புறம் வில்லனும் இதே சாயலில் கம்யூட்டர் மற்றும் மொபைல் போன்களை ஹேக்கிங் செய்கிறார்.

பணத்துக்காகவும் கொலைகளை செய்வதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

ஒருவரின் மனநிலையை அறிய அவர்களின் பேஸ்புக், வாட்ஸ் அப் ஸ்டேஸ்களை பார்ப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அதன் மூலம் அந்த நபர் எந்த மனநிலையில் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்கிறார்.

காதல் தோல்வியால் பாதிக்கபட்ட பலவீனமான மனநிலை உள்ளவர்களின் ஃபோன்களை ஹேக் செய்து அவர்களை தன் அடிமையாக்கி, யாரோ ஒருவரை கொலை செய்ய கட்டளை இடுவதே இவரது வேலை.
இவருக்கு கீழே ஒரு ஹைடெக் கும்பலே வேலை செய்கிறது.

டெக்னாலஜியில் மிரட்டும் ஹீரோ அண்ட் வில்லன் ஆகிய இந்த இருவருக்கும் நடக்கும் டெக்னாலஜி வார்தான் ‘கீ’

கேரக்டர்கள்…

வழக்கமான துருதுரு கேரக்டரில் அசத்துகிறார் ஜீவா. இவர் அறிமுகமாகும் காட்சிகள் (பெண்களை வர்ணிப்பது) கொஞ்சம் ஓவர் தான் என்றாலும் நிச்சயம் அது இளைஞர்களை சூடேற்றும்.

அனைகா சோடியை இவர் மடக்கும் அந்த காட்சிகள் சென்சாரில் எப்படி தப்பித்தது என தெரியல.?

ஆனால் நடிப்பில் இன்னும் மெச்சுரிட்டி இல்லையே பாஸ்.

ஜீவாவின் தந்தையாக தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத். ஓவர் ஆக்டிங் செய்திருக்கிறார். சில காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். அம்மாவாக சுஹாசினி.

கிளாமருக்கு அனைகா, அழகுக்கு நிக்கி கல்ராணி என இருவருக்கும் நல்ல ஸ்கோப் உள்ளது. மற்றபடி நடிப்பு பத்தல.

நண்பராக ஆர்.ஜே. பாலாஜி. தன் வழக்கமான நையாண்டி நக்கல் டயலாக்குகளால் கவர்கிறார். ஆனாலும் இவர் அடிக்கும் டபுள் மீனிங் காமெடிகள் காம நெடிகளை ஏற்படுத்தும்.

ஸ்டைலிஷ் அண்ட் செம ஸ்மார்ட் வில்லனாக கோவிந்த பத்மசூர்யா. கண்களிலேயே அசால்ட்டாக மிரட்டியிருக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜனின் கேமரா புகுந்து விளையாடியுள்ளது.

விபத்து நடக்கும் காட்சி என்றாலும் அதற்கு அவர் செட் செய்திருக்கும் லைட்டிங் வரை சிறப்பாக உள்ளது.

விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்திற்கு பலம். மிரட்டியிருக்கிறார். காதோரம் என்ற பாடல் ரசிக்க வைக்கிறது.

இயக்கம் பற்றிய அலசல்…

இதயத்துடிப்புக்காக வைக்கப்பட்டிருக்கும் பேஸ் மேக்கர் வரை ஹேக் செய்கிறார் வில்லன். ரோட்டில் போகும் கார்களையும் அசால்ட்டாக ஹேக் செய்கிறார்கள்.

அதாவது ஓவர் டெக்னலாஜி உள்ள ஆப்பிள் போன் முதல் ஆடி கார் வரை ஹேக் செய்வது எல்லாம் ஓகேதான். ஆனால் அது எல்லாம் ஏதோ வீடியோ கேம் பார்ப்பது போல உள்ளது.

ஆனால் காட்சிகளை படமாக்கியிருக்கும் விதம் மிக அருமை. முக்கியமாக ரோட்டில் கரண்ட் ஷாக் விபத்து நடக்கும் காட்சியும் அதன் பின்னணி இசையும் செம மிரட்டல். கிராபிக்ஸ் காட்சிகளை தெறிக்க விட்டுள்ளார் டைரக்டர் காலீஸ்.

வில்லன் எதற்காக போன்களை ஹேக் செய்கிறார்? என்பதற்கு எந்த பின்னணியும் இல்லை என்பது பெரும் குறையாக உள்ளது. இவரின் வேலை பார்க்கும் அந்த இளைஞர்கள் எப்படி இவரிடம் சேர்ந்தார்கள்? என்பது எதுவும் புரியவில்லை.

இடைவேளைக்கு பிறகு வரும் காதல் காட்சிகளில் வலுவில்லை. எடிட்டர் என்னய்யா பண்ற..?

புதுமையான கதைக்களத்தால் செல்போனில் மூழ்கியிருக்கும் இளைஞர்களுக்கு சரியான பாடம் நடத்தியிருக்கிறார் டைரக்டர். கங்கிராட்ஸ் காலீஸ்.

ஆனால் சொன்ன விதம் கொஞ்சம் ஓவராக போய்விட்டதோ? என எண்ணத் தோன்றுகிறது. எல்லாருக்கும் புரியாதே சார்…

கீ… ஹைடெக் சாவி

Kee review rating

Avengers Endgame Review அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் விமர்சனம்

Avengers Endgame Review அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் – ராபர்ட் டவ்னி ஜேஆர், ஸ்கார்லெட் ஜோஹன்சன்
இசை – அலன் சில்வஸ்ட்ரி
ஒளிப்பதிவு – டிரெண்ட் ஒப்பலோச்
இயக்குனர் – ஆண்டனிஜோய் ரூசோ
தயாரிப்பு – மார்வெல் ஸ்டூடியோஸ்
தமிழ் வசனம் – ஏஆர் முருகதாஸ்
தமிழ் டப்பிங் பேசியவர்கள் – விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா
மார்வெல் ஆன்த்ம் – ஏஆர். ரஹ்மான்

கதைக்களம்….

மார்வெல் ஸ்டுடியோ நிறுவனம் தனது சூப்பர் ஹீரோக்களை ஒட்டு மொத்தமாக நடிக்க வைத்து தயாரித்துள்ள படம் தான் அவெஞ்சர்ஸ் என்ட் கேம்.

இதுதான் இதன் பாகம் என்பதால் எண்ட் கேம் என சேர்த்து வெளியிட்டுள்ளனர்.

அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்ஸ் பாகத்தின் தொடர்ச்சியாக இது வெளியாகியுள்ளது.

கடந்த பாகத்தில் அனைத்து நவரத்தின கற்களையும் தானோஸ் கைப்பற்றி இருப்பார்.

அதன் மூலம் அதாவது அந்த சக்தியின் மூலம் உலகில் உள்ள பாதி மக்களை அழித்து விடுவார். இது அவெஞ்சர்ஸ் குடும்பங்களையும் ஒட்டு மொத்தமாக பாதிக்கிறது.

முந்தைய படத்தில் வில்லன் தானோசால் கடுமையாக தாக்கப்பட்டிருப்பார் அயர்ன்மேன் ராபர்ட் டோனி.

இதன் தொடர்ச்சியாகதான் இந்த படம் தொடங்குகிறது.

அவெஞ்சர்ஸ் அனைவரும் சோகத்தில் இருக்க கேப்டன் மார்வல் விண்வெளியில் இருந்து ஐயர்ன் மேனை பூமிக்கு அழைத்து வருகிறார்.

உயிர்பிழைக்கும் அயர்ன்மேன் குடும்பத்துடன் செட்டிலாக வேண்டும் என நினைக்கிறார்.

ஆனால் அழிந்த உலகை மீட்க வேண்டும் என கேப்டன் அமெரிக்காவும், பிளாக் விடோவும் நினைக்கிறார்கள்.

இதற்காக ஆண்ட்மேன், தோர், ஹல்க் ஆகியோரை மீண்டும் அழைக்கின்றனர். பின்னர் ஒரு வழியாக அயர்ன்மேனும் வந்து இணைகிறார்.

தானோஸிடம் இருக்கும் நவரத்தின கற்களை வைத்து இறந்த அனைவரையும் மீட்க நினைக்கிறார்கள் அவெஞ்சர்ஸ்.

அதன் படி 5 வருடங்களுக்கு முன் செல்ல டைம் மிஷினை பயன்படுத்துகின்றனர். அதை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கின்றனர்.

பின்னர் தானோஸ் மகள் மூலம் தானோஸ் இருக்கும் வேற்று கிரகத்தை கண்டுபிடிக்கிறார்கள்.

அப்போதுதான் தானோஸிடம் நவரத்தின கற்கள் இல்லாதது இவர்கள் தெரிய வருகிறது.

அந்த கற்களை அழித்து விட்டதாக தானோஸ் கூறுவதை கேட்டு திகைத்து நிற்கிறார்கள்.

பின்னர் அவர்கள் எப்படி அந்த காலக்கட்டத்திற்கு சென்றார்கள்? இறந்தவர்கள் எப்படி மீட்டார்கள்? என்பதே மீதிக்கதை.

படம் எப்படி..?

படம் 181 நிமிடங்கள். அதாவது 3 மணி நேரம்.
பொதுவாக ஹாலிவுட் படங்கள் என்றால் முதலில் மெதுவாக நகரும். பின்னர் பாஸ்ட்டாக இருக்கும். இது இரண்டும் கலந்த வண்ணம் உள்ளது.

ஒரேடியாக சூப்பர் ஹீரோக்கள் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். இதில் இடைவேளையே வந்துவிடுகிறது.

ஸ்கார்லெட் ஜான்சனுக்கு ஆண்ட்ரியாவின் குரல் கச்சிதம். ஆனால் அயர்ன்மேனுக்கு விஜய்சேதுபதியின் வாய்ஸ் ஒட்டவில்லை. என்னமோ விஜய்சேதுபதி படத்தை பார்ப்பது போல உள்ளது.

ஆனால் இறுதியில் ஆக்‌ஷன், காமெடி, செண்டிமெண்ட், பிரம்மாண்டம் என அனைத்தையும் கலந்துக் கொடுத்துள்ளனர்

குறிப்பாக ஐயர்ன் மேன், கேப்டன் அமெரிக்கா, கேப்டன் மார்வல், தோர், ஹல்க் உள்ளிட்டவர்கள் சூப்பர்.

தோர் காமெடியிலும் கலக்கியிருக்கிறார்.

கிளைமாக்ஸ் காட்சியின் போது இறந்துபோன சூப்பர் ஹீரோக்கள் எல்லாம் மீண்டு வந்து சண்டையிடும் போது தியேட்டரில் சத்தம் காதை பிளக்கிறது. அதிலும் ஒவ்வொருவராக வரும்போது அனல் பறக்கிறது.

ஆனால் இதற்கு முந்தைய பாகங்களை காட்டிலும் இந்த அவெஞ்சர்ஸ் விருந்து போதவில்லை என்றே ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் க்ளைமாக்ஸில் ஐயன்மேன் இறப்பது சரியாக இல்லை என்பதும் பலரது கருத்தாக உள்ளது. அதேபோல் தானோஸும் அழிக்கப்பட்டுவிடுகிறார்.

ஆக ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ 3டியில் கிராபிக்ஸ் ட்ரீட்

வாசமில்லா மலரிது… வெள்ளைப் பூக்கள் விமர்சனம் (2.5/5)

வாசமில்லா மலரிது… வெள்ளைப் பூக்கள் விமர்சனம் (2.5/5)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : விவேக் சார்லி, பூஜா தேவரியா, தேவ், பைஜி ஹென்டர்சன்
இயக்கம் : விவேக் இளங்கோவன்
இசை : ராம்கோபால் கிருஷ்ணராஜீ
தயாரிப்பு : திஹா சேகரன், வருண் குமார், அஜய் சம்பத்

கதைக்களம்…

சின்ன கலைவாணர் விவேக் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஹீரோவாக நடித்துள்ள படம் இது. அவரின் நிஜ வயதுக்கு ஏற்ற கேரக்டரை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார்.

இவர் தமிழக காவல்துறையில் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்ற கேரக்டரில் நடித்துள்ளார்.

இவரது ஒரே மகன் அமெரிக்காவில் வசிக்கிறார். இவரின் அனுமதியில்லாமல் அங்குள்ள ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார்.

பின்னர் மனம் கேட்காமல் உயரதிகாரி சொன்னதற்காக அமெரிக்கா சென்று மகனை காண செல்கிறார்.

மகனின் குடும்ப தோழியான பூஜா தேவரியா ஒரு தமிழச்சிதான். அவரின் தந்தை சார்லி. அப்போது அவருடன் பழக்கம் ஏற்படுகிறது.

ஒரு கட்டத்தில் இவரது குடியிருப்புக்கு அருகே சில கடத்தல் சம்பவங்கள் நடக்கிறது. பக்கத்து வீட்டுப் பெண் மோனா, பின்னர் கார்லோஸ் என்ற பள்ளிச் சிறுவன் கடத்தப்படுகிறார்கள்.

அமெரிக்கா போலீஸ் இருந்தாலும் இவர் ஹீரோவாச்சே துப்பறிய முற்ப்படுகிறார்.

எங்கெங்கோ சென்று கண்டுபிடிக்க முயல்கிறார். அப்போதுதான் இவரது மகனும் காணாமல் போகிறார்.

இதை எல்லாம் யார் செய்கிறார்கள்? எதற்கு செய்கிறார்கள்? என்பதை இவரே தனி ஆளாக நின்று கண்டுபிடிக்கிறார்.. அதுதான் மீதிக்கதை.

ஒரு குற்றம் நடந்தால் அது எப்படி? ஏன்? என்பதைக் கண்டுபிடித்தால் அது யாரால் நடந்தது என்பதை கண்டுபிடித்துவிடலாம் என்ற வசனங்களை அடிக்கடி சொல்லி சொல்லி சார்லியுடன் கண்டு பிடித்துவிடுகிறார்.

சில இடங்களில் இவரது பணி ஹைலைட்டாக இருந்தாலும் பல இடங்களில் காமெடியாக இருக்கிறது.

நவீன டெக்னாலஜியை கையில் வைத்திருக்கும் போலீசே கண்டுபுடிக்காத இடங்களை எல்லாம் இவர் ஒரு ஆள் கண்டு பிடிக்கிறார்.

அதுவும் இவராக ஒரு கற்பனை செய்து இப்படி இருக்குமோ? அப்படி இருக்குமோ? என்பதாக யூகித்து சார்லியுடன் செல்கிறார்.

தேவ். பூஜா தேவரியா, விவேக் மருமகள் ஆகியோர் நல்ல தேர்வு.

அதுபோல் சார்லி நடிப்பும் ரசிக்க வைக்கிறது.

பின்னணி இசை நன்றாக உள்ளது. காட்சிகளும் காட்சி அமைப்புகளும் ஓகே.

ஆனால் முக்கியமான கடத்தல்கள் நடக்கும் இடத்தில் மட்டும் சிசிடிவி கேமரா இல்லை என்பது நம்பும்படியாக இல்லை.

அமெரிக்கா போலீஸ் இருந்தும் இவர் எல்லாம் இடத்திலும் செல்வது எல்லாம் ரொம்ப ரொம்ப ஓவர்.

இயக்குனர் விவேக் இளங்கோவன் ஒரு குழந்தையை அடிக்கடி காட்டுகிறார்.

ஆனால் அது பின்னர்தான் ப்ளாஷ்பேக் காட்சி என்பதே தெரிகிறது. அப்படி என்றால் காட்சிகளை வேறுபடுத்தி காட்டியிருக்க வேண்டாமா? 15 வருடங்களுக்கு முன்பு போல் உள்ள காட்சியாக அது இல்லையே?

ஆக ‘வெள்ளைப்பூக்கள்’ வாசமில்லா மலரிது

Vellai Pookal review

முடிவில்லாத புதையல்.. ழகரம் விமர்சனம்

முடிவில்லாத புதையல்.. ழகரம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: நந்தா, ஈடன் குரைக்கோஸ் மற்றும் பலர்.
இசை – தரண்குமார்
ஒளிப்பதிவு – பரத்வாஜ், ஜோ, பிரின்ஸ்தாஸ்
இயக்கம் – கிரிஷ்
பிஆர்ஓ – சக்தி சரவணன்
தயாரிப்பு செலவு – ரூ. 10 லட்சம்

நாயகன் நந்தாவும், நாயகி ஈடன் குரைக்கோசும் லவ்வர்ஸ்.

தொல்பொருள் ஆராய்ச்சியாளரான நந்தாவின் தாத்தா ஒரு கட்டத்தில் இறந்துவிடுகிறார்.

சில தினங்களுக்கு பின் தாத்தாவின் நண்பர் ஒருவர் நந்தாவை சந்தித்து, தாத்தாவின் மரணம் கொலை என்றும், அவர் தனது தொல்பொருள் ஆராய்ச்சியில் புதையல் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டதாக கூறுகிறார். அவர் ஏதாவது ஒரு பார்சல் கொடுத்தாரா? என்று கேட்கிறார்.

அதில் அந்த இடத்திற்கு செல்வதற்கும் புதையலை அடைவதற்காக விஷயங்களை வைத்துள்ளதாக கூறுகிறார்.

நந்தா புறப்படும் வேளையில் அவரை ஒரு கும்பல் மிரட்டுகிறது. புதையலை தங்களிடம் கொடுக்கவில்லையென்றால் குடும்பத்தை கொன்றுவிடுவதாகவும் மிரட்டுகிறது.
எனவே நந்தா என்ன செய்தார்? அந்த புதையல் என்ன ஆனது? என்பதே மர்மம் நிறைந்த மீதிக்கதை.

அலட்டல் இல்லாத நடிப்பில் நந்தா நடித்துள்ளார். ஆனால் கொஞ்சம் முயற்சித்து மாறுபட்ட முகபாவனைகளை கொடுத்திருக்கலாம். பிடிக்காமல் செய்த கேரக்டர் போல் உள்ளது.

நாயகி ஈடன் குரைக்கோஸ் அழகாக வந்து செல்கிறார். விஷ்ணு பரத், மீனேஷ் கிருஷ்ணா, சந்திர மோகன், சுபாஷ் கண்ணன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கச்சிதம்.
புதையலை நெருங்கிய பின்னர் தான் கொஞ்சம் கதை சூடு பிடிக்றிது. தமிழ் மொழியின் பெருமையை அழகாக சொல்லியுள்ளனர்.

முழுப்படத்தையும் 10 லட்சம் செலவில் எடுத்துள்ளதை பாராட்டலாம். டைட்டில் கார்டு முதல் இறுதியாக காட்டப்பட்ட அந்த அருவி புதையல் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

தரண்குமாரின் பின்னணி இசையும் பரத்வாஜ், ஜோ, பிரின்ஸ்தாஸ் ஒளிப்பதிவும் படத்திற்கு சிறப்பு சேர்க்கின்றன.

மீதிக்கதை 2ஆம் பாகத்தில் என கதையை முடித்துள்ளார் டைரக்டர் கிரிஷ்.

`ழகரம்’… முடிவில்லாத புதையல்

ரசூல் ராக்ஸ்… ஒரு கதை சொல்லட்டுமா விமர்சனம்

ரசூல் ராக்ஸ்… ஒரு கதை சொல்லட்டுமா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல சவுண்ட் டிசைனரான ரசூல் பூக்குட்டி பல படங்களில் பணியாற்றியிருக்கிறார்.

அண்மையில் வெளியான 2.0 படத்தில் இவரது பணி அனைவராலும் பாராட்டப்பட்டது.

இவர் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஆஸ்கார் விருதையும் வென்றுள்ளார்.

இவரின் லட்சிய கனவு கேரளாவின் திருச்சூரில் நடைபெறும் பூரம் திருவிழாவை நேரிடையாக ஒலிப்பதிவு செய்ய வேண்டும் என்பதுதான். அதை ஒரு படமாக எடுத்துள்ளார்.

உலகப் புகழ்பெற்ற பூரம் திருவிழாவின் எல்லா ஒலிகளையும் நேரடியாக பதிவு செய்ய வேண்டும் என்பதையும் அதில் உள்ள சிரமங்களையும் அழகாக படமாக்கியுள்ளார்.

நண்பர் ஒருவர் மூலமாக பூரம் திருவிழாவின் எல்லா ஒலிகளையும் பதிவு செய்து அதை ஆவண படமாக உருவாக்க நினைக்கிறார்.

அப்போது நண்பருக்கும் இவருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இதனால், அந்த ஆவண படம் தயாரிப்பது கைவிடப்படுகிறது.

ஆனால் கண் பார்வை இல்லாத சிலர் இவரை சந்தித்து உங்கள் தயவால் அந்த ஒலியை ரசிக்க நினைத்தோம் என்று தங்கள் வருத்த்தை தெரிவிக்கின்றனர்.

எனவே அவர்களின் ஆசைப்படி தானே அந்த ஒலியை படமாக்க முடிவு செய்கிறார். ஆனால் ஏற்கெனவே போட்ட ஒப்பந்தம் அதற்கு தடையாக உள்ளது.

அதன்பின்னர் என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

சவுண்ட் டிசைனராக நமக்கு அறிமுகமான ரசூல் பூக்குட்டி, இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

நல்ல தொழில்நுட்பங்கள் நிறைந்த தியேட்டரில் இப்படத்தை பார்த்தால் மட்டுமே அந்த இசையை ரசிக்க முடியும்.

உலக புகழ்பெற்ற பூரம் திருவிழாவை பார்க்க முடியவில்லை என்றால் இந்த படத்தை பாருங்கள்.

அனியன் சித்ரஷாலா மற்றும் நீல் டி குஹன்னாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் ‘ஒரு கதை சொல்லட்டுமா’.. ரசூல் ராக்ஸ்

Oru Kadhai Sollatuma aka The Sound Story review

More Articles
Follows