தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
சென்னை காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள கண்ட்ரோல் ரூமிற்கு ஒரு மர்ம நபர் போன் வருகிறது. நடக்கவிருக்கும் விபத்தை தடுக்கச் சொல்லி எச்சரிக்கிறார்.
ஆனால் காவல்துறையின் அலட்சியத்தால் அந்த விபத்து நடக்கிறது. பிறகு ஒரு கொலை நடப்பதை முன்கூட்டியே தெரிவிக்கிறார். அந்த கொலையை தடுப்பதற்குள் அதுவும் நடக்கிறது.
இப்படியாக அந்த நபர் காவல்துறை கண்ட்ரோல் ரூமுக்கு போன் செய்யும்போது மீடியாவுக்கும் செய்கிறார். இதனால் ஒரு குற்றத்தை கூட தடுக்க முடியாத காவல்துறையை மக்கள் திட்டுகின்றனர்.
அந்த மர்ம நபருக்கு தீர்க்கதரிசி எனவும் பெயரிடுகின்றனர். இப்படியாக அடுத்தடுத்து விபத்துகளும் கொலைகளும் நடக்க அதை தடுக்க முடியாமல் திணறுகிறது காவல்துறை.
அந்த நபர் யார்.? அவர் முன்கூட்டியே எப்படி சொல்கிறார்.? ஒருவேளை சொல்லிவிட்டு அவர்தான் கொலைகளை செய்கிறாரா? அவருக்கும் இந்த சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு என்பதே படத்தின் மீதி கதை.
கேரக்டர்கள்…
கதையின் நாயகனாக அஜ்மல். போலீஸ்க்கு உரித்தான கம்பீரத்தோடு கெத்து காட்டி இருக்கிறார். இவருடன் வரும் துஷ்யந்த் ஜெய்வந்த் ஆகியோரும் போலீஸ் கதாபாத்திரத்தில் கச்சிதம்
கண்ட்ரோல் ரூம் அதிகாரியாக ஸ்ரீமன். கொஞ்சம் காமெடி கலந்து தன் கேரக்டரை நிறைவாக செய்திருக்கிறார்.
இவர்களுடன் தேவதர்ஷினி, மோகன் ராம், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோரும் வருகின்றனர்
கௌரவத் தோற்றத்தில் சத்யராஜ். வெறும் குரலிலேயே தன் கேரக்டரை 80% செய்துவிட்டு 20% நக்கல் நையாண்டி கலந்து தலை காட்டி நடித்துள்ளார்.
டெக்னீஷியன்கள்…
படத்தின் மெயின் கேரக்டர் சத்யராஜ் தான். ஆனால் அவரது காட்சிகள் வெறும் 10% கூட படத்தில் இல்லை. அவரது காட்சிகளை அதிகப்படுத்தி இருந்தால் இன்னும் சுவாரசியம் கூடியிருக்கும்.
முக்கியமாக அங்கே விபத்து.. இங்கே கொலை.. என படம் முழுவதும் சென்று கொண்டே இருப்பதால் போதும் முடியல என்கிற எண்ணமே நமக்கு வருகிறது.. எடிட்டர் கொஞ்சம் ஓவர் டைம் பார்த்திருக்கலாம்.(படத்தொகுப்பாளர் ரஞ்ஜீத் சி.கே.)
சென்னை அழகை தன் கேமரா கண்களில் இன்னும் அழகுற செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் தன் ஜெ.லெக்ஷ்மன்.
படத்தில் நாயகி இல்லை.. டூயட்டும் இல்லை ஐட்டம் சாங்கும் இல்லை.. எனவே காவல்துறைக்கு பெருமை சேர்க்க ஒரு பாட்டு வேண்டும் என இயக்குனர் நினைத்தாரோ என்னவோ.. வேண்டா வெறுப்பாக ஒரு பாடல் வைத்துள்ளார். அதற்கு ஆட்டமும் சரியில்லை.. பாட்டும் பெரிதாக கை கொடுக்கவில்லை.
இசையமைப்பாளர் ஜி.பாலசுப்ரமணியத்தின் பின்னணி இசை படத்திற்கு நன்றாகவே பலம் சேர்த்துள்ளது.
பி.சதீஷ்குமாரின் திரைக்கதையில் அறிமுக இயக்குநர்கள் பி.ஜி.மோகனும் எல்.ஆர்.சுந்தரபாண்டியும் இணைந்து இந்தப் படத்தை இயக்கி உள்ளனர்.
கிளைமாக்ஸ் சொல்லப்படும் சத்யராஜின் கதைகளை கொஞ்சம் அதிகப்படுத்தி விபத்து & கொலை காட்சிகளை கொஞ்சம் ட்ரிம் செய்து இருந்தால் இந்த தீர்க்கதரிசி இன்னும் ஒரு தீர்க்கமான வெற்றியை அடைந்து இருப்பார்.
அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களின் சுயநலத்திற்காக செய்யும் தவறுகள் மற்றொரு குடும்பத்தை எப்படி எல்லாம் பாதிக்கிறது என்பதை காட்சிப் படுத்தியதற்கு கை கொடுத்து பாராட்டலாம்.
ஆக தீர்க்கதரிசி.. தீரா-பலி
Theerkadarishi movie review and rating in tamil