தி ரோடு விமர்சனம் 3.5/5… நெடுஞ்சாலையில் நெடுந்துயரம்

தி ரோடு விமர்சனம் 3.5/5… நெடுஞ்சாலையில் நெடுந்துயரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருண் வசீகரன் இயக்கிய சஸ்பென்ஸ் திரில்லர் ‘தி ரோடு’. இதில் திரிஷா, மியா ஜார்ஜ், டான்சிங் ரோஸ் ஷபீர், சந்தோஷ் பிரதாப், எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி, செம்மலர் அன்னம் ஆகியோர் நடித்துள்ளனர்.

கதைக்களம்…

கிராமத்து ஆசாமி வேல ராமமூர்த்தி. இவரது மகன் ‘டான்சிங் ரோஸ் புகழ்’ சபீர் இவர் ஒரு கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிகிறார். அங்கே பயிலும் ஒரு மாணவி இவரை காதலிக்கிறார்.

ஆனால் நான் ஒரு ஆசிரியர்.. உன்னை காதலிக்க முடியாது என சபீர் சொல்ல அவரை பழிவாங்க பாலியல் தொல்லை செய்ததாக புகார் அளிக்கிறார் மாணவி.

இதனையடுத்து சபீர் வேலை போகிறது. பிறகு வேறு வேலை தேடி செல்கிறார் சபீர். அரசு வேலைக்கு பணம் கொடுத்து அரசியல்வாதியிடம் ஏமாந்து விடுகிறார்.

இப்படியாக விரக்தியில் இருக்கிறார் ஷபீர். அடுத்ததாக என்ன செய்தார்.?

இந்தக் கதை ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கத்தில்.. நாயகி த்ரிஷா அவரது கணவர் சந்தோஷ பிரதாப் இவர்களின் மகன் கவின். த்ரிஷா கர்ப்பமாக இருப்பதால் அவரை விட்டுவிட்டு தன் மகனின் பிறந்தநாளை கன்னியாகுமரியில் கொண்டாட ரோடு வழி பயணமாக செல்கின்றனர் சந்தோஷ் பிரதாப் மற்றும் கவின்.

அப்போது தேசிய நெடுஞ்சாலையில் நேசந்தி என்ற பகுதியருகே ஏற்படும் விபத்தில் மரணம் அடைகின்றனர்.

கணவன் மற்றும் மகனை இழந்த திரிஷா விபத்து நடந்து இடத்தை பார்வையிடும்போது அங்குள்ள மக்களை சந்திக்கிறார். அவர்கள் இந்த பகுதியில் இதுவரை பல விபத்தில் மரணங்கள் நடைபெற்றுள்ளன என்கின்றனர்.

இதனால் சந்தேகம் அடையும் த்ரிஷா தனது கணவருக்கு ஏற்பட்டது விபத்தா கொலையா என்பதை ஆராய விசாரணையில் இறங்குகின்றார். அதன் பின்னர் என்ன நடந்தது? ஷபீர் யார்? அதன் பிறகு என்ன செய்தார்? திரிஷாவுக்கும் அவருக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

கேரக்டர்ஸ்…

இடைவேளை வரை சாந்தமான த்ரிஷா இடைவேளைக்குப் பிறகு அதிரடி ஆக்ஷனில் அதகளம் செய்துள்ளார். தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் காவல்துறையோ சட்டமோ கை கொடுக்காது நாமே களத்தில் இறங்கி போராடினால் தான் வெற்றி கிடைக்கும் என சிங்க பெண்ணாக நடித்திருக்கிறார்.

பாதிக்கப்பட்டவருக்கு தான் வலி தெரியும் மற்றவர்களுக்கு அந்த சம்பவம் ஒரு செய்தி என்பதை எம் எஸ் பாஸ்கர் பேசும் வசனம் காட்டுகிறது.

தோழிக்கு கை கொடுத்து கதைக்கும் கை கொடுத்து இருக்கிறார் மியா ஜார்ஜ். இவரது கணவராக விவேவ் பிரசன்னா. ஓரிரு காட்சிகளில் வந்து செல்கிறார்.

வேல ராமமூர்த்தி & செம்மலர் அன்னம் ஆகியோரின் நடிப்பு பாராட்டுக்குரியது.

திரிஷாவின் கதை.. சபரின் கதை என மாற்றி மாற்றி காட்டிக் கொண்டே இருப்பதால் என்ன சொல்ல வருகிறார் இயக்குனர் என்பது புரியவில்லை. ஆனால் கிளைமாக்ஸ் இல் அதற்கான விடை கொடுத்திருக்கிறார்.

இடைவேளை முடிந்து 1 1/2 நேரம் படம் ஓடிக்கொண்டே இருக்கிறது. நீளத்தை எடிட்டர் வெட்டியிருக்கலாம். ஒருவேளை பெரிய ரோடாக இருக்குமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.

சமீபகாலமாக ஆசிரியர் மீது மாணவிகள் பாலியல் புகார்களை கொடுத்து வருகின்றனர். ஆனால் இதில் மாணவிக்கு ஆசிரியர் மீது மாணவி பாலியல் தொல்லை பொய் புகார் கொடுப்பது வித்தியாசமானது. இப்படியும் சில மாணவிகளா என புரிய வைக்கிறது?! கிளைமாக்ஸ்சில் இந்த கதையின் திருப்பம் எதிர்பாராத ஒன்று.

டெக்னீசியன்ஸ்…

ஏஏஏ சினிமா பிரைவேட் லிமிடெட் தயாரித்த இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளர். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய சிவராஜ் எடிட்டிங் செய்துள்ளார்.

இந்தப் படத்தைப் பார்த்த பிறகு நெடுஞ்சாலை பயணம் நமக்கு நெடுந்தயரம் எனலாம். சாதாரணமாக காரில் ஜாலி ட்ரிப் என நினைக்கும் நாம் இத்தனை விஷயங்கள் அடங்கி இருக்கிறதா என வியக்க வைக்கிறது.

சாலை பயணமும் கல்லூரி காட்சிகளும் ஒளிப்பதிவாளர் கைவண்ணத்தில் கண்களுக்கு விருந்தளிக்கிறது. மிரட்டலான பின்னணி இசை கொடுத்திருக்கிறார் சாம் சி.எஸ்.

அருண் வசீகரன் இயக்கியிருக்கும் இந்த படம் வித்தியாசமானது. அவர் அறிமுக இயக்குனர் என்றாலும் அது எங்கேயும் தெரியாத வண்ணம் படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்று இருப்பது பாராட்டுக்குரியது.

ஆக… தி ரோடு.. நெடுஞ்சாலையில் நெடுந்துயரம்

தி ரோடு

The road movie review and rating in tamil

இந்த க்ரைம் தப்பில்ல விமர்சனம்..; அப்படியென்ன தப்பில்லாத க்ரைம்.??

இந்த க்ரைம் தப்பில்ல விமர்சனம்..; அப்படியென்ன தப்பில்லாத க்ரைம்.??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தேவகுமார் இயக்கத்தில் ஆடுகளம் நரேன், பாண்டி கமல், மேக்னா ஏலன், வெங்கட் ராவ், கிரேசி கோபால் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மதுரியா புரொடக்ஷன்ஸ் சார்பில் மனோஜ் கிருஷ்ணசுவாமி தயாரிப்பில் உருவாகியுள்ளது ‘இந்த கிரைம் தப்பில்ல’.

கதைக்களம்…

ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத இரண்டு கதைகளை அமைத்திருக்கிறார் இயக்குனர். அதன் பின்னர் இறுதியாக இரண்டையும் இணைத்து ஒரு முடிச்சு போட்டு இருக்கிறார்.

ஒரு பக்கம்.. ஒரு பெண்ணை துரத்தி துரத்தி மூன்று நண்பர்கள் காதலிக்கிறார்கள். அந்த நண்பர்களுக்கே தெரியாமல் தன் பெயரை மாற்றி சொல்லி மூவரையும் காதலிப்பதாக சொல்கிறார் நாயகி மேக்னா.

இந்த கதை ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம்… ஆடுகளம் நரேன் தலைமையில் சில இளைஞர்கள் சமூகத்திற்காக போராடுகின்றனர்.

இந்த சூழ்நிலையில் தான் காதலிப்பதாக சொன்ன 3 ஆண்களையும் ஒரு பாழடைந்த பங்களாவிற்கு வரச் சொல்கிறார் நாயகி மேக்னா. அங்கு மூவருக்கும் தண்டனை கொடுக்கப்படுகிறது.

அவர்கள் யார்? அவர்களை தண்டிக்க என்ன காரணம்.? இந்த பெண் யார்? ஆடுகளம் நரேன் அவரின் பங்கு என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள் & டெக்னீசியன்கள்…

அழகு மேனகையாக மேக்னா. தன் பெயருக்கு ஏற்ப அழகாக ஜொலிக்கிறார். ஆனால் அவர் 3 பேரை காதலிப்பதிலேயே அவரின் சூழ்ச்சி தெரிகிறது. இவரே கதையின் நாயகி என்பதால் கூடுதல் சிரமம் எடுத்து சிறந்த நடிப்பை கொடுத்திருக்கலாம். ஆனால்..??

மேக்னாவை சுற்றும் 3 ஆண்களுமே நாடகத்தனமான நடிப்பை கொடுத்துள்ளனர். நடிப்பிலும் எந்த சுவாரசியமும் இல்லை.

ஆடுகளம் நரேன் நன்றாக நடித்துக் கொண்டிருந்தவருக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லை.. ஒரு காட்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணைக் காப்பாற்ற வாருங்கள் என நாயகி இவரை அழைக்கிறார். ஆனால் வர முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன் என்கிறார். இப்படி ஒரு சமூக போராளி பேசுவாரா? என்று தெரியவில்லை.

ஒரு குற்றவாளியை தண்டிக்க நாமும் ஒரு குற்றம் செய்யலாம் என சொல்ல வருகிறது இந்தக் கிரைம் தப்பு இல்லை.

குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தினாலும் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்து விடுகிறார்கள்.. சட்டம் ஒழுங்கும் சரியில்லை.. காவல் துறையும் பெண்களை பாதுகாக்கவில்லை என சொல்கிறார் இயக்குனர் தேவகுமார்.

கற்பழிப்புக்கு நிரந்தர தீர்வு குற்றவாளிகளை தண்டிப்பது மட்டும்தான். எனவே தண்டிப்பவர்களுக்கு ஆதரவாக இந்த க்ரைம் தப்பில்லை என்று சொன்னாலும் அதை சொன்ன விதத்தில் திரைக்கதை அமைத்த விதத்தில் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர்.

படத்தின் ஒளிப்பதிவு பாடல்களும் பெரிதாக கை கொடுக்கவில்லை. படத்தின் படத்தொகுப்பாளரும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

ஆக இந்த கிரைம் தப்பில்லை.. படத்தை பார்க்கலேனாலும் தப்பில்லை..

Indha Crime Thappilla movie review and rating in tamil

ரத்தம் விமர்சனம் 3.75/5.. சத்தமில்லாத யுத்தம்

ரத்தம் விமர்சனம் 3.75/5.. சத்தமில்லாத யுத்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

தன் மனைவியை இழந்த விஜய் ஆண்டனி ஒரே மகளை பாசமாக வளர்த்து வருகிறார். இவரது தொழில் குதிரை வளர்ப்பது.

வட இந்தியாவில் வாழும் விஜய் ஆண்டனியை சந்திக்க வரும் நிழல்கள் ரவி அப்போது தன் மகன் கொல்லப்பட்டதை சொல்கிறார். நீ மீண்டும் சென்னைக்கு வந்து இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசம் செய்ய வேண்டும் என அழைக்கிறார்.

அதன்படி விஜய்ஆண்டனி வானம் என்ற பத்திரிகையில் மீண்டும் இணைகிறார். அங்கு கிரைம் ரிப்போர்ட்டராக வேலை பார்க்கிறார் நந்திதா.

தன் நண்பன் செழியனை கொன்றவர் ஒரு நடிகரின் ரசிகர் என்றாலும் அந்த கொலையில் சந்தேகம் இருப்பதை அறிந்து மீண்டும் அது பற்றிய விசாரணையில் இறங்குகிறார் விஜய் ஆண்டனி.

செழியன் கொலை போலவே அடுத்தடுத்து கொலைகள் நடக்கவே இவை எல்லாம் ஒரே நெட்வொர்க்கில் நடக்கிறது என்பதை கண்டுபிடிக்கிறார் விஜய்.

அப்படி என்றால் அந்த நெட்வொர்க்கின் தலைவன் யார்? அவனின் நோக்கம் என்ன?. பத்திரிகையால் என்ன செய்ய முடிந்தது? மீடியா பவரை காட்டினாரா விஜய் ஆண்டனி? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

இடைவேளை வரை நீண்ட தாடி இறுக்கமான முகம் என தன் வழக்கமான பாணியில் அமைதியாக வலம் வருகிறார் விஜய் ஆண்டனி. அதன் பின்னர் கொலை வழக்கு வேகம் எடுக்கவே அதற்கு ஏற்ப ஷேவ் செய்து முறுக்கிய மீசையுடன் வெரைப்பாக காணப்படுகிறார்.

விசாரணையில் வீரம் முக்கியம் இல்லை. விவேகமே முக்கியம் என்பதை உணர்ந்து ஒவ்வொரு பிரேமிலும் தன் பாடி லாங்குவேஜில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

நந்திதா & ரம்யா நம்பீசன் என இரண்டு அழகிய ஹீரோயின்கள் இருந்தாலும் அதிகமாக ஸ்கோர் செய்வது மகிமா நம்பியார். எவருமே எதிர்பாராத கேரக்டரில் மலைக்க வைக்கிறார் மஹிமா.

வாடகைக்கு வீடு பார்க்க வரும் விஜய் ஆண்டனியிடம் மகிமா.. அவர் யார் என்று தெரிந்து பேசும் காட்சிகள் வேற லெவல். அதிலும் சிரித்துக் கொண்டே மிரட்டும் தோணியில் பேசும் நடிப்பு மகா நடிப்பு.

அழகுமிக்க ரம்யா ரசிக்க வைக்கிறார். அவரின் மாமா ஓ ஏ கே சுந்தர் பிளாஷ்பேக் காட்சியை சொல்லும்போது கண்கலங்க வைக்கிறார் ரம்யா.

ஸ்டைலிஷ் ஆன உடைகளுடன் அழகிய கண்ணாடி போட்டு நம்மை அசர வைக்கிறார் நந்திதா. இப்படி ஒரு பியூட்டி நம் அருகே இருந்தால் தாராளமாக ஓவர் டூட்டி பார்க்கலாம் என ரிப்போர்ட்டர்களை நினைக்க வைப்பார்.

ஜான் மஹேந்திரன், ஓ.ஏ.கே.சுந்தர், மீஷா கோசல் என அனைவரும் திரைக்கதைக்கு ஏற்ப பயணித்துள்ளனர்.

வானம் என்ற பத்திரிகை நடத்தும் நபராக நிழல்கள் ரவி. அவரது குரலே தனித்துவமானது. அதற்கு ஏற்ப ஒரு பத்திரிக்கை அதிபராக நடிப்பில் கெத்து.

இன்றைய இளைஞர்கள் பத்திரிக்கை துறையில் சிறப்பாக செயல்பட நினைத்தாலும் எங்களைப் போன்ற நபர்களால் அவர்களால் சுதந்திரமாக செயல்படவில்லை என்பதை இன்றைய மீடியாக்களின் நிலையை சொல்லி இருக்கிறார்.

டெக்னீசியன்கள்…

ஒளிப்பதிவாளர் : கோபி அமர்நாத், இசையமைப்பாளர் : கண்ணன் நாராயணன்

படத்தொகுப்பாளர் : டி.எஸ்.சுரேஷ்

கலை இயக்குநர் : செந்தில் ராகவன் ஆகியோரது பணி நிறைவான ஒன்று.

ஒளிப்பதிவாளர் தன் பணியில் கச்சிதம். ஆனால் எடிட்டர் இரண்டாம் பாதியில் விறுவிறுப்புக்கு ஏற்ப காட்சிகளை வெட்டி இருக்கலாம்.

இசையமைப்பாளர் கண்ணன் நாராயணின் பின்னணி இசை விறுவிறுப்பை அதிகரித்து க்ரைம் த்ரில்லர் படத்தை உணரவைக்கிறது.

பத்திரிக்கை நடத்தும் நபராக நிழல்கள் ரவி. அவருடைய வீட்டு பொருட்களில் வண்ணமும் பத்திரிக்கை ஆபீசின் வண்ணமும் ஒரே கலராக இருப்பதை கலை இயக்குனர் செந்தில் ராகவன் ரசனையில் காண முடிகிறது.

படத்திற்கு ரத்தம் என டைட்டில் வைக்கப்பட்டாலும் ரத்தத்திற்கு பெரிதாக வேலையில்லை.. அதுபோல யுத்தத்திற்கும் சத்தத்திற்கும் வேலை கொடுக்கவில்லை. ஆனாலும் டீசன்டாக ஒரு கிரைம் திரில்லரை கொடுத்திருக்கிறார் இயக்குனர் சி எஸ் அமுதன்.

தமிழ் படம் 1&2 ஆகிய படங்களை இயக்கியவர் இவர்? என சந்தேகிக்கும் அளவிற்கு வித்தியாசமான திரைக்கதையை அமைத்திருக்கிறார். ஒரு போலீசுக்கு அந்த வட்டத்திற்குள் மட்டும்தான் விசாரணை. ஆனால் ஒரு ரிப்போர்ட்டருக்கு மாநிலம் நாடு முழுவதும் விசாரணை இருக்க வேண்டும் என்பதை தன் வசனங்கள் மூலம் நெத்தியடியாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் அமுதன்.

ஜீவா நடித்த ‘கோ’ & விஜய்சேதுபதி நடித்த ‘கவண்’ ஆகிய படங்கள் பத்திரிகை துறையை பற்றி இருந்தாலும் ‘ரத்தம்’ படம் இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசத்தை ஆழமாக சொல்லி இருக்கிறது.

முக்கியமாக இன்று சோசியல் மீடியாக்களில் அதிக அளவில் காணப்படும் மதவெறுப்பு அரசியல்… ஜாதி வெறுப்பு அரசியல்.. நடிகர்கள் ரசிகர்கள் மோதல் அரசியல்.. இதனால் தூண்டப்படும் விஷமிகள்.. இதற்கான நெட்வொர்க்.. அவர்களுக்கு கிடைக்கும் ஆதாயம் என அனைத்தையும் அலசி இருக்கிறார் இயக்குனர் அமுதன்.

ஆக ரத்தம்.. சத்தமில்லாத யுத்தம்

Raththam movie review and rating in tamil

இறுகப்பற்று விமர்சனம் – 3.5/5.. உறவே உயிர்.!

இறுகப்பற்று விமர்சனம் – 3.5/5.. உறவே உயிர்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருமண தம்பதிகளின் காதலும் மோதலும் கலந்த கலவை ‘இறுகப்பற்று’.

கதைக்களம்..

3 தம்பதிகள்…

விக்ரம் பிரபு – ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒரு ஜோடி.

விதார்த் – அபர்னதி ஒரு ஜோடி..

ஸ்ரீ – சானியா ஐயப்பன் ஒரு ஜோடி..

விக்ரம் பிரபு – ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஜோடி வசதியான தம்பதிகள். இவர்களுக்கு குழந்தை இல்லை.

பிரச்னைகளுடன் வரும் தம்பதிகளுக்கு Couples Therapy’ கொடுக்கும் பணி செய்கிறார் ஷ்ரத்தா. எனவே தன் கணவருடன் சண்டை போடாமல் முன்னெச்சரிக்கையுடன் வாழ்கிறார் ஷ்ரத்தா.

விதார்த் – அபர்னதி தம்பதியருக்கு ஒரு கைக்குழந்தை. இவர்கள் நடுத்தர குடும்பம். மனைவி அபர்னதி குண்டாக இருப்பதால் விவகாரத்தை வேண்டும் என்கிறான் விதார்த்.

அடுத்த ஜோடி ஸ்ரீ – சானியா ஐயப்பன். இவர்கள் இளவயது தம்பதியர். இதில் ஸ்ரீ மீடியாவில் வேலை செய்கிறார். இல்லத்தரசியாக இருப்பதால் கணவன் அசிங்கப்படுத்தவே சானியா ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறார்.

இந்த ஜோடிகளுக்கு வில்லனே அவர்களின் ஈகோ மோதல்தான்..

இந்த தம்பதிகளிடையே சின்ன சின்ன மோதல்கள் எழவே பிரச்சனைகளை தீர்க்க ஷ்ரத்தாவிடம் செல்கின்றனர். அவர் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முயல ஒரு கட்டத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஸ்ரத்தாவுக்கும் பிரச்சனை வருகிறது.

மற்றவர்கள் பிரச்சினைக்காக தன்னைத் தேடி வரும் போது தனக்கே ஒரு பிரச்சனை வருகிறதே என தவிக்கிறார் ஷ்ரத்தா. அதன்பிறகு அவர் என்ன செய்தார்.? என்பதுதான் படத்தின் மீதி கதை

கேரக்டர்கள்…

விக்ரம் பிரபு – ஷ்ரத்தா ஜோடியை சண்டையே போடாத ஹைடெக் தம்பதிகள். ஆனால் ஜோடிகளின் புரிதலை அறிய மொபைல் ஆப் கிரியேட் செய்த பின் ஏற்படும் மாற்றங்களை அழகாக சித்தரித்துள்ளார். அதன் பின்னர் விக்ரம் பிரபு காட்டும் ரியாக்சன் கணவனுக்கே உரித்தான கம்பீரம்.

முந்தைய படங்களில் ஆக்சனில் தூள் கிளப்பும் விக்ரம் பிரபு இதில் அமைதியின் உருவமாக வாழ்ந்திருக்கிறார்.

ஷ்ரத்தா-வின் கேரக்டர் சில நேரங்களில் ஓவர் அட்வைஸ்.. கொஞ்சம் கட்டிங் போட்டு இருக்கலாம். இவர்களின் கெமிஸ்ட்ரி ரசிக்க வைக்கிறது.

3 ஜோடிகள் காண்பிக்கப்பட்டாலும் நமக்கு நெருக்கமானவர்களாக விதார்த் – அபர்னதி ஜோடியை சொல்லலாம்.

குண்டாக இருப்பதால் மனைவியை விவகாரத்தை செய்யும் ஒரு ஐடி ஊழியர் பிரதிபலிக்கிறார் விதார்த். மேலும் லோன் கட்ட முடியாமல் வாழ்நாள் முழுவதும் அவஸ்தைப்படும் ஆண்மகனை உரித்து வைத்திருக்கிறார.

நிஜத்தில் ஸ்லிம்மாக காணப்படும் அபர்னதி இந்த படத்திற்காக 15+ கிலோ எடையை கூட்டியது பாராட்டுக்குரியது. அதன்பின்னர் படம் முடிவதற்குள் உடலை ஸ்லிம்மாக்கி அசத்தியிருக்கிறார் அபர்னதி. இது வேற லெவல் அர்ப்பணிப்பு அபி.

சின்ன காரணத்துக்காக கணவன் விவகாரத்து கேட்கும் போது அபர்னதி உடைந்து நம்மையும் கண்கலங்க வைக்கிறார்.

இளம் வயது ஜோடி ஸ்ரீ – சானியா. என்னதான் பெண் புத்திசாலியாக இருந்தாலும் கணவனிடம் காட்டிக் கொள்ளாத சாந்தமான பெண்ணாக சானியா. ஒரு கட்டத்தில் இவர் விவாகரத்து கேட்கும் காட்சி நல்ல ட்விஸ்ட்.

மீடியா வேலையில் மனோபாலா தவறுகளை சுட்டிக் காட்டும் போது தன் தவறை உணர்கிறார் நாயகன் ஸ்ரீ. மனைவிக்கு கொடுத்த வலிகளை ஸ்ரீ உணரும் காட்சி ஓகே. ஆனால் இன்னும் மெச்சூரிட்டியான நடிப்பை கொடுத்திருக்கலாம்.

ஸ்ரீ – மனோபாலா காட்சிகள் சிரிப்பு ரகம்.. ரியலி மிஸ் யூ மனோபாலா சார்.

மனைவியை அறிவு கெட்ட முண்டம் என திட்டியதற்கு சாரி கேட்டுவிட்டு பின்னர் போனை வைக்கும்போது முண்டம் என திட்டும் காட்சி சிரிப்பலை.

டெக்னீசியன்கள்…

ஜஸ்டின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது. கார்த்திக் நேத்தா எழுதிய பாடல் வரிகள் கை கொடுத்துள்ளது.

படத்தின் ஒளிப்பதிவை கோகுல் பினாய் கவனிக்க மணிகண்டன் பாலாஜி படத்தொகுப்பை கையாண்டுள்ளார். இடைவேளைக்கு பிறகு நீளத்தை கொஞ்சம் குறைத்து இருக்கலாம் எடிட்டர்.

வடிவேலு நடிப்பில் 8 வருடங்களுக்கு முன்பு வெளியான தெனாலிராமன் & எலி ஆகிய படங்களை இயக்கியவர் தான் இந்த யுவராஜ் தயாளன். தற்போது வேறு ஒரு கதைக்களத்தை தேர்ந்தெடுத்து தம்பதிகளுக்கு வாழ்வியல் இடைவெளியை குறைத்து இருக்கிறார்.

உண்மையான சந்தோஷம் என்பது விலை உயர்ந்த பொருட்களில் இல்லை.. என்ன சாப்பிட்டாய்? என்ன செய்கிறாய்? சுற்றுலா செல்வது… இரவில் பயணிப்பது.. வீட்டு வேலையில் கை கொடுப்பது.. என பாடம் எடுத்துள்ளார் இயக்குனர் யுவராஜ் தயாளன்.

படத்தில் வில்லனே இல்லை. ஆனால் தம்பதிகளுக்குள் புரிதல் இல்லை என்றால் அதுவே வில்லன் என் சொல்லியிருக்கிறார் இயக்குனர் யுவராஜ்.

ஆக இறுகப்பற்று.. உறவே உயிர்..

Irugapatru movie review and rating in tamil

சித்தா விமர்சனம் 4/5.; சித்தார்த்தின் சிறப்பான சம்பவம்

சித்தா விமர்சனம் 4/5.; சித்தார்த்தின் சிறப்பான சம்பவம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

பழனி மாவட்டத்தில் துப்புரவு தொழிலாளர்களுக்கு சூப்பர் வைசராக வேலை பார்க்கிறார் சித்தார்த். அண்ணன் தவறியதால் அண்ணி மற்றும் 8 வயது மகள் இருக்கிறார். அண்ணிக்கு உடன்பிறந்த தம்பியை போல ஆதரவாக இருக்கிறார்

தன் பள்ளி தோழி துப்புரவு தொழில் செய்யும் நிமிஷா சஜயனை காதலித்து வருகிறார் சித்தார்த்.

ஒவ்வொரு நிமிடமும் தன் அண்ணன் மகளையே (செல்ல பெயர் சேட்டை) நினைத்து பாசம் கொட்டுகிறார் சித்தார்த். பள்ளியில் கொண்டு விடுவதும் அழைத்து வருவதை கடமையாக செய்து வருகிறார். அவரும் சித்தப்பாவை சித்தா சித்தா என்று அழைப்பார்.

சித்தார்த்தின் நெருங்கிய நண்பர் வடிவேலு. அவர்கள் வீட்டில் உள்ள அக்கா மகளுடனும் (பெயர் பொன்னி) பாசமாக பழகி வருகிறார் சித்தார்த்.

ஒரு சூழ்நிலையில் தன் மகளுக்கும் அவளின் பள்ளி தோழிக்கும் சின்ன (பொன்னி & சேட்டை) சண்டை வருகிறது. இந்த சூழ்நிலையில் அவளின் தோழியே சமாதானம் செய்ய பைக்கில் கொண்டு சென்று அவர்கள் வீட்டில் விட செல்கிறார்.

சில மணி நேரங்களில் பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கிறார் பொன்னி. உன் மகளை விட்டுவிட்டு எங்கள் மகளை மட்டும் நீ தனியாக அழைத்து வர காரணம் என்ன என கேட்கிறார்கள். மருத்துவ பரிசோதனையில் பொன்னி பாலியல் சீண்டலுக்கு ஆளானது தெரிகிறது. எனவே சித்தார்த் மீது பாலியல் புகார் விழுகிறது.

இதன்படி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுகிறார் சித்தார்த். அதன் பின்னர் இரண்டு குடும்பங்களும் என்ன ஆனது? சித்தார்த் நிரபராதி என நிரூபித்தாரா? அப்படி என்றால் குற்றவாளி யார்? என்பதே படத்தின் மீதிக்கதை

கேரக்டர்கள்..

ஒரு துளி கூட சினிமாத்தனம் இல்லாமல் யதார்த்த இளைஞனாக வாழ்ந்திருக்கிறார் சித்தார்த்.. இவரை சித்தா சித்தா என்று தன் அண்ணன் மகள் அழைக்கும் போதெல்லாம் உருகுவதும் அவர் மீது பாசம் கொட்டுவதும் என ஒரு தந்தையாக தரம் உயர்ந்து நிற்கிறார்.

தன்மீது பாலில் குற்றம் சாட்டப்பட்ட பின் எதையும் செய்வது அறியாமல் சித்தார்த் தவிக்கும் காட்சிகள் சிறந்த நடிகனை காட்டியிருக்கிறது.

சித்தார்த் காதலியாக நிமிஷா சஜயன் மற்றும் அண்ணியாக அஞ்சலி நாயர். இரண்டு பெண் குழந்தைகளாக சஹஷ்ரா ஸ்ரீ மற்றும் ஆபியா தஸ்னீம் நடித்துள்ளனர். இவர்கள் அனைவருமே போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளனர்.

அதிலும் நிமிஷா நடிப்பில் பட்டையை கிளப்பி இருக்கிறார்.மலையாளத்தில் சிறந்த நடிகையாக பெயர் எடுத்த இவர் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். இனி இவரை தேடி வாய்ப்புகள் குவியும்.

சித்தார்த், நிமிஷா, அஞ்சலி ஆகிய மூவரும் மட்டுமே அனுபவிக்க கலைஞ்ர்கள். அவர்களுக்கு ஈடு கொடுத்த நடிப்பை குழந்தைகளும் கொடுத்துள்ளனர்.

சித்தார்த் நண்பர்கள் வடிவேலு & சதீஷ்.. போலீஸ்.. பாலியல் குற்றவாளி என ஒவ்வொருவரும் நாம் அன்றாட பார்க்கும் மனிதர்களாக உணர வைத்துள்ளனர்.

போலீஸ் படங்களில் காட்டப்படும் கமர்சியல் போலீசாக அல்லாமல் யதார்த்த போலீசாக ஒவ்வொருவரும் நடித்துள்ளனர் என்பது படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.

டெக்னீசியன்கள்…

திரைக்கதை அமைப்பதிலும் வசனங்களிலும் தான் ஒரு இயக்குனரின் பலம் புரியும். அதை இரண்டையும் சரியாக கொடுத்திருக்கிறார் அருண்குமார்.

வசனத்தில்…

ஆண்கள் எவனும் உத்தமன் இல்லை.. தன் வீட்டு பெண்களை பொக்கிஷமாகவும் அடுத்த வீட்டுப் பெண்களை வேறு மாதிரியாகவும் பார்க்கின்றனர்.. நான் இப்போ உன்னை ஓடி வந்து பார்க்கும்போது ஆண்களின் கண்கள் என் மார்பு மீது தான் இருந்திருக்கும் என நாயகி பேசும் போது… (சிலருக்கு அர்த்தம் புரிந்திருக்கும்.)

பெண் குழந்தைகள் அவர்கள் விவரம் அறியும் வரை பொத்தி பொத்தி வளர்ப்பது அவசியம் என இன்றைய சூழலை சொல்லி இருக்கிறார் இயக்குனர். அதேசமயம் செல்போன் வீடியோ விளையாட்டுக்களால் குழந்தைகளின் கவனம் சிதறுவதையும் காட்சிகளில் உணர்த்தி இருக்கிறார்.

பழனி என்றாலே கோயில்தான். ஆனால் கோயிலை மையப்படுத்தாமல் உடுமலைப்பேட்டை பழனி உள்ளிட்ட பகுதிகளின் இயற்கை காட்சிகளையும் அழகாக படம் பிடித்துள்ளார். பாராட்டுக்கள் ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்ரமணி.

குடும்ப உறவு… த்ரில்லர் பாணி என இரண்டு இசை முறைகளையும் சரிசமமாக கொடுத்து மெருகேற்றி இருக்கிறார் இசையமைப்பாளர் திபுநினன் தாமஸ். பின்னணி இசையில் பின்னி பெடல் எடுத்து இருக்கிறார் விஷால் சந்திரசேகர்.

சுரேஷ் A.பிரசாத்தின் எடிட்டிங் பணிகள் இதை ஒரு திரில்லர் பாணியில் கொண்டு செல்கிறது.. முக்கியமாக குற்றவாளியை போட்டு தள்ள சித்தார்த் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் சீட்டு நுனியில் அமர வைக்கும் காட்சிகள்.

பண்ணையாரும் பத்மினியும் மற்றும் சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் தான் இந்த படத்தின் இயக்கி இருக்கிறார் அவரது முந்தைய படங்களைப் போலவே இதிலும் குடும்ப உறவுகளின் அவசியத்தை உணர்த்தி இருக்கிறார். கொஞ்சம் திரில்லர் கலந்து கொடுத்து சுவை கூட்டி இருக்கிறார்.

கதைக்குத் தேவையான நடிகர்களையும் அவர் சரியாக தேர்ந்தெடுத்துள்ளது அவரின் நம்பிக்கை வலுவை காட்டுகிறது.

நம் குழந்தைகளுடன் நெருங்கி பழகும் எந்த நபராக இருந்தாலும் அவரையும் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்பதையும் எச்சரிக்கையுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர் அருண்.

ஆக சித்தா… சித்தார்த்தின் சிறப்பான சம்பவம்

Chithha movie review and rating in tamil

இறைவன் விமர்சனம் 1.5/5.. இரக்கமே இல்லையா ரவி.?

இறைவன் விமர்சனம் 1.5/5.. இரக்கமே இல்லையா ரவி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

அசிஸ்டன்ட் கமிஷனர் ஜெயம்ரவி. இவரது நெருங்கி நண்பர் நரேன். நரேனின் மனைவி விஜயலட்சுமி. நரேனின் தங்கை நயன்தாரா.

சிட்டியில் இளம்பெண்கள் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்படுகின்றனர். இதனால் காவல்துறை பரபரப்பாகிறது.

ஒரு கட்டத்தில் சைக்கோ கில்லரை ஜெயம் ரவியும் நரயினும் பிடித்து விடுகின்றனர். குற்றவாளி பிடிபட்டாலும் நரேன் மரணம் அடைகிறார்.

நண்பன் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாத ஜெயம் ரவி ஒரு கட்டத்தில் போலீஸ் வேலையை விட்டு விடுகிறார். சில தினங்களில் சைக்கோ கில்லர் சிறையில் இருந்து தப்பித்து விடுகிறார்.

அதன் பின்னர் ஜெயம் ரவிக்கு நெருக்கமானவர்களை கொலை செய்கிறான். காக்கி சட்டையை கழட்டி போட்ட ஜெயம்ரவி என்ன செய்தார்? கில்லரை கண்டுபிடித்தார்? அவனின் நோக்கம் என்ன? காவல்துறை என்ன செய்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

முகத்தில் ஒரு துளி கூட சிரிப்பு இல்லாமல் முறைக்கிறார் கோபம் கொள்கிறார் சண்டையிடுகிறார் இதுதான் ஜெயம் ரவியின் வேலை. தனி ஒருவனில் பார்த்த போலீஸ் கதாபாத்திரம் ஒரு துளி கூட இதில் இல்லை.

ஆனால் ரவி – நயன் ஜோடியை பார்க்கும் போது தனி ஒருவன் படம் கண் முன் வந்து செல்வதை தடுக்க முடியவில்லை.

படம் தொடங்கி 20 நிமிடத்திற்குள் மலையாள நடிகர் நரேன் காட்சி முடிந்து விடுகிறது. ஒரு நல்லதொரு நடிகருக்கு காட்சிகள் கொடுக்கப்படவில்லை.

அது போல ஆசிஷ் வித்யார்த்தி அழகம்பெருமாள், விஜயலட்சுமி, ஹீரோயின் நயன்தாரா என அனைவரது கதாபாத்திரங்களும் வீணடிக்கப்பட்டுள்ளது.

இதில் கொஞ்சம் தப்பி பிழைத்தவர் சார்லி. போஸ்ட்மாடம் செய்யும் பாத்திரத்தில் நன்றாகவே ஸ்கோர் செய்து இருக்கிறார்.

நயன்தாராவுக்கும் ஜெயம் ரவிக்கும் எப்போதும் கெமிஸ்ட்ரி செட்டாகாது போல. தனி ஒருவன் படத்திலும் ரவியை துரத்தி துரத்தி காதலிப்பார் நயன்தாரா. இதிலும் அதே நிலைதான். நயன்தாரா என்ற பிராண்டுக்காக கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர்கள் நிலையை நினைத்து இருந்தால் இயக்குனர் இவரை கமிட் செய்திருக்க மாட்டார். அவருக்கு பதிலாக லோ பட்ஜெட் நாயகியை தேர்ந்தெடுத்து இருக்கலாம்.

ஸ்மைலி கில்லராக ராகுல் போஸ். அதற்குப் பின் அதே சைக்கோ கில்லராக வினோத் கிஷன். இவரைப் பார்த்ததுமே கொலைகாரன் என ஜெயம் ரவி கண்டுபிடிப்பதெல்லாம் ரொம்ப ஓவர்.

டெக்னீசியன்கள்…

ஒளிப்பதிவாளர் ஹரி கே வேதாந்த் தன் பணியை மிகவும் சிரமப்பட்டு செய்து இருக்கிறார். ஒவ்வொரு ஃபிரேமிலும் தன்னுடைய பணியை உணர்ந்து செய்து இருக்கிறார்.

எடிட்டர் இரண்டாம் பாதியில் நிறைய காட்சிகளை வெட்டி எறிந்து இருக்கலாம். வினோத் கிஷனின் ஓவர் ஆக்டிங்.. கொலையைப் போலவே ஓவர் டோஸ் ஆக இருக்கிறது..

யுவன் சங்கர் ராஜா தான் இந்த படத்திற்கு இசையமைத்தாரா என்ற கேள்வி எழாமல் இல்லை.. பாடல்கள் கவரவில்லை.. பின்னணி இசை பாராட்டும்படி உள்ளது.

‘என்றென்றும் புன்னகை’ என்ற அருமையான படத்தை கொடுத்த அகமது தான் இந்த படத்தையே இயக்கியிருகிறார். அவரிடம் இருந்து இப்படி ஒரு கொடூரமான படமா? என்று எண்ண வைக்கிறது.

‘இறைவன்’ என்ற தலைப்பை இதுவரை யாருமே வைத்ததில்லையா என ஜெயம் ரவி சமீபத்திய நிகழ்ச்சியில் கேட்டிருந்தார். இந்த படத்தை பார்த்த பிறகு இறைவா என்று அழைக்க கூட பக்தர்கள் அஞ்சுவார்கள்.

12 கொலைகள் அடுத்தடுத்து மீண்டும் கொலைகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. அவையெல்லாம் கிராஃபிக் செய்யப்பட்ட நிர்வாணமாக இருந்தாலும் படம் பார்க்கும் நம்மீதே ரத்த வாடை அடிக்கிறது.

கடத்தல், நிர்வாணம், துண்டு துண்டாக வெட்டி கொலை வன்முறை என கிரைம் தில்லர் பாணியில் படங்களை எடுத்து ரசிகர்களை இம்சை செய்ய வேண்டாம் தமிழ் இயக்குனர்களே.

நல்ல கதைகளை கொண்டு வாருங்கள் ரசிகர்களுக்கு விருந்தளியுங்கள் என்று இந்த விமர்சனம் மூலம் கேட்டுக் கொள்கிறோம்.

(இதேபோன்று கதைகளத்துடன் தான் ராட்சசன் படம் வெளியானது. ஆனால் அது ஒரு நேர்த்தியான திரைக்கதையுடன் முதிர்ச்சியான ஸ்கிரிப்டுடன் படமாக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.)

கலை இயக்குனரின் பணியை பாராட்ட வேண்டும். கொலை வன்முறை என எதுவாக இருந்தாலும் ஆக்ஷன் காட்சிகள் என அனைத்திலும் தன்னுடைய கலைப் பணியை சிறப்பாக செய்துள்ளார்.

கதை திரைக்கதை மோசமாக இருக்கும் பட்சத்தில் அனைவரது உழைப்பு வீணடிக்கப்பட்டிருக்கிறது.

ஆக இறைவன்… இரக்கமே இல்லையா ரவி?

Iraivan movie review and rating in tamil

More Articles
Follows