தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
The Goat Life ஆடு ஜீவிதம் விமர்சனம்.. பாலைவனப் பாவங்கள்
கேரளாவில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட நாவலை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.. மார்ச் 29ஆம் தேதி தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் தி கோட் லைஃப் என்ற இந்த படம் வெளியாகிறது.
மலையாளத்தில் புகழ்பெற்ற இயக்குனர் பிளஸ்சி என்பவரால் இந்த படம் உருவாகியுள்ளது. பிரிதிவிராஜூக்காக 16 வருடங்கள் காத்திருந்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.. இதன் இடையில் பிரித்திவிராஜ் பல படங்களில் நடித்துவிட்டார். மேலும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் கல்யாணம் குடும்பம் குழந்தைகள் என ஆகிவிட்டது. மேலும் இயக்குனராகவும் மாறிவிட்டார்.
ஆனால் பிரித்திவிராஜ்விடம் 2008 ஆம் ஆண்டு இந்த கதையை சொல்ல ஆரம்பித்து 2018 இல் இதன் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். அதன் பின்னர் கொரோனா காலத்தில் வெளிநாட்டு பாலைவனத்தில் இந்த படக்குழுவினர் மாட்டிக்கொண்டதும் அப்போதும் செய்தியாக வந்தது.
அதற்கு பின்னர் லாக்டவுன் முடிந்து இந்த படத்தை தொடங்கி முடித்து தற்போது திரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
இத்தனை கஷ்டங்களை அனுபவித்து உருவாக்கி இந்த ஆடு ஜீவிதம் படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.
பிரித்விராஜ் – அமலாபால் ஜோடியாக நடிக்க ஜிம்மி முக்கிய வேடத்தில் நடிக்க ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
ஸ்டோரி…
கேரளாவில் நடைபெற்ற கதை என்றாலும் தமிழுக்காக கும்பகோணத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.
நஜீப். (பிருத்விராஜ்) மற்றும் அமலாபால் இருவரும் தம்பதியினர்.. தன்னுடைய குடும்ப கஷ்டத்திற்காக வெளிநாடு செல்ல நினைக்கிறார் பிரித்திவிராஜ். அதற்காக வீடு நிலம் எல்லாம் விற்று தன் உறவினர் பையன் ஒருவனுடன் செல்கிறார்.
இவரின் விசா ஏற்பாடுகளை கவனித்த ஏஜென்ட் இவரை ஏமாற்றி ஒரு வழியாக அரபு நாட்டுக்கு அனுப்பி வைக்கிறார். அப்போது பிரித்விராஜும் உறவினர் பையனும் பிரிந்து விடுகின்றனர்.. இதை தெரியாமல் சென்று அரபு நாட்டில் உள்ள ஒரு பாலைவனத்தில் சிக்கி கொள்கிறார்.
அங்கு மொழி தெரியாமல் சரியான உணவு தண்ணீர் கிடைக்காமல் செம்மறி ஆடுகள் மற்றும் ஒட்டகங்களை மேய்த்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக அடிமைத்தன வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்..
ஒரு கட்டத்தில் தன்னுடன் இந்தியாவில் இருந்து புறப்பட்ட உறவினர் பையனை சந்திக்கிறார். இவர்களுடன் ஒரு ஆப்பிரிக்க நண்பரும் இணைந்து கொள்கிறார்.
அடிமைத்தன வாழ்க்கையில் சிக்கிக்கொண்ட இவர்கள் மூவரும் அங்கிருந்து தப்பிக்க திட்டம் போடுகின்றனர்.
அவர்களின் திட்டம் நிறைவேறியதா? அவர்களுக்கு விடுதலை கிடைத்ததா? இந்தியா திரும்பி வந்தார்களா? அவர்களின் நிலை என்ன? அந்த அரேபியர்கள் இவர்களை என்ன செய்தனர்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
Prithviraj Sukuamarn
Amala Paul
Jimmy Jean-Louis
K.R. Gokul
Talib al Balushi
RikA
பிரித்திவிராஜ் ஒரு நடிகராக நமக்குத் தெரியும்.. ஆனால் இதில் அந்த நடிகர் தொலைந்து இருக்கிறார்.. அவர் நஜீப் என்ற கேரக்டரில் வாழ்ந்து இருக்கிறார் என்றே சொல்லலாம்.. அந்த அளவிற்கு ஒரு அர்பணிப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
செழிப்பான கேரளாவில் இளமையாக தோன்றும் பிரிதிவிராஜ் பாலைவனம் சென்றதும் கொஞ்சம் கொஞ்சமாக கறுத்துப் போவதும் தாடி வளர்ப்பதும் தலைமுடி வளர்வதும் என ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு முகத்தோற்ற அமைப்பில் தன்னை வருத்தி நடித்திருக்கிறார்..
தப்பித்துச் செல்ல நினைக்கும் போது தண்ணீரில் குளிப்பதும் நிர்வாணமாக நடந்து செல்லும் போதும் அடடா என்ன ஒரு அர்ப்பணிப்பான் நடிப்பு என வியக்க வைக்கிறார்.
இனி உங்களைக் காண முடியாது என தப்பித்துச் செல்ல நினைக்கும் போது அங்கு உள்ள ஆடுகள் மற்றும் ஒட்டகங்களிடம் அவர் பேசி செல்லும் போது அவரின் நல்ல உள்ளத்தை காட்டுகிறது… பிருத்விராஜ்க்கு கண்டிப்பாக பல விருதுகள் கிடைக்கும்..
ஆப்பிரிக்க நபராக நடித்திருக்கும் ஹாலிவுட் நடிகர் ஜிம்மியும் உணர்வுபூர்வமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.. தான் மட்டும் தப்பித்துச் செல்ல நினைக்காமல் நடக்க முடியாத இந்தியருக்கு அவர் உதவும் காட்சி வேற லெவல்.. இந்திய சிறுவனுக்காக அவர் உருகி உதவுவதும் நம்மை கண்கலங்க வைக்கும்..
அமலாபால் கொஞ்ச நேரம் மட்டுமே வருகிறார்.. இந்த சீன்கள் போதும் நான் ஸ்கோர் செய்து விடுவேன் என சேலஞ்சாக எடுத்து அதை நிறைவேற்றி இருக்கிறார்.
டெக்னீசியன்ஸ்…
Director – Blessy Ipe Thomas
Production -Visual Romance
Music – A.R. Rahman
Editor -Sreekar Prasad
Cinematography – Sunil KS
Audiography – Resul Pookuttty
இப்போது டெக்னாலஜி வளர்ந்து விட்ட காலத்தில் செல்போன் முதலிய தொலைத்தொடர்பு சாதனங்கள் இருக்கின்றன.. ஆனால் ஒரு காலத்தில் அவையெல்லாம் இல்லாத போது இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பாலைவனத்தில் சிக்கிய இந்தியர்கள் என எளிமையாக இந்த கதையை நாம் ஒரு வரியில் சொல்லிவிட்டாலும் அதில் பட்ட கஷ்டங்களை உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் பிளஸ்சி.
ஒளிப்பதிவாளர் சுனில் அவர்களின் கைவண்ணம் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.. முக்கியமாக ஃபிளாஷ்பேக் காட்சிகளில் அமலா பாலுக்கு பிரித்விராஜ் நீச்சல் கற்றுக் கொடுக்கும் அந்த ஒரு காட்சி கவிதை கவிதை கவிதை.. உதட்டில் முத்தமிட்டு உணர்வுபூர்வமான காதலை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்..
மொழி தெரியாமல் பாலைவனத்தில் அவர் படும் கஷ்டங்கள் தன் நண்பனை நினைத்து உருகும் காட்சிகள் தன் குடும்பத்தை நினைத்து ஏங்கும் காட்சிகள் விடுதலை கிடைக்காதா என அழுகின்ற காட்சிகள் என ஒவ்வொன்றையும் உணர்ந்து நஜீப் என்ற கேரக்டரை நச்சென்று செய்திருக்கிறார்..
ஆனால் இந்தியாவில் வாழுகின்ற பெரும்பாலான முஸ்லிம்களுக்கு நிச்சயம் உருது அரபி ஹிந்தி ஓரளவிற்கு தெரிந்திருக்கும்.. ஆனால் அரபு நாட்டில் அவர்கள் பேசும் ஒரு சிறு வார்த்தை கூட தெரியாமல் நஜீப் முழிப்பது ஏன்? என்பது தான் புரியவில்லை..
பாலைவனத்தில் வீசும் புயல் காற்று அங்கு ஊர்ந்து செல்லும் ஆயிரம் பாம்புகள், முட்டி மோதும் செம்மறி ஆடுகள், தண்ணீர் இன்றி செத்து கிடக்கும் ஒட்டகங்கள், தண்ணீர் அருகில் ஓடும் பல்லிகள் என ஒவ்வொன்றையும் காட்சிப்படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுனில்.
பாலைவனத்தில் வீசும் சூறாவளி காற்றுக்கு ஏற்ப சூறாவளி இசையை கொடுத்து இருக்கிறார் ஏ ஆர் ரகுமான்.. அவரது பின்னனி இசையும் பாடல்களும் கதை ஓட்டத்திற்கு உயிரைக் கொடுத்திருக்கிறது.
ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டி இந்தப் படத்தில் சவுண்ட் இன்ஜினியராக பணிபுரிந்து இருக்கிறார்.. ஒவ்வொன்றையும் ரசித்து ஒலி குரலாக பதிவிட்டு இருக்கிறார்..
தங்களுக்கு விடியல் பிறக்காதா? விடிவு காலம் பிறக்காதா வெளிநாடு சென்று கை நிறைய சம்பாதித்து குழந்தைகளையும் மனைவி குடும்பத்தை காப்பாற்றலாம் என வெளிநாடு ஓடும் ஒவ்வொரு இந்தியனுக்கும் இந்த படம் சமர்ப்பணம் ஆகும்.
15 வருடங்கள் பட்ட கஷ்டத்திற்கு ஈடு இணையாக தன்னுடைய முழு உழைப்பை கொடுத்து படத்திற்கு உயிர் ஊட்டி இருக்கிறார் இயக்குனர் பிளஸ்சி.
Aadu Jeevitham The Goat Life review