தப்பாட்டம் விமர்சனம்

தப்பாட்டம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : துரை சுதாகர், டோனா, கோவை ஜெயக்குமார், பேனாமணி, கூத்துப்பட்டரை துளசி, பேராசிரியை லட்சுமி, ரூபி, பொள்ளாச்சி M.K. ராஜா மற்றும் பலர்.
இயக்கம் : முஜிபூர் ரஹ்மான்
இசை : பழநிபாலு
ஒளிப்பதிவாளர் : ராஜன்
எடிட்டர்: ஆர். சரண் சண்முகம்
பி.ஆர்.ஓ. : குமரேசன்
தயாரிப்பு : ஆதம்பாவா

Thappattam

கதைக்களம்…

கதையின் நாயகன் துரை சுதாகர் பிணத்திற்காக தப்பாட்டம் அடிப்பவர். சூதாட்டம், சாராயம், தப்பாட்டம் ஆகியவைதான் இவரது பொழுதுபோக்கு.

இவரது அக்கா மகள் டோனா இவரையே சுற்றி சுற்றி வருகிறார்.

ஒருநாள் டோனாவை கற்பழிக்க முயல்கிறார் வில்லன். ஆனால் அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடி வந்து தன் அம்மாவிடம் சொல்கிறார்.

இதை தன் தம்பியிடம் சொன்னால் பிரச்சினை அதிகமாகும் என்பதால் யாரிடமும் சொல்லக்கூடாது என்கிறார் டோனாவின் அம்மா.

அதன்பின்னர் துரை சுதாகருக்கும் டோனாவுக்கு திருமணம் நடக்கிறது. சில மாதங்களுக்கு பின்னர் டோனா கர்ப்பம் அடைகிறார்.

இந்நிலையில் டோனாவை கற்பழித்துவிட்டேன் என சுதாகர் முன்னிலையில் சொல்கிறார் வில்லன்.

இதனால் தன் மனைவியின் கர்ப்பத்திற்கு காரணம் வில்லன்தான் என்பதால் மனைவியை ஒதுக்கிவைக்கிறார் சுதாகர்.

அதன்பின்னர் என்ன நடந்தது?, டோனா தன்னை பத்தினி என்று நிரூபித்தாரா? சுதாகர் தன் அக்கா மகளை ஏற்றுக் கொண்டாரா? என்பதே மீதிக்கதை.

Thappattam movie stills public star

கேரக்டர்கள்…

பப்ளிக் ஸ்டார் என்ற பட்டத்தை வைத்துக் கொண்டு இப்படம் தொடர்பான விளம்பரங்களில் ஜொலித்து வருகிறார் துரை சுதாகர்.

குடிசைப் பகுதியில் வாழும் மக்களில் ஒருவராக தோன்றியிருக்கிறார்.

ஆத்திரக்கானுக்கு புத்திமட்டு என்ற கேரக்டரில் நன்றாகவே தேர்ச்சி பெறுகிறார். ஆனால் முகபாவனைகளில் இன்னும் மெச்சூரிட்டி தேவை.

முதலில் லூசுப்பெண் போல வரும் நாயகி டோனா ரோசாரியா திருமணத்திற்கு பிறகு தன் உணர்வுபூர்வமான பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

ஒரு குத்தாட்ட பாடலில் கவர்ச்சி காட்டி சூடேற்றுகிறார்.

சுதாகரின் மாமா, டோனாவின் அம்மா கேரக்டர்கள் படத்திற்கு பலம்.

அதிலும் டோனாவின் பாட்டியாக வருபவர் கண்களாலேயே தன் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். இவருக்கு நிறைய வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கலாம்.

முதல்பாதியில் வரும் சாராயக்கடை காட்சிகள் காமெடிக்கு பதிலாக வெறுப்பை ஏற்றுகிறது.

Thappattam movie stills

தொழில்நுட்ப கலைஞர்கள்..

பழனி பாலுவின் இசையில் ஓரிரு பாடல்கள் ரசிக்கும் ரகம். பாடலை விட பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறது.

ஒளிப்பதிவில் இன்னும் மெருகேற்றியிருக்கலாம்.

தம்பதிகள் என்றால் சந்தேகத்தை தவிர்த்து சந்தோஷமாக வாழவேண்டும். இவர்களின் நடுவில் சந்தேகம் வந்துவிட்டால் அது எந்த மாதிரியாக விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இப்படம் நல்ல உதாரணம்.

படத்தின் க்ளைமாக்ஸ் பாரதி கண்ணம்மா படத்தை நினைவு படுத்துகிறது.

படத்தின் ஆரம்பம் முதலே நாயகியுடன் பாசமாக இல்லை நாயகன். பின்பு இறுதிகாட்சியில் மட்டும் சாவை தேடிச் செல்வது ஏனோ..?

காட்சிகளில் சுவாரசியம் கூட்டியிருந்தால் இந்த தப்பாட்டம் சவுண்ட் பார்ட்டியாக இருந்திருக்கும்.

தப்பாட்டம்… தம்பதியருக்குள் சந்தேகம் வந்தால் திண்டாட்டம்தான்

விவேகம் விமர்சனம்

விவேகம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : அஜித், விவேக்ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், கருணாகரன் மற்றும் பலர்.
இயக்கம் : சிவா
இசை : அனிருத்
ஒளிப்பதிவாளர் : வெற்றி
எடிட்டர்: ரூபன்
பி.ஆர்.ஓ. : சுரேஷ்சந்திரா
தயாரிப்பு : சத்யஜோதி பிலிம்ஸ்

Vivegam-Movie-Shooting-Spot

கதைக்களம்…

அஜித் ஒரு இண்டர்நேஷ்னல் ஸ்பையாக வருகிறார்.

இவருடைய டீமில் விவேக் ஓபராய், செர்ஜ் குரோசன், அமிலா டெர்சிமெகிக் உள்ளிட்டோர் உள்ளனர்.

அஜித்தின் காதல் மனைவி காஜல் அகர்வால்.

ஒரு சூழ்நிலையில் அஜித் டீமுக்கு ஒரு மிஷன் வருகிறது.

பூமிக்கு அடியில் சில பகுதியில் வைக்கப்பட்டுள்ள 3 நியூக்ளியர் (Nuclear) வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்ய வேண்டும் என்பதுதான் அது.

அதை செயலிழக்க செய்ய வேண்டுமானால் அந்த பாஸ்வேர்டூ தெரிய வேண்டும். அது தெரிந்து நபரான அக்ஷராஹாசனை தேடிச் செல்கிறது அஜித் அண்ட் டீம்.

அப்போது அக்ஷராஹாசனை பற்றி சில அதிர்ச்சியான தகவல்கள் அஜித்துக்கு தெரிய வருகிறது.

அதன்பின் நடந்தது என்ன? நியூக்கிளியர் பாம் வெடித்ததா? அஜித் அதை அகற்றினாரா? அக்ஷராஹாசனை கண்டுபிடித்தாரா? என்பதே இதன் க்ளைமாக்ஸ்.

vivegam ajith kajal

கேரக்டர்கள்…

படம் முழுக்க தான் பேசப்பட வேண்டும் என நினைத்துவிட்டாரோ என்னவோ? உழைப்பை அள்ளி கொட்டியிருக்கிறார் அஜித்.

டீமை கையாளும் விதம், மேனரிசம், லுக், நடை, ஸ்டைல் என அனைத்திலும் தனி கவனம் செலுத்தியுள்ளார்.

காஜலுடன் செய்யும் ரொமான்ஸில் நல்ல மெச்சூரிட்டி தெரிகிறது.

ஆக்ஷன் கதையில் காதலுக்கும் காஜலுக்கும் வேலையிருக்காது என நினைத்தால், அதிலும் ஸ்கோர் செய்துள்ளனர் இருவரும்.

இவர்களிடையே உள்ள கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது. அதிலும் ஒரு சூட்டிங் காட்சியில் காஜலின் ரியாக்சன் செம.

அக்ஷராஹாசனுக்கு அதிகமாக வேலையில்லை என்றாலும், கிடைத்த கேரக்டரை நிறைவாக செய்திருக்கிறார். அவ்வளவு பில்டப் கொடுத்துவிட்டு சப்பென்று முடித்து விட்டார்கள்.

விவேக் ஓபராய் மற்றும் கருணாகரன் கேரக்டர்கள் கச்சிதம்.

ஒரு பாலிவுட் நடிகரை ஸ்டைலிஷ்ஷாக காட்டியிருந்தாலும் இன்னும் வேலை வாங்கியிருக்கலாம். (அவரது ரசிகர்கள்தான் பாவம்)

ajith vivegam bike

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஒளிப்பதிவாளரின் பெயரைப் போலவே படத்தின் ஒளிப்பதிவு காட்சிகளும் வெற்றிதான்.

ஒரு ஹாலிவுட் படத்தை ரசிகர்களுக்கு தர வேண்டும் என மெனக்கெட்டு ஜெயித்திருக்கிறார்.

எடிட்டர் ரூபன் அவரது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.

அனிருத்தின் சில பாடல்கள் படத்திற்கு நன்றாக பொருந்தியுள்ளது. இவரது பின்னணி இசை ஆக்சன் காட்சிகளுக்கு பலம் சேர்த்துள்ளது.

ajith vivegam

இயக்கம் பற்றிய அலசல்…

படத்தின் பலம் கதையின் பலம் எல்லாமே ஆக்சன்தான். டிரெயின் அருகே பைட், மோட்டர் பைக் சேஸிங் சீன், சிக்ஸ்பேக் சீன்ஸ் அனைத்தும் அஜித் ரசிகர்களுக்கான மெகா ட்ரீட்.

அஜித்துக்கான கதையா? இல்லை கதைக்காக அஜித்தா? எனத் தெரியாத அளவுக்கு இரண்டையும் மாஸாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சிவா.

அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடிக்கிறார் ஓகேதான். ஆனால் ரொமான்ஸ் மற்றும் பாடல் காட்சியிலாவது டை அடித்திருக்கலாம். கொஞ்சம் நெருட செய்கிறது.

படத்தில் சில ட்விஸ்ட்டுகளை வைத்திருக்கிறார் சிவா. அது எல்லா ஆடியன்ஸையும் சென்று சேருமா? எனத் தெரியவில்லை. எல்லாம் ஹைடெக்டாக இருப்பதால் நிதானமாக சொல்லியிருக்கலாம்.

200 பேர் அஜித்தை நோக்கி சுட்டுக் கொண்டிருக்கும்போது அஜித் அடியே படாமல் தப்பிப்பது எல்லாம் ஓவர். இவர் மட்டும் சரியாக சுட்டு ஆட்களை காலி செய்கிறார்.

விவேக் ஓபராய். நண்பனா? வில்லனா? என தெரியாத அளவுக்கு அஜித்தின் புகழை பேசிக் கொண்டே இருக்கிறார். அப்படியென்றால் அவரை ஏன் எதிர்க்க வேண்டும்.?

ஜெயிக்கிறது முன்னாடி கொண்டாடுறது. ஜெயிச்ச பிறகு ஆடுறது இதெல்லாம் என் அகராதியிலே கிடையாது என்ற அஜித் பன்ச் பேசும் போதெல்லாம் பளிச்சிடுகிறார்.

ஆனால் இவரை சுட்டுத் தள்ள அவ்வளவு பேரு காத்திருக்கும்போது பன்ச் பேசுவது எப்படி சாரே? செட்டாகும்.

இதுபோன்ற சில லாஜிக்கை மறந்தால் இந்த ஹாலிவுட் மேஜிக்கை நீங்கள் நிச்சயம் ரசிக்கலாம்.

விவேகம்…  தமிழ் சினிமாவில் ஹாலிவுட் படம்

தரமணி விமர்சனம்

தரமணி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஆண்ட்ரியா, அஞ்சலி, வசந்த்ரவி, அழகம்பெருமாள், ஜேஎஸ்கே மற்றும் பலர்.
இயக்கம் : ராம்
இசை : யுவன்சங்கர் ராஜா
ஒளிப்பதிவாளர் : தேனிஈஸ்வர்
எடிட்டர்: ஸ்ரீகர்பிரசாத்
பி.ஆர்.ஓ. : சுரேஷ்சந்திரா
தயாரிப்பு : ஜேஎஸ்கே (சதீஷ்குமார்)

கதைக்களம்…

நமக்கு பிடித்த ஆண்/பெண் நட்பாக இருந்தால் யாரிடம் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் காதல் என்ற வட்டத்துக்குள் வந்துவிட்டால் அவர் நம்மிடம் மட்டும்தான் பேச வேண்டும் என் ஒரு அதீத பிடிப்பு (Possessiveness) வந்துவிடும்.
அது நம் சந்தோஷத்தை சந்தேகமாக மாற்றிவிடும். அதன் பின்னால் வரும் விளைவுகளை உணர்வுபூர்வமாக உரைக்க சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராம்.

ஒரு மழைக்காக ஒதுங்கும் ஆண்ட்ரியாவும் வசந்த் ரவியும் சந்திக்கின்றனர். பழகுகின்றனர். அதன்பின்னர் அவர்களுக்குள் பரிமாறப்படும் விஷயங்களும் விவாதங்களுமே படத்தின் கதையோட்டம்.

அஞ்சலியை காதலித்து ஏமாற்றப்பட்ட வசந்த்ரவி, கணவனைப் பிரிந்த ஆண்ட்ரியா… இவர்களுக்குள் எழும் காதல், மோதல், ஊடல், என அனைத்தையும் பிரித்து மேய்ந்திருக்கிறார் ராம்.

DG_xL3VUAAAwv0a

கேரக்டர்கள்…
ஆண்ட்ரியாவுக்கு இனி இப்படியொரு கேரக்டர் கிடைக்குமா? தெரியாது. எனவே கிடைத்த வாய்ப்பில் சிக்ஸர் அடித்திருக்கிறார். அப்ளாஸை அள்ளிச் செல்கிறார் ஆண்ட்ரியா.
காதலி, அம்மா, ஐ.டி.பணி பெண் என எல்லா தரப்பிலும் நம்மை அசத்தியிருக்கிறார்

அறிமுகநடிகர்தான் என்றாலும் வசந்த்ரவியை பூங்கொத்து கொடுத்து வரவேற்கலாம். நடிப்பில் நல்ல முதிர்ச்சி.

காதலி போனை கையில் வைத்திருந்தால் சந்தேகம் அதனால் ஏற்படும் கோபம், அதன்பின் பாவம், பரிதாபம் என நன்றாக ஸ்கோர் செய்கிறார்.

சில காட்சிகளிலேயே வந்தாலும் அழகிலும் நடிப்பிலும் நம்மை கவர்கிறார் அஞ்சலி.

ஒற்றைக் காட்சியில் அழகம் பெருமாள் அசத்தல்.

இப்பட தயாரிப்பாளர் ஜேஎஸ்கேவுக்கு போலீஸ் அதிகாரி வேடம். சபாஷ் சதீஷ் சார்.

சிறுவன் ஏட்ரியன் தன் கேரக்டரை சரியாக செய்திருக்கிறார்.

யுவன் மற்றும் நா.முத்துக்குமார் கூட்டணி என்றுமே சோடை போகாது என்பதற்கு இந்த படமும் ஒரு உதாரணம்.

யாரோ உச்சிக்கிளை மேலே, உன் பதில் வேண்டி, ஒரு கோப்பை பாடல்கள் ஆகிய அனைத்தும் ரசிக்கும் ரகம்.

சென்னை மாநகரத்தின் அழகையும் அழுக்கையும், அழுகையையும் என ஒட்டுமொத்தமாக அள்ளி தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்.

தேனிஈஸ்வர் என்பதால் என்னவோ, காட்சிகளும் தேன் போன்ற இனிப்பு.

DG8il6XV0AQbG1R

இயக்கம் பற்றிய அலசல்…

’’நீ இனிமே சிகரெட் பிடிக்காதே, ஏன் உனக்கு பிடிக்கத் தெரியலை”, ’’ஒரு பையனுக்கு அம்மா நீ. இனிமே குடிக்காதே….நீயும் உன் அம்மாவுக்கு பையன் தானே” என்ற வசனங்களை பார்த்த பிறகாவது சிகரெட் பிடிப்பவர்கள் திருந்தட்டும்.

படத்தின் காட்சிகள் இடையே ராம் கொடுக்கும் வாய்ஸ் ஓவர் படத்திற்கு ப்ளஸ்.

வசனங்கள் மூலம் விளக்கம் கொடுத்து நம்மை வியக்கவைக்கிறார்.

நன்றாக படித்து வேலைக்கு சென்று ஹைஃபையாக வாழும் பெண்களை இந்த ஆண்களும் சில பெண்களும் ஒரு தவறான கண்ணோத்துடன் பார்க்கின்றனர்.
அதன் தாக்கம் படத்தின் பல இடங்களில் பளிச்சிடுகிறது.
தரமணி… தரமான மணி

வேலையில்லா பட்டதாரி2 விஐபி2 விமர்சனம்

வேலையில்லா பட்டதாரி2 விஐபி2 விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : தனுஷ், கஜோல், அமலாபால், சமுத்திரக்கனி, விவேக், சரண்யா பொன்வண்ணன், ரைசா, சரவண சுப்பையா, பாலாஜிமோகன் மற்றும் பலர்.
இயக்கம் : சௌந்தர்யா ரஜினிகாந்த்
இசை : ஷான் ரோல்டான்
ஒளிப்பதிவாளர் : சமீர் தஹிர்
எடிட்டர்: பிரசன்னா ஜிகே
பி.ஆர்.ஓ. : ரியாஸ் அஹ்மது மற்றும் டைமண்ட் பாபு
தயாரிப்பு : கலைப்புலி எஸ் தாணு மற்றும் தனுஷ்

கதைக்களம்…

படத்தின் கதை ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் (இஞ்ஜினியரிங்) விருது விழாவில் தொடங்குவது போல் காட்சியை அமைத்துள்ளார் சௌந்தர்யா.

அந்த விருது விழாவில் எல்லா விருதுகளும் வசுந்திரா (கஜோல்) நிறுவனத்திற்கு கிடைக்கிறது.

ஆனால் பெஸ்ட் இன்ஜினியர் விருது மட்டும் ரகுவரனுக்கு (தனுஷ்) கிடைக்கிறது.

எனவே அவரை பயன்படுத்திக் கொள்ள, தன் கம்பெனியில் வேலைக்கு சேர அழைக்கிறார் கஜோல்.

ஆனால் அந்த வாய்ப்பை மறுக்கும் சிங்கத்திற்கு வாலாக இருப்பதை விட பூனைக்கு தலையாய் இருக்க விரும்புகிறேன் என பன்ச் பேசி திரும்பி வருகிறார்.

அதன்பின்னர் இவர்களுக்குள் நடக்கும் இன்ஜினியரிங் இடுபாடுகளே படத்தின் முழுக்கதை,

Vip2-movie-stills-27

கேரக்டர்கள்…

தனக்கே உரித்தான அந்த வெட்டி பையன், நக்கல், மிடுக்கு, பன்ச் என அசத்தலாக வருகிறார் தனுஷ்.

லவ் பன்னும்போதும் இப்படிதான் பாத்தா, ஆனா அப்போ ரொமான்ஸ் தெரிஞ்சது, இப்போ கடுப்பா இருக்கே என கூறும்போது இன்றைய நவீன கணவன்மார்களை நிருபிக்கிறார்.

பாடல் மற்றும் ரொமான்ஸ்க்கு அதிக இடம் தராமல் பொறுப்பான சமூக கருத்துக்களை சொல்ல முயற்சித்துள்ளார் தனுஷ்.

நிறைய திருக்குறள்களை அடிக்கடி சொல்லி இளைஞர்களுக்கு நியாபகப்படுத்திய அவருக்கு நன்றி.

குடிச்சியா? ஊதி காட்டு, நான் இங்க பேசிகிட்டே இருக்கேன். நீங்க என்ன பண்றீங்க? என கடுகடுப்பாக அமலாபால் பேசினாலும் அழகாக வருகிறார்.

தனி ட்ராக் இல்லாமல் கதைக்கு தேவையான காமெடி செய்கிறார் விவேக். ஆனால் காமெடியில் இன்னும் கலக்கியிருந்தால் ரசித்திருக்கலாம்.

பொறுப்பான அப்பாவாக சமுத்திரக்கனி. ஆனால் வெறும் அட்வைஸ் செய்ய மட்டுமே வருகிறார்.

கணவன் கண்னுக்கு தெரியாத சரண்யா, தனுஷ்க்கு மட்டும் நேரில் வந்து வழிகாட்டுகிறார்.

திமிருக்கு ஏற்ற அழகு, அழகுக்கு ஏற்ற நடிப்பு என கஜோல் கலக்கல்.

மழையின் போது உள்ள சண்டைக் காட்சியிலும் அனல் பறக்கிறது.

போலீஸ் அதிகாரியாக வரும் ஜெயச்சந்திரன் ஒரே காட்சியில் வந்தாலும் மாணவர்கள் சக்திக்கு பயப்படுவது ஜல்லிக்கட்டு போரட்டத்தை நினைவுப்படுத்துகிறார்.

இயக்குனர்கள் பாலாஜிமோகன், சரவண சுப்பையா காட்சிகள் செயற்கையாக உள்ளது.

Vip2-movie-stills-6

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இறைவன் தந்த இறைவி பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறது. ஆனால் ஷான் ரோல்டன் பின்னணி இசை எதிர்பார்த்த அளவு இல்லை.

பன்ச் பேசுவதற்காக சில காட்சிகளில் பின்னணி இசையை ஒலித்தாலும், அது பொருந்தவில்லை.

ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.

பிரசன்னா ஜிகே சரியாக கத்திரி போட்டிருந்தாலும், இன்னும் சில காட்சிகளை வெட்டியிருக்கலாமோ என் கேட்க வைக்கிறார்.

Vip2-movie-stills-14

இயக்கம் பற்றிய அலசல்…

விளையாட்டுத்தனமான கணவன், கண்டிக்கும் மனைவி என காட்சிகளை அமைத்திருப்பது ரசிக்க வைக்கிறது.

அம்மா இல்லையென்றாலும் பொறுப்பான அப்பா, வழிநடத்துவது என அழகான குடும்பத்தை காட்டியிருப்பது சரி.

ஆனால் கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் அது சம்பந்தமான காட்சிகளின் வேகத்தை குறைத்திருக்கலாம்.

ஷேர் கான்ட்ராக், ஷேர் கேன்சல் திடீர் திடீரென எல்லாம் நடப்பது காட்சிகளில் ஒன்ற வைக்க மறுக்கிறது.

சென்னை வெள்ளம் போல ஒரு காட்சியை வைத்து, வெள்ளம் வந்தால், இங்கே எல்லா மனிதர்களும் ஒன்றுதான் என பன்ச் பேசி முடிக்கிறார் வசனகர்த்தா தனுஷ்.

முதல் பாக விஐபியில் யதார்த்தம், எளிமை இதில்லை.

விஐபி2… ஒரே பார்முலா வேற ரூட்

பொதுவாக எம்மனசு தங்கம் விமர்சனம்

பொதுவாக எம்மனசு தங்கம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : உதயநிதி, நிவேதா பெத்துராஜ், பார்த்திபன், சூரி, மயில்சாமி, சர்மிளா ரோஷி மற்றும் பலர்.
இயக்கம் : தளபதி
இசை : இமான்
ஒளிப்பதிவாளர் : பாலசுப்ரமணியம்
எடிட்டர்: தினேஷ் பொன்ராஜ்
பி.ஆர்.ஓ. : விஜயமுரளி மற்றும் கிளாமர் சத்யா
தயாரிப்பு : ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்

pemt stills soori udhayanithi

கதைக்களம்…

கூத்தப்பாடி என்ற கிராமத்தில் வசிப்பவர் கணேசன் (உதயநிதி). இவரது ண்பர் டைகர் பாண்டி (சூரி).

இருவரும் ஊர் சுற்றினாலும் ஏதாவது ஊருக்கு நல்லது செய்ய நினைக்கின்றனர். அப்படி செய்து சில வம்பிலும் மாட்டிக் கொள்கின்றனர்.

இவர்களுக்கு பக்கத்து ஊரை சேர்ந்தவர் ஊத்துக்காட்டான் (பார்த்திபன்). மிகப்பெரிய பணக்காரர்.

இவர் ஒரு புகழ் அடிமை. அதாவது விளம்பரப் பிரியர். இவரே வீட்டை கொளுத்திவிட்டு அதற்கு நஷ்ட ஈடும் கொடுப்பதும் வழக்கம்.

அதுபோல் இவரது தங்கையை கல்யாணம் செய்துக் கொடுத்த ஊருக்கு பல நன்மைகள் செய்துக் கொடுத்து பெயர் வாங்குகிறார்.

தங்கை புகுந்த ஊருக்கே இப்படி செய்கிறாரே, இவரின் மகளை மணந்தால் என்னவெல்லாம் செய்வார்? என கணக்கு போட்டு அவரின் மகள் நிவேதாவை காதலிக்கிறார் உதயநிதி.

ஆனால் பெயர் எடுப்பதில் கணேஷ் தன்னை மிஞ்சிவிடுவானோ என எண்னும் பார்த்திபன் அவரை ஊர் மக்கள் உதவியுடன் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கிறார்.

பின்னர் என்ன ஆனது? அவர் மறுபடி வந்தாரா? காதலியை கரம் பிடித்தாரா? பார்த்திபன் என்ன செய்தார்? என்ற கேள்விகளுக்கு க்ளைமாக்ஸில் பதில் அளித்துள்ளார் இயக்குனர் தளபதி பிரபு.

podhuvaga emmanasu thangam stills

கேரக்டர்கள்…

படத்திற்கு படம் உதயநிதியின் நடிப்பு மெருகேறிவருகிறது என்பது உண்மை. பாட்டு, பைட்டு, வெட்டிபையன் என கலகலப்பாக வருகிறார்.

கிராமத்து இளைஞனாக ஜொலிக்கிறார். ஆனால் படம் முழுக்க கூலிங்கிளாஸ், கலர்புல்லாக பேண்ட் சர்ட்டில்தான் வருகிறார்.

சூரி மாதிரி சில காட்சிகளிலாவது லுங்கியில் வந்திருக்கலாம்.

சூரி காமெடிதான் படத்தின் ஹைலைட்ஸ். அதிலும் இவருடன் வரும் பல் துலக்காத நபரும் நல்ல தேர்வு.

தனக்கே உரித்தான நக்கல், நையாண்டியுடன் வில்லத்தனமும் செய்திருக்கிறார் பார்த்திபன். இனி வில்லனாகவும் ஜொலிப்பார்.

இந்த படம் மூலம் பார்த்திபன்-உதயநிதி-சூரி கூட்டணி உருவாகியிருக்கிறது. மூவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.

மனதில் நிற்கும்படியான கேரக்டரில் மயில்சாமி.  எடக்கு மடக்காக பேசி பார்த்திபனிடம் பம்முவது சூப்பர்.

கிராமத்து பைங்கிளியாக பளிச்சிடுகிறார் நிவேதா பெத்துராஜ். ஆனால் கோபம் படும் காட்சிகளில் முகபாவனைகளில் இன்னும் மெச்சூர்ட்டி தேவை.

இவர்கள் தவிர படத்தில் ஊர் பெரியவர், மீசைக்காரர் என ஊர் பட்டாளமே நடித்துள்ளது.
pemt stills

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படம் முடியும் வரை ஏதோ ஊர் திருவிழாவுக்கு சென்று வந்து ஃபீலிங்கை தருகிறார் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம். எல்லாம் கலர்புல். சில காட்சிகளில் கொஞ்சம் ஓவர்தான்.

இமானில் இசையில் மெலோடியும் சரி, குத்துபாட்டும் ரசிக்க வைக்கிறது.

சும்மா இருக்கிறது ஈசியில்லை என்ற பாடல் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் சாயல் இருக்கிறது. இரண்டாம் பாதியின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

podhuvaga emmanasu thangam team

இயக்கம் பற்றிய அலசல்…

ஊருக்கு நல்லவராகவும் உள்ளத்தில் கெட்டவராகவும் பார்த்திபன் கேரக்டரை வடிவமைத்துள்ளது சபாஷ் போட வைக்கிறது.

இண்டர்வெல் காட்சியில் என்னவாகுமோ? என்ற ட்விஸ்ட் வைத்த டைரக்டர் அந்த ட்விஸ்ட்டை உடனே அவிழ்த்திருப்பது ரசிக்கவில்லை.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் 2ஆம் பாகம் என்னும் சொல்லும்மளவுக்கு அதே ரூட்டில் பயணிக்கிறார்.

இயக்குனர் பொன்ராமின் உதவியாளர் என்பதால் அவரைப் போன்றே கதையை கொடுத்து தன் வெற்றியை தக்கவைத்துள்ளார் தளபதி பிரபு. (ஆனால் குருவை மிஞ்சவில்லை)

பொதுவாக எம்மனசு தங்கம்… தங்கமின்னாலே மின்னும்

சதுர அடி 3500 விமர்சனம்

சதுர அடி 3500 விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : இனியா, நிகில், ரகுமான், ஆகாஷ், எம்.எஸ்.பாஸ்கர், கோவை சரளா மற்றும் பலர்.
இயக்கம் : ஜாய்சன்
இசை : கணேஷ் ராகவேந்திரா
ஒளிப்பதிவாளர் : பிரான்சிஸின்
பி.ஆர்.ஓ. : யுவராஜ்
தயாரிப்பு : ரைட் வியூ சினிமாஸ்

sathura adi 3500 movie stills 2

கதைக்களம்…

நிலமோசடி மாபியா கும்பலும் அதனால் பாதிக்கப்பட்ட பலரின் வாழ்க்கையையும் திகில் கலந்த கதைக்களத்துடன் சொல்லப்பட்டுள்ள படமே ’சதுரஅடி 3500’.

ஒரு மிகப்பெரிய அடுக்குமாடி கட்டிடத்தை அழகாக கட்ட நினைக்கிறார் ஆகாஷ்.

இதற்காக பல கோடிகளை முதலீடு செய்கிறார். மேலும் பெரிய கான்ட்ராக்டர் எம்எஸ் பாஸ்கரின் மகள் இனியாவிடமும் (காதலி) பணம் பெறுகிறார்.

கட்டிடம் முடியும் தருவாயில் மாபியா கும்பல் தாதா பிரதாப்போத்தன் இவரை மிரட்டி அந்த கட்டிடத்தை மிரட்டி வாங்க நினைக்கிறார்.

ஆகாஷ் மறுக்கவே அவரை கொலை செய்கிறார்.

sathura adi 3500 movie stills 3

இந்நிலையில் இனியாவுக்கு பெண் பார்க்கிறார் எம்எஸ் பாஸ்கர். ஆனால் பெண் பார்க்க வரும் மாப்பிள்ளைகளை ஆகாஷின் பேய் மிரட்டுகிறது.

மேலும் அந்த கட்டிடத்தை பாதுகாக்கிறது. எனவே போலீஸ் நிகில் இந்த விசாரணையில் இறங்குகிறார்.

ஆனால் ஒரு சாமியார் மூலம் ஆகாஷ் சாகவில்லை என நிகிலுக்கு தெரிய வருகிறது.

அப்படியென்றால் பேயாக வருபவர் யார்? ஆகாஷ் என்ன ஆனார்? இனியா காதல் என்ன ஆனது? என்ற பல கேள்விகளுக்கு மிரட்டலாக பதில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஜெய்சன்.

sathura adi 3500 movie stills 1

கேரக்டர்கள்…

இப்படத்தின் போஸ்டர்களில் பிரமாதமாக காணப்பட்டவர் ரகுமான். ஆனால் ஓரிரு காட்சிகளில் மட்டுமே வருகிறார். இந்த விசாரணையை ஆரம்பித்து வைத்து விட்டு செல்கிறார்.

இனியா அழகான கண்களால் கவர்கிறார். சில காட்சிகளில் பேயாகவும் மிரட்டுகிறார்.

கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் ஹீரோ நிகில் கம்பீரமாக வருகிறார். போலீசுக்கு உரித்தான சீரியஸ் முகம் இவருக்கு. எனவே காதல் காட்சிகளில் சுவாரஸ்யம் இல்லை.

ஆவியாக வந்து மிரட்டும் ஆகாஷ், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, தலைவாசல் விஜய், சுவாதி தீக்‌ஷித் என அனைவரும் இருந்தாலும் இன்னும் வலுவான பாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தால் ரசித்திருக்கலாம்.

இனியாவை காதலிக்கும் மெக்கானிக் நடிகரின் நடிப்பு செயற்கையாக இருக்கிறது. காட்சிகளில் ஒன்றவில்லை.

sathura adi 3500 movie stills

கணேஷ் ராகவேந்திராவின் இசையில் இரண்டு பாடல்கள் குத்து ரகம். ஆனால் அதில் ஒரு பாடல் தேவையில்லாமல் திணிக்கப்பட்டிருக்கிறது.

பிரான்சிஸின் ஒளிப்பதிவு காட்சிகளில் மிரட்டல் தெரிகிறது.

தன் காதலியை யாரும் மணக்க கூடாது என எல்லா மாப்பிள்ளைகளையும் மிரட்டும் ஆகாஷ் இறுதியாக காதலியை விட்டுக் கொடுப்பது ஏன்? என்பது புரியவில்லை.

வலுவான கதையை இயக்குநர் ஜாய்சன் அமைந்திருந்தாலும் பல காட்சிகளில் சலிப்பை தட்ட செய்கிறார்.

மொத்தத்தில்… ‘சதுரஅடி 3500’ சறுக்கல் பாதை

More Articles
Follows