தேனாக கொட்டிய பாசம்.. தேள் விமர்சனம் 3.5/5

தேனாக கொட்டிய பாசம்.. தேள் விமர்சனம் 3.5/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

பொதுவாக ஒரு படத்தை காப்பியடிப்பவர்கள்… கதையை திருடுபவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இது கொரிய மொழிப்படம் ஒன்றின் தழுவல் என சொல்லி படத்தை தொடங்கிய இயக்குநர் ஹரிகுமாருக்கு பாராட்டுக்கள்..

கதைக்களம்..

கோயம்பேடு சந்தையில் காய்கறி வியாபாரத்தை விட கந்து வட்டி பிசினஸ் கனஜோர். இந்த கும்பலிடம் வேலை செய்கிறார் பிரபுதேவா. இவரது பேச்சு குறைவு செயல் அதிகம்.

அதாவது பணம் தராமல் இழுத்தடிக்கும் பேரிடம் பணத்தை வாங்கி வருவதற்கு பதிலாக உயிரையே வாங்கி வரும் பலே கில்லாடி. இதனால் பிரபுதேவாவுக்கும் எதிரிகள் உண்டு.

இவருக்கு யாரும் இல்லை என்பதால் தனியாக வாழ்கிறார். இவரை ஒருதலையாக காதலிக்கிறார் ஏரியா டான்சர் சம்யுக்தா ஹேக்டே. நாயகியின் ப்ரோ யோகிபாபு.

ஒரு கட்டத்தில் நான்தான் உன் அம்மா என சொல்லி வருகிறார் ஈஸ்வரி ராவ். முதலில் ஏற்க மறுக்கிறார் பிரவுதேவா. 15 வயதில் என்னை ஒருத்தன் கெடுத்துவிட்டான். விவரம் தெரியாத வயதில் உன்னை அனாதையாக்கி சென்றுவிட்டேன். என்னை மன்னித்துவிடு என்கிறார்.

பின்னர் மனம் மாறி அம்மாவை ஏற்கிறார். புதிதாக கிடைத்த தாய் பாசத்தால்  கந்து வட்டி வசூலிக்க செல்ல மறுத்து அம்மாவுடன் வாழ்கிறார்.

பிரபுதேவா இல்லாமல் பணம் சரியாக வசூலாகவில்லை என்பதால் கும்பலின் கோபத்துக்கு ஆளாகிறார்.

அதன்பின்னர் என்னானது..? பிரபுதேவாவை அந்த கும்பல் என்ன செய்தது? அம்மா மகன் பாசம் நீடித்ததா..? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

டான்ஸ் இல்லாத படத்தில் டான்சர் பிரபுதேவா என்பதே ஆச்சரியமான விஷயம்தான். தனிமையில் வாழ்வதும் பின்னர் அம்மாவின் பாசத்துக்காக ஏங்குவதும் என உணர்ந்து நடித்துள்ளார்.

க்ளைமாக்ஸ் முடிவு எந்த ஹீரோவும் செய்ய தயங்கும் கேரக்டர். இதற்காகவே பிரபுதேவாவை நிச்சயம் பாராட்டலாம்.

யோகிபாபுவின் ஒன்லைன் காமெடிகள் பெரிதாக எடுபடவில்லை. பிரபுதேவா செய்யாத நடனத்தை சம்யுக்தா செய்து அசத்தியிருக்கிறார். நாயகனை சுற்றி சுற்றி காதலிக்கும் வழக்கமான நாயகி வேடம். ஆனால் கிளாமர் காட்டி இந்த குளிர் சீசனில் கொஞ்சம் சூடேற்றிவிட்டார்.

ஈஸ்வரி ராவ் கேரக்டர் எதிர்பாராத ஒன்று. காலா படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மகனிடம் கெஞ்சும் காட்சிகளில் நம்மை அழ வைக்கிறார். ஆனால் சில சீன்களில் நரைத்த முடியுடன் வருகிறார். மற்ற காட்சிகளில் கறுப்பு தலைமுடி.

ப்ளாஷ்பேக்கில் மாரிமுத்து.. கந்து வட்டி மற்றொரு தலைவனாக அர்ஜெய். இவர்களின் காட்சிகள் குறைவு.

டெக்னிஷியன்கள்…

சி.சத்யாவின் இசையில் தாய்ப் பாடல் உருக வைக்கிறது. என்னை பெத்த தேவதையே… என் தேவதையே என அம்மாவுக்கான பாடல் வரிகள் சூப்பர். பின்னணி இசையிலும் நல்ல தேர்ச்சி. விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பு.

நிறைய படங்களில் நாயகனாக நடித்த ஹரிக்குமார் தான் இப்படத்தின் இயக்குனர். பிரபுதேவாவின் ஆக்சன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார்.

பொதுவாக தமிழ் படங்களில் நாயகன் ரவுடியாக இருந்தால் நாயகி வந்துதான் திருத்துவார். ஆனால் அம்மாவாக ஒரு கேரக்டர் (ஜெமினி படம் அப்படித்தான்) வந்து திருத்துவது சில படங்களில் உள்ள புதுமை.

அம்மா மகன் பாசம் இன்னும் நெருக்கமாக இருந்திருந்தால் நாமும் படத்துடன் ஒன்றிருந்திருக்கலாம். முதல்பாதியில் மெதுவாக கதை நகர்கிறது. ஆனால் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

Thael Movie review rating

சிங்களரிடம் சிக்கிய சிங்கம்.; சினம் கொள் விமர்சனம்

சிங்களரிடம் சிக்கிய சிங்கம்.; சினம் கொள் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

இலங்கை போர் பற்றி இந்த உலகமே அறிந்திருக்கும். ஆனால் போருக்கு பின்னால் சம்பந்தப்பட்டவர்களின் வாழ்வை பற்றி நம்மில் பலர் அறிந்திருப்பதில்லை. இந்த வாழ்வியலை யதார்த்தமாக சொல்லும் படம். போராளிகளின் வாழ்வையும் இந்த படம் அழுத்தமாக பதிவு செய்துள்ளது.

கதைக்களம்…

சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலையாகிறார் போராளி அரவிந்தன் சிவஞானம். அப்போது தன் மனைவி மகள் எங்கே என தெரியாமல் தேடி அலைகிறார். அவரது நிலங்களை இலங்கை ராணுவம் அபகரித்துக் கொண்டமையால் தன் குடும்பத்தை தேடி அலைகிறார்.

போராளி நண்பர்கள் ஆதரவுடன் குடும்பத்தை கண்டுபிடிக்கிறார் அரவிந்தன்.

இனியாவது தன் குடும்பத்துடன் புதிய வாழ்க்கை வாழ நினைக்கிறார். ஆனால் இவருக்கும் ஒரு வெளிநாட்டு வாழ் தொழிலதிபர் தனச்செயனுக்கும் பிரச்சினை ஏற்படுகிறது.

இந்த நிலையில் ஒரு போதை கும்பல் தொழிலதிபரின் மகளை கடத்துகிறது. ஒருவேளை தன் மகளை அரவிந்தன் தான் கடத்தியிருப்பார் என தொழிலதிபர் சந்தேகிக்க போலீஸ் இவரை தேடுகிறது.

இதனால் மீண்டும் தன் வாழ்க்கையை தொலைக்கும் சூழ்நிலை. இதிலிருந்து எப்படி மீண்டார்.? போலீஸ் என்ன செய்தது.? அரவிந்தன் நிலை என்ன? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

போராளியாக வாழ்ந்திருக்கிறார் அரவிந்தன். மனைவியை தேடி அலைவதாகட்டும் பின்னர் தன்னை சுற்றி நடக்கும் சதியில் இருந்து மீள்வதாகட்டும் அனைத்திலும் பாராட்டுக்களை பெறுகிறார்.

அரவிந்தனின் மனைவியாக நர்வினி டெரி, சிறப்பான தேர்வு. யாழினியாக லீலாவதி, பிரேம், பாலா, தீபச்செல்வன், வெளிநாட்டு வாழ் தமிழராக தனச்செயன் ஆகியோரும் தங்கள் கேரக்டர்களில் கச்சிதம்.

படத்தில் நடித்தவர்கள் என்பதை விட தங்கள் எண்ணங்களை உணர்வுப்பூர்வமாக பதிவு செய்து வாழ்ந்துள்ளனர் என சொல்லலாம். எங்குமே கமர்சியல் எட்டிப்பார்க்கவில்லை.

டெக்னிஷியன்கள்..

என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசையளவுக்கு பாடல்கள் ஈர்க்கவில்லை. ஆனால் பாடல் வரிகள் வலியை உணர்த்தும விதமாக உள்ளது.

எம்.ஆர்.பழனிகுமாரின் ஒளிப்பதிவு படத்துடன் ஒன்ற வைக்கிறது.

பொதுவாக இதுபோன்ற படங்கள் ஆவணப்படங்களாவே வெளிவரும். (டாக்குமெண்ட்ரி டைப்) ஆனால் இந்த படம் அப்படியாக இல்லாமல் நல்ல தரத்துடன் யதார்த்தமாக படைக்கப்பட்டு உள்ளது.

இன்னும் இலங்கை தமிழர்களை நம்மில் ஒருவராக பார்க்காமல் அகதிகளாகவே பார்க்கும் மனநிலை இங்கு உள்ளது. அவர்களை வைத்து இங்கே அரசியல் நடக்கிறது. அதை நாம் அறியும் வகையில் படமாக்கியுள்ளனர்.

இறுதியாக ஒரு காட்சியில் கதையின் நாயகன் மரணமடைகிறார். அது எப்படி என்பது புரியாமலே படம் முடிகிறது. ஆனால் அதன் பின்னால் இலங்கை அரசும் சென்சார் அமைப்பும் உள்ளது.

கைதி செய்யப்பட்ட காலத்தில் போராளிகளுக்கு கொடுக்கப்படும் உணவுகளால் சில வருடங்களில் அவர்கள் மரணிப்பதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் ரஞ்சித் ஜோசப்.

போராளி அமுதனை கண்டதும் ஊர் மக்கள் அனைவரும் அவரை வரவேற்கின்றனர். மனைவியை தேடி அலைகிறார். ஆனால் போராட்டக் களத்தையும் அவர்களின் மண வாழ்க்கையின் ஆரம்பத்தையும் சின்ன சின்ன காட்சிகளாக காட்டியிருக்கலாம் இயக்குனர்.

அமுதன் யார்? அவரை பேச்சை ஊரே கேட்க என்ன காரணம்? என்பதை காட்டியிருந்தால் நம்மால் இன்னும் படத்துடன் ஒன்றிணைந்திருக்க முடியும்.

ஆக… இந்த சினம் கொள் படம்.. போராளி சிங்கள் தங்கள் வாழ்க்கையை எப்படி சிங்களரிடம் தொலைத்தனர் என்பதை சொல்லும்..

 

ஏதாச்சும் சொல்லுங்க..; என்ன சொல்ல போகிறாய் விமர்சனம் 2.75/5

ஏதாச்சும் சொல்லுங்க..; என்ன சொல்ல போகிறாய் விமர்சனம் 2.75/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

டிவியில் குக் வித் கோமாளியில் கலக்கிய அஸ்வின் இதில் ஹீரோ. இவருடன் புகழும் நடித்துள்ளார். படம் முழுக்க முக்கோண காதல்…

கதைக்களம்…

ரேடியோவில் ஆர்ஜேவாக பணிபுரிகிறார் விக்ரம் (அஸ்வின்). இவர் காதலித்து திருமணம் செய்ய ஆசைப்படுகிறார். ஆனால் நடக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவந்திகாவை பெண் பார்க்க செல்கிறார். இவர் ஒரு காதல் கதைகளின் எழுத்தாளர்.

நாயகனுக்கு ஏற்கெனவே ஒரு லவ் ப்ரேக்அப் இருக்க வேண்டும் என நினைக்கிறார். அப்போதுதான் காதலியை புரிந்து மனைவியை இன்னும் நன்றாக காதலிப்பாராம் என விளக்கம் சொல்கிறார்.

எனவே பெண் பார்க்கும் சமயத்தில் நாயகனும் ஒரு பெண்ணை காதலித்தாக பொய் சொல்கிறார். (அந்த பொய் காதலி தேஜீ அஸ்வினி. )

ஹீரோ முன்னாள் காதலை உருகி சொல்ல சொல்ல… அந்த பெண்ணை சந்திக்க வேண்டும் என்கிறார் அவந்திகா. எனவே தன் நண்பன் புகழின் உதவியால் தேஜீவை நடிக்க சொல்கிறார்கள். முதலில் மறுக்கும் தேஜீ பின்னர் ஒத்துக் கொள்கிறார்.

நிச்சயத்தார்த்தமும் நடக்கிறது. ஆனால் ஒரு கட்டத்தில் பொய்யான காதலி மீது அஸ்வினுக்கு காதல் வருகிறது. ஆனால் அவளோ காதலிக்க மறுக்கிறார்.

ஒரு பக்கம் கட்டிக் கொள்ள போகும் பெண்.. மற்றொரு புறம் பொய்யான காதலி.. நடுவில் அஸ்வின். என்ன செய்தார்? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

அஸ்வின் அறிமுகம் படம்.. செம ஸ்மார்ட்டாக இருக்கிறார். நன்றாக டான்ஸ் ஆடியுள்ளார். ஆனால் இன்னும் நடிப்பில் மெருகேற்ற வேண்டும். இவளா அவளா என தடுமாறும் காட்சிகளில் பெரிதாக ஈர்ப்பு இல்லை. அதுபோல் எமோஷனலும் போதவில்லை.

அவந்திகா அழகு என்றால் தேஜ் அஸ்வினி கூடுதல் அழகு. இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். தேஜ் மேடை நாடக காட்சிள் போர்.

பார் (PUB) நடத்தும் நபராக புகழ். காமெடி எடுபடவில்லை. அதுபோல் சுவாமிநாதன் காட்சிகளும் நீண்ட இழுவை.

மற்றபடி டெல்லி கணேஷ், சுப்பு பஞ்சு காட்சிகள் ஓகே ரகம்.

டெக்னிஷியன்கள்..

படத்தில் பெரும் பாராட்டை பெறுபவர்கள் இசையமைப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர்.

விவேக் – மெர்வின். இவர்களின் பின்னணி இசை செம. அதுபோல் பாடலும் நம்மை ஈர்க்கிறது. ‘க்யூட் பொண்ணு’ பாடலும் ‘நீதானடி’ பாடலும் சூப்பர். உருட்டு பாடல் தாளம் போட்டு ஆட வைக்கும். க்ளைமாக்ஸ் மெலோடி பாடலும் அருமை.

ரிச்சர்ட் எம்.நாதனின் ரிச்சான ஒளிப்பதிவு நம் கண்ணுக்கு விருந்து. முக்கியமாக ஏடிஎம் சீன்.. இரவில் கடற்கரை காட்சிகள்.. நாடக மேடை என அனைத்தும் ரசிக்கும்படியாக உள்ளது. கலை இயக்குனரின் கைவண்ணமும் படத்துடன் ஒன்ற வைக்கிறது.

ஆனால் எடிட்டர்தான் நம்மை பொறுமையை சோதித்துவிட்டார். முதல் பாதி செம. ஆனால் இரண்டாம் பாதி இழுத்துக் கொண்டே போகிறது.

இயக்குனர் ஹரிஹரன் காதலர்களை கவர படம் எடுத்துள்ளார். அதற்கேற்ப நிறைய காட்சிகளை வைத்துள்ளார். நிறைய காட்சிகளில் வாலி படமும் குஷி படமும் நினைவுக்கு வரும். அதுபோல் புகழும் ஒரு டயலாக் சொல்கிறார்.

முதலில் லவ் ப்ரேக் அப் செய்தவர்தான் வேண்டும் என சொல்லும் அவந்திகா.. பின்னர் திருமணம் நடந்து 10 வருடத்திற்கு பின் மனம் மாறினால் என்ன செய்வது என குழுப்புவது எல்லாம் ரொம்ப ஓவர்.

அதுபோல் நாயகனின் மனம் அடிக்கடி மாறுவதாலும் புகழும் மாற்றி மாற்றி பேசுவதாலும் நமக்கே போரடிக்கிறது. அட ஏதாச்சும் சொல்லி முடிங்கப்பா என சொல்ல வைக்கிறது.

ஆக.. என்ன சொல்ல போகிறாய்.. நன்றாக சொல்லியிருந்தால் சிறப்பு.

Enna Solla Pogiraai movie review and rating in Tamil

பொங்கலுக்கு கிடைத்த பிரியாணி.; நாய்சேகர் விமர்சனம் 3.5/5

பொங்கலுக்கு கிடைத்த பிரியாணி.; நாய்சேகர் விமர்சனம் 3.5/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..

நாய் கடியால் சேகருக்குள் ஏற்படும் மாற்றங்களை காமெடியாக அறிவியல் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் கிஷோர் ராஜ்குமார். இவரே படத்தில் ஒரு கேரக்டராகவும் நடித்துள்ளார்.

காமெடி நடிகர் சதீஷ் இதில் நாயகனாக அறிமுகம். சின்னத்திரை நடிகை பவித்ரா லட்சுமி நாயகியாக அறிமுகம்.

கதைக்களம்..

சதீஷ் மற்றும் பவித்ரா லட்சுமி இருவரும் ஒரே ஐடி கம்பெனியில் பணிபுரிகின்றனர். ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்கின்றனர்.

சதீஷின் பக்கத்து வீட்டில் வசிக்கும் விஞ்ஞானி மரியம் ஜார்ஜ் பல ஆராய்ச்சிகளை செய்துவருகிறார். இவர் வெறித்தனமாக ரஜினி ரசிகர் என்பதால் ரஜினி பட பெயர்களையே தன் ஆராய்ச்சிக்கு பெயராக வைக்கிறார்.

உதாரணத்திற்கு புறா மற்றும் நாய் டிஎன்ஏக்களை எடுத்து மாற்றி செலுத்துகிறார். அதாவது நாய் பறக்கும்.. புறா கடிக்கும்… இதுபோன்ற வித்தியாசமான ஆராய்ச்சிகளை செய்து பார்க்கிறார்.

இந்த சூழ்நிலையில் இவர் வளர்க்கும் ஒரு நாய் (அதன் பெயர் படையப்பா) சதீஷை கடித்துவிடுகிறது. இதனால் நாய் சுபாவம் கொண்டவராக மாறுகிறார் சதீஷ். அந்த படையப்பாவோ சதீஷாக மாறுகிறது.

இதனால் சதீஷ் வாழ்க்கையில் என்னென்ன பிரச்சினைகளை சந்திக்கிறது.. நாய் மனிதனாக மாறி என்ன செய்தார்.? கடைசியில் என்ன ஆச்சு? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நாயகன் என்பதால் ஓவர் பில்டப் இல்லாமல் கொடுத்த கேரக்டரில் பாராட்டை பெறுகிறார் சதீஷ். க்ளைமாக்ஸ் காட்சி என்றாலும் கூட அதிரடி பைஃட் கேட்காமல் செய்துள்ளது சிறப்பு. டான்ஸில் நல்ல தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால் இன்னும் ரொமான்ஸ் செய்திருக்கலாம்.

அமுல்பேபியாக வந்து செல்கிறார் பவித்ரா லட்சுமி. சில காட்சிகளில் க்யூட்.

நாய்க்கு வாய்ஸ் கொடுத்துள்ளார் மிர்ச்சி சிவா. படையப்பா பேசும் பன்ச் வசனங்கள் நிறைய கைத்தட்டல்களை பெறுகிறது.

பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் வில்லனாக நடித்துள்ளார். பாட்டு பாடியே கொல்லும் காட்சிகள் செம. இது என்ன ராகம்.. இது என்ன ராகம் என இவர் கேட்பது சிறப்பு.

பவித்ராவின் அப்பா இளவரசு, சதிஷின் அப்பா ஞானசம்பந்தம், அடியாள் மாறன், சயின்ஸ்ட் மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பல பேர் நம்மை நிறையே சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

சொல்லப்போனால் சதீஷை விட இவர்களை நிறைய காமெடி செய்துள்ளனர்.

சதீஷின் நண்பராக நடித்துள்ள இயக்குனர் கிஷோர் ராஜ்குமாரும் சில இடங்களில் நம்மை சிரிக்க வைக்க தவறவில்லை.

இதுபோன்ற படங்களில் லாஜிக் பார்க்க வேண்டாமென்பதால் காமெடிக்காக ரசிக்கலாம்.

மேலும், மனோபாலா, கேபிஒய் பாலா, இளவரசு, ஸ்ரீமன், சுவாமிநாதன் உள்ளிட்ட நடிகர்கள் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

டெக்னிஷியன்கள்..

அஜீஷின் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. சாண்டி நடனம் அமைத்துள்ள நாய் பாணியில் ஆடும் டான்ஸ் அருமை. டூயட் பாடல் ஓகே.

பிரவீன் பாலுவின் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. எடிட்டர் தன் பணியில் ஓகே.

குழந்தைகளை கவரும் வகையில் படத்தை இயக்கியுள்ளார் கிஷோர். எனவே பொங்கலுக்கு குடும்பத்துடன் பார்க்கலாம்.

ஆக.. இந்த நாய் சேகர்.. பொங்கலுக்கு கிடைத்த பிரியாணி

Naai Sekar movie review and rating in Tamil

அதிசய நாணயம்… பூச்சாண்டி விமர்சனம் 3.25/5

அதிசய நாணயம்… பூச்சாண்டி விமர்சனம் 3.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

நம் அம்மாக்கள் குழந்தைக்கு சோறு ஊட்டும் போது பூச்சாண்டி கிட்ட புடிச்சி கொடுத்துடுவேன் என பயமுறுத்தி உணவளிப்பார்கள்.. ஆனால் பூச்சாண்டி என்றால் யார்? என்றே நமக்கே தெரியாது. ஆனால் நம்முடைய முன்னோர்கள் அதற்கான காரணத்தை வைத்திருப்பார்கள். அது என்ன என பூச்சாண்டிக்கு அழகான விளக்கம் கொடுத்து நம்மை அசர வைத்துள்ளனர்.

மதுரையில் இருந்து மலேசியா நோக்கி கதை நகர்கிறது. படத்தின் கதை முழுவதும் மலேசியாவில் மலேசிய மக்களுடன் படமாக்கப்பட்டுள்ளது.

கதைக்களம்..

சங்க கால வரலாறுகளை தெரிந்துக் கொள்வதிலும் ஆர்வம் உள்ளவர் முருகன். மேலும் அமானுஷ்ய சக்திகளை பற்றி அறிந்து கொள்வதில் அதிக ஆர்வம் கொண்ட இவர் மலேசியா மக்களை சந்திக்கிறார்.

அங்கு சங்கர் என்பவரை சந்தித்து அவர் சந்தித்த அமானுஷ்யத்தை பற்றி கேட்கிறார். சங்கர் தனது நண்பர்கள் அன்பு மற்றும் குருவுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை விவரிக்கிறார்.

அதில்… நாங்கள் ஆவியுடன் பேச ஒரு முறை முயற்சித்தோம். சங்க கால நாணயத்தை வைத்து எங்கள் விளையாட்டை ஆரம்பித்தோம். ஒரு கட்டத்தில் விளையாட்டு விபரீதமாகி அந்த மல்லிகா ஆவி எங்கள் நண்பன் குருவை கொன்றுவிட்டது.

அந்த நாணயம்தான் எங்கள் வாழ்க்கையில் விளையாடியது. எனவே அந்த நாணயம் ரகசியம் தெரிய வேண்டும். அப்படி என்றால் நாங்கள் மல்லிகாவின் மரணத்திற்கு யார்? காரணம் என்பதை அறிய வேண்டும் என்கின்றனர் மற்ற நண்பர்கள்..

அதன்படி முருகனுடன் இணைந்து சங்கர் அன்பு ஆகிய மூவரும் ஆவியின் உண்மைகளை கண்டறிய முற்படுகின்றனர்.

அதன்பின்னர் என்ன ஆனது? ஆவி யார்? அதை குருவை கொல்ல என்ன காரணம்.? யார் அந்த மல்லிகா? அவரின் மரணம் எப்படி நிகழ்ந்தது.? என்பதே இந்த பூச்சாண்டியின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

முருகனாக மிர்ச்சி ரமணா நடித்துள்ளார். இவர் மட்டும்தான் மதுரையை சேர்ந்தவர். மற்ற நடிகர்கள் அனைவரும் மலேசியாவை சேர்ந்தவர்கள். இவர்கள் நாம் தினம் பார்க்கும் நண்பர்களை போல யதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளனர்.

ஆவியுடன் பேசும்போது கலகலப்பாக தொடங்கி பின்னர் திகிலாக மாறும்போது நம்மையும் சீட் நுனிக்கே கொண்டு வந்துள்ளனர்.

தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகன் நாதன், கணேசன் மனோகரன் மூவரும் நண்பர்களாக நடித்துள்ளனர்.

சங்கர் கேரக்டரில் நடித்தவர் (தினேஷ்) சபாஷ் போட வைத்துள்ளார். உயிர் நண்பனை இழந்துவிட்ட சோகத்தை உணர்ந்து நடித்திக்கிறார். அதே சமயம் உயிருடன் இருக்கும்போது அவரை கலாய்ப்பதிலும் குறையில்லை. அதுபோல் மல்லிகாவின் கணவனுடன் நண்பனுக்காக சண்டை போடுவதிலும் கைத்தட்டல் பெறுகிறார்.

மாற்றுத் திறனாளியான லோகன் நாதன். நீங்க எல்லாம் ஒரு நாள் எங்களை போல வாழ முடியுமா?. மலம் கழிக்க கூட அடுத்தவரை நாங்கள் எதிர்பார்க்க வேண்டியுள்ளது. எழுந்து நடந்துவிட மாட்டோமா? என ஏங்குகிறோம் என பேசும்போது நம்மை அறியாமல் கண்கள் குளமாகும். க்ளைமாக்ஸில் இவரது ட்விஸ்ட் ஹைலைட்.

மல்லிகா வேடத்தில் வரும் ஹம்சினி பெருமாள் கொஞ்சம் நேரமே என்றாலும் கேரக்டரின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த படத்தில் ஒரு காட்சியில் சொல்லப்படுவது போலவே சில காட்சிகளில் சமந்தாவின் சாயலில் உள்ளார்.

டெக்னிஷியன்கள்…

பேய் படங்களுக்கு பாடல்கள் தேவையில்லை என்பதை உணர்ந்து இருக்கிறார் டைரக்டர். அதே சமயம் க்ளைமாக்ஸில் புரோமோ சாங் வைத்து படத்தின் உயிரோட்டத்தை சொல்லியிருப்பது சிறப்பு. இசையமைப்பாளர் டஸ்டின் ரிதுவன் ஷா தன் பணியில் பாராட்டைப் பெறுகிறார்.

அசல் இஸம் பின் முகமது அலியின் ஒளிப்பதிவு படத்தின் பலம். மலேசிய அழகையும் இருளையும் காட்டியிருப்பது சிறப்பு. கிளைமாக்ஸ் காட்சியில் இன்னும் கவனம் செலுத்தி படமாக்கியிருக்கலாம்.

சங்க கால நாணயம் முதன்முறையாக மல்லிகாவின் கையில் கிடைக்கும்போது ஏதோ கீழே போட்டு எடுத்தது போல உள்ளது. மண் கிடந்த நாணயம் கரை கூட இல்லாமல் போனது ஏனோ..?

அதே சமயம் ஒரு நாணயத்தில் உள்ள வரைப்படங்கள் குறித்து முருகனின் அப்பா பேசும் வசனங்கள் ஆச்சரியப்பட வைக்கிறது.

வழக்கமான பேய் படமாக இல்லாமல் ராஜேந்திர சோழன் மற்றும் களப்பிரர் ஆட்சிக் காலத்தையும் நமக்கு புரியும் படி சொல்லிருப்பது இயக்குனர் ஜேகே விக்கியின் நல்லதொரு முயற்சி.

ஒரு சின்ன பட்ஜெட்டில் அமானுஷ்ய சக்திகளின் நிராசைகளை சொல்லிய விதம் அருமை.

இந்த படம் மலேசியாவில் வெளியீட்டுக்கு தயாராகவுள்ளது. விரைவில் தமிழ்நாட்டிலும் காணலாம்.

ஆக.. இந்த பூச்சாண்டி பார்க்க தகுந்தவன் தான்.

Poochandi movie review and rating in Tamil

FIRST ON NET கலையாத கனவுகள்… கார்பன் விமர்சனம் 3.75/5

FIRST ON NET கலையாத கனவுகள்… கார்பன் விமர்சனம் 3.75/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்ணாதுரை படத்தை இயக்கிய சீனிவாசன் இந்த கார்பன் படத்தை இயக்கியுள்ளார். ஜோதி முருகன் – பாக்கியலட்சுமி இணைந்து தயாரித்துள்ளனர். இது விதார்த்தின் 25வது படமாகும்.

ஒன்லைன்..

CARBON என்பது நாம் எழுதியவற்றின் நகல் ஆகும். இதில் நாயகன் காண்கின்ற கனவுகள் அப்படியே நிஜமாக நடக்கிறது.

கதைக்களம்..

அம்மாவை இழந்தவர் விதார்த். இவரின் அப்பா மாரிமுத்து. ஒரு பிரச்சினையில் அப்பா மகன் இருவரும் பேசிக் கொள்வதில்லை. ஒரு நாள் இவரின் அப்பா ஒரு காரில் அடிப்படுவதாக கனவு காண்கிறார்.

அந்த விபத்தை தடுக்க நினைப்பதற்குள் அது நடக்கிறது. இதனால் தந்தை நினைவிழந்து போகிறார், இதனால் விபத்திற்கான காரணம் தெரியாமல் தவிக்கிறார் விதார்த். தந்தையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர ரூ. 10 லட்சம் தேவைப்படுகிறது.

அப்படி என்றால் அந்த கனவில் விபத்தை நிகழ்த்தியவர் யார்? என தெரிந்ததா,? அது தற்செயலாக நடந்த விபத்தா.? ப்ளான் செய்யப்பட்ட விபத்தா.? 10 லட்சம் கிடைத்ததா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்யும் விதார்த்தை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். அண்மையில் வெளியான அன்பறிவு படத்தில் இவரது வில்லன் கேரக்டர் பெரிதாக பேசப்பட்டது. அலட்டிக் கொள்ளாத நடிப்பில் நம்மை கவர்கிறார்.

பல படங்களில் நாயகியின் தோழியாக வருவார் தன்யா. ராஜா ராணி படத்தில் நயன்தாராவின் காலேஜ் தோழியாக வருவாரே அவரேதான். கதையின் தேவையை உணர்ந்து தாராள நடிப்பை தந்துள்ளார் தன்யா.

இடைவேளையில் தான் அறிமுகமாகிறார். க்ளைமாக்ஸ் வரை தெறிக்கவிட்டுள்ளார் தன்யா. சுடிதாரிலும் செம.. பனியன் போட்ட மாடர்ன் டிரெஸிலும் செம. எங்கேம்மா இருந்தீங்க தன்யா இவ்வளவு நாளா..? கண்களிலே கனிவையும் மிரட்டலையும் கொடுத்திருப்பது வேற லெவல்.

பல படங்களில் போலீஸ் ஆக மிரட்டியிருப்பார் மாரிமுத்து. இதில் அன்பான நேர்மையான பாசமான அப்பாவாக மிரட்டியிருக்கிறார். தன் மகன் விதார்த் வேலைக்கு செல்லும் முதல்நாள்.. பேச சொல்லி கெஞ்சுவது சூப்பர் சார்.

இரண்டுவில்லன்கள் இருந்தாலும் பெரிதாக வேலையில்லை.

போலீசாக வரும் மூனார் ரமேஷ் அசத்தல். இவர் இடம் மாறும் காட்சிகள் படத்தின் ஹைலைட் ட்விஸ்ட். வார்டு பாய் வினோத் சாகரும் சிறப்பு.

மறைந்த நடிகர் நித்தீஷ் வீரா, வெங்கட் உள்ளிட்டோர் சில காட்சிகளில் வந்துள்ளனர். இவர்களின் மரணம் நம் கண்முன்னே வந்து செல்கிறது.

சின்ன சின்ன கேரக்டர்களில் வருபவர்கள் அசத்தல்.. பிச்சைக்காரன் மூர்த்தி, ஆயா அம்மா, பூக்கார பெண், இளநீர் வியாபாரி, பார்வையற்ற சிறுமி ஆகியோர் பாராட்டும்படியான நடிப்பை கொடுத்துள்ளனர்.

டெக்னிஷியன்கள்…

சாம் சிஎஸ் இசையில் பின்னணி இசை சிறப்பு. டூயல் பாடல் ஓகே ரகம். மற்ற பாடல்கள் பெரிதாக கைகொடுக்கவில்லை.

ஒளிப்பதிவில் குறையில்லாமல் படமாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் விவேக் ஆனந்தம் சந்தோஷம். எடிட்டர் பிரவீன் கேஎல் தன் பணியில் கச்சிதம்.

ஒரு வித்தியாசமான கதையை விருந்தாக்கியுள்ளார் இயக்குனர். நாயகியை இடைவேளையில் காட்டுகிறார். இதற்கே ஒரு தைரியம் வேண்டும்.

கனவு… திரும்ப திரும்ப வரும் காட்சிகள்.. என ஓரிரு காட்சிகள் மாநாடு படத்தை நினைவுப்படுத்துகிறது.

கலைந்த கனவு ஒன்று மீண்டும் மீண்டும் வருமா? எனத் தெரியவில்லை. அதே சமயம் க்ளைமாக்ஸில் நாயகி ஒரேடியாக மனசு மாறுவது நம்பும்படியாக இல்லை.

அதுபோல் செக்யூரிட்டி, டவுட் செந்தில், இளநீர் வியாபாரி, பார்வையிழந்த சிறுமி செய்யும் க்ளைமாக்ஸ் காட்சிகளை இன்னும் நம்பும்படியாக எடுத்திருக்கலாம். ஆனால் க்ளைமாக்ஸ் சமயத்தில் போலீஸ், சிசிடிவி காட்சிகள், ட்விஸ்ட் அனைத்தையும் எதிர்பாராத ஒன்று. வேற லெவல் திக்கிங் சீனிவாசன்.

ஆக.. இந்த கார்பன் நமக்கு ஒரு பொங்கல் விருந்து..

Carbon movie review and rating in tamil

More Articles
Follows