ஓவர் ஸ்பீடு… ஸ்பாட் விமர்சனம்

ஓவர் ஸ்பீடு… ஸ்பாட் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்..

நாயகன் கௌசிக். இவர் போலீஸ் அதிகாரியின் மகன். தன்னுடைய பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடி உற்சாகமாக இருக்கிறார்.

அப்போது ஒரு பிரச்னையில் இருக்கும் நாயகி அக்னி பவருக்கு உதவ நேரிடுகிறது.

என்ன காரணம் என்பதை கூட அறியாமல் அக்னி பவரை தன் காரில் ஏற்றிக் கொண்டு நண்பர்களுடன் ஆந்திரா வரை பயணிக்கிறார்.

அக்னி பவரை கொல்ல கராத்தே கோபால் கும்பல் இந்த காரை துரத்துகிறது.

பின்னர் தான் காரணம் தெரிகிறது. அதன்பின்னர் என்ன ஆனது? நாயகியை காப்பாற்றினாரா? என்ன பிரச்சினை அது? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்..

ஆக்சன், டான்ஸ் மட்டுமே போதும் என நினைத்துவிட்டார் போல நாயகன் கௌசிக்.படம் முழுவதும் முகத்தை கோபமாகவே வைத்துள்ளார். குளிர்ச்சியான நாயகி இருந்தும் அவரிடம் ஒரு ரொமான்ஸ் கூட இல்லை. முடி மற்றும் தாடியை குறைத்து கொள்வது நல்லது.

அக்னி பவர் நாயகியின் ஆடை போலவே அவரது நடிப்பும் அரை குறைதான்.

கொல்ல திட்டமிடும் தலைவனாக நாசர் நடித்துள்ளார். ஆனால் அவருக்கு பெரிதாக வேலையில்லை. இதுபோன்ற படங்களில் அவர் நடிப்பதை தவிர்க்கலாம்.

வில்லத்தனத்தில் நம்மையும் பயப்படும் வகையில் கத்து கத்து என்று மிரட்டி இருக்கிறார் கராத்தே கோபால். இவர் நிஜத்தில் நாயகன் கௌசிக்கின் தந்தையாவார். ஆனால் பார்ப்பதற்கு அண்ணன் போலவே இருக்கிறார். இவரது இன்னொரு மகனும் படத்தில் நடித்துள்ளார்.

இவர்களுடன் சரவணன், சங்கிலி முருகன் ஆகியோரும் உள்ளனர்.

கார் சேசிங் இடையில் காதல் மற்றும் பைட் என விறுவிறுப்பான திரைக்கதையை படமாக்க முயற்சித்துள்ளார் டைரக்டர் விஆர்ஆர். இவரே தான் படத்தையும் தயாரித்திருக்கிறார்.

படத்தில் வேகம் இருக்கும் அளவுக்கு விவேகம் இல்லை. லாங் சாட் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

விஜய் சங்கர் இசையில் தாஜ்மஹால் பாடல் தாளம் போட வைக்கிறது. மோகன் ராஜ்ஜின் ஒளிப்பதிவு ஓகே ரகம்.

மொத்தத்தில் ‘ஸ்பாட்’… ஓவர் ஸ்பீடு

Spot movie review rating

கம்பீரமான கதிர்… சத்ரு விமர்சனம் 3.25/5

கம்பீரமான கதிர்… சத்ரு விமர்சனம் 3.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: கதிர், ஸ்ருஷ்டி டாங்கே, பொன்வண்ணன், நீலிமா ராணி, மாரிமுத்து, லகுபரன் (வில்லன்), சுஜா வருணி மற்றும் பலர்.
இயக்கம் – நவீன் நஞ்சுண்டன்
ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி
இசை – அம்ரீஷ்
பிஆர்ஓ – மௌனம் ரவி

கதைக்களம்…

சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் கதிர். இவருக்கு ஓர் அழகான காதலி ஸ்ரூஷ்டி டாங்கே. இவருக்கு அப்பா, அண்ணா, அண்ணி, குழந்தை என அழகான குடும்பம்.

இவரின் காவல்துறைக்கு சவால் விடும் வகையில் ஒரு கேஸ் வருகிறது.

அதாவது பெரிய பணக்கார வீட்டுக் குழந்தைகளை கடத்தி ஒரு கும்பல் பணம் பறிக்க முயல்கிறது.

ஒரு குழந்தையை கடத்தி ரூ. 5 கோடி வரை கேட்கின்றனர். பெற்றோர் பணம் தர சம்மதிக்க அந்த பண்த்தை கொண்டு செல்கிறார் போலீஸ் கதிர்.

ஆனால் பணம் கொடுப்பது போல் சென்று அந்த கும்பலில் உள்ள ஒருவனை கொன்று விட்டு குழந்தையையும் பணத்தை மீட்டு வருகிறார்.

தங்கள் நண்பனை போலீஸ் கதிர் கொன்றதால் அவரின் குடும்ப உறுப்பினர்களை 24 மணி நேரத்திற்குள் கொல்ல திட்டமிடுகிறார் வில்லன் லகுபரன்.

இந்த சவாலை கதிரிடம் தெரியப்படுத்தவும் செய்கிறார்.

அதன்பின்னர் கதிர் என்ன செய்தார்? குடும்பத்தை காப்பாற்றினாரா? வில்லன் லகுபரன் சொன்னதை செய்தாரா? அந்த கும்பல் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

கம்பீரம், நேர்மை, என மிடுக்கான அதிகாரியாக கலக்கியிருக்கிறார் கதிர்.

பன்ச் டயலாக் எதுவும் இல்லாமல் ஒரு சாதாரண போலீஸ் அதிகாரியாகவும் அதே சமயம் கண்ணியம் தவறாக அதிகாரியாகவும் சிறப்பாக செய்துள்ளார் கதிர்.

ராட்டினம் பட ஹீரோ லகுபரன் தான் இப்படத்தில் வில்லன். பழிவாங்கத் துடிக்கும் அவரின் கண்கள், நண்பன் மீது பாசம் என தெறிக்க விட்டுள்ளார்.

லகுபரனுக்கு இனி வில்லன் வேடங்கள் அதிகம் வந்தாலும் ஆச்சரியமில்லை.

கதிரின் போலீஸ் நண்பர்களாக வரும் அர்ஜீன் ராம் நல்ல தேர்வு.

ஸ்ருஷ்டிக்கு பெரிதாக வேலையில்லை. அவருக்கு கொடுத்த சம்பளத்தை தயாரிப்பாளர் மிச்சம் செய்திருக்கலாம்.

இவர்களுடன் உயர் அதிகாரி மாரிமுத்து, அண்ணா பவன், அண்ணி நீலிமா ராணி, சுஜா வருணி ஆகியோர் தங்கள் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஒரு நாளில் நடக்கும் விறுவிறுப்பான திரைக்கதை என்பதால் படத்தில் பாடல்களை வைக்கவில்லை என்பதால் டைரக்டரை பாராட்டலாம்.

எனவே படத்தின் பின்னணி இசையில் அதிகம் ஸ்கோர் செய்துள்ளார் அம்ரீஷ். வில்லன் வரும்போது எல்லாம் வரும் பின்னணி இசை செம மிரட்டல்.

நிறைய லாஜிக் மீறல்கள் உள்ளதால் கதையில் சில பலவீனம் தெரிகிறது.

குழந்தையை கொல்ல திட்டமிடும் கொலைக்காரனை பார்த்த நர்ஸ் ஒருவர் இருங்க.. உங்கள மாட்டிவிடுறேன் என்று சொல்வது எல்லாம் நம்புப்படியாக இல்லை.

அதன் பின்னர் அந்த நர்ஸ் டிரெசை சுஜா வருணி போட்டுக் கொள்வதற்காகவே காட்சி வைக்கப்பட்டதாக தெரிகிறது.

அதுபோல் குழந்தையை அழைக்க செல்லும் பள்ளி பேருந்து காட்சியில் நம்பகத்தன்மை இல்லை.

போலீஸ் குடும்பத்தை வில்லன் மிரட்டுவது என வழக்கமான டெம்ப்ளேட் கதை இல்லாமல் இன்னும் மாற்றியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

ஆனாலும் விறுவிறுப்பான படத்தை கொடுத்த நவீன் நஞ்சுண்டைனை பாராட்டலாம்.

சத்ரு.. கம்பீரமான கதிர்

நீதி கிடைக்க வீதியில் போராடு… பூமராங் விமர்சனம் 3.25/5

நீதி கிடைக்க வீதியில் போராடு… பூமராங் விமர்சனம் 3.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா, சதீஷ், ஆர் ஜே பாலாஜி, ரவி மரியா மற்றும் பலர்.
இயக்கம் – கண்ணன்
ஒளிப்பதிவு – பிரசன்னா குமார்
இசை – அர்ஜீன் ரெட்டி புகழ் ரதன்
பிஆர்ஓ – சுரேஷ் சந்திரா

கதைக்களம்…

சிவா என்றொரு நபர் ஒரு தீ விபத்தில் தன் முகத்தை இழக்கிறார். அப்போது அதே மருத்துவமனையில் உயிரை விடும் நிலையில் இருக்கிறார் சக்தி (அதர்வா).

எனவே முகம் மாற்று அறுவைசிகிச்சையின் படி அதர்வாவின் முகத்தை எடுத்து சிவாவிற்கு வைக்கின்றனர்.

இவரை காதலிக்கிறார் ஒரு நாயகி மேகா ஆகாஷ். இவரின் நண்பன் சதீஷ்.

இந்த புதிய முகத்தை பார்த்த சிலர் இவரை எங்கு பார்த்தாலும் கொல்ல துடிக்கின்றனர்.

இதுவரை யாருமே தனக்கு எதிரி இல்லாத நிலையில் இந்த முகத்தை பார்த்த இவர்கள் ஏன்? நம்மை கொல்ல வேண்டும் என அந்த காரணத்தை அறிய நினைக்கிறார் அதர்வா.

அதன்படி சில காரணத்தை புரிந்து திருச்சி செல்கிறார்.

அந்த ப்ளாஷ்பேக்கில் அதர்வா, ஆர் ஜே பாலாஜி, இந்துஜா இவர்கள் வருகின்றனர்.

ஐடி வேலையை திடீரென இழக்கும் இவர்கள் கிராமத்திற்கு சென்று விவசாயம் செய்ய முற்படுகின்றனர்.

அங்கு தண்ணீர் இல்லாத காரணத்தால் நதி நீர் இணைப்பு திட்டத்தை கையில் எடுத்து போராடுகிறார் அதர்வா. மக்கள் ஆதரவு பெறுகிறது.

இதனால் ரியல் எஸ்டேட் செய்யும் அரசியல்வாதி மற்றும் கார்ப்பரேட் கம்பெனிகளின் கோபத்தை சம்பாதிக்கிறார்.

இறுதியில் நதிகளை இணைத்தாரா? அரசியல்வாதிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் என்ன செய்தனர்? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

அதர்வாவுக்கு ஒரு கேரக்டர்தான் என்றாலும் இரண்டு கேரக்டர் போல கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதையும் சவாலாக ஏற்று அசத்தியிருக்கிறார் அதர்வா. இரண்டு நாயகிகள் இருந்து துளியும் இவரிடம் ரொமான்ஸ் இல்லை.

மேகா ஆகாஷ்க்கு பெரிதாக வேலையில்லை. டூயட் பாடிவிட்டு சில டயலாக்குகளை பேசி செல்கிறார்.

ப்ளாஷ்பேக்கில் வரும் இந்துஜாவுக்கு நிறைவான கேரக்டர். ஆனால் சில நேரம் கொஞ்சம் ஓவர் ஆக்டிங்.

சதீஷ் மற்றும் ஆர்ஜே பாலாஜியின் காமெடிகள் கைத்தட்டல்களை பெறுகிறது.

முக்கியமாக ஆர்.ஜே. பாலாஜியின் சோஷியல் மெசேஜ் காட்சிகள் நன்றாக ஒர்க் அவுட் ஆகிறது. அதர்வாவை விட இவர்தான் நிறைய அரசியல் பன்ச்க்களை பேசியிருக்கிறார். அனைத்தும் அசத்தல். இவரின் முடிவு எதிர்பாராத ஒன்று.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இசையமைப்பாளர் ரதன் இசையும் பின்னணி இசையும் ரசிக்க வைக்கிறது. ’முகையாழி’ பாடல் ரசிகர்கள் மனதை கவரும்.

பிரசன்னா குமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்புல். அதிலும் புதுக்கோட்டை மாவட்டத்தை காட்டும்போது அந்த பசுமை காட்சி மற்றும் வறட்சி காட்சி இரண்டும் மனதை கவர்கிறது.

தேசமே பாடல் விவசாயிகளை கவரும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது அருமை.

இயக்கம் பற்றிய அலசல்…

இவன் தந்திரன் என்ற வெற்றிப்படத்தை கொடுத்த கண்ணன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

தமிழக தண்ணீர் பிரச்சினைக்கு ஒரு கிராமத்தில் இருந்து தீர்வு சொல்ல முற்பட்டு இருக்கிறார்.

ஒரு ஆறில் இருந்து வெளியாகும் உபரி நீரை கடலில் கலக்க விடாமல் மற்றொரு கிராமத்திற்கு திருப்பினால் அந்த கிராமத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்பதை அக்கறையுடன் சொல்லியுள்ள இயக்குனரை வெகுவாக பாராட்டலாம்.

அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஒன்றும் செய்யவில்லை என்று சமூக வலைத்தளங்களில் போராடாமல் வீதிக்கு வந்து போராடினால் நீதி கிடைக்கும் என ஆணித்தரமாக சொல்லி அடித்திருக்கிறார்.

முதல் பாதியில் கதை பெரிதாக இல்லை என்பதால் அதை ஒரு மணி நேரத்திற்குள் முடித்திருப்பது டைரக்டரின் புத்திசாலித்தனம் தெரிகிறது.

ஆனால் ஒரு அதர்வா மட்டுமே இருக்கும் போது இருவருக்கும் ஒரே சாயல் குரல் எப்படி? என்பதுதான் புரியவில்லை.

பூமராங்… நீதி கிடைக்க வீதியில் போராடு

Boomerang review rating

ஆண்களுக்கு எச்சரிக்கை… 90ML விமர்சனம் 3.25/5

ஆண்களுக்கு எச்சரிக்கை… 90ML விமர்சனம் 3.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: ஓவியா மற்றும் பலர்.
இயக்கம் – அனிதா உதீப் (அழகிய அசுரா)
ஒளிப்பதிவு – அரவிந்த் கிருஷ்ணா
இசை – சிம்பு
பிஆர்ஓ – யுவராஜ்

கதைக்களம்…

தன் அறிமுக காட்சியிலேயே சிகரெட் அடித்தப் படி ஆட்டோவில் வந்து இறங்குகிறார் ஓவியா.

தன் பாய் பிரெண்ட் உடன் லிவிங் டுகெதர் பாணியில் வாழ்கிறார். சரக்கு சிகெரட், ரொமான்ஸ், செக்ஸ் என தன் இஷ்டப்படி இருக்கிறார்.

அங்குள்ள 4 பெண்களின் (3 திருமணமானவர்கள்) நெருங்கி பழகுகிறார்.

தோழிகளில் ஒருவருக்கு மட்டும் திருமணமாகவில்லை. அப்போதுதான் அந்த பெண்ணின் காதல் பிரச்சினை தெரிய வருகிறது. அது என்ன பிரச்சினை, எப்படி தீர்த்து வைக்கிறார்.

அந்த பெண்களுடன் ஓவியா அடிக்கும் லூட்டியே 90 எம்.எல். படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழகத்தையே தன் பக்கம் கவர்ந்தவர் ஓவியா. அப்போது வெட்டப்பட்ட ஹேர் ஸ்டைலுடன் இந்த படத்திலும் நடித்துள்ளார்.

ஆண்கள் மட்டும்தான் சரக்கு, கஞ்சா, சிகரெட் அடிக்கனுமா? நாங்களும் செய்வோம்ல என்று ஓபனாக பேசி மணிக்கு ஒரு முறை பாட்டில்களை ஓப்பன் செய்கிறார்.

சரக்கு அடித்துவிட்டு ஆண்கள் என்ன வெல்லாம் பேசுவார்கள்? என்பதை எல்லாம் பெண்களும் பேசுவார்கள்.. என்பதை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் பெண் இயக்குனர் அனிதா உதீப்.

மார்பு சைஸ் முதல் செக்ஸ் வரை அனைத்தையும் பேசுவார்கள் என்பதையும் ஓபனாக பேசி இளைஞர்களை சூடேற்றியிருக்கிறார்கள். மேலும் ஆண்கள் இல்லாமலும் செக்ஸ் செய்துக் கொள்ள லெஸ்பியன் இருக்கிறது என்பதையும் சொல்லிவிட்டார்கள். (அதான் இந்திய அரசே அதற்கு ஓகே சொல்லிவிட்டதே..)

ஓவியாவை விட அப்பார்ட்மெண்ட் பெண்களும் அழகாகவே இருக்கிறார்கள். அதிலும் தாமரை மற்றும் பாரு என இரண்டு ஆன்டிகள் ரசிகர்களை அதிகம் ஈர்க்கிறார்கள்.


தொழில்நுட்ப கலைஞர்கள்…

அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் காட்சிகளை கண்களில் ஒற்றிக் கொள்ளலாம்.

சிம்பு இசையில் மரண மட்டை, பீப் பிரியாணி பாடல்கள் பட்டைய கிளப்புகிறது. அதுவும் பெண்களின் ப்ரெண்ட் ஷிப்புக்காக உருவாக்கப்பட்ட ப்ரெண்ட்டி டா பாடல்கள் இனி தோழிகளின் தேசிய கீதம் பாடலாக இருக்கும்.

இசையில் கலக்கிய சிம்பு பின்னணி இசையில் தேறவில்லை. முக்கியமாக கார் சேசிங் சீனில் ஆக்சன் வராமல் ஆட்டம் போட வைக்கும் இசையாக உள்ளது.

சிம்புவும் ஒரு காட்சியில் வந்து எனக்கு லவ் செட்டாகாது. லிவிங் டுகெதர் ஓகே என்று டயலாக் எல்லாம் பேசி ஓவியாவுக்கு லிப் கிஸ் அடித்து செல்கிறார்.

இயக்கம் பற்றிய அலசல்…

இதற்கு முன் இப்படியொரு படம் வந்திருக்குமா? தெரியாது. அந்தளவுக்கு பெண்கள் பற்றிய அனைத்தையும் அக்கு வேறு பிரிச்சி மேய்ந்திருக்கிறார் டைரக்டர்.

தைரியமாக சொன்ன இயக்குனர் அனிதாவுக்கு ஹாட்ஸ் ஆஃப் என்றே சொல்ல வேண்டும்.

ஆண்கள் சரக்கு அடித்துவிட்டு என்ன வேணாலும் செய்யலாம். அதையே பெண்களும் செய்தால் குடும்பம் என்னவாகும் என்பதையும் அப்பட்டமாக காட்டியிருக்கிறார்.

இந்திய சட்டப்படி பெண்களின் லெஸ்பியனை ஆதரித்து இருக்கிறார் அனீதா. ஆனால் திருமணமான பெண்களோ அல்லது ஆண்களோ கள்ளக்காதல் வைக்க கூடாது என்பதையும் சொல்லியிருக்கிறார்.

அதாவது… கல்யாணம் ஆகிவிட்டால் ஒருவன் ஒருத்தியுடன் வாழு. அதாவது கள்ளக்காதல் இல்லாமல் இருக்க வேண்டும் என்கிறார். ஒரு வேளை (கணவனோ அல்லது மனைவியோ) பிடிக்கவில்லை என்றால் ஒரேடியாக அவரை பிரிந்து சென்றுவிட்டு என்ன வேணாலும் செய்துக் கொள் என்ற தத்துவத்தையும் பேசியிருக்கிறார்.

பெண்களை அரைகுறை ஆடையுடனும் செக்ஸியாகவும் காட்டியுள்ளார். சேலையில் இருந்தாலும் அதிலும் கவர்ச்சி காட்ட முடியும் என்பதையும் உணர்த்தியிருக்கிறார்.

மேலே சொன்ன விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு பிடிச்சிருந்தா இந்தப்படத்தை பாருங்கள். இல்லை என்றால் உங்களுக்கு ஒரு சதவிகிதம் கூட படம் பிடிக்காது.

90 எம்எல்… ஆண்களுக்கு எச்சரிக்கை…

பட்ஜெட் மேரேஜா.? டேமேஜா.? திருமணம் விமர்சனம் 3.25/5

பட்ஜெட் மேரேஜா.? டேமேஜா.? திருமணம் விமர்சனம் 3.25/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: சேரன், சுகன்யா, உமாபதி, காவ்யா சுரேஷ், பால சரவணன், எம்எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர்.
இயக்கம் – சேரன்
ஒளிப்பதிவு – ராஜேஷ் யாதவ்
இசை – சித்தார்த் விபின்
பிஆர்ஓ – நிகில்

கதைக்களம்…

பட நாயகன் உமாபதி ஒரு ரேடியோ ஸ்டேசனில் ஆர்.ஜே.வாக பணி புரிகிறார். இவரது அக்கா சுகன்யா ஜவுளி (பொட்டிக்) பிசினஸ் செய்து வருகிறார். இவர்களது சித்தப்பா எஸ்எஸ் பாஸ்கர். இவர்களது குடும்பம் வசதியான ஜமீன் பரம்பரை.

வருமான வரித்துறை அதிகாரியாக சேரன். இவருக்கு திருமணமாகவில்லை. இவரது ஒரே தங்கை காவ்யா சுரேஷ்.. இவர்களது அக்கா ஒரு இல்லத்தரசி. இவர்களது மாமா தம்பி ராமையா.

நாயகன் மற்றும் நாயகி காதலிக்கின்றனர். அவர்களுக்கு பெற்றோர் சம்மதமும் கிடைக்கிறது.

அதன்பின்னர் திருமண ஏற்பாடுகளும் நடக்கிறது. ஆனால் சுகன்யா தரப்பு ஆடம்பரமாக செலவு செய்ய நினைக்க, சேரன் மிக எளிமையாக நடத்த விரும்புகிறார்.

இதனால் பிரச்சினை ஏற்பட்டு திருமணம் நிற்கிறது. அதன்பின்னர் திருமணம் எப்படி நடந்தது..? என்பதே மீதிக் கதை.

கேரக்டர்கள்…

பாசமான அண்ணன், பொறுப்பான மகன், சிக்கனமான குடும்ப பையன் என வெரைட்டி காட்டியிருக்கிறார் சேரன்.

ஒரு திருமண பத்திரிகையின் செலவு ரூ. 250 மற்றும் 3500 பத்திரிகை அடிக்கும் செலவு + பின்னர் அதை கொடுக்க செல்லும் செலவு மற்றும் இதர செலவுகளை சேர்த்தால் ரூ. 12 லட்சம் ஆகும் என்றால் அது தேவையா? என சேரன் கேட்கும்போதே அட ஆமால்ல என்று நம்மையும் கேட்க வைக்கிறது.

திருமண பத்திரிகையை வாங்குபவர்கள் அதில் தேதி மற்றும் இடத்தை பார்த்துவிட்டு துக்கி போட்டு விடுவார்கள்? அதற்கு ஏன்? இந்த ஆடம்பரம் என்று சேரன் கேட்கும்போது நம்மை அறியாமல் கை தட்டி விடுகிறோம்.

ஆனால் படம் முழுவதும் சேரன் சோகமாகவே வருகிறார். முகத்தில் புன்னகை துளி கூட இல்லையே சார்.

சுகன்யாவை சும்மா சொல்லக்கூடாது. பணத்திமிரு, ஆடம்பரம், அழகு என அனைத்திலும் அம்சம்.

நாயகன் நாயகிக்கு பெரிதாக வேலையில்லை. குடும்பத்திற்கும் கதைக்கும் ஏற்ற கேரக்டர்களாக வருகிறார்கள். நாயகனை விட நாயகிக்கு நடிக்க நல்ல ஸ்கோப் உள்ளது.

இதில் நாயகிக்கு ஒரு பரதநாட்டியம் காட்சி வேற. அவருக்கு ஆடத் தெரியட்டும். ஆனால் அந்தக் காட்சி ஏன்..? தேவையில்லாத ஒன்றாக தெரிகிறது.

டிரைவராக வரும் பாலசரவணின் காமெடி சில நேரம் எடுபடுகிறது. தம்பி ராமையா மற்றும் எம்எஸ். பாஸ்கர் இருவரும் நடிப்பில் செம.

திருமண செலவு என்பது நாம் செய்யும் தர்மம். அதில் பல பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. நிறைய குடும்பங்கள் பிழைக்கிறது என சேரன் அம்மா சொல்லும் இடம் நச். பாராட்டுக்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சித்தார்த் விபினின் இசையில் பாடல்கள் பெரிதாக எழவில்லை என்றாலும், பின்னனி இசை பாராட்டை பெறுகிறது. ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்புல்லாக இருக்கிறது.

ஆடம்பர திருமணத்தில் ஏற்படும் அனாவசிய செலவுகளை குறைத்தால் அந்த தொகையை புதுமணத் தம்பதிகளுக்கு கொடுத்து உதவலாம் என அருமையாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் சேரன்.

திருமண சாப்பாட்டில் பலருக்கு பிடிக்காத ஐட்டங்கள் இருக்கலாம். ஒரு சிலர் சாப்பிட்டு கூட வரலாம். எதற்காக சாப்பாடு வைத்து வேஸ்ட் செய்ய வேண்டும். அதற்கு பதிலாக யாருக்கெல்லாம் சாப்பாடு வேனுமோ?

அவர்களுக்கு மட்டும் டோக்கன் கொடுத்து சாப்பிட சொல்லலாம் என்பதையும் சொல்லியிருக்கிறார்.

முக்கியமாக சில மணி நேரத்திற்காக ரிசப்சன் ஜிப்பாவுக்கு ஆகும் செலவையும் குறைக்க சொல்லியிருக்கிறார். அதற்கும் ஹேட்ஸ் ஆஃப்.

முதல் பாதி செல்வதே தெரிவதில்லை. ஆனால் 2ஆம் பாதியை சீரியல் போல கொண்டு சென்றுவிட்டார் சேரன்.

ஆனால் திருமணம் செய்யப் போகும் ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் இந்த படம் நிச்சயம் புடிக்கும்.

பட்ஜெட் பத்மநாபன்.. திருமணம் விமர்சனம்

கெத்தா…? வெத்தா..? தாதா 87 திரை விமர்சனம் 3/5

கெத்தா…? வெத்தா..? தாதா 87 திரை விமர்சனம் 3/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி, ஸ்ரீபல்லவி, கதிர், விஜய் ஸ்ரீ மற்றும் பலர்.
இயக்கம் – விஜய் ஸ்ரீ
ஒளிப்பதிவு – ராஜபாண்டி
இசை – லீயான்டர் லீ மார்ட்டி, அல் ரூபன், தீபன் சக்ரவர்த்தி
பிஆர்ஓ – நிகில்

கதைக்களம்…

சாருஹாசன் நடிப்பில் மிகவும் பரபரப்பாக உருவாக்கப்பட்ட படம் தாதா 87.

அப்படி என்னதான் இருக்கிறது என்பதை பார்ப்போம்.

ஏரியா கவுன்சிலர் பதவிக்கு கடும் போட்டி வருகிறது. இருவரை காலி செய்துவிட சதுரங்க ஆட்டம் ஆடுகிறார் எம் எல் ஏ-வாக வரும் மனோஜ்குமார். எம்எல்ஏ-வுக்கு அட்ஜஸ்ட் செய்யும் சப்-இன்ஸ்பெக்டர் காட்டானாக நடித்திருக்கிறார் இப்பட டைரக்டர் விஜய் ஸ்ரீ.

இவர்கள் அனைவரும் பயப்படும் ஆள் ஒருவர் இருக்கிறார் என்றால் அது சாருஹாசன் தான்.

எங்க தப்பு நடந்தாலும் தட்டி கேட்பார். அனுமதியின்றி பெண்களை தொட்டால் உயிரோடு எரிப்பது இவரது வழக்கம்.

இவருக்கு இந்த வயதிலும் சரோஜா மீது காதல் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் தன் பழைய நண்பர் சாருஹாசனை சந்திக்கிறார் ஜனகராஜ்.

ஒரு நாள் தனது மகள் ஸ்ரீபல்லவிக்கு காதல் தொல்லை கொடுக்கும் நாயகன் ஆனந்த் பாண்டியை கண்டிக்க சொல்கிறார் ஜனகராஜ்.

தாதா என்ன செய்தார்? காதலனை கண்டித்தாரா? அல்லது காதலை சேர்த்து வைத்தாரா? நாயகன் என்ன ஆனார்? என்பதே படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்…

விஜய் டிவியில் கலக்கிய ஆனந்த் பாண்டிக்கு இதுதான் முதல் படம்.

ஏரியாவில் எந்தப் பெண்ணை பார்த்தாலும் அவரிடம் ஐ லவ் யூ சொல்வது இவரது வழக்கம். இது போன்ற ஜாலி பையனாக ஜொள்ளு பையனாக வாழ்ந்திருக்கிறார்.

நன்றாக நடனமாடியிருக்கிறார். சில நேரங்களில் ஓவராக பேசி எரிச்சலான நடிப்பை கொடுத்து நம்மை கடுப்பேற்றி விட்டார்.

பெரும்பாலும் படங்களில் சாருஹாசனை சாந்தமாகதான் பாத்திருக்கிறோம். 87 வயதில் இப்படி எல்லாம் நடிப்பதே பெரிய விசயம்தான். தாதா கேரக்டர் அதிலும் கெத்து காட்டியிருக்கிறார். கடைசியில் கொஞ்சம் ரொமான்ஸ் செய்துள்ளார். ஆண்டவருக்கே அண்ணன்டா…

இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா.

முதல் பாதி முழுவதும் சாருஹாசனுக்கு என்றால். 2ஆம் பாதி முழுவதும் நாயகிக்கு தான். ஸ்ரீ பல்லவி அருமையாக நடித்துள்ளார்.

ஒரு பெண் நாயகி முதன்முறையாக திருநங்கையாக நடித்துள்ளது பாராட்டத்தக்கது.

காதல் என்றால் திருமணம் என்றால் செக்ஸ் மட்டும் தானா? அது ஒரு 5 நிமிட சம்பவம் தான். ஆனால் அதை மீறி ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை தன் நடிப்பிலும் கண்களிலும் வசனத்திலும் வெளிப்படுத்தியுள்ளார்.

கலகலப்பில்லாத கேரக்டரில் ஜனகராஜ். ஆனாலும் தன் மகளுக்காக இவர் எல்லாரிடமும் சண்டை போடும்போது இவர் ஜனங்க ராஜ் ஆகிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…
லீயான்டர் லீ மார்ட்டி, அல் ரூபன், தீபன் சக்ரவர்த்தி என 3 பேர் இசையமைத்துள்ளனர். ’ஆண்டவருக்கே அண்ணன்டா… ஒரு நிமிஷம் தல’ பாடல் ஆட்டம் போட வைக்கும்.

படத்தின் பின்னனி இசையில் தெறிக்க விட்டுள்ளார்.

ராஜபாண்டியின் ஒளிப்பதிவு பெரும்பாலான காட்சிகள் இருட்டாக இருந்தாலும். ஆனாலும் ரசிக்கும் படி வடசென்னையை வடிவமைத்துள்ளார்.

தனது முதல் படம் என்றாலும் தாதா கதையில் ஆரம்பித்து அதை காதலில் முடித்திருப்பது செம. டைரக்டர் விஜய் ஸ்ரீயை பாராட்டலாம்.

ஆனால் தாதா கதை மற்றும் காதல் கதை என இரண்டையும் நன்றாக பிரித்து 2 படமாக கொடுத்திருக்கலாம்.

இரண்டையும் ஒன்றாக கொடுக்க நினைத்து 2ஆம் பாதியில் தடுமாறி இருக்கிறார்.

தாதா வாக கெத்து காட்டிய சார்ருஹாசன் திடீரென சரோஜாவை தேடுவது எல்லாம் ஓவர். இருவரும் இந்த வயதிலும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது எல்லாம் நம்பும்படியாக இல்லை.

தாதா 87.. கெத்தில் சத்து குறைவு

DhaDha87 movie review rating

More Articles
Follows