ஸ்கை ஸ்கிராப்பர் விமர்சனம்

ஸ்கை ஸ்கிராப்பர் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: டிவைன் ஜான்சன், நீவ் காம்ப்பெல், கோரெஸ் போத்தா மற்றும் பலர்.
இயக்கம் – ராஷன் மார்சல் டர்பர்
ஒளிப்பதிவு – ராபர்ட் எல்ஸ்விட்
இசை – ஸ்டீவ் ஜப்லான்ஸ்கை

கதைக்களம்…

டிவைன் ஜான்சன் ஒரு குண்டு வெடிப்பில் தன்னுடைய ஒரு காலை இழக்கிறார். இதனால் நல்ல வேலையில் இருந்த இவர் செக்யூரிட்டியாக வேலை பார்க்க நேரிடுகிறது.

வேலை செய்யும் ஒரு அப்பார்ட்மெண்டில் அவர் குடும்பத்துடன் குடியேறுகிறார்.

செக்யூரிட்டி என்பதால் எல்லா மாடிகளுக்கும் செல்லக் கூடிய ஆக்சஸ் கார்டு அவருக்கு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், வில்லன் கோரெஸ் போத்தா அந்த கட்டிடத்தில் புகுந்து, 96வது தளத்தில் தீ வைக்கிறான். மேலும் அந்த கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் நிறுத்திவிடுகிறான்.

அந்த கட்டிடத்தின் தீயை நம்ம ஹீரோ டிவைன் ஜான்சன் எப்படி அணைத்தார்?. தன்னுடைய குடும்பத்தையும் அங்குள்ளவர்களையும் காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

டிவைன் ஜான்சனை சோலோ ஹீரோவாக்கியுள்ளனர். அவரும் கிடைத்த கேப்பில் எல்லாம் ரசிகர்களை உற்சாகப்படுத்த அதிரடி காட்டியுள்ளார்.

ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியுள்ளார். தீ பிடித்த கட்டிடத்தில் டிவைன் ஜான்சன், செய்யும் சாகசங்கள் ரசிகர்களுக்கு செம விருந்து.

பல ஆடியன்ஸ் சீட்டின் நுனிக்கே வந்துவிடுவார்கள்.

தமிழ் டப்பிங்கை தமிழர்களுக்கு பிடிக்கும் வகையில் ரசிக்கும் படி கொடுத்திருப்பது கூடுதல் சுவை.

ஸ்டீவ் ஜப்லான்ஸ்கை பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். ராபர்ட் எல்ஸ்விட்டின் ஒளிப்பதிவு படத்தின் மீதான பிரம்மாண்டத்தை அதிகரித்துள்ளது.

கிராபிக்ஸ் காட்சிகளா? இது என்பதை தெரியாத அளவுக்கு விருந்து படைத்துள்ளார் டைரக்டர் ராஷன் மார்சல் டர்பர்

‘ஸ்கை ஸ்கிராப்பர்’… நிச்சயம் ரசிக்கலாம்.

போத விமர்சனம்

போத விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: விக்கி, மிப்பு, உதயபானு (ராகுல் தாத்தா), வினோத், ஈஸ்வர், சண்முகசுந்தரம், வீர ராஜன் மற்றும் பலர்.
இயக்கம் – சுரேஷ் ஜி
ஒளிப்பதிவு – ரத்னகுமார்
இசை – சித்தார்த் விபின்
எடிட்டர் – தியாகராஜன்

கதைக்களம்…

ஆண் விபச்சாரன் என்ற புதிய கதைக்களத்துடன் இறங்கியுள்ளார் இப்பட இயக்குனர் சுரேஷ்.

சினிமாவில் நடிக்க ஆசைப்படுகிறார் நாயகன் விக்கி. அதற்கு முதலில் குறும்படத்தில் நடித்தால் நல்ல பெயர் கிடைக்கும் என்பதால் அதற்கான முயற்சியில் இறங்குகிறார்.

ஆனால் அதற்கே அவரிடம் பணமில்லை. எனவே ஒரு ஏஜெண்ட் மூலம் ஈஸ்வர் அறிமுகம் கிடைக்கிறது.

இந்த ஈஸ்வர் தான் சென்னை சிட்டி ஆண்களுக்கு அலையும் ஆண்டிகளுக்கு ஆண் விபச்சாரன்களை சப்ளை செய்கிறார். இதை போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோத் உதவியுடன் செய்து வருகிறார்.

விக்கிக்கு ஈஸ்வர் அறிமுகம் கிடைக்கவே, நிறைய ஆண்டிகளுடன் செக்ஸ் வைத்து கொள்கிறார். அதன் மூலம் பணம் கிடைக்கிறது.

ஒருநாள் ஒரு ஆண்டிக்கு வீட்டுக்கு போகும்போது, அந்த சமயம் பார்த்து யாரோ வீட்டிற்கு வர ஒளிந்துக் கொள்கிறார்.

அப்போது அந்த ஆண்ட்டி மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். எனவே இந்த பிரச்சினையில் இருந்து தப்பித்துச் செல்ல நினைக்கும் போது, அந்த ஆண்டியின் புருசன் இவரை பார்த்து விடுகிறார்.

அவன்தான் தன் மனைவியை கொலை செய்த கொலைக்காரன் என போலீசில் புகார் கொடுக்கிறார்.

அடுத்து நாயகன் என்ன செய்தார்? தான் கொலை செய்யவில்லை என்பதை நிரூபித்தாரா? ஆண்ட்டியை கொன்றது யார்? எதற்காக கொன்றார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

மதன் என்ற கேரக்டரில் அறிமுக நாயகன் விக்கி. தன்னால் முடிந்தவரை சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

போலீசிடம் மாட்டிக் கொள்ளும் காட்சிகளில் இன்னும் தவிப்பை கூட்டியிருக்கலாம். மற்றபடி முதல் படம் என்பதால் பாராட்டலாம்.

ஆக்சன் ரொமான்ஸ் இல்லாத காரணத்தினால் ஏதோ ஒரு குறை தெரிகிறது.

இவரின் நண்பராக வரும் மிப்பு அண்ட் ராகுல் தாத்தா இருவரும் கச்சிதம். அதிலும் ராகுல் தாத்தா இதில் அதிகப்படியான ட்விஸ்ட் கொடுத்து கதையின் நாயகனாக மாறிவிட்டார்.

இன்ஸ்பெக்டர் வினோத் மற்றும் ஆண் விபச்சார புரோக்கர் சொப்பன கிருஷ்ணன் (ஈஸ்வர்) இருவரும் நல்ல நடிப்பை வழங்கியுள்ளனர்.

பிச்சைக்காரன் படத்தில் கலக்கிய ஈஸ்வரும் மற்றொருவரும் ரசிக்க வைக்கின்றனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு கரகாட்டக்காரன் புகழ் சண்முக சுந்தரம். ஆனால் அவருக்கு வேறு யாரோ? டப்பிங் கொடுத்துவிட்டார்கள் போல. அதை பழைய வாய்ஸ் இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பாடல்கள் கை கொடுக்கவில்லை என்றாலும் போத படத்திற்கு பின்னணி இசையில் போதை ஏற்றி விடுகிறார் சித்தார்த் விபின்.

படத்தின் ஒளிப்பதிவில் குறையில்லை. ஆனால் எடிட்டர் தன் பங்கை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். முதல் பாதியில் விறுவிறுப்பு இல்லை.

யார் கொலை செய்தார்? என்ற விறுவிறுப்பான நேரத்தில் தேவையில்லாத குத்து பாடல் … அட என்னய்யா? இது என கேட்கத் தோன்றுகிறது.

கொலைக்காரன் யார்? என்றே ஆடியன்சுக்கு தெரிவிக்காமல் படத்தை முடித்துவிட்டு, பின்னர் ஒரு ட்விஸ்ட் வைத்திருப்பது செம.

அதுவும் இவர்தான் அந்த கொலைக்காரனா? என தெரிய வரும்போது… செம.

படம் ஆரம்பிக்கும்போது கூகுள் ஸ்டைலில்… Gigolos என போட்டுவிட்டு நாயகன், நாயகன் நண்பர் என ஒவ்வொருவராக டைட்டில் கார்டூ போடுவது புதிய முயற்சி. அந்த கற்பனையை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

தவறான வழியில் பணம் சம்பாதிக்க நினைத்தால் என்னாகும்? நம் போனில் நம் உரையாடல்களை ரெக்கார்ட் செய்து வைத்தால் என்ன பிரச்சினையாகும்? என்பதை பக்காவாக சொல்லிவிட்டார் விக்கி.

படம் ஆண் விபச்சாரனை பற்றிய படம் என்பதால் நாயகி வேண்டாம் என முடிவி செய்துவிட்டாரோ?

ஆம்பள ஐட்டம் என சொன்னாலும் ஒரு காட்சியில் கூட ஆபாசம் இல்லை. மேலும் இதில் த்ரில்லர் கொடுத்திருப்பது சிறப்பு.

ஆனால் திரைக்கதையில் இன்னும் விறுவிறுப்பை கூட்டியிருந்தால் இந்த போத இன்னும் எகிறியிருக்கும். கிக் ஏறவில்லை.

போத… ஆம்பள ஐட்டம்

Bodha aka Botha tamil movie review rating

கடைக்குட்டி சிங்கம் விமர்சனம்

கடைக்குட்டி சிங்கம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: கார்த்தி, சத்யராஜ், சாயிஷா, பிரியா பவானி சங்கர், அர்த்தனா, சூரி, ஸ்ரீமன், சௌந்தரராஜா, இளவரசு, யுவராணி, பானுப்ரியா, விஜி சந்திரசேகர் மற்றும் பலர்.
இயக்கம் – பாண்டிராஜ்
ஒளிப்பதிவு – வேல்ராஜ்
இசை – இமான்
எடிட்டர் – ரூபன்
தயாரிப்பு – 2டி எண்டர்டெயின்மெண்ட் சூர்யா
பிஆர்ஓ. – ஜான்சன்

கதைக்களம்…

குடும்பத் தலைவர் சத்யராஜ். பெண் குழந்தைகளாகவே பிறப்பதால் ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டுக் கொண்டே இருக்கிறார். எனவே 2வது மனைவியாக பானுப்ரியா வருகிறார்.

அதற்குள் இந்த தம்பதிக்கு 5 பெண் குழந்தைகள் பிறந்துவிடுகிறது. இறுதியாக கடைக்குட்டி சிங்கமாக கார்த்தி பிறக்கிறார்.

இவர் படிக்கவில்லை. ஆனால் விவசாயம் மூலம் நல்ல வருமானம் பார்த்து தன் பெரிய குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்கிறார்.

சத்யராஜின் 5 மகள்களில் ஒருவரின் மகன்தான் சூரி. ஒருவருக்கு குழந்தையே இல்லை. மற்ற 3 மகள்களுக்கும் பெண் குழந்தை பிறக்கிறது.

சில வருடங்களுக்கு பிறகு இருவருக்கு வயதுக்கு வந்த மகள்கள் இருக்கிறார்கள். ஒருவர் பிரியா பவானி சங்கர். மற்றொருவர் அர்த்தா பினு.

இவர்கள் இருவரும் தாய்மாமன் கார்த்தியை மணக்க ஆசைப்படுகிறார்கள்.

ஆனால் அக்கா மகள்களை மணக்க விருப்பமில்லாமல் நாயகி சாயிஷாவை காதலிக்கிறார். அவரும் இவரை காதலிக்கிறார்.

அக்கா மகளை மணக்க கார்த்தி சம்மதிக்கவில்லை என்பதால் இந்த பெரிய குடும்பத்தில் பிரச்சினை வெடிக்கிறது.
இறுதியில் கார்த்தி என்ன முடிவு செய்தார்? குடும்ப பிரச்சினையை எப்படி முடிவுக்கு கொண்டு வந்தார்? யாரை திருமணம் செய்தார்?

கேரக்டர்கள்…

விவசாயி கேரக்டருக்கு கார்த்திக் செம கச்சிதம். முதல் காட்சியிலே ரேஸில் கலந்துக் கொண்டு தன் அண்ணன் சூர்யாவுடன் நடித்து விட்டார்.

தன் வெற்றிக்கு காரணமான இரண்டு காளைக்கும் சூர்யாவிடம் மாலை இடச் சொல்வது கைத்தட்டலை அள்ளுகிறது.

சென்டிமெண்ட் போல ஆக்க்ஷனிலும் அதிரடி காட்டியுள்ளார் கார்த்தி.

ஊருக்கே சோறு போடும் விவசாயியும் கடவுளை போல ஒரு படைப்பாளிதான் என அவர் பேசும் வசனங்களுக்கு விசில் பறக்கிறது.

தான் தோளில் வளர்த்த அக்கா மகளை எப்படி மனைவியாக்கி கட்டி அணைத்து கொள்வது? என கார்த்தி கேட்கும்போது அக்கா மகளை மணந்த பலருக்கு உறுத்தலாக அமையும்.

கூட்டுக் குடும்பமாக வாழ நினைப்பது, குழந்தையில்லாத அக்காளுக்கு மகனாக வாழ்வது என கார்த்தி ஸ்கோர் செய்கிறார்.

சூரியும் அவ்வப்போது கலகலப்பு கொடுத்து கார்த்திக்கு ஈடு கொடுக்கிறார்.

என்ன ஆனாலும் தன் குடும்பம் பிரிந்து விடக்கூடாது என குறியாக இருக்கும் சத்யராஜ் கேரக்டர் சூப்பர். தன் மாப்பிள்ளை இவரை அவமானப்படுத்தும் போது தன் மகள்களுக்காக பொருத்துக் கொள்வதில் மாமனாரின் மனது தெரிகிறது.

பிரியா பவானி சங்கர், அர்த்தனா ஆகியோரை பார்க்கும் போது பலருக்கும் தங்கள் அத்தை மகள்கள் நினைவில் நிச்சயம் வந்து செல்வார்கள். இருவரின் நடிப்பும் அவர்களை போல செம க்யூட்.

இவர்களுடன் பானுப்ரியா, விஜி, கார்த்தியின் 5 அக்காஸ் அவர்களின் புருசர்கள் என அனைவரும் கச்சிதம். எந்த கேரக்டரையும் டம்மியாக்காமல் எல்லாருக்கும் சம பங்களிப்பு கொடுத்துள்ளார்.

வில்லனாக வரும் சந்துரு (படத்தில் கொடியரசு) செம மிரட்டல். இவருக்கு டப்பிங் கொடுத்துள்ள ஆர்.கே.சுரேஷின் வாய்ஸ் அசத்தல்.

ஜான்விஜய், பொன் வண்ணன், சௌந்தரராஜா ஆகியோரும் மனதில் நிற்கிறார்கள்.

படத்தில் எல்லா கேரக்டர்களுக்கும் அழகான தமிழ் பெயர் சூட்டியிருப்பது படக்குழுவினரின் தமிழ் பற்று தெரிகிறது. (இதன் தெலுங்கு டப்பிங்கில் எப்படி எனத் தெரியவில்லை)

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இமான் இசையில் பாடல்கள் படத்துடன் ஒன்றிச் செல்வது சிறப்பு. சண்டக்காரி, செங்கதிரே பாடல்கள் ரசிக்கலாம்.
வேல்ராஜின் ஒளிப்பதிவும் சூப்பர் சுப்பராயனின் சண்டையும் படத்திற்கு வலு சேர்கிறது.

பாண்டிராஜ் இயக்கம் பற்றிய அலசல்…

தங்கள் மகளுக்கு தாய் மாமனை மணக்கும் ஆசை இருக்குமா? என்பதை எண்ணி பிள்ளைகளை பெற்றோர்கள் வளர்க்க வேண்டும் எனவும் ஒரு அட்வைஸ் செய்துள்ளார் டைரக்டர்.

அக்காக்களுடன் பிறந்த எல்லா தம்பிகளுக்கும் இந்த படத்தை அர்ப்பணிக்கலாம். தினம் உணவருந்தும் நாம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம்.

படத்தின் எல்லா கேரக்டர்களும் கச்சிதம் இருந்தாலும் படத்துடன் ஒன்றாத ஒரே கேரக்டர் சாயிஷா தான். இவரது முகம் இந்த கிராமத்து காவியத்திற்கு பொருந்தவேயில்லை.

புகழ்பெற்ற இளம் புது ஹீரோயின் என பார்க்காமல் படத்திற்கு இவர் பொருந்துவாரா? என்பதை டைரக்டர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

இந்த பீட்சா, பர்கர் காலத்துக்கு இது செட்டாகுமா? என யோசிக்காமல், செட்டாகும் வகையில் ஒரு பக்கா கதையை கொடுத்துள்ளார் பாண்டிராஜ்.

நாம் சோறு சாப்பிடும் வரை எந்த காலத்துக்கும் விவசாய குடும்பக் கதை செட்டாகும் என உறுதியுடன் நம்பி களமிறங்கியுள்ளார் தயாரிப்பாளர் சூர்யா.

கடைக்குட்டி சிங்கம்… கர்ஜிக்கும் விவசாய கடவுள்

தமிழ்ப்படம் 2 விமர்சனம்

தமிழ்ப்படம் 2 விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

இப்படத்தின் கதை… ஏம்ப்பா.. இதுக்கு எல்லாம் கதை இருக்கா? என்ன? அது டைரக்டருக்கே தெரியாது.

தமிழ் சினிமாவின் நாம் ரசித்த காட்சிகளையும் வெறுத்த காட்சிகளையும் இதில் தொகுத்து உள்ளனர்.

பல லொள்ளு சபாக்களின் கிண்டலே இதன் பாணி.

முதல் பாகத்தில் டி என்ற வில்லனை தேடி செல்லும் சிவா இந்த முறை வில்லன் பி யை தேடி செல்கின்றார்.

அந்த பி யை சிவா பிடித்தாரா? என்பதை எப்படி எல்லாம் கலாய்க்கும் படி செய்ய முடியுமோ அப்படி செய்துள்ளார் சி.எஸ்.அமுதன்.

Dhv8PEdUYAINkGu

கேரக்டர்கள்…

தமிழ் சினிமாவின் எல்லா ஹீரோக்களையும் சேர்த்து அகில உலக சூப்பர் ஸ்டார் என பட்டப் பெயருடன் வந்துள்ளார் சிவா.

டைட்டில் கார்ட்டிலேயே ரஜினி லோகோவுடன் சிவா பெயர் வருகிறது.

படம் முழுவதுமே இவர் ஒருத்தர் தான் எனலாம்.

ஓபிஎஸ், சின்னம்மா சசிகலா முதல் தமிழிசை, எச் ராஜா வரை அரசியல்வாதிகளையும் கலாய்த்துள்ளார்.

சிவா பேசினால் ஏன் பார்த்தால் கூட ஆடியன்ஸ் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.

கலாய்ப்பது தான் கான்செப் என்பதால் நோ லாஜிக்.

மற்றபடி சிவா முகத்தில் எந்தவித ரியாக்சனும் வேறு மாதிரியாக இல்லை. ஒரே மாதிரிதான். ஓவர் ரியாக்சன் என்றால் முகத்தை மூடிக்கொள்கிறார்.

சதீஷ் கேரக்டர் செம. 2.0 அக்‌ஷய்குமார் கெட்டப்பெல்லாம் போட்டு கலாய்த்து விட்டார். நல்ல வேளை அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகலை. இல்லேன்னா இன்னும் நிறைய காட்சிகள் இருக்கும் போல.

போய் புள்ள குட்டிய படிக்க வைங்கடா…ஆனா இன் ஜினியரிங் மட்டும் படிக்க வைக்க வேண்டாம் என்ற வசனத்திற்கு பயங்கர கைத்தட்டல். நிறைய பேர் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் போல.

சிவா அகில உலக சூப்பர் ஸ்டார் என்பதால் ஹாலிவுட் படங்களையும் கலாய்த்துள்ளனர்.

DhY7F9ZWsAA5tj1

ஸ்பீட், கேம் ஆப் தோரன்ஸ் போன்ற படங்களையும் விட்டு வைக்கவில்லை.

பாகுபலி, கபாலியின் உல்டா காட்சிகளை ரசிக்கலாம். வேதாளம், விவேகம் காட்சிளுக்கும் பஞ்சமில்லை.

ஆனால் ஓவர் டோஸ் ஒடம்புக்கு ஆகாது என்பது போல் சில நேரங்களில் சலிப்பு தட்டுகிறது.

கலாய்ச்ச்சிட்டே இருந்தா? எப்படியா? என எண்ணத் தோன்றுகிறது.

தேவை இல்லாமல் வரும் பாடல்கள் படத்தின் மைனஸ். சில பாடலை கட் பண்ணிவிட்டு படத்தை ஓட்டியிருக்கலாம். பின்னணி இசை ஓகே.

ஒளிப்பதிவாளர் மற்றும் ஆர்ட் டைரடக்ரை பாராட்டலாம்.

சிஎஸ். அமுதன் கலாய்ப்பதில் சின்சியர் என பட்டம் வாங்கிவிட்டார். ஆனால் சீரியஸ் ஆக ஒரு படம் எடுப்பாரா? என்பதை பார்ப்போம்.

பெரும்பாலும் ஹிட் அடித்த படங்களையே கலாய்த்துள்ளனர். எனவே அந்த படங்களை நீங்கள் பார்த்து இருந்தால் எல்லா காட்சிகளும் புரியும்.

தமிழ்ப்படம் 2.. கலாய்ச்சிட்டாரம்மா (நம்ம ஹீரோஸ் மைண்ட் வாய்ஸ்)

காசு மேலே காசு விமர்சனம்

காசு மேலே காசு விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: மயில்சாமி, ஷாரூக், காயத்ரிகோவை சரளா, நளினி, லொள்ளு சபா சாமிநாதன், மதுமிதா, கே.எஸ். பழனி மற்றும் பலர்.
இயக்கம் – கேஎஸ். பழனி
ஒளிப்பதிவு – சுரேஷ் தேவன்
இசை – பாண்டியன்
தயாரிப்பு – ராகவ் மூவி எண்டர்டெய்ன்மெண்ட் P.ஹரிஹரன்
பாடல்கள் – கருப்பையா
பிஆர்ஓ. – ராஜ்குமார்

கதைக்களம்…

மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவர் மயில்சாமி. தன் மகன் ஷாரூக்கை பணக்கார பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டால் நாமும் கோடீஸ்வரன் ஆகிவிடலாம் என நினைக்கிறார்.

இவரின் மகனுக்கு பெண் கொடுக்க வரும் உறவினர்களான அக்கா நளினியையும், மச்சான் சாமிநாதனையும் இதனாலேயே தவிர்க்கிறார்.

தன் திட்டப்படி ஊரில் மிகப்பெரிய பணக்கார வீட்டை தேர்ந்தெடுக்கிறார்.

அந்த வீட்டில் இருந்து வரும் காயத்ரியை காட்டி அவளை தன் மகனிடம் காதலிக்க சொல்கிறார்.

ஆனால் காயத்ரியோ அந்த வீட்டில் வேலை செய்யும் பெண் என்பது இவர்களுக்கு தெரியாது. மேலும் பிச்சைக்கார தம்பதி பழனி மற்றும் மதுமிதாவின் மகள்தான் அந்த காயத்ரி என்பது கூடுதல் ரகசியம்.

அப்பாவின் ப்ளான் படி ஷாருக்கும் காயத்ரியை காதலிக்கின்றனர்.

கல்யாணம் நடந்ததா-? பிச்சைக்காரன் மகளுக்கு மயில்சாமி மகனை கொடுத்தாரா? ரகசியம் தெரிந்தா?

அதன்பின்னர் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களே இப்படத்தின் கதை.

kasu mela kasu audio launch

கேரக்டர்கள்..

சில படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியாற்றிய கே எஸ் பழனி முதல் முறையாக இயக்கியுள்ளார்.

இவரும் மயில்சாமியும் செம போட்டி போட்டு நடித்திருக்கின்றனர்.

படத்தில் இளம் ஜோடிகள் இருந்தாலும் இவர்கள்தான் மெயின் கேரக்டர்கள்.

பழனியின் அதிரடி நடிப்பாலும் வசனங்களாலும் தியேட்டர்களில் சிரிப்பு மழை. ஒரு காமெடி முடியும் முன்னே அடுத்த காமெடி தொடங்கி விடுகிறது.

மயில்சாமி படம் முழுக்க காமெடியால் தெறிக்கவிட்டுள்ளார்.

பழனியின் 2வது மனைவியாக வரும் ஜாங்கிரி மதுமிதாவும் படத்திற்கு கூடுதல் சுவை சேர்த்துள்ளார். பிச்சைக்காரி வேடத்திற்கும் அவர் பேச்சுக்கும் செம பிட்டாகியிருக்கிறார்.

காதலர்களாக ஷாரூக் மற்றும் காயத்ரி. இளமை துள்ளலுடன் கூடிய நடிப்பு.

kasu mela kasu pair

கடத்தல் கும்பலாக வரும் அந்த மூதேவி குழுவினரும் செம சாய்ஸ். தங்கள் பங்களிப்பை சிரிப்பாக செய்துள்ளனர்.

நளினி மற்றும் லொள்ளு சபா சாமிநாதன் சில காட்சிகளிலே வந்தாலும் அதிரடி. காமெடி சரவெடி.

காமெடியை நம்பியே களம் இறங்கியுள்ளனர்.

எனவே படத்தின் ஒளிப்பதிவிலும் பாடல்களிலும் கவனம் செலுத்தியிருக்கலாம். அது பெரும் குறையாக உள்ளது.

சின்ன பட்ஜெட் படம் என்றாலும் கொடுத்த காசுக்கு மேல சிறப்பாக செய்துள்ளனர்.

படத்தில் மொத்தமே 20 கேரக்டர்கள்தான். அவர்களை சுற்றியே காட்சிகளும் கட்டிடங்களும் வருவதால் கொஞ்சம் சலிப்பு ஏற்படலாம்.

கோவை சரளா இறுதி காட்சியில் வந்து சிநேகிதியே என பாடி அவர் செய்யும் அமர்க்களம் செம.

படத்தின் இயக்குனர் பழனிக்கு இனி பட வாய்ப்புகள் குவியும். நடிப்புக்கும் சேர்த்து தான் சார். வாழ்த்துக்கள்

காசு மேலே காசு… கொடுத்த காசுக்கு மேலே காமெடி

Kasu mela kasu aka Kaasu Mela Kaasu movie review rating

Mr சந்திரமௌலி விமர்சனம்

Mr சந்திரமௌலி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள்: கார்த்திக், கௌதம் கார்த்திக், ரெஜினா காசன்ட்ரா, வரலட்சுமி, சதீஷ், மகேந்திரன், சந்தோஷ், ஸ்டன்ட் சில்வா மற்றும் பலர்.
இயக்கம் – திரு
ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம் நாதன்
இசை – சாம் சி.எஸ்
தயாரிப்பு – தனஞ்செயன்
பிஆர்ஓ. – சுரேஷ் சந்திரா

கதைக்களம்…

நவரச நாயகன் கார்த்திக் தான் சந்திரமௌலி. அவரது சொந்த மகன் கௌதம் கார்த்திக்கே இதிலும் மகன். மகனின் காதலி ரெஜினா.

கௌதம் கார்த்திக் ஒரு குத்துச்சண்டை வீரர்.

இதனிடையில் பைரவி (வரலட்சுமி) என்ற இளம் பெண் உடன் நட்புக் கொள்கிறார் சந்திரமௌலி. இது கௌதமுக்கு தெரியாது.

ஒரு நாள் திடீரென்று நிகழும் கார் விபத்தில் சந்திரமௌலி கொல்லப்படுகிறார்.

அந்த விபத்தில் கௌதமின் கண் பார்வை பாதியாக பறி போகிறது.

தன் தந்தையை கொன்றவர் யார்? எனபதை தன் பார்வை குறைபாடுடன் கண்டுபிடிப்பது தான் படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்…

நீண்ட நாட்களுக்கு பிறகு கார்த்திக். பழைய பார்மில் இல்லையென்றாலும் அவரின் வழக்கமான மேனரிசத்தில் குறை வைக்கவில்லை.

பத்மினி கார் மீது காதல், மகன் மீது அன்பு, மருமகள் மீது பாசம், பைரவி மீது நேசம் என அனைத்திலும் கார்த்திக் அவர்கள் கச்சிதம்.

இதுநாள் வரை கௌதம் அவரது படங்களில் ஆக்சன், ரொமான்ஸ் மட்டுமே செய்து வந்தார். ஆனால் இதில் பாசம், அழுகை என வெரைட்டி காட்டியிருக்கிறார்.

தந்தை இறந்த பிறகு அவர் அழுதுக் கொண்டே பேசும் காட்சி கண்ணீரை வரவழைக்கும்.

வரலட்சுமி சில காட்சிகளிலே வந்தாலும் நம்மை ஈர்க்கிறார். இவருக்கும் கார்த்திக்கு உள்ள உறவுதான் ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும்.

அது கள்ளம் இல்லாத உறவாக இருந்தாலும் அப்பா என அழைக்கமாட்டேன் என்கிறார். வயதில் மூத்தவரை பெயர் சொல்லி அழைப்பது நெருடல்தான்.

நடிப்பு, அழகு என ரெஜினா ஸ்கோர் செய்கிறார். அதிலும் ஏது ஏதோ ஆனானே பாடலில் வெர்ஜின் பசங்க சாபத்தை வாங்கி கொள்கிறார் ரெஜினா.

காமெடியுடன் குணச்சித்திர கேரக்டரிலும் சதீஷ் சபாஷ் பெறுவார்.

மகேந்திரன், மைம் கோபி, ஸ்டன்ட் சில்வா, போலீசாக விஜி ஆகியோரின் பாத்திர படைப்பு ரசிக்கும் விதம்.

வித்தியாசமான வில்லனாக சந்தோஷ். தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கும் ஸ்டைலிஷ் வில்லன் இவர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவில் காட்சிகளிலும் நாயகிகளின் அழகும் செம.. ஒளிமயமான ஒளிப்பதிவில் ரசிக்க வைக்கிறார்.

ஆக்சன் காட்சிகளில் நாயகன் என்ட்ரீ கொடுக்கும் போது பின்னணி இசையில் சாம் சி.எஸ் பின்னி எடுத்துள்ளார்.
ராஜாதி ராஜா பாடல் ஆட்டம் போட வகை என்றால், இடைவேளைக்கு பின்னர் வரும் தீராதோ வலி சோக பாடல் மனதிற்கு இதம்.

திரைக்கதை பற்றிய அலசல்…

ஜாலியான ஒரு படம், அதில் ஒரு மெசேஸ், ஆக்சன் த்ரில்லர் டைரக்டர் திருவும் தயாரிப்பாளரும் தனஞ்செயனும் என கலந்து கொடுத்துள்ளனர்.

நான் சிகப்பு மனிதனில் ஹீரோவுக்கு ஒரு குறை வைத்திருப்பார். இதிலும் ஒரு குறை வைத்துள்ளார். அது அவரின் பார்முலா? என தெரியவில்லை.

ஒரு கால் டாக்சி அக்கௌண்ட்டில் இருந்து மற்றொரு நிறுவன டிரைவருக்கு பணம் பரிவர்த்தனை நடக்கிறது. இதை கூடவா இவ்வளவு ஓபனாக செய்வார்கள்? அதிலும் இப்போது எல்லாம் ஆதார் கார்டு, பான் கார்டு என எதையும் மறைக்க முடியாது. அதை டைரக்டர் கவனித்திருக்கலாம்.

பாக்சிங் போட ஸ்பான்சர் கிடைத்தவுடன் அன்று மிகப்பெரிய அளவில் பார்ட்டி நடக்கிறது. (ராஜாதி ராஜா பாடல்). ஸ்பான்சருக்கே பணம் இல்லாதவர்களுக்கு பார்ட்டிக்கு ஏது அவ்வளவு பணம்..?

ஒருவேளை அது கனவு பாட்டாக இருந்தால், போட்டோ எடுக்க முடியாது. போட்டோவை காட்டும் ஒரு காட்சி வேற படத்தில் இருக்கிறதே? அது எப்படி?

கால் டாக்ஸி கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு நடக்கும் போர். அதில் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள் தான் என ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார் டைரக்டர். அதற்காகவே அவரை பாராட்டலாம்.

மிஸ்டர் சந்திரமௌலி…. சபாஷ் சந்திரமௌலி

More Articles
Follows